Monday, February 28, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேரில் வருக!!!





விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டுடன் இணைந்திருக்கும் முதலியார்பட்டித்தெருவில் நடுவில் அமைந்திருப்பது பத்திரகாளியம்மன் திருக்கோவில்.நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஓரத்தில் இருக்கும் புகைப்படம் இந்த பத்திரகாளியம்மாளின் புகைப்படமே.

ஒவ்வொரு வருடமும் வரும் சிவராத்திரியன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் (கரண்டி இல்லாமல்)வெறும் கையாலேயே அப்பம் சுட்டு எடுப்பார்.அப்படி எடுக்கப்பட்ட அப்பங்கள் பத்திரகாளியம்மாளுக்கு படைக்கப்பட்டு,அன்றிரவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த பத்திரகாளியம்மாளின் சக்தியை,அருளாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் வருபவர்களின் வாழ்க்கையில் தீராத பல பிரச்னைகள் தீருகின்றன.இந்த பத்திரகாளியம்மனின் அருளாற்றலை விவரிக்க ஒருதனி வலைப்பூவே நடத்திட முடியும்.(ஆன்மீகக்கடல் வலைப்பூவையே தினமும் பதிவுகள் செய்ய இயலவில்லை)



அப்படி பிரச்னை தீர்ந்தவர்களில் நானும் ஒருவன்.எனது பகுத்தறிவினால்,பலமுறை இந்த பத்திரகாளியின் சக்தியை உணர்ந்தவன்.8.8.2004 முதல் இன்றுவரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருப்பவள்;என்னை பாதுகாப்பவள்;எனக்கு மாபெரும் பிரச்னைகள் வந்த போதெல்லாம் எந்த வித அரசியல் செல்வாக்கும்,போலீஸ் செல்வாக்கும் பண செல்வாக்கும் இல்லாமலேயே என்னை அந்த பிரச்னைகளிலிருந்து காத்துவருபவள் இந்த பத்திரகாளியம்மன் மட்டுமே!

நீங்களும் ஒருமுறை எனது அம்மனை வந்து தரிசித்து,ஆசிர்வாதம் பெற்று,நிம்மதியாக வாழ்க!

2.3.2011 புதன் கிழமையன்று இந்த வருடம் சிவராத்திரி வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித்தெருவிற்கு வருக!!!எனது அம்மா பத்திரகாளியன்னையின் அருளைப் பெறுக!!!

அங்கே என்னையும் சந்திக்கலாம்.

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?





பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.



தெருவில் நடந்துசெல்லும்போதும்,சாலையில் நடந்து செல்லும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.அப்படி மீறி ஜபித்தால்,தடுமாறி கீழே விழுந்துவிடுவோம்.ஒருவேளை,வீம்புக்கென்று தொடர்ந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,சில நாட்கள் கடந்தபின்னர்,விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.



பிரசவ மருத்துவமனை,பிணவறை,மற்ற எந்த மருத்துவமனையிலும்,சுத்தமில்லாத எந்த இடத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அவர்கள் தூங்கும் அறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தோடு அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தில் வயதானவர்கள் யாராவது இறந்துவிட்டால்,அந்த வீட்டில் குறைந்தது ஒரு மாதம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

துக்க வீடுகளுக்குச் சென்றால்,குறைந்தது ஐந்துநாட்கள் வரையிலும்,பிரசவம் ஆனவீடுகளுக்கு குழந்தை பிறந்த பத்துநாட்களுக்குள் சென்றால் ஐந்து நாட்கள் வரையிலும் சென்றவர் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

வீட்டில்,வீடு போன்ற அமைப்பில்,எதாவது ஒரு சுத்தமான விரிப்பில் அமர்ந்து மன அமைதியோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்து முடியும் வரையிலும் யாரிடமும் பேசாமலிருப்பது அவசியம்.செல்போனையும்,தொலைபேசியையும் சைலன் ட் மோடில் வைக்க வேண்டும்.இது கட்டாயம்.

ஓம்சிவசிவஓம்.

Friday, February 25, 2011

தமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்




அவதானம் என்றால் நினைவுத்திறன் என்று பெயர்.அஷ்டாவதானி என்றால் எட்டு விதமான விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பது என்று பெயர்.சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விதமான விஷயங்களைக் கவனித்து பதிலை பின்னர் கூறுதல் என்று பொருள்.சதாவதானி,தசாவதானி என்றெல்லாம் நமது தாத்தாக்கள் இருந்திருக்கிறார்கள்.

தசாவதானி எனில் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்தல்

சதாவதானி எனில் ஒரே நேரத்தில் நூறு விஷயங்களை கவனித்தல்

சகஸ்ராவதானி எனில் ஒரே நேரத்தில் ஆயிரம் விஷயங்களைக் கவனித்தல்


நமது கூர்ந்த கவனிப்புத் திறனை வளர்க்க இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.ஒவ்வொரு ஞாயிறும் பயிற்சி இருக்கும்.

உதாரணமாக,திருக்குறளின் 1330 பாடல்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு, கரும்பு என்ற சொல் எத்தனாவது பாடலில் இருக்கிறது என்பதை சொல்லும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

தமிழர்களின் புராதன நுண்கலைகளில் ஒன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பரவ இந்த பதிவு வெளியிடப்படுகிறது.



Thursday, February 24, 2011

சதுரகிரி மாத இதழை இலவசமாகப் பெற




விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,வத்திறாயிருப்பு அருகில் அமைந்திருப்பது சதுரகிரி.வத்திறாயிருப்பு அருகில் அமைந்திருக்கும் மகாராஜாபுரம் கிராமத்தில் கொழுக்கட்டை சாமிகளின் 18 சித்தர்கள் தர்ம சேவாஸ்ரமம் இருக்கிறது.இவர்கள் தான் சதுரகிரி என்ற ஆன்மீக மாத இதழை இலவசமாக வெளியிட்டுவருகின்றனர்.

இந்த இதழைப் பெற விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு ரூ.4/-மதிப்புள்ள ஸ்டாம்ப் 12 ஐ அனுப்ப வேண்டும்.தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.

வெளிநாடுகளில் இருப்போர்,12 ஏரோகிராமில் சுயமுகவரியை ஆங்கிலத்தில் எழுதி,ஒரு கவரில் வைத்து அனுப்பவேண்டும்.சதுரகிரி மலையில் நடக்கும் ஆன்மீக அதிசயங்கள் இந்த இதழில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

கொழுக்கட்டை சாமிகளின் 18 சித்தர்கள் தர்ம சேவாஸ்ரமம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம்,வத்ராயிருப்பு மெயின் ரோடு,மகாராஜாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.

Tuesday, February 22, 2011

21.2.2011


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (81), ஞாயிற்றுக் கிழமை, காலையில் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் காலமானார். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.





அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளரும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஏற்கெனவே பாரிச நோயால் தாக்கப்பட்டதில் பார்வதியம்மாளின் நடமாட்டம் முடங்கிப்போனது. இந்நிலையில் கடந்த மாதம் வல்வெட்டித் துறையில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.







அவரது இரண்டு மகள்களும் வெளிநாட்டிலிருந்து தேவையான நிதி உதவியை அளித்தபோதிலும் நேரில் வராத காரணத்தால் மனமுடைந்துபோனார். இதனால் உணவு சாப்பிடுவதை நிறுத்தினார். இரண்டு மகள்களில் ஒருவர் கனடாவின் டொரண்டோ நகரிலும் மற்றொருவர் சென்னையிலும் வசிக்கின்றனர். ஒரு மகன் மனோகரன் டென்மார்க்கில் உள்ளார்.





பார்வதியம்மாள் உயிரிழந்ததை அவரது மகன், மகள்களிடம் தெரிவித்துவிட்டதாகவும், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறவினர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் காலமானார்.





மலேசியாவில் உறவினர் வீட்டில் வசித்து வந்த பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவர் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார். இதனால் சிறிது காலம் அவர் கொழும்பில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்வெட்டித்துறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். வல்வெட்டித் துறை பகுதிதான் பிரபாகரனின் சொந்த ஊராகும். இந்த இடம் யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.





நாளை , அவரது இறுதி சடங்குகள் நடக்க விருக்கின்றன... ஒரு மாவீரனைப் பெற்ற தாயின் ஆத்மா சாந்தியடைய , மனதார இறைவனை வேண்டுவோம்..





Wednesday, February 16, 2011

எனது அனுபவத்தில் ஓம்சிவசிவஓம்






புரட்டாசி மாத அமாவாசையன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியிருக்கும்.மனதில் ஒரு பேராசை உண்டானது.

“வலைப்பூவில் மட்டும் இதை பரப்பினால் போதாது;உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இந்த ஓம்சிவசிவஓம் இன் மகிமைகள் பரவ வேண்டும்.21`வயது நிறைவடையும் ஒவ்வொருவரும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எப்பேர்ப்பட்ட பிரச்னையோடு இருந்தாலும்,அந்த பிரச்னையால் அவதிப்படுவோர் ஓம்சிவசிவஓம் மந்திரத்தினை தொடர்ந்து ஜபிப்பதால்,தமிழினம் முழுவதும் ருத்திர இனமாக மாற வேண்டும்”

எனவே, எழுத்துத்திறனைப் பயன்படுத்தி மாத இதழ்கள்,வார இதழ்கள்,ஜோதிட இதழ்கள்,தினசரி பத்திரிகைகள்,இலவச இணைப்புக்கள்,சிற்றிதழ்கள் என அனைத்திலும் ஓம்சிவசிவஓம் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதத் துவங்கினேன்.

அப்படி முதன் முதல் கட்டுரையை சென்னையிலிருந்து வெளிவரும் எனது மானசீக குரு அமரர் பி.எஸ்.பி.ஐயா அவர்களின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதத் துவங்கினேன்.அப்படி எழுத ஆரம்பித்து,முதல் வரி முடியும் முன்பாக நான் இருந்த அறையில் ஓம் என்ற சப்தம் ஒருமுறை உண்டானது.அந்த ஓம் என்ற சப்தம் ஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம் என்ற விதமாக கேட்டது.ஓஓஓஓ என கேட்டபோது,மனதில் திகில் கலந்த பயம் உண்டானது.ம்ம்ம்ம்ம்ம் எனக் கேட்டதும் ஒருவித சிலிர்ப்பு உண்டானது.

இதை எனது ஆன்மீககுருவாகிய மிஸ்டிக் செல்வம் அவர்களின் அருளாசி என்பதை உணர்ந்து கொண்டேன் ***      .தற்போது இதை வாசிக்கும் எனது தமிழ் இன சகோதரர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

(நீங்களும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை எப்படி ஜபிக்க வேண்டும்? என்பதை உங்கள் பகுதியில் பரப்புங்கள்.இதுவும் ஒரு தெய்வீக காரியமே! இதனால்,உங்களது புண்ணியம் அதிகரிக்கும்.நீங்கள் ஜோதிடராக இருந்தாலோ,அருள்வாக்கு சொல்பவராக இருந்தாலோ,ஆன்மீகத் தலைவராக இருந்தாலோ இதை அவசியம் செய்வது நல்லதே)

ஓம்சிவசிவஓம்

சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்





நமது வலைப்பூவிலிருந்து சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்;அதை புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள்.புகைப்படத்தை பிரேம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலே கூறப்பட்டுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.

ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.இதைத் தவிர,வேறு பல வழிமுறைகள் உங்களுக்கோ,உங்களின் ஜோதிட குருநாதருக்கோ,ஆன்மீக வழிகாட்டிகளுக்கோ,உங்களின் பகுதி பிராமணர்களுக்கோ தெரிந்திருக்கும்.அவற்றில் உங்களால் முடிந்தவற்றை பின்பற்றவும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி



ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:

தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்



ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்

வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்

தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்

ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்



ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்



ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ

மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்

ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே

ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ

சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்

ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ

ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ

ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ

ஓம் பக்தப்பிரிய நமஹ

ஓம் பக்த வச்ய நமஹ

ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ

ஓம் ஸித்தித நமஹ

ஓம் கருணாமூர்த்தி நமஹ

ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ

ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ

ஓம் ரசஸித்தித நமஹ



ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய

மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்



ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்

தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய

லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய

மமதாரித்ரய வித்வேஷனாய

ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!

நொடித்துப்போனவர்களை மீண்டு வரவைக்கவும்,கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வைக்கவும்,செய்யும் தொழிலில் மகத்தான வளர்ச்சியைத் தரவும் உதவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு




ஒவ்வொரு மனிதர்களின் மனதுக்குள்ளும் தைரிய உணர்ச்சியாக இருப்பவர் பைரவர்.பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண பைரவர் மட்டுமே!!!



அனுபவ ரீதியாக எனது குரு மிஸ்டிக் ஐயா மற்றும் அவரது சீடர்கள்,எனது ஜோதிட குருநாதர்களின் அனுபவப்படியும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுவரவேண்டும்.இப்படி குறைந்தது எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபட்டுவர நமது செய்தொழில் அபாரமான வளர்ச்சியை அடையும்.

எந்த தொழில் செய்து நொடித்துப்போனாலும்,ஊருக்கெல்லாம் கடன் கொடுத்து அந்தப் பணம் திரும்ப வராமல் போனதாலும்,செல்வச் செழிப்பிலிருந்து வறுமையின் புதைகுழிக்குள் வீழ்ந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்துவந்து மாபெரும் வெற்றியடையலாம்.

அரசியலில் மகத்தான பதவிகளை அடைய விரும்புவோர்கள் இதே வழிமுறையைப் பின்பற்றி உச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சொர்ண ஆகர்ஷணபைரவர்களின் கோவில்கள் வருமாறு:

படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் அமரர் படப்பை சித்தர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் சொர்ணகால பைரவருக்கு தனி கோவில் இருக்கிறது.

சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அருகில் திருச்சேறையில் காலபைரவரை வழிபட,கடன் தொல்லை நீங்கும்.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு தெற்கே பெரிய கடைவீதியில் சொர்ணபைரவநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

திருமயம் அருகே இருக்கும் தபசுமலையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் கோவில் இருக்கிறது.



திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி இருக்கிறது.மிகவும் சக்திவாய்ந்த பைரவராக இருக்கிறார்.

தேவக்கோட்டையில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இருக்கிறது.

விருதுநகரில் ரயில்வே நிலையம் அருகே சுடலை கோவில் அருகே சொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரு தனியார் கோவிலாக இருக்கிறது.

இனி,அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:



24.2.11 வியாழன் இரவு 11.22 முதல் 25.2.11 வெள்ளி இரவு 10.06 வரை

26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்? இதற்கு ஆன்மீக ஆராய்ச்சியாளரும் நமது ஆன்மீக குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் விளக்கம் கூறுகிறார்.

நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும் சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!

மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

தமிழ் பேசும் எனதருமை வாசகர்களே! ஊருக்கு ஒரு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலை உருவாக்குவோம்;தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெல்லாம் குபேரபுரியாகட்டும்.



ஓம்சிவசிவஓம்



தனியார் காப்பீடுகளின் நிஜமுகம்













தனியார் துறையும், பொதுத்துறையும் காப்பீட்டு நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு நன்மைகள் செய்கின்றன என்பது நெசவாளர் நலத்திட்டங்கள் மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

தனியார் பன்னாட்டு நிறுவனமான "ஐசிஐசிஐ ஆரோக்கிய காப்பீடு' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் படி 2008-2009-ம் ஆண்டு வரையில் 2,89,023 நெசவாளர்கள் மத்திய, மாநில அரசுகளால் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து ஓரளவு காப்பாற்றும் திட்டமாக மத்திய, மாநில அரசுகளால் 2005-2006-ம் ஆண்டு முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நெசவாளர்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகள், உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ. 781.60 பைசா செலுத்துகின்றன. இதன்படி இத்திட்டத்தில் உள்ள உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தாருக்கோ ஏற்படுகிற நோயின் தன்மைக்கேற்ப ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன், ரூ. 7,500 வரை வெளி நோயாளிகளாக இருப்பவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இத்திட்டம் கூறுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு "பணமில்லா அட்டை' என அச்சடிக்கப்பட்ட லோம்பார்டு கார்டு வழங்கப்படுகிறது.

சமீபத்திய தகவலின்படி தேசிய அளவில் 2.24 கோடி உறுப்பினர்களுக்கு லோம்பார்டு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மிகப்பெரும் தொகையை ஆண்டுதோறும் சந்தாவாகப் பெற்ற இந்நிறுவனம் திட்டத்தில் கூறியுள்ளபடி மருத்துவ உதவி செய்வதில்லை!

தனியார் நிறுவனங்கள் என்றாலே முதலில் லாபம், பிறகுதான் சேவைகள் என்பது பால பாடமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் ஐசிஐசிஐ நிறுவனம் அப்பட்டமாக நெசவாளர்களை ஏமாற்றி வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு மருந்துகளை வாங்க ரூ. 500 செலவாகிறது என்றால், அதனை லோம்பார்டு நிறுவனம் மூலமாகப் பெற மருத்துவரிடம் அதற்கென உள்ள கிளைம் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்துக்கும் மருத்துவரின் சான்றொப்பமிட்டு லோம்பார்டு நிறுவனத்தின் களப்பணியாளர்களிடம் கிளைம் படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. களப்பணியாளர்களும் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து அதன் பின்னரே தங்களது நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

எல்லாம் சரியாக நடந்துவிட்ட திருப்தியில் உதவித்தொகை கிடைக்கும் என நெசவுத் தொழிலாளி காத்திருந்தால் ""படிவம் பெற்றுக்கொள்ளவில்லை'' என்று கணினி மூலம் தட்டச்சு செய்த கடிதம் கூறுகிறது.

பயனாளிகள் அளிக்கக்கூடிய கிளைம் படிவங்கள் சரியாக இருக்கிறது என்பதால்தான் களப்பணியாளர்கள் லோம்பார்டு நிறுவனத்துக்கு அனுப்புகின்றனர். ஆனால், லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் பொய்களைச் சொல்லி மருத்துவ உதவிகளை நிராகரிக்கிறது!.

ரூ. 500 பெறுவதற்கு மருத்துவரிடம் கால்கடுக்க நின்று கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்த நெசவாளி லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தின் உதவி போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு சோர்வடைந்து போகிறான். சில கிளைம்களுக்கு அதிசயமாகப் பணம் வந்துவிடுவதும் உண்டு. சில கிளைம்களுக்குப் பயனாளிகளின் இனிஷியல் மாற்றி எழுதுவது போன்றவற்றால் காசோலைகள் மாற்றப்படாமல் திரும்ப அந்நிறுவனத்துக்கே அனுப்பப்பட்டு அவை மாதக்கணக்கில் திரும்புவதில்லை. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பிரிமீயத் தொகைகளை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதே காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நெசவாளர்களுக்காக ""மகாத்மா காந்தி புங்கர் பீம யோஜனா'' என்கிற நலவாழ்வு திட்டம் ஒன்றைத் தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகாலமாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி மத்திய அரசின் பங்காக நெசவாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 150, இந்திய ஆயுள் காப்பீட்டு கழக பங்காக ரூ. 100 , நெசவாளர் சார்பில் மாநில அரசே கடந்த 2004-2005 ஆண்டு முதல் ரூ.80-ம் செலுத்தி வருகிறது. மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு நெசவாளர் கணக்கில் ஒருவருக்கு ரூ. 330 பெற்றுக்கொள்ளும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனது திட்டத்தில் கூறியுள்ளபடி மிகச் சரியான முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர்ந்த நெசவாளர்களது குடும்ப மாணவ, மாணவியருக்கு 9- முதல் 12-ம் வகுப்புவரையில் ஒவ்வோர் கல்வியாண்டிலும் ரூ. 1,200 வழங்கப்படுகிறது. இதோடு 60 வயதுக்குள் இறக்க நேரிட்டால் ரூ. 60,000 அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் உதவிகள் பெற சற்று காலதாமதம் ஆகிறதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் முறையாகப் பண உதவி வந்து சேருகிறது. லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம்போல விண்ணப்பங்களை நிராகரித்து ஏமாற்றுவது கிடையாது.

எல்.ஐ.சி. என்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மக்களின் சொத்து மட்டுமல்ல, அது இந்த தேசத்தின் சொத்து! லாப நோக்கம் கருதாமல் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுகிறது!

லாப நோக்கம் மட்டுமே தனியார் துறைகளின் லட்சியம் என்பதால் லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. மத்திய அரசின் பங்களிப்பு நிதி இல்லாமல், தமிழக அரசு நடத்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் நிறுவனம் மட்டுமே லாபம் பார்க்கிற திட்டமாக மாறியிருக்கிறது. இதைத்தான் கடந்த ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்கிறது!

ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு முதலாம் ஆண்டில் ரூ. 628.20 கோடி செலுத்தியிருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகள் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செலுத்தியிருக்கிற தொகை ரூ. 415.43 கோடிதான்! அதாவது மக்களின் வரிப்பணம் தமிழக அரசே முன்வந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 200 கோடி லாபமாக வழங்கியிருக்கிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 100 கோடி செலவில் இதே தமிழக அரசு திருவாரூரில் மருத்துவ கல்லூரியைப் புதியதாகத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கியிருக்கிறது! கலைஞர் காப்பீட்டு அட்டை யாருக்குப் பயன்படுகிறது என்பதை தமிழக அரசு யோசிக்க வேண்டும்.

வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வண்ணமயமாக கலைஞர் காப்பீட்டு விளம்பரத்தில் திடீரென ஒருவருக்கு நெஞ்சு வலி வரும்போது,கலைஞர் காப்பீட்டு அட்டையை காட்டினாலே உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என காட்டப்படும். இது விளம்பரத்துக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கும்! ஆனால் நிஜத்தில் நெஞ்சு வலியுடன் செல்லும் ஒருவர் காப்பீட்டுக்கு உள்பட்ட மருத்துவமனைக்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் ரூ. 25,000 கட்ட வேண்டும். நோயாளிக்கு எதனால் நெஞ்சு வலி வருகிறது, என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கின்ற பரிசோதனை செய்வது எல்லாம் நோயாளியின் பணத்தில்தான்!

பரிசோதனைக்குப்பிறகு இதய அறுவை சிசிச்சைதான் தீர்வு என மருத்துவர்கள் முடிவெடுத்தால் ரூ. 1 லட்சத்துக்குள் என்ன அறுவை சிகிச்சையோ அதை மட்டும் செய்து இரண்டொரு நாளில் நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

அதற்குப் பிறகு வரும் எல்லா விளைவுகளுக்கும் அந்த நோயாளியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்சிகிச்சை அவசியம் என்றால் அந்த நோயாளிதான் செலவழிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலை! இது எப்படி சாமானிய மக்களுக்கான உயர் சிகிச்சைத்திட்டம் என்பது தெரியவில்லை.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டும் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர்களுக்கும் பங்கு இருப்பதால்தான் எல்லா அவலங்களும் இடம்பெறுகின்றன. சட்டபூர்வமாக - விஞ்ஞான ரீதியாக ஊழல் நடக்கிறது




Thursday, February 10, 2011

மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்




மாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.

நீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.

பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

கலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!

அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!

இந்த பதிவு நமது ஆன்மீகக்கடலின் மறுபதிவு ஆகும்.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்: மறு பதிவு






உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!

பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!

மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!

இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!

நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.



உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.



ராமேஸ்வரத்தில் பிதுர் தோசம் செய்ய ராஹவ சர்மா என்பவரை அணுகவும்.அவரது செல் எண் 94420 44092, 9994 074647.

மாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்துங்கள்



18.2.2011 வெள்ளிக்கிழமை அன்று மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது.இந்த நாளை நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கப்பயன்படுத்துவோம்.

சந்தர்ப்பம் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணிவரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும்.சென்னை,கோவை,மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில்,அம்மனின் அபிஷேகம் நடைபெறும்போது,நாம் அம்மனின் சன்னதியில் கடைசி ஆளாக நமது மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,உள்ளங்கைகளை மடக்கி,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்.



அம்மன் சன்னதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை;பாவமும் இல்லை;ஏனெனில்,இந்த மந்திரத்தில் அனைத்து தெய்வங்களும் சூட்சுமமாக இருக்கின்றன.எனவே,குற்ற உணர்ச்சி வேண்டாம்.

குறிப்பாக,கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள்,அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முடிந்தவரையிலும் அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது உங்களின் பாவத்தைப் போக்கும்.



இது செய்ய இயலாதவர்கள்,இந்த நாளில் நள்ளிரவு(வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 11.45 முதல் 1.15 வரை) வீட்டின் மொட்டை மாடியில் ஜபித்துவருவது மிகவும் அதிக நற்பலன்களைத் தரும்.அளவற்ற மன உறுதி உள்ளவர்கள்,இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஜபிக்கலாம்.



விடுப்பும்,போதுமான பணமும் இருப்பவர்கள் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் (உதாரணமாக கொல்லிமலை,சதுரகிரி,பர்வதமலை,பண்பொழி முருகன் கோவில்,திருத்தணி,பழனிமலை,சத்தியமங்கலம் காட்டுப்பகுதி)அங்கே சென்று,அன்று முழுவதும் விரதமிருந்து இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும். ஜபித்து முடித்தப்பின்னர், பால் சாப்பிட்டோ அல்லது இளநீர் சாப்பிட்டோ ஜபத்தை முடிக்கலாம்.



எந்த ஒரு மந்திர ஜபத்தையும் ஜபித்து முடித்துவிட்டு,ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால்,நாம் அன்று ஜபித்த மந்திர ஜபத்தின் மொத்த எண்ணிக்கையும் நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.இளநீர் கிடைக்காதவர்கள்,குடிநீர் அருந்தினாலும் போதுமானது.இந்தக் கருத்தை ஆராய்ந்து நமக்கு உபதேசித்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

வரி விலக்கு கவிதை:தி.உதயக்குமார்




ஜப்பானியப் படம் ஒன்றிலிருந்து

கதையைச் சுட்டோம்

அமெரிக்காவிலிருந்து அனிமேஷனுக்கு

ஆள் கூட்டி வந்தோம்

நடனமாட மும்பை அழகிகளை

இறக்குமதி செய்தோம்

பாடுவதற்கு பாலிவுட் பாடகர்களைப்

பயன்படுத்தினோம்

தெலுங்கு பேசும் ஹீரோவையும்

மலையாள வாசம் வீசும் ஹீரோயினையும்

இடம்பெறச் செய்தோம்

அதிக ஆங்கில வரிகளைச் சேர்க்குமாறு

ரைட்டரிடம் கேட்டுக்கொண்டோம்

கடைசியில். . .

படத்துக்குத் தமிழில் பெயர் வைத்து

வரிவிலக்கும் பெற்றுக்கொண்டோம்.



நன்றி:ஆனந்த விகடன்

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சி



ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.

இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.

மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.

Wednesday, February 9, 2011

இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல






இந்திய மரபுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ,ரிக் வேதத்தின் அடிப்படையாகக் கொண்டு நவீன காலப்புனைவாக உருவாக்கியுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளியாகியுள்ள நூல் “க”.



இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஜனவரி 16(2011) அன்று சென்னையில் நடைபெற்றது.அவ்விழாவில் பேசிய கலாஸ்ஸோ, “இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல; இந்திய வேதங்கள்,உபநிஷத்துகள்,புராணங்கள்,இதிகாசங்கள் ஆகியவற்றின் உள்ளுறையாக விளங்குவது அறிவார்த்தமான முடிவற்ற தேடல்தான். இந்திய தத்துவ மரபோடு ஒரு படைப்பாளி என்ற முறையில் நான் நடத்திவரும் உரையாடல் தொடரும்”





ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்




கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்

க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்

லோகமோஹலோபதைன்ய கோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்



நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்

காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்

நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



பாவங்கள் அழிய தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலம் உக்ரசாஸனம்

அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



வேண்டுவன கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



பானுகோடி பாஸ்வரம் பவாப்தி காரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்

காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



மரணபயம் நீங்கிட தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்

காசிகா புராதிநாத காலபைரவர் பஜே



மோட்சம் கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்

நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



நன்றி:ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு

நன்றி:வைரவ வணக்கம்,தொகுத்தவர்:பி.பாலகிருஷ்ணன்,மிஸ்டிக் இந்தியா மிஷன்.

சூரியனின் பிராண தேவதை=சொர்ணாகர்ஷண பைரவர்+பைரவி




ஓம் பைரவாய வித்மஹே

ஆகர்ஷணாய தீமஹி

தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்



ஓம் த்ரிபுராயை ச வித்மஹே

பைரவ்யை ச தீமஹி

தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்




சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்



ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்



ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்



யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.



செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி



ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்



ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்



செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி



ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்



ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வராஹி ப்ரசோதயாத்



புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.



குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்



ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்



குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.



சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி



ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்



ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்



சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.



சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி



ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்



ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்



சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.



ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ



ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்



ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ: சண்டி ப்ரசோதயாத்



ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.



கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி



ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்



ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; காளி ப்ரசோதயாத்



கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?




பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.



சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.



மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.இந்தத் தகவல்களை நமக்கு தேடி ஆராய்ந்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.அவர்களுக்கு நாம் ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம்.

ஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்?




12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.



தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.



தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.



சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.



அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

பைரவர் உருவான புராணக்கதை



அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.



தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.



இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.



பைரவரை ஜைன சமயத்தில் விஜயபத்திரர்,வீரபத்திரர்,மணிபத்திரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என அழைக்கின்றனர்.

ஜைன சமயத்தில் 96 வகையான பைரவர்கள் உள்ளனர்.பௌத்த சமயத்தில் 84 வகையான பைரவர்களும்,வாமம் என்னும் சாக்த மதத்தில் 64 வகையான பைரவர்களும் உண்டு.கிறிஸ்தவ சமயத்தில் “நோவாஸ் ஆர்க்”, “செயிண்ட் மைக்கேல்”, “செயிண்ட் ஜார்ஜ்” ஆகியோர் பைரவ அம்சங்களே.



ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

மந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்:அண்ணன் காளிராஜன் அவர்கள் அனுப்பியது

சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை கிடையாது. மந்திரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவரின் அனுபவம் ஒன்றை கூறினார். அவர் ஒரு அரசு ஊழியர். அவருடன் பணிபுரிந்த ஒருவர் திடீர் என்று மூன்று மாதங்களாக அலுவலகம் வரவில்லை. அவர் மீண்டும் அலுவலகம் வந்தபோது கிறிஸ்தவ கண்காணிப்பாளர் வெளியில் அவர் நிற்பதை பார்தவுடன் "இது மடம் என்று நினைத்தாரா. நினைத்தால் வருவதற்கும் போவதற்கும். என்ன செய்கிறேன் என்று பாருங்கள். " என்று திட்ட ஆரம்பித்துள்ளார். என் நண்பர் வெளியே நின்றிருந்த அவரிடம் சென்று " இப்போது அலுவலதிற்குள் வராதீர்கள். கண்காணிப்பாளர் வீட்டில் சென்று பார்த்து விட்டு வாருங்கள். இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார்." என்று சொல்லி இருக்கிறார்.


அதற்கு அவர் "நான் இப்போது வருகிறேன். என்ன செய்கிறார் என்று பாருங்கள் என்று சொல்லிவிடு சிலநிமிடங்கள் கழித்து அலுவலகதில் வந்திருக்கிறார். கண்காணிப்பாளர் அவரை பார்தவுடன் "சார் வாங்க. எப்படி இருக்கீங்க. " என்றவர் பக்கதிலிருந்த எழுதரிடம் சாருக்குரிய சம்பளம் எல்லாவற்றையும் போட்டுக்கொடு என்று கூறியிருக்கிறார். என் நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது ஒன்றுமில்லை. ஒரு மந்திரம் சொன்னேன். அவ்வளவுதான் என்றிருக்கிறார். எனக்கும் சொல்லிக்கொடு என்று இவர் கேட்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்த மந்திர வித்தையை பெண்களை வசியம் செய்ய பயன்படுத்தி அற்ப ஆயுளில் இறந்து விட்டார்.




என் நண்பரே நாயின் வாயை கட்டும் மந்திரம் அறிந்தவர். மற்றொரு பெரியவர் பார்வை பார்த்து தேள் பூரான் பாம்பு கடி விஷங்களை நீக்கி குணமாக்குவார். அவரிடம் பேசியபோது என்ன மந்திரம் சொல்லி குணமாக்குகிறீர்கள் என்று நான் கேட்டபோது நம் தெய்வங்களின் பெயர்கள் தான். ஓடும் தண்ணீரில் நின்று லட்சம் தடவை சொல்லி உரு ஏற்றவேண்டும் அவ்வளவுதான் என்றார். இது போன்ற சில சம்பவங்களினால் மந்திரங்களின் மேல் நம்பிக்கை வந்தது. அகத்தியர் கருவூர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களை படித்தபோது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் வியாதிகளை போக்குவதற்கும், மூலிகை வைத்தியம் மட்டுமல்லாது மந்திரங்களாலும் தீர்க்க முடியும் என்பதை அறிந்தேன்.

எனவே மந்திரங்களுக்கு மாபெரும் சக்தி உண்டு என்பதை உறுதியாக நம்பலாம்.

Tuesday, February 8, 2011

மெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி




பொருளாதாரத்தினை திறந்துவிடுவது பற்றி மேலை நாடுகள் செய்யும் உபதேசங்கள் அலுப்பைத் தருகின்றன.அவர்களது உபதேசத்தை அவர்களே கடைபிடிப்பதில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் திரு.அசீம் பிரேம்ஜி அமெரிக்க தடையுத்தரவுகள் பற்றி சாடியுள்ளார்.அவர் இதை உலக பொருளாதார மன்றத்தில் பேசினார்.



பிற நாடுகல் அமெரிக்க பொருட்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என எதிர்பார்க்கும் அமெரிக்கா,தனது நாட்டில் வெளிநாட்டுப்பொருட்களுக்கு தடை விதிக்கிறது.அமெரிக்காவின் விசா கட்டண உயர்வு மற்றும் சேவை இறக்குமதித் தடைகளை பற்றி அவர் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து நாம்(இந்தியா) 50 பில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும்,இந்தியா 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி:சுதேசி செய்தி,பக்கம் 25,பிப்ரவரி 2011.

Monday, February 7, 2011

மேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடிவமைப்பும்




இலங்கையின் அதிபர் இராஜபக்ஷேவுக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.இதனால்,இதற்கு முந்தைய புகைப்படங்களை விட,தற்போதைய புகைப்படத்தில் முகத்தில் வீக்கம் தெரிகிறது.

இதுதான் மேல்நாட்டு இதழியல் முறைப்படி உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்தி.



இனி கீழ்நாட்டு இதழியல் முறைப்படி,இந்த செய்தியை வாசிப்போமா?



எத்தனையோ பிறவிகளாக சேர்த்துவைத்த புண்ணியத்தின் விளைவாக இலங்கை நாட்டின் மன்னனாகும் வாய்ப்பு,இந்தப்பிறவியில் இராஜ பக்ஷேவுக்கு கிடைத்தது.அப்படி கிடைத்த வாய்ப்பினை அவர் தனது ராஜதந்திரத்தினால் இலங்கையின் சமாதான புறா என்ற பெயரை எடுத்திருக்கலாம்.உலக வரலாற்றில் அழியாத அற்புதமான தலைவர் என்ற பெயரையும் எடுத்திருக்கலாம்.

ஆனால்,குறுகிய கண்ணோட்டத்தாலும்,அரக்கத்தனத்தை வெளிப்படுத்திட வாய்ப்பு கிடைத்தது போலவும்,தனது சிங்கள இனத்தின் காவலனாகவும் காட்டிக்கொள்ளும் விதமாக தனது நாட்டின் குடிமக்களையே கொடூரமாகவும்,மனித குல தர்மங்களை மீறியும்,ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் கோடி கோடி)ஹிட்லருக்குச் சமமாகவும் அழித்து இந்த அரிய மானிடப்பிறவியையும்,அற்புத அதிபர் பதவியின் மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

தமிழினத்தைச் சேர்ந்த பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்களை இன்று வரையிலும் நிம்மதியாகவும்,மன மகிழ்ச்சியோடும் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை;தினசரி வாழ்க்கையையே நரகத்தை விடவும் வாழ வைத்து,புத்த மதத்தின் மாண்பையே சிதைத்து,இன்று கல்லீரல் புற்றுநோயாளியாகிவிட்டார்.

இவர் செய்த கொடூரபாவத்தை இவர் நீக்கிட இன்னும் பல கோடி மனித பிறப்பெடுக்க வேண்டியிருக்கும் என இந்துதர்ம நீதி நூல்கள் தெரிவிக்கின்றன.