Thursday, October 13, 2011

கப்சிப் ஆன காம்ரேட்டுகள்



தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது, “ தி,மு.க.ஆட்சியில் நியமிக்கப்பட்ட கோவில் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.புது அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.சென்ற தி.மு.க.ஆட்சியில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எல்லாம் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.இந்த ஆட்சி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் தான் அறங்காவலர்களாக நியமிக்கும்” என்று தெரிவித்தார்.

உடனே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுந்து,

“தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இறை நம்பிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது” என்று (இந்துமத) எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே எழுந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டார்:

“கம்யூனிஸத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை உங்கள் கட்சிப்பணியில் ஊழியர்களாக நியமிப்பீர்களா?’

கம்யூனிஸ்டுகளின் முகம் கறுத்துப் போனது.

நன்றி:விஜயபாரதம் பக்கம் 29,30.9.11

ஓம்சிவசிவஓம்

1 comment: