Thursday, November 29, 2018

ஒரு நாள் வழிபாட்டினால் ஒரு மாதம் வருமானம் அதிகரிக்கின்றது!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 30.11.2018 வெள்ளிக்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை  இருக்கின்றது.

 வெள்ளிக்கிழமை   இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: 29.12.2018 சனிக்கிழமை காலை 8.45 முதல் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.59 வரை அமைந்திருக்கின்றது;சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியாக இருப்பதால்,ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியில் பிறந்தவர்கள் ,இந்த நாளில் பைரவ ஜபம் செய்தால் சனியின் கடுமையான தாக்கத்தில் இருந்து மீள வழி கிடைக்கும்;

Wednesday, November 28, 2018

அகத்தீஸ்வரர் ஆலயங்களின் பட்டியல் 50


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.

38.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,காலடிப்பேட்டை,திருவொற்றியூர் அருகில்,சென்னை;

39.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

40.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

41.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

42.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

44.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

45.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

46.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

47.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

48.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

49.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.


108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;



நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;


அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;
எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;
அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;
அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!
தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

Tuesday, November 27, 2018

வளங்களை அருளும் பைரவ மந்திரங்கள்!



வறுமை நீங்கி செல்வ வளம் பெருகிட:
கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,இம்மந்திர ஜபம் பலன் கிடைப்பது கடினம்;

250 கிராம் அல்லது 500 கிராம் கொண்ட தங்கக் காசு வைத்திருப்பவர்கள்,அதில் சுத்தமான சந்தனத்தை தங்கக் காசின் மீது வைக்கவும்;அந்த சந்தனத்தின் மீது குங்குமம் வைக்கவும்;
இந்த தங்கக் காசினை பைரவரின் பாதம் அருகில் வைத்து பின்வரும் மந்திரத்தை 1008 முறை ஜபிக்கவும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணப்ரதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மறுநாள் ஜபிக்கும் முன்பு,தங்கக் காசின் மீது இருக்கும் சந்தனம்,குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கவும்;


வீட்டில் ஜபிக்க விரும்புவோர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவின் முன்பாக இந்த தங்கக் காசினை வைக்கவும்;முதல் நாள் வைத்த சந்தனம்,குங்குமத்தை அடுத்த நாள் முழுமையாக எடுத்து நெற்றியில் அணிய வேண்டும்;

தங்கக் காசு இல்லாதவர்கள்,மேலே கூறிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;அவர்களுக்கு எளிமையான வழிமுறை இதோ:


இம்மந்திரத்தை மட்டும் வீட்டில் தினமும் 1008 முறை ஜபித்து வரலாம்;ஆனால்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி நாள்,தேய்பிறை அஷ்டமி நாள்,வெள்ளிக்கிழமைகளில் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து 1008 முறை இம்மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

முதல் 48 நாட்கள் ப்ரம்மச்சார்யத்தைக் கடைபிடித்தால்(எந்த ஒரு ரொமான்ஸ் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது=படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியம்) அளவற்ற செல்வ வளத்தை படிப்படியாகத் தரும்;


தினமும் 1008 முறை மந்திரம் ஜபிப்பவர்களுக்கு முதல் நாளில் இருந்தே உடல் வெப்பம் அடையும்;சூடான உணவில் நெய் சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும்;அல்லது தினமும் ஒருமுறையாவது இளநீர் அருந்தி வர வேண்டும்; மோர் மற்றும் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்;

நல்ல வேலை கிடைக்க:

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;ஏதாவது ஒரு நாள் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் கால பைரவர் சன்னதிக்குச் சென்று அவரது பாதத்தை நோக்கியவாறு வேலை கிடைத்தால் அன்னதானம் செய்வதாக வேண்டிக் கொண்டு பின் வரும் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கவும்;ஒரு நாளுக்கு 1008 முறை ஜபித்து வர வேண்டும்;


ஓம் ஹ்ரீம் க்லீம் க்லூம் மஹா பைரவாய நமஹ


வேலை கிடைத்த பின்னர்,வேண்டிய படி ஏதாவது ஒரு நாள் அன்னதானம் செய்ய வேண்டும்;இம்மந்திரத்தை ஜபிக்க ஏற்ற நேரம் காலை 5.30 முதல் 6.30க்குள்!

வழக்கு மற்றும் பிரச்சினைகள் தீர:

அசைவம் ,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;ஒரு மண்டலம் வரையாவது(48 நாட்கள் அல்லது 90 நாட்கள்) ப்ரம்மச்சாரியம் (ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது கட்டாயம்;படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியமாகும்)


கலப்படம் இல்லாத விபூதி 100 கிராம் வாங்கி ஒரு தட்டில் நிரப்பவும்;அதை வீட்டில் பூஜை அறையில் வைக்கவும்;சந்தன பத்தி ஏற்றி வைக்கவும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்கவும்;பின் வரும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கவும்;ஜபித்து முடிந்ததும்,அந்த விபூதியை எடுத்து நெற்றி நிறைய பூசிவிட்டு உங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பிக்கவும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய க்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ விக்ன நிவாரணாய,சத்ரு மித்ரு வசீகராய மம வசம் குரு குரு சுவாஹா


நோய்கள் தீர:

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;கண்டிப்பாக  ப்ரம்மச்சார்யம் பின்பற்ற வேண்டும்;(ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது;படம் கண்டிப்பாக பார்க்கக்கூடாது;)


ஒரு சாண் அளவுடைய எட்டிக்குச்சியை கையில் வைத்தவாறு பின்வரும் மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை வீதம்,ஒன்பது நாட்கள் வரை ஜபிக்க வேண்டும்;ஒன்பதாவது நாள் ஜபித்து முடித்த பின்னர்,கால பைரவர் சன்னதி முன்பாக இதை வைத்து உங்கள் பெயர்,நட்சத்திரம் சொல்லி நீங்களோ அல்லது மற்றவரோ அர்ச்சனை செய்துவிட்டு,உங்கள் இடுப்பில் கட்டி வைக்க வேண்டும்;இப்படிச் செய்வதால்,தீராத நோய்களும் படிப்படியாகத் தீரத் துவங்கும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ;சர்வ ஆபத்துத் தாரணாய,சர்வ வியாதி சம்ஹாராஹ,மஹ பராக்கிரமாயா வா வா சுவாஹா

திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைய:

யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவர் மட்டுமே  இதைச் செய்ய வேண்டும்;அவர் சார்பாக வேறு எவர் செய்தாலும் பலன் கிட்டாது;

கண்டிப்பாக அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருக்க வேண்டும்;கண்டிப்பாக ப்ரம்மச்சார்யத்தை பின்பற்ற வேண்டும்;

(ரொமான்ஸ் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்;படம் பார்க்கக் கூடாது.சினிமாப் படம் அல்ல)பின் வரும் மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்;ஜபித்து முடித்த பின்னர்,செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;செண்பகப் பூ கிடைக்காத பட்சத்தில் முல்லைப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம்;இரண்டு பூக்களையும் மாறி மாறி அர்ச்சனை செய்யக் கூடாது;ஒரே பூவை 44 நாட்கள் வரை அர்ச்சனை செய்து வர வேண்டும்;


ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் மஹா பைரவாய,அதி சீக்ர விவாக ப்ராப்தி சித்தியர்த்தாயை நம சுவாஹா


தினமும் அர்ச்சனை செய்த பூக்களை ஒரு புதிய மண்பானையில் போட்டு வைக்க வேண்டும்;ஏழாவது நாள் ஆனதும்,அந்த மண்பானையை அருகில் இருக்கும் ஓடும் நீர் உள்ள ஆற்றில் அல்லது கடலில் விட்டு விட வேண்டும்;வாரம் ஒரு நாள் வரும் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று கால பைரவர் சன்னதிக்குச் சென்று இதே மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்;
இப்படிச் செய்து முடித்தால்,120 நாட்களில் வரன் அமைந்துவிடும்;

 நன்றி:ஓம் ரீங் காகபுஜண்டர் சித்த குரு நம ஸ்வாஹா

Monday, November 26, 2018

மஹாகால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்!



உலகம்,உயிர்கள்,ப்ரஞ்சம் = இம்மூன்றையும் அந்த ஈசனின் ஆணைப்படி,நவக்கிரகங்கள் மூலமாக நிர்வகித்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;


ஈசன் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி ஒரு முறை வெளிப்படுத்திய சிறுபகுதி சக்திதான் கால தேவன் என்ற மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார்;இந்த விளம்பி ஆண்டு,கார்த்திகை மாதத்தில் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று (30.11.2018) மஹாதேவ அஷ்டமியாக வர இருக்கின்றது;


ஒரு நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார்;அது எந்த நாள் தெரியுமா?


மஹா கால பைரவப் பெருமான் பிறந்த தினமான 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று தான்!


ஐந்து விதங்களில் மஹா கால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடலாம்;


1.ப்ரபஞ்சத்தின் மைய பாகமான அண்ணாமலையில் 29.11.2018 வியாழக்கிழமை இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரை கிரிவலம் வந்தவாறு ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;அல்லது இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டு,மீதி நேரத்தை அண்ணாமலையார் கோவிலுக்குள்ளும்,தங்கும் இடத்திலும் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;இதனால்,ஒரே சமயத்தில் கால பைரவப் பெருமானின் அருளையும்,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;


2.முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,மஹா கால பைரவப் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இந்த எட்டு படைவீடுகளிலும் வெவ்வேறு கால கட்டங்களில் தமது வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்;


இதில் ஏதாவது ஒரு படைவீட்டில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை ஜபிக்கலாம்;அல்லது முழு நாளும் (கோவில் திறந்திருக்கும் நேரம் வரை=காலை 6 முதல் 12 வரை,மாலை 4 முதல் இரவு 8 அல்லது 9 வரை) ஜபிக்கலாம்;


அட்டவீரட்டானங்கள்:1.திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 8 வது கி மீ தொலைவில்)

2.திருக்கோவிலூர் வீரட்டானம்

3.திருவதிகை வீரட்டானம் (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில்)

4.திருவிற்குடி வீரட்டேஸ்வரர்  (திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் 3 கி மீ பயணித்து அதன் பிறகு இருக்கும் உள்ளடங்கிய கிராமத்துச் சாலையில்)

5.திருக்கடையூர்  கால சம்ஹார மூர்த்தி & திருக்கடையூர் மயானம்

6.வழுவூர் வீரட்டானம் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்  (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு 1 கி மீ தூரத்தில் உள்ளடங்கிய கிராமத்திற்குள் இருக்கும் வீரட்டானம்)

7.செம்பொனார் கோவில்(மயிலாடுதுறையின் ஒரு பகுதியில்)

8.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு விசாரித்து செல்லவும்)

ஒன்பதாவதாக சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம்

இந்த எட்டு வீரட்டானங்களிலும் மூலவர் சிவலிங்கமாக இருக்கின்றது;சிவலிங்க வடிவில் மஹா கால பைரவப் பெருமான் அருள் பாலித்து வருகின்றார்;ஈசனும்,பைரவரும் ஒருவரே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றார்;


3.பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவ சன்னதிகளுக்கும் அருளாற்றலை வழங்கும் ஓர் ஆலயம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்,கும்பகோணம் அருகில்;இங்கே 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று ஈசனுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும்.திருமணத்தின் முடிவாக கல்யாண விருந்து நடைபெறும்;விருந்தின் முடிவில் நாம் ஒவ்வொருவரும் திருமண அன்பளிப்பு தரலாம்;மிகவும் புண்ணியம் தரும் செயலாகும்;நமது நியாயமான  நீண்டகால ஏக்கங்களைத் தீர்க்கும் திருக்கல்யாண வைபவம் இது!!!


4.செல்வ வளம் வேண்டுவோர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை இந்த நாளில் அவர் சன்னதிக்குச் சென்று மூலமந்திரத்தை ஜபித்து அருளைப் பெறலாம்;


5.வெகுதூர மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணிக்குள் இறுதி 30 நிமிடங்களில் ஓம் சம்ஹார பைரவாய நமஹ் என்று ஜபிக்கலாம்;


சனியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினர் இன்று முழுவதும் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம் அல்லது தினசரிப் பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னைதியில் ஜபிக்கலாம்;


பைரவ ஜபம் கை மேல் பலன் என்பது பழமொழி!



Saturday, November 24, 2018

அகத்தீசரின் அருளைப் பெற ஒரு சுலப வழி!



உலகத்தில் வாழ்ந்து வரும் நம் அனைவருக்கும் முதல் குரு அகத்தியர்;ஏனென்றால்,இவர் தான் சித்தர்களின் குரு;இவர் தான் ரிஷிகளின் குரு;தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து கற்றுக் கொண்டு,இந்த பூமி முழுவதும் பரப்பியவர் இவர் தான்;சித்த மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள்,யோகக் கலை,ஜோதிடக் கலை,சரக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டும் கலை,கோவில் வழிபாட்டு முறைகள் என்று அனைத்திற்கும் ஆதி மூல முதல் குரு அகத்தியர் தான்;


அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி வெளியே கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்த முதல் மனிதர் இவர் தான்;அதை அப்படியே இன்று வரை மனிதர்களாகிய நமக்கு போதித்துக் கொண்டு இருப்பவரும் இவர் தான்;


அகத்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா ஆகும்;ஆமாம்! தமிழர்களின் ஆதி குருவின் பெயரால் இருக்கும் ஒரே கண்டம் ஆஸ்திரேலியா!

தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை அகத்தீசர் கட்டியிருக்கின்றார்;ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 தேவ ஆண்டுகள் வரை பூஜை செய்து சிவகடாட்சத்தைப் பெற்றிருக்கின்றார்;12 தேவ ஆண்டுகள் என்பது பூமியின் காலக் கணக்கின் படி 15,00,000 ஆண்டுகள் ஆகின்றது;இவர் உருவாக்கிய கோவிலில் மூலவராக இருக்கும் ஈசனின் பெயர் அகத்தீசர் ஆகும்;பெரும்பாலும் காவிரிக் கரையோரம் இவர் கோவில்களைக் கட்டியிருந்தாலும்,தமிழ்நாடு நெடுக கட்டியிருப்பதும் உண்மையே!


அவைகளில் ஒரு சில ஆலயங்கள் இன்னும் பிரபலம் ஆகவில்லை;உங்கள் ஊர்ப்பகுதியில் தேடிப் பார்த்தால் அகத்தீசர் என்ற பெயரில் ஆலயம் இருக்கலாம்;அப்படி இருந்தால் அதை புனர்நிர்மாணம் செய்ய தாங்களே முயற்சிகளை ஆரம்பிக்கவும்;


மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 19 வது கிலோ மீட்டர் தூரத்தில் மேலையூர் அமைந்திருக்கின்றது;இங்கே மெயின் ரோட்டில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது;இந்த பள்ளிக்கு பின்புறம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது;மூலவருக்கு மிக அருகில் அகத்தியரின் சன்னதியும் அமைந்திருக்கின்றது;2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்;அடுத்த கும்பாபிஷேகம் 2021 இல் வர இருக்கின்றது;காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது;


அக்யூ ஹீலிங்,ப்ராணிக் ஹீலிங்,குவாண்டம் மெடிட்டேஷன்,ஆல்பா மைண்டு தியானம்,ஆழ்நிலை தியானம்,வாசி யோகம்,ப்ராணயாமம் செய்பவர்கள் தமது ஆன்மீக முயற்சியில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினால் அடிக்கடி இங்கே வருகை தந்து 90 நிமிடங்கள் வரை நெய் தீபம் ஏற்றி தியானம் செய்ய வேண்டும்;அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்து வர வேண்டும்;


மாதம் ஒருமுறை வீதம்   24 முறை இப்படி செய்கின்றார்களோ அவர்கள் அகத்தீசரின் அருளைப் பெறுவார்கள்;

Friday, November 16, 2018

அரிய பைரவ வழிபாடு!



உலகத்தில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித் தருபவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவ உலகத்தில் இருந்து ஈசனின் ஆணைப்படி பூமிக்கு (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) வருகை தந்தார்;

இன்றைய அருள்மிகு பவானீஸ்வரர் திருக்கோவிலில் (பொன்பேத்தி,புதுக்கோட்டைக்கு அருகில்) அருள்பாலித்து வருகின்றார்;

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முந்தைய முகூர்த்த நேரத்தில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்)  சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபித்து வருவதன் மூலமாக பெரும் செல்வச் செழிப்பை அடைய முடியும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாகவும் செல்வ வளத்தைப் பெற முடியும்;அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கு மட்டுமே செல்வ வளம் தேடி வரும்;கூடவே,ப்ரம்மச்சாரிய விரதம் இருப்பவர்களுக்கு ஆறு மடங்கு செல்வ வளம் வெகு சீக்கிரமே கிடைத்துவிடும்;


இந்துக்களின் ரகசிய வழிபாட்டுமுறைகளில் முக்கியமானது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகும்;இவரை தொடர்ந்து ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து,செல்வ வளத்தைப் பெற்றவர்கள்,அதை நேர்மையான செயல்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்;அப்படி இல்லாமல் அநீதியான செயல்களுக்குச் செலவிட்டால்,பைரவ சாபம் பீடிக்கும்;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரது அவதாரத்திற்கும் முன்பே தோன்றிய பைரவப் பெருமான் ஒருவர் இருக்கின்றார்;அவரது பெயர் ஸ்ரீவித்ருமா ஆகர்ஷண பைரவர்!
இவரது சன்னதி அருள்மிகு ஸ்ரீ சூரிய கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கின்றது;


கடந்த ஓராண்டுவரை யார் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டு இருக்கின்றார்களோ,அவர்களுக்கு மட்டுமே இவரது அருள் கிட்டுகின்றது;

ஒவ்வொரு நாளும் வரும் குளிகை காலம் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் இவரை பின்வரும் பொருட்களால் ஆன கலவையைக் கொண்டு காப்பு இட வேண்டும்;

(புனுகு,கோரோசனை,ஜவ்வாது,கஸ்தூரி,சந்தனம்)
இந்த பொருட்களில் ஒரிஜினலைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்;விலை மிகவும் அதிகம்;தாங்கள் வாங்கும் பொருட்கள் ஒரிஜினல் தானா என்பதை தகுந்த(அனுபவம் மிக்க) சித்த வைத்தியர் மூலமாக பரிசோதித்துக் கொள்ளவும்;அதன் பிறகு,இவைகளை ஒன்றாக்கி காப்பு இட வேண்டும்;இட்டு தொடர்ந்து 9 நாட்கள் பைரவரது மூலமந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்து வருக!

பைரவர் உபாசனை செய்து வருபவர்கள் தொடர்ந்து 64 நாட்கள் இப்படிச் செய்து வருவது நன்று;

பைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்தபட்சம் 9 நாட்கள் வரையிலும்,அதிகபட்சம் 18 நாட்களும் இப்படிச் செய்து நீடூழி வாழ்க!


இதன் மூலமாக பிறருக்கு தாம் செய்த தீங்குகளும்,அதனால் உண்டான கர்மவினைகளும் படிப்படியாக விலகிவிடும்;

திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பைரவ வழிபாட்டினை தெரிவிக்கின்றோம்!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Thursday, November 15, 2018

கால பைரவரின் பிறந்த நாளைக்(30.11.2018 வெள்ளி) கொண்டாடுவோம்!!!



உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் என்று அனைத்தையும் ஈஸ்வரனின் ஆணைப்படி,ஈசனின் பெயரால் நம்மை ஆட்சி புரிந்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான்!

கால தேவனாக இருப்பவர் இவரே! நவக்கிரகங்களின் தலைவரும் இவரே! 64 வித அவதாரங்களாக இவர் அவதரித்து,மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்,விண் உலகத்தில் வாழ்ந்து வரும் தேவர்கள்,தேவ இனங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,கந்தர்வர்கள் என்று அனைவரது வாழ்க்கையையும் சூட்சுமமாகத் தீர்மானிப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்!

அப்படி உருவான நாள் தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்;

இந்த விளம்பி வருடம்,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளானது 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது;

29.11.2018 வியாழக்கிழமை அன்று இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரையிலான நேரம் வரை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;

கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;கி பி 2018 என்பது முழுமையற்ற,தெளிவில்லாத கிரிகோரியன் (கிறிஸ்தவ) காலண்டர் ஆகும்;இந்து தேசமான நமது பாரதத்தில் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட தவறான காலண்டர் முறை தான் அது;


கடந்த 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொன்டிருக்கின்றோம்;இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது;நம் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரக்கணக்கான முற்பிறவி கர்மவினைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது;இதில்,இப்பிறவியில் செய்த,செய்து கொன்டிருக்கும்,செய்ய இருக்கும் கர்மவினைகளும் பாவங்களாகவும்,புண்ணியங்களாகவும் நமது ஆத்மாவில் சேர இருக்கின்றன;

யார் ஒரே பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து முற்பிறவிகளின் கர்மாக்களும்,இப்பிறவி கர்மச்சுமைகளும் அழிக்கப்படுகின்றன;அவர்கள் இனி ஒரு போதும் இந்த பூமியில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை 

அல்லது

ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்; 

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;

அட்டவீரட்டானங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டும்;


காசியில் இருக்கும் 64 பைரவர்களையும் நேரில் தரிசனம் செய்யும் பெரும் புண்ணியம் கிட்டும்;64 பைரவர் சன்னதிகளும் கங்கைக் கரையோரத்தில் அமைந்திருக்கின்றன;


உங்கள் வீட்டில் அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் அல்லது பழமையான விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;


கால பைரவப் பெருமானின் பிறந்த நாளான 30.11.2018 வெள்ளிக்கிழமை முழுவதும் பைரவ மந்திரம் ஜபிப்பதால்,பைரவரின் அருள் கிட்டும்;


பைரவ மந்திரம் ஜபிக்கத் தேவையான சுய கட்டுப்பாடுகள்;
1.அசைவம் ஒரு போதும் சாப்பிடக் கூடாது;முட்டைவகைகள்,புரோட்டாவும் அசைவமே!
2.மது ஒரு போதும் அருந்தக் கூடாது;
3.பைரவ ஜபம் ரகசிய வழிபாட்டு முறைகளில் ஒன்று;எனவே,பைரவ ஜபம் செய்து வருவதை எவ்வளவு நெருங்கிய நட்பு வட்டத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம்;வெளிப்படுத்தியதால்,பலருக்கு தொடர்ந்து பைரவ ஜபம் செய்ய முடியாமல் போய்விட்டது;


அட்ட வீரட்டானங்கள்:

முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்;
1.திருக்கண்டியூர்
2.திருக்கோவிலூர்
3.வழுவூர்
4.திருப்பரசலூர்
5.திருக்கடவூர் & திருக்கடவூர் மயானம்
6.திருவிற்குடி
7.குறுக்கை
8.திருவதிகை
இந்த ஆலயங்களில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளி அன்று ஒரு மணி நேரம் வரை பைரவ மந்திரம் ஜபிப்பது நன்று;


திரு அண்ணாமலையில் வசிப்பவர்கள் கால பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம் அல்லது இந்த திதி ஆரம்பித்த நேரம் முதல் முடியும் நேரம் வரை கிரிவலம் செல்லலாம்;அப்படி கிரிவலம் செல்லும் போது பைரவ மந்திரம் ஒன்றை ஜபிப்பது நன்று;

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ