Wednesday, May 20, 2015

நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா?







தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கி.பி.1000 வரையிலும் இந்துதர்மம் இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும் மற்றும் ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது;இன்றும் இந்தியாவைத்  தவிர ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்துநாடுகளில் இதற்கான இந்துப்பண்பாட்டு மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.இதில் பிரபலமான உதாரணமான கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்தைச் சொல்லலாம்;ஒரேஒரு கேமிராவிற்குள் இந்த முழு ஆலயத்தின் முகப்பையும் இன்று கூட போட்டோ எடுக்க முடியவில்லையாம்;தவிர,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குப்போயிருக்கிறீர்களா? அது பிரம்மாண்டமான சிவாலயம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்குப் போயிருந்தீர்கள் எனில்,அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே அசந்து போய்விடுவீர்கள்.சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரத்தை ஒரே ஒரு முறை  நீங்கள் சுற்றி வருவதற்குள்ளாக உங்களது கால்கள் வலித்து,ஓரிருமுறையாவது நீங்கள் உட்கார்ந்து தான் சுற்றை முடிக்க முடியும்.

இலங்கைக்கும் தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரத்துக்கு குமரிக்கண்டம் இருந்திருக்கிறது.அங்கே  இன்றைய சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை விட பத்து மடங்கு அதாவது சுமாராக ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு பிரம்ம்மாண்டமான சிவாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.அவை இன்றும் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.யாராவது வான் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தால் உங்களது செயற்கைக்கோள்கள் மூலமாக போட்டோ எடுத்து அனுப்புங்கள்;அப்போது தெரியும்!!?


அதே அளவுக்கு ஸ்ரீகால பைரவரின் கோவில்களும் இருந்திருக்கின்றன;குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் வடக்கே இன்றைய இலங்கை முதல் தெற்கே அண்டார்டிகா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் ஆப்ரிக்கா வரையிலும் பரவியிருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திருவீழிசை என்னும் ஊரில் ஒரு பாறைவடிப்பு இருக்கிறது.என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் நோட்டுப்பக்கத்தின் தடிமன் எவ்வளவு இருக்கும்? இரண்டு மில்லி மீட்டர் இருக்குமா? அந்த அளவுக்கு பாறையை இளக்கி காகிதத் தடிமனுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.இன்று இருக்கும் எம்.டெக்.சிவில் என் ஜினியர்கள் யாராவது ஒரே ஒருவரால் இதே போல காகிதத் தடிமனுக்கு ஒரு பாறையை செதுக்க முடியுமா?

இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர் ஹளபேடு சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம்;அவையெல்லாம் எப்படி உலகப்புகழ் வாய்ந்தவை என்பதை பாடத்திட்டத்தில் சேர்க்கவே இல்லை;அங்கே ஆயிரம் கால் மண்டபம் ஒன்றுஇருக்கிறது.ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியும் தரையைத் தொடாமல் இரண்டு செண்டிமீட்டர்கள் மேலே நிற்கின்றன;அதே போல அந்தத் தூணின் மேல்பகுதியும் மேலே இருக்கும் விதானம் அல்லது தளத்தினைத் தொடாமல் (கீழே இருப்பதுபோலவே) இரண்டு செண்டிமீட்டர்கள் இடைவெளிவிட்டு நிற்கின்றன;இந்த இரண்டு செண்டி மீட்டர்கள் இடைவெளியில் ஒரு நோட்டின் காகிதத்தை அந்த தூணுக்கு அடியில் விட்டு எடுக்கலாம்;

நமது பாட்டானார்கள் அனைவருமே 400 வருட வல்லரசாகத் திகழும் அமெரிக்கனைவிடவும்,நமக்குச் சமமாக பொருளாதார வல்லரசாக இருக்கும் நம்ம பங்காளி சீனர்களை விடவும் மிகச் சிறந்த அறிவாளிகளே!அவர்கள் செய்திருக்கும் சாதனைகளை நாம் பாதுகாத்து,நமது அடுத்த தலைமுறைக்குப்போதித்தாலே போதும்;அவர்களின் சாதனையை நாம் முறியடித்ததாக அர்த்தம்.


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.



இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)

என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).


வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.



பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)

அது மட்டுமா? சிவபெருமான் உறையும் இடம் திருக்கையிலாயம் இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.வருடம் தோறும் இங்கே செல்லும் பக்தர்களின் குழு அதிகரித்துக்கொண்டே செல்வதை,1960களில் சீனாவுக்கு வியப்பளித்திருக்கிறது;தனது இந்தியப் பிரதிநிதிகள் மூலமாக திருக்கையிலாயத்தின் முக்கியத்துவம்,ஆன்மீகப்பெருமைகளை விசாரித்திருக்கிறது;திருக்கையிலாய மலை யாரிடம்(எந்த நாட்டிடம் இருக்கிறதோ,அந்த நாடு இந்த உலகத்தின் மகோன்னத நாடாக உயர்ந்துவிடும் என்பது சீனாவின் தலைமைக்குத் தெரிந்திருக்கிறது.1964 போர் மூலமாக நமது சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்தை கைப்பற்றிவிட்டனர்.இன்று?
நமது  சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்துக்குச் செல்வதற்கு நாமே பாஸ்போட் எடுத்துக்கொண்டும்,சீனாவின் விசாவுடனும் செல்ல வேண்டுமாம்.

நாம் செய்ய வேண்டிய கடமை என்னதெரியுமா? நமது குழந்தைகளின் ஏழு வயதுக்குள் அடிக்கடி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;குடும்பத்தோடு அழைத்துச் சென்று நமக்குத் தெரிந்த அந்த கோவில் வரலாறு,அந்த தெய்வத்தின் பெருமைகள்,வழிபாட்டு முறைகளைச் சொல்ல வேண்டும்;

வீட்டில் நாம் தினமும் சில நிமிடங்களாவது கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
பள்ளிப்படிப்பை முடிக்கும்போது,நமது குழந்தைகளுக்கு ஸ்ரீஇராமக்ருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,விவேகானந்த கேந்திரம்,ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம்,ராஷ்டீரிய சேவிகா சமிதி போன்ற ஆன்மீக மற்றும் தேசபக்த அமைப்புகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



பத்தாம் வகுப்பு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகள்,பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை,டிகிரி அல்லது டிப்ளமோ செமஸ்டர் விடுமுறைகளில் அனுப்பி வைப்பதுடன் முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது எதிர்கால சந்ததிக்கும் நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சென்றடையும்.நான் அப்படிப்பட்ட பயிற்சிமுகாம்களில் அடிக்கடி கலந்து கொண்டதால் தான் நமது இந்துதர்மத்தின் பெருமைகளை உணர்ந்தேன்.அப்படி உணர்ந்த ஒவ்வொரு கணமும் எனக்குள் நமது முன்னோர்களைப்பற்றிய பெருமிதம் உண்டானது;அதே சமயம்,எப்படி இப்பேர்ப்பட்ட சாதனைகளை நமது முன்னோர்கள் செய்தார்கள்? என்று சில நாட்கள் தூக்கம் கூட வரவில்லை;இதைப் பற்றி அறிந்துகொள்ளவே நூலகங்கள்,வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடர்கள்,          ஆன்மீகப்பேச்சாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள்,நாவல் எழுத்தாளர்கள் போன்றவர்களை சந்திக்க ஆரம்பித்தேன்;சில நேரங்களில் அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன்.நான் கேட்கும் கேள்விகளுக்கு பொருத்தமில்லாத ஆனால் தந்திரமான பதில்களைத் தான் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தந்தார்கள்;மற்றவர்களோ எனது நோக்கத்தை புரிந்து கொண்டபின்னரே முறையான அதேசமயம்  முழுமையான பதில்களையும்,விளக்கங்களையும் தந்தார்கள்.

நிறையப்படித்தால் தான் கொஞ்சம் எழுத முடியும் என்பது எழுத்தாளர்களுக்கான அரிச்சுவடி ஆகும்;எனவே,நிறைய்ய்ய்ய படிக்கத் துவங்கினேன்;சில சமயம், திரைக்கூத்து போன்ற இதழ்களிலிருந்தும்  கூட எனது தேடல்களுக்கான விடை கிடைத்தது;எனவே,அதையும் தற்போதெல்லாம் விட்டு வைக்கவில்லை;



தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்;இனியும் நாம் நம்முடைய இந்துதர்மத்தின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டால்,இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமது நாட்டின் நிலை மட்டுமல்ல;நமது அடுத்த தலைமுறையின் சூழ்நிலையும் அதோகதிதான்!!!
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

விக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது!!!





மஹாபாரதத்தில் ஒரு நாள் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்;அவரை வெல்வது எளிதல்ல;அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்;மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்;இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்;மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க,க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்;சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம்.அது,அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது.அஸ்வத்தாமனிடம் திகைப்பு!!!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா? என்று!!! பின்னர்,அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க,அவர் பதில் கூறத் தொடங்கினார்: “அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும்,அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான்.நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய்.லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்;ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது;எனவே,சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை,வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான்.அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”என்றாராம்.

மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது;
இதன்படி லிங்கம் என்பது மணியாகும்;மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும்.விபூதியே மருந்தான அவுஷதமாகும்;இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்;சித்த புருஷர்களும் மிக எளிதாக,மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக்கொண்டார்கள்.



நன்றி: சக்தி விகடனில் (2.10.2012)வெளிவரும் தொடர்:சித்தம்,சிவம்,சாகசம் தொடர்,பகுதி 2,பக்கம்39.எழுதி வருபவர் இந்திரா சவுந்தரராஜன்

சனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு!!!

விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி

சனிபகவானின் வாதநோயை நீக்கியவர் ஸ்ரீகால பைரவப்பெருமான் ஆவார்.சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவப்பெருமான் இருக்கிறார்.சனிபகவானுக்கு நவக்கிரகப் பதவியைத் தந்தவரே ஸ்ரீகால பைரவப் பெருமானே! எனவே,யார் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு சனிபகவானின் தாக்கம் சிறிதும் இராது;மேலும்,தனது குருவான ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதால்,சனிபகவான் தனது உக்கிரத்தை பெருமளவு குறைத்து நிம்மதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் செய்வார்.இது பல யுகங்களாகத் தொடரும் உண்மை ஆகும்.சனியின் தாக்கம் தீர நிஜமான பரிகாரம் ஸ்ரீகால பைரவப்பெருமான் வழிபாடு மட்டுமே!



விரையச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை அவரது சன்னதியின் முன்பாக நின்றவாறு சுமாராக பத்துநிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30க்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இந்த நேரம் முழுவதும் மேற்கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்,ஜவ்வாது போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து வர வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;இதன் மூலமாக விரையச்சனியின் தாக்கம் தீரும்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருள் கிட்டும்.

ஜன்மச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப்பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமார் பத்துநிமிடம் ஜபிக்க வேண்டும்.மேலும்,எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;

ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரையிலான காலத்தில் வீட்டில் அல்லது ஸ்ரீகாலபைரவப் பெருமான் சன்னதியின் முன்பாக மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;எழுதலாம்;(பெண்கள் அந்த நாட்களில் மட்டும் எழுத/ஜபிக்கக் கூடாது)
மண் அகல்விளக்கில் கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் கலந்து அத்துடன் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் வரும் ராகு காலத்தில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளைக் கொண்டு ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அபிசேகம் நடைபெறும் ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதியில் நின்றவாறு/அமர்ந்தவாறு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

வாக்குச்சனி  இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு(நிற்க முடியாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்;அவருக்கு நேராக அமரக்கூடாது)ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலமான காலை 9 மணி முதல் 10.30க்குள் சாம்பல்பூசணியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஜவ்வாது,அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் போன்றவைகளுடன் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் போது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அஷ்டமச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அப்போது குறைந்தது பத்து நிமிடங்கள் வரையிலாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.30 முதல் 9.30 க்குள் புனுகு பூச வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கறிவேப்பிலைச் சாதம் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வைக்க வேண்டும்;அர்ச்சனை செய்தப்பின்னர்,அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதை உண்ணலாம்;ஒவ்வொரு மாதந்திர சனிக்கிழமை தோறும் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு கறுப்புப் பட்டு சாத்த வேண்டும்;
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகத்துக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி,சந்தனாதித்தைலம்,பால் போன்றவைகளை வாங்கித் தர வேண்டும்.




பொதுக் கருத்துக்கள்;பழமையான சிவாலயங்களில் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானத்தான் வழிபட வேண்டும் என்று இல்லை;பல அம்மன் கோவில்களிலும்,குல தெய்வக் கோவில்களும் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;

தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள்,அபிஷேகங்கள் துவக்கப்படவில்லை;எனவே,உங்கள் ஊரிலும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கலாம்;நீங்கள் அதை மாற்றி ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுங்கள்;

இந்த வழிபாடுகள் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;அப்படிக் கைவிட்டப் பின்னரே,இந்த வழிபாட்டைத் துவங்கிட வேண்டும்.


நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட,வழிபட நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்;நமது கர்மவினைகள் கரையத் துவங்கும்;இதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும்,நாம் விரும்பும் லட்சியத்தை அடையவும் முடியும்.

தொலைதூர மாநிலங்கள்,நாடுகளில் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வந்தாலே போதும்.நடக்க முடியாதவர்கள்,கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இவைகளைப் பின்பற்றிக் கொண்டே,உங்கள் ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமாக,அடுத்த தேய்பிறை அஷ்டமி வரையிலும் பணம் சார்ந்த பிரச்னைகள் குறையும்;தொல்லைகள் இராது;அவ்வாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் அருகில் இல்லாவிடில்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;

Tuesday, May 19, 2015

இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:




இந்த பிறவியிலேயே சித்தராக விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களது வேலை அல்லது தொழில் செய்துகொண்டே ஞானத்திருவடி என்ற மாத இதழை ஒவ்வொரு மாதமும் வாசியுங்கள்;அதில் சொல்லப்படும் ஞான வழிமுறைகளைப் பின்பற்றிவாருங்கள்;அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயமாக உங்களை சித்தராக ஆக்கிடும் குருநாதரை சந்திப்பீர்கள்;அவரும் ஒரு சித்தராகவே இருப்பார் என்பதை அந்த கணத்தில் உங்களால் உணர முடியாது;அவரோடு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும் பழக,பழக அவர் ஒரு சித்தர் என்பதை உணருவீர்கள்;


ஒரு சித்தரால் தான் உங்களை சித்தராக்கிட முடியும்.நீங்கள் இந்தப் பிறவியிலேயே சித்தராகிட சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும்:


1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்.

2.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.


வேறு எந்த குறையிருந்தாலும்,ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து வாசிக்க,வாசிக்க அவைகள் நீங்கிவிடும்;நீங்கள் பரிபூரண புண்ணிய ஆத்மாவாகிவிடுவீர்கள்;


ஞானத்திருவடி புத்தகம் ஓராண்டுச் சந்தா:ரூ.120/- மூன்று ஆண்டுச் சந்தா ரூ.350/- வெளிநாடுகளுக்கு எவ்வளவு என்பதை தாங்கள் 04327 255784 என்ற அலுவலக எண்ணிற்கோ அல்லது அதன் பொறுப்பாளரான திரு.கே.ரவிச்சந்திரன் செல் எண்கள்;94883 91565,98420 65708,96551 74078 என்ற எண்களில் ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு  கொண்டோ கேட்டறிந்து பணம் அனுப்பலாம்.

காசோலை எனில் Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற பெயரிலும்,வரைவோலையை payable at Trichy or Thuraiur என்றும் எடுத்து பதிவு அஞ்சலில் முழு முகவரியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் தெளிவாக எழுதி அனுப்பி வைக்கவேண்டும்;
ஞானத் திருவடி மாத இதழ்,ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,ஓங்காரக்குடில்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சி மாவட்டம்.


இங்கே அகத்தியரின் ஆசிகளோடு தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நாமும் ஞானத்திருவடி மாத இதழ் வாங்குவோம்;இந்த பிறவியிலேயே சித்தராகிட முயற்சி எடுப்போம்;இனி ஒரு மனிதப் பிறப்பு நாம் எடுக்கலாமா?

Tuesday, May 5, 2015

ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன?




சமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.
அலுவலகத்தில் பழகுதல்
ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.
எப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.
பொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.
பணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.
கல்லூரியில் நமது வாழ்க்கை
ஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.
புதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.
உங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.
அதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.
சமூகத்தில் பழகுதல்
நாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.
பொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த சிந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.
நாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.
ஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.
(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது? எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே?) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.
வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.
வேறு சில ஆலோசனைகள்
நம்பிக்கையுடன் இருத்தல்: பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.
கொஞ்சம் மகிழ்ச்சி: பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.
தனிப்பட்ட நன்மைக்காக அல்ல: ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மென்மையாக இருக்கவும்: நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.
நல்ல உடை: உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும். thanks:dinamalar

Monday, May 4, 2015

மன்மத ஆண்டின்(13.4.15 முதல் 14.4.16 வரை) முழுமையான துவாதசி நாட்கள்!


நம் கர்மவினையை நீக்கும் வல்லமை (நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்) அன்னதானத்திற்கு மட்டுமே உண்டு என்பது ஆன்மீக ஆராய்ச்சியில் கிடைத்த அளப்பறிய உண்மை ஆகும்;
அன்னதானத்தை நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் சிவாலயத்திலேயே செய்யலாம்;ஆனால்,தொடர்ந்து மாதம் தோறும் வரும் அமாவாசையன்று அன்னதானம் செய்து வந்தால் தான்,சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு அன்னதானத்திற்கான பலன் நம்மை வந்தடைகிறது;

செல்போனும்,கணினியும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக்கிவிட்டது போலவே,நாமும் சீக்கிரம் நற்பலன் கள் கிட்ட வேண்டும் என்றே ஏங்குகிறோம்;அப்படிப்பட்ட ஏக்கங்கள் தீர அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்தால் போதுமானது;குறைந்த பட்சம் 9 துவாதசி நாட்களும்,அதிகபட்சம் 36 துவாதசி நாட்களும் அன்னதானம் செய்வது அவசியம்.

சிவபுராணத்தில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் ஏற்படும் புண்ணியம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது;
நமது சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகபுண்ணியம் காசியில் ஒரு நாள் மட்டும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;அதுவும் காலையில் ஒரு சாது;மதியம் ஒரு சாது;இரவு ஒரு சாது என மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்தாலே கிடைத்துவிடும்;

அன்னதானத்தை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;அதே சமயம்,விளம்பரப்படுத்தாமல் செய்ய வேண்டும்;

அசைவ அன்னதானம் ஒரு போதும் செய்யக் கூடாது; 

   கட்டாய அன்னதானமும் ஒரு போதும் செய்யக் கூடாது;

நள்ளிரவு அன்னதானம் ஒருபோதும் செய்யக் கூடாது;

தரமான உணவுப் பொருட்கள் மூலம் செய்யப்பட்ட உணவையே தானமாகத் தர வேண்டும்;

சந்தர்ப்பம் இருந்தால் அஷ்டலிங்கங்களின் வாசலிலும் அன்னதானம் செய்யலாம்;

அண்ணாமலை ஆலயத்தில் இருந்து ஐந்து சதுர கி.மீ.க்குள் அன்னதானம் செய்யலாம்;

பவுர்ணமி தினங்களில் செய்யப்படும் அன்னதானத்தைவிடவும் பல கோடி மடங்கு உயர்ந்தது துவாதசி திதி அன்று செய்யப்படும் அன்னதானம்.!!!


30.4.15 வியாழன்

30.5.15 சனி

13.6.15 சனி

28.7.15 செவ்வாய்

11.8.15 செவ்வாய்

9.9.15 புதன்

9.10.15 வெள்ளி

24.10.15 சனி

22.12.15 செவ்வாய்

6.1.16 புதன்

5.2.16 வெள்ளி

19.2.16 வெள்ளி

4.4.16 திங்கள்


ஒம் அருணாச்சலாய நமஹ

Sunday, May 3, 2015

சுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்டை) பைரவர்!!!






புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 கி.மீ.தூரத்தில் திருவரங்குளம் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பழைய பெயரே பொற்பனைக்கோட்டை! பொற்பனை இருந்த இடத்தில் சிவலிங்கத்தைக்கண்ட அரசன் கோவிலையும் கோட்டையையும் கட்டியதாக செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன.


சுவாதியில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில்  இங்கே இருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.ராகு காலம் துவங்கும்போது இங்குள்ள பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்போது பைரவ சஷ்டிக்கவசம் பாட வேண்டும்;

இப்படி குறைந்தது ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்துவிட்டால்,அனைத்துக் கர்மாக்களும் நீங்கி வளமோடு வாழ்வர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!!!

திருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்!!!






திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை சாலையில் திருமயம் நகருக்கு வெளியே அமைந்திருக்கும் கோட்டை பைரவரே விசாக நட்சத்திரத்துக்குரிய பைரவப்பெருமான் ஆவார்.
பல சித்தர்களும்,ஞானிகளும்,மகான்களும் விசாகத்தில் பிறந்துள்ளனர்.செவ்வாயின் அதிதேவதை என்று அழைக்கப்படும் முருகக்கடவுளும்,அன்பையும் மனிதத்தன்மையையும் வலியுறுத்தி ஒரு புதியமதத்தைத் தோற்றுவித்த புத்தரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!!!


விசாக நட்சத்திரம் வரும் நாட்களில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,மரிக்கொழுந்து போன்றவைகளுடன் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நன்று.தொடர்ந்து  ஒன்பது விசாக நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபட்டால்,பைரவ அருள் விசாகத்தில் பிறந்தவர்களுக்குக்கிட்டும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்!!!






ஆந்திரமாநிலம்,சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.இங்கே காளத்தியப்பராக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.

இங்கேதான் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தி நிரூபணமாகியது.1990க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த புராணச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை;இருப்பினும்,ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய இந்த பாதாள பைரவப் பெருமானின் பெருமைகளை விளக்குவது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் கடமை ஆகும்.யாருக்கெல்லாம் ராகு அல்லது கேதுவால் கடுமையான பாதிப்பு இருக்கிறதோ அவர்களும் இந்த பாதாளபைரவப் பெருமானை தொழுது வழிபடலாம்;ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய இந்த பாதாள பைரவப் பெருமான் ஸர்ப்ப தோஷங்களையும் நீக்குபவர் ஆவார்.ஆயில்யமே ஒரு பாம்பு நட்சத்திரம் தானே!!

நாம் கலியுகம் 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.இதற்குச் சமமான கிறிஸ்தவ வருடம் கி.பி.2013 ஆகும்.கலியுகம் செல்லச் செல்ல கடுமையான பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களும்,மிகவும் யோகங்கள் நிறைந்த ஆத்மாக்களுமே அதிகமாகப்பிறப்பார்கள்;அதுவும் பூமியில் வேறு உலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பிறந்து,குடும்ப அமைப்பைச் சிதைக்கும் வேலையை தனதுபிறவி கடனாகச் செய்வார்கள்;அப்படிப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் ஒவ்வொருவருக்குமே தமது வாழ்நாளில் திருந்தி நல்ல செயல்கள் செய்து இனி பாவ உலகத்திற்குச் செல்லக்கூடாது என்ற எண்ணம் வரும்;அப்படிப்பட்டவர்களும் வழிபட வேண்டிய பைரவர் இந்த பாதாள பைரவப் பெருமான் ஆவார்.ஒருவேளை உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இந்த ஆன்மீகக்கடல் பதிவினை வாசித்துவிட்டு,இந்தியாவில் ஆந்திரமாநிலம் காளஹஸ்திக்கு வர முடியாதவர்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் எழுதி வந்தாலே போதுமானது.ஒரு சில வருடங்களுக்குப்பிறகு,உங்களுக்கு காளஹஸ்திக்குச் செல்லும் வாய்ப்பை பாதாள பைரவப் பெருமானே எற்படுத்தித் தருவார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கண்ணப்ப நாயனார் தொண்டை நாட்டின் உடுப்பூரில் வேடர் குலத்தில் பிறந்தவர்.நாகன் என்னும் வேடர் குலத் தலைவர்க்கு மகனாகத் தோன்றினார்.திண்ணன் எனப் பெயரிடப்பட்டார்.தம் குல வழக்கப்படி வேட்டையாடும் தொழிலில் வல்லவரானார்.உரியகாலத்தில் திண்ணனார் வேடர் குலத் தலைவரானார்.


ஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்.நீண்டநேரம் வேட்டையாடிய பிறகு திருக்காளத்தி மலையைச் சென்றடைந்தார்.அங்கு காளத்தியப்பரைப் பார்த்தவுடன் முன்பிறவிப் பயனால் பக்தி மிகுதியால் கண்ணீர் சிந்தி வழிபட்டார்.நீராட்டி,பூச்சுட்டியிருப்பதைப் பார்த்தார்.தனித்து இருக்கும் காளத்தியாரைப் பிரிய மனமின்றி உருகி நின்றார்.இறைவனுக்கு உணவு படைக்க தரமான இறைச்சியைத் தேடிச் சென்றார்.புதிதாக வேட்டையாடிய பன்றி இறைச்சியை சமைத்து,சரியான நேரத்தில் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொண்டு வந்து,கட்டினார்.பொன்முகலி ஆற்று நீரை வாயில் எடுத்துக்கொண்டு(அந்தக்காலத்தில் மண்பாத்திரம் தான்! காட்டுப்பகுதியில் அதுவும் கிடைக்கவில்லை;),இறைவனுக்குப்படைக்கவேண்டிய பூக்களை தலையில் வைத்துக் கொண்டு காளத்தியப்பர் இருப்பிடம் தேடிச் சென்றார்.சிவலிங்கத்தின் உச்சியில் சூடப்பட்டிருந்த பூக்களை தனது காலால் தள்ளிவிட்டு, தனது வாயில் இருந்த ஆற்றுநீரால் அபிஷேகம் செய்தார்;பிறகு தனது தலையில் சுமந்து வந்த பூக்களை சூடினார்.சமைத்த பன்றி இறைச்சியை படையலிட்டார்.இரவு முழுவதும் இறைவனுக்குக் காவலாக இருந்தார்.சூரியன் உதயமானதும்,புறப்பட்டார்.


சிவாச்சாரியார் வந்து இறைச்சித்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும்,காலணிச்சுவடுகள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனார்.திருக்கோவிலை தூய்மை செய்து முறைப்படி நீராட்டிப் பூசை செய்தார்.அன்றாடம் திண்ணனார் தம் வழக்கப்படி நீராட்டி,பூச்சூட்டி, ஊண் அமுது படைத்தார்.சில நாள் இவ்வாறு நடக்க சிவகோசரியார் மனம் வருந்தி,இறைவனிடம், “இக்கொடுஞ்செயலை தினமும் செய்வது யார்? என்றுத் தெரியவில்லை; தங்கள் திருவருளால் இவ்வாறு இனி நடக்காமல் தடுக்க அருள வேண்டும்” என்று மனப்பூர்வமாக வேண்டினார்.

அன்று இரவே காளத்தியப்பர் அவர் கனவில் தோன்றி, “அன்புநிறைந்த அவனை கொடியவன் என்று நீ எண்ணுகிறாய்;அது முற்றிலும் தவறு;அவனது செயல்களில் இருக்கும் அன்பை மட்டுமே யாம் கவனிக்கிறோம்;நாளை நீ விரைவாக வந்து எமக்கு அருகே ஒளிந்திருந்து கவனி;அவனது அன்பு எத்தகையது? என்பது உனக்கும் புரியும்”என விளக்கமளித்திவிட்டு மறைந்துவிட்டார்.

அதேபோல சிவகோசரியார் வெகுநேரம் முன்பாகவே வந்து மறைந்துநின்று நடக்க இருப்பதைக் கவனிக்கத் தயாரானார்.திண்ணனார் வழிபடத்துவங்கிய 6 ஆம்நாளாகிய அன்று,வழக்கம் போல ஊனும்,மீனும்,பூவும் கொண்டு வந்தார்.திண்ணனார் காளத்தியப்பரை நெருங்கியதுமே சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;இதைக் கண்ட திண்ணனார் பதறித் துடித்துப் போனார்;உடனே,அருகில் ரத்தம் வழிவது நிற்கும் மூலிகைச் செடியில் இருந்து ஒரு இலையை பறித்து,அதைப் பிழிந்து அந்த கண்ணின் மீது விட்டார்;இருந்தும் இரத்தம் வழிவது நிற்கவில்லை;உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது;தனது கண் ஒன்றை தன்னுடைய அம்பால் தோண்டி எடுத்து அந்த ரத்தம் வழியும் கண்ணில் பொருத்தினார்.உடனே ரத்தம் வழிவது நின்றது;ஆனால்,அடுத்த கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;எனவே,தனது கால் பெருவிரலால் அந்த ரத்தம் வழியும் இன்னொரு கண்ணுக்கு அருகே மிதித்து(அடையாளத்துக்காக) தனது இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுத்துப் பொருத்த முயல,காளத்தியப்பராகிய சதாசிவன் நேரில் தோன்றினார். தோன்றி “கண்ணப்பா நில்” என்றார்.சிவகோசாரியார் திண்ணனாரின் அன்பின் பெருமையை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நன்று.