Friday, December 8, 2017

மஹாகால பைரவரின் பிறந்த நாள் 10.12.2017!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் பரமேஸ்வரனின் பெயரால் நிர்வாகத்து வருபவர் மஹாகால பைரவப் பெருமான்! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,மஹேஸ்வரனிடம் இருந்து உதயமானவர் மஹாகால பைரவப் பெருமான்!

பூமியில் உள்ள காலக் கணக்கின்படி,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்றுதான் மஹேஸ்வரனிடம் இருந்து உதயம் ஆனார்;

மஹா கால பைரவப் பெருமானின் அருளால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை நிர்ணயம் செய்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரக சித்தர் ஆவார்;இவர் தான் ஒரு நாளுக்கு 24 மணி நேரம்,ஒரு வாரத்திற்கு 7 நாட்கள்,ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற காலக் கணக்கீட்டை கொண்டு வந்தார்!

இந்த நன்னாளில் இவரை நன்றியோடு நினைத்துக் கொண்டு பைரவ ஜபத்தைத் துவக்க வேண்டும்;

ஜோதிடர்களாக இருப்பவர்கள்,

மஹாகால பைரவரை  இப்பிறவி முழுவதும் உபாசனை செய்பவர்கள்;

ஏழரைச்சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்;

தமது கர்மவினைகள் ஒரே பிறவியில் தீர வேண்டும் என்ற ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள்

இந்த நாள் முழுவதும் மஹாகாலபைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ

அல்லது

கால பைரவர் 1008 போற்றியையோ

அல்லது

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 1008 போற்றியையோ
ஜபிக்கலாம்;

10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.32 முதல் 11.12.2017  திங்கட்கிழமை காலை 6.30 வரை கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கின்றது;

சித்தர்கள்,ரிஷிகள்,பைரவ சித்தர்கள் போன்றவர்கள் அரூபமாக பூமிக்கு இந்த நேரம் முழுவதும் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுசேருகின்றார்கள்;இந்த திதி இருக்கும் நேரம் முழுவதும் (10.12.2017 sunday 7.32am to 11.12.2017 moonday    6.30 am) அந்த இடத்தில் மஹாகால பைரவரை தத்தம் குருநாதர்களோடு ஜபிக்கவும்,பூஜிக்கவும் செய்கின்றார்கள்;

அந்த இடம்:அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழபுரம்,கும்பகோணம்;

வழி:கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் 10 வது கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;

பைரவப் பெருமானின் அருளைப் பெற விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து இங்கே நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம்;

பைரவரின் அருளோடு ஈசனின் அருளையும் பெற விரும்புவோர் 9.12.2017 அன்றே அண்ணாமலைக்கு வந்துவிட வேண்டும்;10.12.2017  ஞாயிற்றுக்கிழமை    அன்று காலை 7.32க்கு இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;

கிரிவலம் செல்லும் போது உங்களுக்குத் தெரிந்த பைரவ மந்திரம் ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை    காலை 6.30 வரை மிகவும் மெதுவாக கிரிவலம் செல்ல வேண்டும்;11.12.2017   திங்கட்கிழமை காலை 6.30க்கு கிரிவலத்தை அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே இருக்கும் கால பைரவர் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;


அல்லது சீக்கிரம் கிரிவலத்தை நிறைவு செய்துவிட்டாலும்,நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் தூங்காமல் பைரவ ஜபம் செய்யலாம்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 ஆகும் போது கால பைரவர் சன்னதியில் ஜபத்தை நிறைவு செய்ய வேண்டும்;


கிரிவலப்பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்கள் இருக்கின்றன;இவைகளுக்கு பிஸ்கட்,பொறை போன்றவைகளை தானமாக தர வேண்டும்;

இதில் எதையும் செய்ய இயலாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பைரவப் பெருமான் சன்னதியில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை(90 நிமிடங்கள்)    பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

இதையும் செய்ய இயலாதவர்கள் இந்த நாளில் உங்கள் தெருவில் இருக்கும் பைரவ அம்சமான நாய்களுக்கு உணவு இடலாம்;அவரவர் வீட்டு பூஜை அறையில் பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதலாம்;



மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் அட்டவீரட்டானங்கள் ஒன்றில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

1.திருக்கண்டியூர் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் இருப்பது)

2.திருவதிகை (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இருப்பது)

3.திருக்கோவிலூர்

4.செம்பொனார் கோவில் (மயிலாடுதுறையில் ஒரு பகுதி)

5.வழுவூர் (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)

6.குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்தால் உள்ளடங்கி இருக்கும் கிராமம்)

7.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் இருக்கும் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)

8.திருக்கடவூர் மற்றும் திருக்கடவூர் மயானம்

9.சிதம்பரம்

இந்த ஆலயங்களில் சிவலிங்க வடிவத்தில் இருந்து அருள்பாலித்து வருவது மஹாகால பைரவரே!

ஒன்பதாவதாக இருக்கும் சிதம்பரத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளாசி புரிந்து வருகின்றார்;

($ முருகக்கடவுளுக்கு எப்படி அறுபடைவீடுகள் இருக்கின்றனவோ,அதே போல கால தேவன் என்று அழைக்கப்படும் மஹாகால பைரவருக்கும் எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இதை அட்டவீரட்டானங்கள் என்று அழைப்பது வழக்கம்$)



ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32 முதல் 11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 வரை அமைந்திருக்கின்றது;


ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

ஞாயிற்றுக்கிழமை குளிகை காலம் மதியம் 3 முதல் 4.30 வரை இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி 9.1.2018 செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கின்றது;



இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;