Friday, July 29, 2011

சீனாவின் வாலுக்குப்பின்னால் நின்று தமிழினத்தை அழித்த ராஜபக்ஷே




புத்தமதத்தை தனது தேசிய மதமாகக் கொண்ட இலங்கை தனது மக்களை= நமது தமிழ் ஹீமோகுளோபின்களை ஹிட்லரையும் மிஞ்சும் விதமாக கொன்றதற்கான ஆதாரம் இதோ: www.channel4.com/news/sri-lanka-civil-war

ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்



ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறீர்களா? நீங்கள் உங்களின் வாழ்க்கைப் போக்கினை தினமும் கூர்ந்து கவனித்து வருக! நிச்சயம் உங்களின் நியாயமான,நீண்டகால மற்றும் குறுகிய கால ஆசைகள்,லட்சியங்கள்,ஏக்கங்களை அது நிறைவேற்றும்.அப்படி நிறைவேறியிருந்தால்,அது பற்றிய விபரத்தை எமக்கு அனுப்பவும்.

அப்படி அனுப்பும்போது,எத்தனாம் தேதி ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்தீர்கள்? ஒரு நாளுக்கு எத்தனை முறை ஜபித்தீர்கள்? ஒரு வேளைக்கு எவ்வளவு நேரம் ஜபிக்க முடிந்தது? ஜபிக்க ஆரம்பித்த முதல் நாளில் என்ன மாதிரியான மனநிலை உண்டானது? ஒரு வாரத்தில்,இரு வாரத்தில்,ஒரு மாதத்தில்,இரு மாதத்தில்,மூன்று மாதத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களை கூர்ந்து கவனித்து,தயவு செய்து மின் அஞ்சலில் அனுப்பி வைக்கவும்.
அப்படி அனுப்பி வைக்கப்பட்டதில்,உங்களின் அனுமதி இருந்தால் மட்டுமே,உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை ஓம்சிவசிவஓம் வலைப்பூவிலும்,ஆன்மீகக்கடல் வலைப்பூவிலும் வெளியிடுவேன்.

நாளை 30.7.11 சனிக்கிழமை ஆடி அமாவாசை 31.7.11 ஞாயிறு வரையிலும் அமாவாசை இருக்கிறது.இன்று கூட ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கலாம்.

எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிப்பது? (மீண்டும் ஒரு நினைவூட்டல்) புதிய ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக

ஒரு மஞ்சள் துண்டு,வசதியிருந்தால் பட்டு மஞ்சள் துண்டு,மூன்று ருத்ராட்சங்கள்(காதி பவன்களில் கிடைக்கும்),அருகிலிருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரசாதமாகப் பெறப்பட்ட விபூதி,தனிமையான ஒரு இடம் அல்லது அறை,தினமும் ஒரு மணி நேரம்.

ஜபிப்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?

21 வயது நிரம்பிய எந்த மதத்தையும்,ஜாதியையும் சேர்ந்தவராக இருக்கலாம்.ஆண்,பெண்,திருநங்கை என்ற பேதமில்லை;யார் வேண்டுமானாலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம். அசைவம்,முட்டை சாப்பிடக்கூடாது.
ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை/ஜபிக்கப்போவதை பிரபலப்படுத்தக்கூடாது.

எப்படி ஜபிக்க வேண்டும்?

தினமும் ஏதாவது ஒரு மணி நேரம் ஒதுக்கி,அந்த நேரத்தில் செல்போனை பயன்படுத்தக்கூடாது;ஒலித் தொந்தரவு இராமல் பார்த்துக்கொள்ளவும்.நெற்றியில் விபூதி பூசிக்கொள்ளவும்.கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ளவும்.(பெண்கள் மாதஓய்வு நாட்களிலும் ருத்ராட்சம் கழற்றிட வேண்டிய அவசியம் இல்லை;உடலுறவு சமயத்திலும் ஆண்/பெண் எவரும் ருத்ராட்சம் கழற்றிட வேண்டிய அவசியம் இல்லை;சிவதீட்சை வாங்கியவர்களுக்குத்தான் ஏராளமாக கட்டுப்பாடுகள் உண்டு.)
மஞ்சள் நிற விரிப்பை விரித்து,அதில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பத்மாசனம் இட்டு அமரவும்.முடியாதவர்கள்/தெரியாதவர்கள் சாதாரணமாக உட்காரலாம்.உடலின் எந்த பாகமும் தரையில் படக்கூடாது.
மூன்று ருத்ராட்சங்களில் இரண்டை
 உள்ளங்கையில் தலா ஒன்றாக வைத்து,உள்ளங்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளவும்.(ருத்ராட்சத்தில் ஐந்துமுகமே சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.அதுவே போதும்.வேறு முகங்கள் கிடைத்தாலும் ஓ.கே)
கண்களை மூடி,ஓம் (உங்கள் குல தெய்வம்) நமஹ என மனதுக்குள் ஜபிக்கவும்=ஒரு முறை மட்டும்.
ஓம் கணபதியே நமஹ என மனதுக்குள் ஜபிக்கவும்=ஒரு முறை மட்டும்
இந்த இடத்தில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நினைக்கவும்.எப்படியெனில்,என்ன நடக்க வேண்டுமோ,அதை மட்டும் வேண்டவும்.
உதாரணமாக எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்/எனது 3,00,000 கடன் விரைவில் தீர வேண்டும்/எனது கர்மவினைகள் விரைவில் கரைந்து,எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும்=இப்படி ஏதாவது ஒரு கோரிக்கையை மட்டும் நினைக்கவும்.
பிறகு ஓம்சிவசிவஓம் என திரும்பத் திரும்ப ஜபிக்கவும்.

தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகணங்க நாட்களில் வரும் கிரகண நேரங்களில் ஜபிக்க அளவற்ற புண்ணியமும்,ஆழ்ந்த மன நிம்மதியும் உருவாகும்.நமக்கு பொறாமை முதலான குணங்கள் இருந்தால் அது நம்மை விட்டு விலகிவிடும்.

வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றுவோர்,ஓம்ஹரிஹரிஓம் என இதே போல ஜபிக்கலாம்.அப்போது,ருத்ராட்சம் தேவையில்லை;

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ,ஓராண்டு வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர,நமது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும்.அதன்பிறகு,நமது எல்லா ஆசைகளும் நிறைவேறும்.நமது வாழ்க்கையில் இனி நடக்க இருப்பவை அனைத்தும் நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும்.

நமதுவீட்டில் ஒரு மந்திரத்தை வாய்விட்டு ஒரு முறை சொன்னால்,ஒரு முறை ஜபித்த பலன் கிடைக்கும்.மனதுக்குள்=உதடு அசையாமல் ஒரு முறை ஜபித்தால்,

வீட்டில் = 10 முறையும்

பழமையான(கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயத்திலும்/விஷ்ணு/அம்மன்/எந்தக் கோவிலாக இருந்தாலும்) ஆலயத்தில் = 1000 முறையும்

மலைமீதிருக்கும் கோவிலில் = 1 கோடி முறையும்

கடலோரக்கோவிலிலும்,கடலில் இடுப்பளவு தண்ணீரிலும்
                        = 2 கோடி முறையும்

ஜபித்த பலன்கள் நமக்குக் கிடைக்கும்.தரையில் நின்றோ,நடந்தவாறோ இந்த மந்திரத்தை ஜபித்தால்,ஜபித்த பலன் நமக்குக் கிடைக்காது.பூமிக்குப் போய்விடும்.

இதுவே,தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,பவுர்ணமி,அமாவாசை,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேற்கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு பலன்கள் நமக்குக் கிடைக்கும்.இருந்த போதிலும்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்போது,நமது வாழ்க்கை சிந்தனை மாறிவிடும்.நாமே மாறிவிடுவோம்.

ஓம்சிவசிவஓம் ஜபிக்க குரு உபதேசம் தேவையில்லை;
ஓம்சிவசிவஓம்


ஸ்திரி லோலன் எனப்படும் காமவெறியனை ஒழுக்கமுள்ளவனாக மாற்றிய ஓம்சிவசிவஓம்



அந்த இளைஞனுக்கு வயது 22.தனது நண்பனுக்காக ஜோதிடம் பார்க்க அவனுடன் வந்திருந்தான்.அந்த நண்பன் ஜோதிடம் பார்த்ததும்,அந்த இளைஞனுக்கும் தனக்கு ஜோதிடம் பார்க்கும் ஆர்வம் வந்தது.ஓரிரு நாளில் தனியாக வந்தான்.சில ஜோதிடபலன்களைச் சொன்னதும்,இடைமறித்து, ‘நான் ஒழுக்கமாக வாழ ஆசைப்படுகிறேன்.ஆனால்,எனக்கு கன்னியோகம் இருக்குமோ?’ எனக் கேட்டான்.

பொதுவாக முதல்தடவை ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு நெகடிவ்வான விஷயங்களைச் சொல்வதில்லை;ஏனோ,அந்த இளைஞனே தனது பிரச்னையை சொன்னதால்,அவனுக்கு ஜோதிட ஆலோசனை மூலமாக வழிகாட்டும் நிலை ஏற்பட்டது.ஆமாம்!

கன்னியோகம் உங்களுக்கு ஜாலியைத் தான் தருமே! வாழ்க்கையை இளமையோடு அனுபவிக்கலாமே என ஒரு பிட்டைப் போட்டேன்.

அதற்கு அந்த இளைஞன், “நீங்கள் சொல்வது நிஜம்தான்.ஆனால்,என்னால்,எனது அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லாமல் இருக்க  முடியவில்லை;இதனால்,என்னை எந்த நண்பனும்,உறவினரும் அவரது வீட்டுக்குள் வர விடுவதில்லை;எனக்கு அவமானமாக இருக்கிறது.எனவே,ஒரே ஒரு பெண்ணை விரும்பி,அவளுடன் மட்டுமே வாழ விரும்புகிறேன்” என சொன்னான்.அந்த இளைஞனின் பேச்சில் யதார்த்தமும்,குற்ற உணர்ச்சியும் உண்டானது.ஆனால்,அவனது ஜாதகத்தில் இன்னும் 14 ஆண்டுகளுக்கு கன்னியோகம் இருக்கிறது.விதியை எப்படி என்னால் மாற்றிட முடியும்? என யோசித்தேன்.
உங்களால் நாளை காலை 11 மணிக்கு சரியாக வந்து என்னைப் பார்க்க முடியுமா? எனக் கேட்டேன்.

அந்த இளைஞனும், “நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்.எல்லோரும் என்னைப் பற்றி நான் இல்லாதபோது கூட மரியாதையாகப் பேச வேண்டும்.எல்லோரின் வீட்டு விழாக்களிலும் சகஜமாகக் கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு மட்டும் வழி செய்யுங்கள்.எனக்கு கன்னி யோகம் வேண்டாம்” என உறுதியான குரலில் கெஞ்சினான்.

நாளைக்கு வரவும் என கூறிவிட்டு,அனுப்பிவிட்டு,அவனது ஜாதகத்தை அன்றிரவு சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் ஆராய்ந்தேன்.ஒரு சூட்சும வழி புலப்பட்டது.

மறுநாள்,ஓம்சிவசிவஓம் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் ஜபிக்கும்படியும்,குறிப்பிட்ட நிறத்தில் இருக்கும் பட்டு ஆடையை தயார் செய்து அதைப் பயன்படுத்தி,ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வழிகாட்டினேன்.

இரண்டு மாதங்கள் கடந்தன.மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் அந்த இளைஞன் உற்சாகமாக ஓடி வந்தான்.
“நீங்கதான் எனது வாழ்நாள் குரு! எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது.அதுவும் நான் எப்படியெல்லாம் எதிர்பார்த்தேனோ,அதே தகுதிகள்,அழகு,புத்திசாலித்தனம்,சுபாவம் இருக்கும் பெண்ணே எனக்கு மனைவியாக அமைந்துவிட்டாள்.இப்போது நான் ஒரு நாளுக்கு இரண்டுமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறேன்.இப்போது என்னை எல்லோரும் மதிக்கிறார்கள்.யாரும் என்னைப் புறக்கணிப்பதில்லை;எங்கே எதைப் பேச வேண்டுமோ,அதை மட்டுமே பேசுகிறேன்.எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.ரொம்ப நன்றிகள்” என படபடவென பேசிவிட்டு,எனது பதிலுக்கு காத்திராமல் போயே விட்டான்.
ஓம்சிவசிவஓம்

Thursday, July 28, 2011

நடிகர் ராஜேஷ் சொல்லும் ஜோதிட அனுபவம்.எப்படி இருக்கு?உங்கள் கருத்துகளை கம்மண்டில் சொல்லுங்கள்.


FOR GOOD READING,CLICK ON THAT IMAGE TO ENLARGE & AGAIN CLICK ONCE.


























கோயம்புத்தூர் கோவிந்தராஜ் கட்டியுள்ள கோவில் தன் மனைவிக்கு...!

CLICK ON THIS IMAGE TO ENLARE & AGAIN CLICK ONCE FOR GOOD READING

சொர்ணகாடு ஸ்ரீ ராமபிரானை உங்களுக்கு தெரியுமா...?

CLCIK ON THIS IMAGE TO ENLARE & AGAIN CLICK ONCE FOR GOOD READING







புனருதாரனதுக்கு தயாராகும் நரகரி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் கோவில்

CLICK ON THIS IMAGE TO ENLARGE & AGAIN CLICK ONCE FOR GGOOD READING


ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பூஜிபோம்.( கடக ராசி,கடக லக்னத்தில் பிறந்த ராமர்)

CLICK ONTHIS IMAGE TO ENLARGE & AGAIN ONCE CLICK FOR GOOD READING







சுபிட்ஷம் தரும் ஸ்ரீராமர் வழிபாடு

CLICK ON THIS IMAGE TO ENLARGE & AGAIN CLICK ONCE FOR GOOD READING







சாய்பாபா மகிமை

click on this image to enlarge & again click once for good reading







அன்னபூரணி சமேத நீலகண்டேஷ்வர்

click on this image to enlarge & again once click for good reading







ஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழிமுறை










ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் கோவிலுக்குப் போவதை விட,சனியின் குருவாகிய பைரவரை தினமும் வழிபட வேண்டும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று பின்வரும் வழிமுறையைக் கொண்டு வழிபடுவதன்மூலம் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.இது அனேகரது வாழ்க்கையில் கிடைத்த அனுபவ உண்மை!!



ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.



தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.



இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.



ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.

அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.



இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.



இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!







ஓம்சிவசிவஓம்



பொறாமையை எதிர்கொள்வது எப்படி?







யாருக்கெல்லாம் மனதில் உறுதி இல்லையோ,யாருக்கெல்லாம் அதிசயத்தின் மீது பற்றுகொண்டு,உழைக்காமல் அல்லது தனது தேவையான அளவுக்கு உழைக்க வில்லையோ அவர்களுக்கு பொறாமை உண்டாகிறது.1995 முதல் உலகமயமாக்கலின் விளைவாக,கேபிள் டிவி தொழிலில் ஒரு புரட்சி வந்தது.சன் டிவி உருவாகி,இன்று தனது திட்டமிட்ட நிர்வாகத்திறமை மற்றும் அரசியல் செல்வாக்கினால் தமிழ்நாட்டுக்குடும்பங்களின் உறுப்பினர்கள் அளவுக்கு வளர்ந்துவிட்டது.சன் டிவி குழுமம் தான் மெகா தொடர்களை அறிமுகப்படுத்தியதோடு,குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தியதோடு,முறையற்ற உறவுகளுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கித்தந்தது.மேலும்,எப்படியெல்லாம் பொறாமைப்படுவது? நிம்மதியாக,யாருக்கும் கெடுதி தராத உறவுகளை எப்படி பிரிப்பது? என்ற நரித்தனத்தை தமிழ்நாட்டுக்கே சொல்லித்தந்தது.இதனால்,பல நல்ல தமிழ் உள்ளங்கள் முழுவதும் நச்சு நிறைந்த நயவஞ்சக மனமாகி,நிம்மதியில்லாத தமிழ்நாடாகிவிட்டது.இதுபற்றி,ஓ.ஆர்.ஜி. ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தால் நல்லது.அப்படி எடுக்க யார் பணம் தருவார்?






சரி மேட்டருக்கு வருவோம்.






எனது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.அவள் தினமும் ஐந்துமணிக்கு எழுந்து,ஆறுமணிக்குள் தயாராகிவிடுவாள்;ஆறு மணிமுதல்,இரவு வரையிலும் சுறுசுறுப்பாக அவளது கடமைகளைச் செய்வாள்.ஒருநாள்,அவள் தனது வகுப்புத் தோழியிடம் கூறினாள்: நான் தினமும் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவேன்.அது குளிர்காலமாக இருந்தாலும் சரி,மழைக்காலமாக இருந்தாலும் சரி






இப்படிச் சொன்ன மறு நாளிலிருந்து,அவளால் ஆறுமணிக்கு மேல்தான் எழுந்திருக்கவே முடிகிறது.தற்போது,அவளது தினசரி வாழ்க்கை அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறது.


ஏன் இப்படி எனது மகளுக்கு ஆனது?






நண்பர்களின்/உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது,சில நாட்களில் வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லுவார்கள்.அப்படிச் சாப்பிடும்போது,அவர்களின் கண்களை கவனிப்பேன்;அதில் ஒரு எதிர்பார்ப்பு தெரியும்.


சாப்பிட்டு முடித்த சில மணிநேரங்களிலேயே, எனக்கு வயிற்றுப்போக்கு வந்துவிடும்.இப்படி என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தால் அது தப்பில்லை;அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.இதனால்,சொந்த ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன்.ஏன் இப்படி எனக்கு நிகழ்கிறது?










சில ஜோதிட மாத இதழ்களில் ஜோதிடம் சார்ந்த கட்டுரைகள் எழுதத் துவங்கியிருக்கிறேன்.அப்படி எழுதி,அவற்றை திருத்தி,அவற்றில் எனது சிந்தையில் விடுபட்டவற்றை மீண்டும் சேர்த்து,அனுப்பினாலும்,ஒரு சில கட்டுரைகள் மட்டுமே வெளிவருகின்றன.அதில், எனது பெயர்,முகவரி,செல் எண்ணை வெளியிடுகின்றனர்.என்னதான் பிறரின் பொறாமையிலிருந்து தப்பிக்க நினைத்தாலும்,நமது நட்பு மற்றும் உறவு வட்டத்தில் நமது மதிப்பை அதிகரிக்க ஏதாவது பில்ட் அப் செய்வது பிறரின் சுபாவம்;நான் என்ன செய்து வருகிறேன்? என்பதை வெளிப்படுத்துவது எனது குணம்.எனது ஜோதிட நண்பர்கள் மத்தியில் இப்படி எனது ஜோதிடக்கட்டுரை வெளிவந்திருக்கிறது என நான் சொல்லும் நாட்களிலெல்லாம் அவர்களின் கண்களிலிருந்து ஒரு வித சூட்சும அலை,மொத்தமாகப் புறப்பட்டு என்னைத் தாக்கும்.அப்படி நான் அவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாக சொன்ன நாட்களில்,எனது ஜோதிடத் தொழில் டல்லடிக்கும்;அல்லது எனது நெருங்கிய உறவில் திட்டு வாங்கியிருக்கிறேன்.






ஒருதடவை,எனது பக்கத்துவீட்டு அம்மாவிடம்,அம்மா,நாளைக்கு ஆடி அமாவாசை! நான் ராமேஸ்வரம் போகப்போகிறேன்.என்றேன்.அதற்கு அந்த அம்மா,ஆடி அமாவாசைக்கு எதுக்கு அங்கே போறீங்க? எனக் கேட்டார்.


உடனே,ஆடி அமாவாசையின் பெருமைகளை விவரித்து,ராமேஸ்வரம் சென்று நான் அங்கு செய்ய இருக்கும் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றி விலாவாரியாகச் சொன்னேன்.அப்படிச் சொன்ன உற்சாகத்தில்,அவர்களின் கண்களைக் கவனிக்க வில்லை;மறுநாள்,விடிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து தூங்கியும் கூட,அந்த அலாரம் ஐந்து முறை அலறியும் கூட,நான் தூங்கி எழுந்தது காலை 6 மணிக்குத்தான்.பிறகென்ன? ராமேஸ்வரம் செல்லவில்லை.


இதற்குப் பெயரும் அதுதான்!!!






ஆக,மிஸ்டிக் செல்வம் ஐயா சொன்னது போல்,மனிதனுக்கு விஷகலை அதிகம்.அதனால்தான் அவன் நடக்கும் இடத்தில் புல் முளைப்பதில்லை;பிறரது பொறாமை,சாபங்கள்,வயிற்றெரிச்சல் நம்மையும்,நமது தொழிலையும்,நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்காமல் இருக்க நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.






1.தினமும் ஏதாவது ஒரு ரூபத்தில் மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப்/பனியன்/சட்டை பயன்படுத்த வேண்டும்.மஞ்சள் நிறப்பொருளில்,ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் தரப்படும் எலுமிச்சை பழம் வைத்திருக்கலாம்.மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப் பிறரது பொறாமையிலிருந்து நம்மைக் காக்கும்.அந்த தீய எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும்.






2.நம்மைச் சுற்றியுள்ளவர்களே நமது உலகம்.அவர்களிடம் நமது பெருமைகளையும்,அவமானங்களையும் ஒரு போதும் சொல்லக்கூடாது.ஆனால்,நமது மனம் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பாராட்டுக்கு ஏங்கும்.அது அவசியம்தான்.அப்படி அவர்களின் பாராட்டு உங்களுக்கு வேண்டுமானால்,உங்களின் வளர்ச்சி/சாதனையை நீங்களே தம்பட்டம் அடிக்கக்கூடாது.(அவர்களிடம் சொல்லக்கூடாது).


நமது பெருமையை நாமே சொன்னால்,அது தற்பெருமைதான்.நம் மீது நிஜமாகவே மரியாதை வைத்திருக்கும் ஓரிரு உளறுவாயர்களை நாம் பாக்கெட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.அவர்களிடம் நமது பெருமைகள்/சாதனைகள்/முன்னேற்றங்களை மொத்தமாக அவர்களிடம் சொல்லக்கூடாது.அவர்கள் மறந்துவிடுவார்கள்.






போன தடவை/போன மாதம்/போன புராஜக்ட்/போன வருடம் செய்த சாதனையைத் தான் இப்போது அவர்களிடம் ரகசியமாக சொல்லி, ‘யாரிடமும் சொல்லாதே’ என்று தெரிவித்தவாறு,அவர்களை சிறு சிறு பரிசு கொடுத்து,அவர்களை வளர்க்க வேண்டும்.






பொறாமைபிடித்தவர்கள் இதை உறுதிபடுத்திட, நம்மிடம் ‘நல்ல மூடு’ இருக்கும்போது கேட்பார்கள்.அதை நாம் சந்தோஷமாகவும்,பெருமையாகவும் ஆமா என சொல்லக்கூடாது.அது போன மாசமே நடந்திருச்சே என தெரிவிப்பதன் மூலமாக,அவர்களின் பொறாமை பொங்காமல் சிறுத்து,சிதறிவிடும்.






அதே சமயம்,ஏதோ அதிர்ஷ்டத்தால் நடந்தது என்றவாறு சொல்லிவிட வேண்டும்.






ஓம்சிவசிவஓம்









கயிலாயம்

click on this image to enlarge & again click once for good reading


ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-6







கேள்வி:உங்கள் வீட்டு சாப்பாடு மிக நன்றாக இருந்தது.மிக்க நன்றிகள்.






பதில்:தமிழர்களின் பண்பாடு வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பதுதானே! இதற்கெல்லாம் நன்றிகள் சொல்லி நம்மை பிரித்துப்பார்க்காதீர்கள்.






கேள்வி:ஓ! . . . ஸாரி,ஸாரி சார்.






பதில்:இது கூட மேல்நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கம் தான்.குற்ற உணர்ச்சியைக் கைவிடுங்கள்.










கேள்வி:உலக மயமாக்கல் பற்றி சொல்லுங்கள்.






பதில்:நமது ஆன்மீகக்கடலின் 2010,2011 ஆம் ஆண்டு பதிவுகளை வாசியுங்கள்.போதுமான அளவுக்கு விவரித்திருக்கிறேன்.மேலும்,பல பதிவுகள் வர இருக்கின்றன.






தவிர, உலகமயமாக்கல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் எனில்,பின்வரும் முகவரிக்கு ஆண்டுச்சந்தா அனுப்பவும்.






கேள்வி:அது என்ன பத்திரிகை?






பதில்:சுதேசிச் செய்தி என்பது அந்த மாத இதழின் பெயர்.சுதேசி விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு இந்த மாத இதழை நடத்திவருகிறது.தனிப்பிரதி ரூ.7/-ஆனால்,கடைகளில் இந்த இதழ் பெரும்பாலும் கிடைப்பதில்லை;ஆண்டுச்சந்தா ரூ.75/- முகவரி:swadeshiseithi@yahoo.co.in செல் எண்:திரு.இராம.நம்பி நாராயணன் 94431 40930.






ஒவ்வொரு மாதமும் இந்த சுதேசிச் செய்தி மாத இதழில் வெளிவரும் அத்தனை செய்திகளையும் வெளியிட விரும்புகிறேன்.அதற்கு நேரம் அமையவில்லை;பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் சாதனைகளையும்,அந்த சாதனைகளைச் சிதைக்க வெளிநாடுகள் எப்படியெல்லாம் இந்திய அரசை வளைக்கின்றன? அதை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் எப்படி எதிர்கொள்கிறது? என்பதை விரிவாக,விளக்கமாக மாதம் தோறும் வெளியிட்டுவருகிறது.






கேள்வி:இருந்தாலும் உலகமயமாக்கலைப் பற்றி கொஞ்சம் சொல்லக்கூடாதா?






பதில்: டைனோசரை தீப்பெட்டிக்குள் அடைக்க ஆசைப்படுகிறீர்கள்.சரி,முயலுவோம்.






உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் உலகை அச்சுறுத்தாமல் இருப்பதற்காக 1945 ஆம் ஆண்டு ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய திட்டமே இன்று குளோபலிஷேசன் என்ற பெயர் தாங்கி,உலக நாடுகளை வியாபார ரீதியில் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.நோக்கம் என்னவே பேப்பரில் நன்றாக இருக்கிறது.ஆனால்,நடைமுறையில்,அமெரிக்காவும்,ஐரோப்பாவும் வெகுவிரைவில் பரம ஏழைநாடுகளாகப் போகின்றன.அப்படிப் போகும் முன்பு,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு உலக நாடுகளின் சட்டங்களை அழித்து,அவை பிழைக்கவும்,உலக ஏழைகளின் உழைப்பை உறிஞ்சவும் செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுதான் இது!






இந்தியாவில் நிர்வாண ஒளிபரப்பைத் தரும் எஃப் டிவி தடையின்றி பரவுவதற்கும்,அமெரிக்காவில் சன் டிவி தெரிவதற்கும் இந்த உலக மயமாக்கமே காரணம்.தவிர,நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் இப்போதே உள்நாட்டுத்தயாரிப்பாக இல்லை;இன்னும் பத்தாண்டுகளில் இந்திய நிறுவனங்களே உற்பத்தித்துறையில் இல்லாத சூழ்நிலை உண்டாக்விடும்.ஒருவேளை அப்படி இருந்தாலும்,அவை இந்திய பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கும்.






கேள்வி: கொஞ்சம் விரிவாக. . .






பதில்:புது டெல்லியில் மட்டும் 4000 குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.ஒரு குளிர்பான நிறுவனம் 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தருகிறது எனில்,4000 நிறுவனங்கள் 4,00,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பினை புது டெல்லியில் மட்டும் இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் கொடுத்துக்கொண்டு வந்திருக்கின்றன.இந்த 4000 நிறுவனங்களை ஒரே ஒரு பெப்ஸியும்,ஒரேஒரு கோகோ கோலா நிறுவனமும் அழித்துவிட்டது.விளைவு? 4,00,000 பேர்களுக்கு வேலை போய்விட்டது.ஒரு குடும்பத்துக்கு 4 பேர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால், 16,00,000 பேர்களுக்கு வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது.






நமது தமிழ்நாட்டில் வின்சென் ட் சோடா,மாப்பிள்ளை விநாயகர் போன்ற சோடா நிறுவனங்கள் எங்கே?






கேள்வி: இருக்கட்டுமே! இதனால்,நமது நாட்டுக்கு என்ன நஷ்டம்?






பதில்:நல்ல கேள்வி! ஒன்றரை லிட்டர் செவன் அப் விலை என்ன?






கேள்வி:சுமார் ரூ.40/- இருக்கும்.





பதில்:அந்த ஒன்றரை லிட்டர் செவன் அப்பை தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?






கேள்வி: தெரியவில்லை.நீங்களே சொல்லுங்கள்.






பதில்:வெறும் 30 பைசாக்கள்.






கேள்வி:அது எப்பிடிங்க?






பதில்; மாஸ் புரடக்ஷ்சன் என்பது மேல்நாடுகளின் புரடக்ஷன் பாலிஸி! பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தப்பின்னர், கிரேட் மாஸ் புரடக்ஷன் என்பது இந்தியாவுக்கான பாலிஸி!!!


கேள்வி: 30 பைசாவுக்கு தயாரித்து 45 ரூபாய்க்கு விற்கிறார்களே,ஏஜண்டுகளுக்கு கமிஷன் நன்றாகக்கிடைக்குமே






பதில்: உரத்துச் சொல்லிவிடாதீர்கள்.ஏஜண்டுகள் உங்களை உதைக்க வந்துவிடப்போகிறார்கள்.இன்னொரு உண்மையைக் கேளுங்கள். உலக மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட். . .






கேள்வி: ஆமாமா,நம்ம பில் கேட்ஸ் கம்பெனி






பதில்:(கிண்டலாக) நம்ம பில் கேட்ஸ் அல்ல;ஒரு விண்டோஸ் ஓ.எஸ்.ஸின் விலை இந்தியாவில் ரூ.4500/-அதே ஓ.எஸ்ஸின் விலை அமெரிக்காவில் ரூ.200/- நம்ம பில்கேட்ஸ்தான் இதையெல்லாம் செய்கிறார்.






கேள்வி: இது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் கொள்ளையை விட அநியாயமாக இருக்குதே!






பதில்: இதை எதிர்த்து,சில ஆண்டுகளுக்கு முன்பு,மதுரையில் இருக்கும் கணிப்பொறி விற்பனை நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தின.தினமலர் செய்தியாக வந்தது.






கேள்வி: நம்மை பன்னாட்டுநிறுவனங்கள் ராணுவத்தை அனுப்பாமலேயே,அசின்,விஜய்,ஷாருக்கான் போன்றவர்களை விளம்பரங்களில் நடிக்க வைத்து, அடிமைப்படுத்திவிட்டன.






அது மட்டுமல்ல; ஒரு கிறிஸ்தவர் தனது ஓராண்டு வருமானத்தில் 3% தனது கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காகத் தர வேண்டும் என்பது மதக்கட்டளை.பெப்ஸியும்,கோகோ கோலாவும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் குளிர்பான வர்த்தக பூதங்கள்.மேலும்,தினமும் ஒரு டீன் ஏஜ் பெண் 300 மிலி கோலா/பெப்ஸி பானங்களில் ஏதாவது ஒன்றை அருந்தி வந்தால்,வெறும் 90 நாட்களுக்குப் பிறகு,அவளின் மாதவிடாய் ஒழுங்கு கெட்டுப்போய்விடும்.அதன் பிறகு,அவளுக்கு இரண்டுமாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மாத விலக்கு வரும் என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.இந்தச் செய்தி பரவாமலிக்கவும்,இது தொடர்பாக எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காமலிருக்கவும் பல திரைமறைவு வேலைகளை இந்த நிறுவனங்கள் ஆதாரமில்லாமல் செய்து வருகின்றன.






ஜீரோ டிகிரியில் தண்ணீரானது பனிக்கட்டியாகிவிடும்.ஜீரோ டிகிரியிலும் கூட இந்த கோலா/பெப்ஸி பானங்கள் உறைவதில்லை;எதில் க்ளைக்கால் என்ற வேதிப்பொருள் இதில் சேர்க்கப்படுகிறது.இது மனித உடலுக்குள் ஏராளமான தீங்குகளை விளைவிக்கிறது.






உலக மயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று.இதைத்தான் நான் கிண்டலாகச் சொல்வதுண்டு.


இந்தியாவைப்போல வேறு எந்த நாடும் குளோபலைஷேசனைப் பின்பற்றுவதில்லை;ஆமாம்! நாங்கள் எங்கள் நாட்டை ஆள்வதற்குரிய சி.ஈ.ஓ.வை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.






கேள்வி:ஹா ஹா ஹா






பதில்: ஹா ஹா ஹா









ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-5




கேள்வி:உங்கள் சிந்தனைகள்,எழுத்துக்களைப் பார்க்கும்போது நீங்கள் இந்தியாவையும்,இந்துதர்மத்தையும் அளவின்றி நேசிக்கின்றீர்கள் என்பது தெரிகிறது.இந்த சிந்தனையை உங்களுக்குள் உருவானது எப்படி?






பதில்:மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் இருக்கும் 121 கோடி இந்தியர்களில் வெறும் 30 கோடி இந்தியர்கள் இந்தியாவை நேசிக்க ஆரம்பித்தாலே போதும்.இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது.


படிப்படியாகத்தான் நான் நமது இந்தியாவையும்,இந்து தர்மத்தையும் நேசிக்கத் துவங்கினேன்.






1991 முதல் 1994 வரை சென்னை விவேகானந்த கல்லூரியில் பி.ஏ.படிக்கும்போது,நூலகமே கதியாகக் கிடப்பேன்;சென்னையில் இருக்கும் பெரும்பாலான நூலகங்கள் எனக்குத் தெரியும்.அவற்றின் வேலை நேரம் தெரியும்.


நான் தங்கிப்படித்த இராமக்ருஷ்ணமிஷன் மாணவர் இல்லத்தில் இருந்த நூலகத்தில் இருந்த 1800 நூல்களையும் மூன்று ஆண்டுகளில் ஒருமுறையாவது வாசித்திருக்கிறேன்.அதில் ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் என்ற தலைப்பில் விவேகானந்த கேந்திரம் வெளியிட்ட புத்தகம் எனது சிந்தனையைத் தூண்டியது.இந்த புத்தகம்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும்,முஸ்லீமும் வாசிக்க வேண்டியபுத்தகம்.






கேள்வி:அவ்வளவு சிறப்பானதா அந்த புத்தகம்.அந்த புத்தகம் தற்போது கிடைக்கிறதா?






பதில்: விவேகானந்தா கேந்திரம்,விவேகானந்தபுரம்,கன்னியாகுமரி என்ற முகவரியில் அந்த புத்தகம் கிடைக்கிறது.தலைப்புதான் மாறியிருக்கிறது.அதன் தற்போதைய தலைப்பு “விழிமின்;எழுமின்” விலை ரூ.50/-க்குள் இருக்கும்.






இந்த புத்தகத்தில் இந்துதர்மத்தின் பெருமைகள்,அதை கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிட்டன் சிரழித்த விதம்,அதனால் இந்திய குடும்பங்களில் உண்டான சீரழிவு போன்றவைகளையும்,அதிலிருந்து நாம் மீள வேண்டிய வழிமுறைகளை சுவாமி விவேகானந்தர் பேசியிருக்கிறார்.அதை,அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை உணர்ந்தால்,இந்தியாவில் வாழும் எந்த கிறிஸ்தவரும்,கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறிவிடுவார்.






தவிர,இந்துதர்மத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை எப்படியெல்லாம் சீரழித்து,தெய்வ பக்தியில்லாத,ஆங்கிலத்தையும்,ஆங்கில நாகரீகமே உயர்ந்தது என்ற கருத்தைப் பரப்பிட இங்கிலாந்து செய்த நரித்தனமான செய்கைகளையும் விவரித்துள்ளனர்.






இதன் விளைவுதான்,இன்று பள்ளி ஆசிரியராக இருப்பவர் கூட தன்னிடம் படிக்கும் மாணவிகளை கற்பழிக்குமளவுக்கு தனிமனித ஒழுக்கம் சீரழிந்திருக்கிறது.






கேள்வி:இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும்?






பதில்:விவேகானந்த கேந்திரத்தில் மட்டுமே கிடைக்கும்.வேறு எங்குமே கிடைக்காது.மதுபானம் சுலபமாக கிடைக்கும்;ஆனால்,பாக்கெட் பாலைத் தேடித்தானே செல்ல வேண்டும்.






இந்த புத்தகத்தை இதுவரை சுமார் 30 40 முறை திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன்.இது தவிர இரண்டு சம்பவங்கள் அடிமை இந்தியாவில் நடைபெற்றன.அவைகளை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.1999 முதல் 2010 வரை இருக்கும் காலகட்டத்தில் இந்த சம்பவங்களை வாசிக்க நேர்ந்தது.






முதல் சம்பவம்:






சுதந்திரத்துக்கு முன்பு,நமது நாட்டு மகாராஜாவும்,ஒரு ஆங்கிலேயத் தளபதியும் நண்பர்களாக இருந்தார்கள்.அப்போது நமது நாட்டு மகாராஜா,அந்த ஆங்கிலேயத் தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்:






ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?






அதற்கு அந்த ஆங்கிலேயத்தளபதியின் பதில்,






அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களின் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அது போதும்!






இந்த பதிலுக்குள் மறைந்திருக்கும் உண்மையை,ஆன்மீகக்கடலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர வேண்டும்.






இரண்டாவது சம்பவம்:






கோவா கடற்கரை;நமது நாட்டு மன்னர் ஒருவரும்,அவரது நண்பராகிய ஆங்கிலேயத் தளபதியும் கடலை நோக்கி அமர்ந்திருந்தனர்.நமது மன்னர்,அந்த தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்.






எனக்கொரு சந்தேகம்?






என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள் மன்னா?






6000 மைல்கள் தூரத்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு எங்கள்(இந்தியா) நாட்டின் பண்பாடைப் பற்றித் தெரியாது;எங்களின் வரலாற்றைப் பற்றியும் தெரியாது;30 கோடி மக்கள்தொகை கொண்ட எங்களை,வெறும் 200 பேர்களைக் கொண்ட நீங்கள் எப்படி அடிமைப்படுத்திட முடிந்தது?






அந்த ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தவாறு,






“உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிடுங்கள்”





மன்னரும் உடனே அதுபோல,உத்தரவிட்டார்.


ஆங்கிலேயத் தளபதியும் தனது ஆங்கிலேயப் படைவீரர்களை அவர்களுக்குச் சமமாக கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிட்டான்.






இரண்டு அணிகளையும் ஒரே நேரத்தில்,கடலை நோக்கி கவாத்து செய்ய உத்தரவிட்டான்(லெப்ட்,ரைட்)






இரண்டு குழுவினரும் கடலை நோக்கி ராணுவ மிடுக்கோடு நடக்க ஆரம்பிக்கின்றனர்.மணல் பகுதியை இரண்டு அணியினரும் கடக்கின்றனர்.அலைகள் மணலைத் தழுவும் இடம் வருகிறது.சில அடிகளிலேயே,கடலுக்குள் நடக்கும் சூழ்நிலை உருவாகிறது.






ஆங்கிலேயர்கள் படைப்பிரிவு சிறிதும் அஞ்சாமல்,கடலுக்குள் இடுப்பளவு வரை விடாமல் அணிவகுத்துச் செல்கின்றனர்.ஆனால்,இந்திய படைப்பிரிவு முழங்கால் அளவு கடல் வரைகூட செல்லாமல்(மன்னரோ,ஆங்கிலேயத்தளபதியோ நிற்கச்சொல்லி உத்தரவிடாமலேயே) நின்ற இடத்திலேயே லெப்ட்,ரைட் பயிற்சி செய்கின்றனர்.






இதைக் கவனித்த மன்னருக்குக் கோபம்;ஆங்கிலேயத்தளபதி,தனது படைப்பிரிவுக்கு நிற்கச்சொல்லி உத்தரவிட்டு,






“மன்னரே,கவனித்தீர்களா? தனது தளபதி சொன்னதை அப்படியே செய்வது எங்கள் ஆங்கிலேயர்களின் குணம்;நாடாளும் நல்லவர்;வல்லவர்;(அழுத்தமாக) உங்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கும் மன்னராகிய நீங்கள் உத்தரவிட்டும் கூட,உங்கள் உத்தரவை விட,உங்கள் படைவீரர்களுக்கு உயிர் வெல்லக்கட்டி” இதுதான் காரணம் !!!






நமது ஆயுர்வேத,சித்தவைத்தியம் சொல்லும் மருத்துவக்குறிப்பு என்னவெனில்,காலையில் நாம் தூங்கியெழுந்ததும்,நமது பல்லின் கசப்பு,துவர்ப்புச் சுவைதான் பட வேண்டும்.ஆனால்,இன்று இந்தியாவில் விற்பனையாகும் பற்பசைகளில் பெரும்பாலானவை இனிப்புச்சுவையுடையவை;தவிர,பெட் காபி குடிப்பது இந்தியப்பாரம்பரியங்களில் ஒன்றாகிவிட்டது.இதன் விளைவுதான் மிக குறைந்த காலத்தில் பல்லுடன் கம்பி கோர்ப்பதும்;பல் செட்களை மாட்டுவதும்.






வெறும் வியாபாரத்துக்காகவே இங்கிலாந்தும்,அமெரிக்காவும் இந்தியாவின் பண்பாட்டைச் சிதைக்கும் போது,மனிதகுலம் முழுவதும் போரின்றியும்,நிம்மதியாகவும் வாழ இந்து தர்மத்தைப் பரப்புவதில் என்ன தவறு இருக்கிறது?






கேள்வி: அட! ஆமாம்!!






பதில்:வாங்க, இன்று நம்முடன் மதிய உணவு அருந்துங்கள்.






கேள்வி(தயங்கி) சார்,அது வந்து. . .






பதில்: நீங்கள் நிருபராக இருங்கள்.இப்போது நீங்கள் எனது விருந்தாளி.வாங்க சாப்பிடுவோம்.






கேள்வி:சரிங்க சார்.

ஒரு முக்கிய அறிவிப்பு:ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு




ஆன்மீகக்கடல் ஆசிரியரை சந்திக்க விரும்புவோர் மின் அஞ்சல் முகவரிக்கு,சந்திக்க விரும்புவோரின் பெயர்,செல் எண்,ஊர்,சந்திக்க விரும்பும் நோக்கம் போன்றவற்றை தெரிவிக்கவும். aanmigakkadal@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

Tuesday, July 26, 2011

துக்ளக் கேள்வி பதில்:




கேள்வி:சீனாவில் தயாரான நவீன ஆயுதங்களை காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:சீனாவில் தயாரான ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.ஆனால்,சீனாக்காரர்களே கூட காஷ்மீர் திவிரவாதிகளுடன் கலந்துஇருந்து உதவி செய்தாலும் சரி,சில சமயங்களில் அவர்களே தீவிரவாதத்தில் இறங்கிவிட்டாலும் சரி;நமது அரசு கவலைப்படப்போவதில்லை; “இருநாடுகளுக்குமிடையே சுமுக உறவுஇருக்கிறது” என்று அறிவிப்பார்கள்.அத்தோடு சரி!

புத்தகங்கள் பீரங்கிகளை விட வலிமையானவை!!!




ஜீலியஸ் சீசர் கிரேக்க நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான்.கிரீஸ் துறைமுகத்தில் அவனது போர்க்கப்பல்கள் நங்கூரமிடுகின்றன.ஆனால்,அந்த நாட்டினர் முகங்களில் போர் அச்சம் துளிகூட இல்லை;ஒரு வேளை படைபலம் பெரிதாக இருக்குமோ என்று தனது படைத்தலைவனிடம் கேட்கிறான்.படைத்தலைவன் ஒற்றர் பிரிவுக்கு இதற்கான விடையைக் கண்டறியுமாறு பணிக்கிறான்.சில நாட்களில் விபரம் தெரிகிறது.

அலெக்ஸாண்டரியா நகரத்தில் ஒரு நூலகம் இருக்கிறது.அங்கே பல லட்சம் நூல்கள் இருக்கின்றன.அவற்றைக் கற்றுணர்ந்த மக்கள்,அதன் மூலம் பெற்ற தெளிந்த அறிவினால்,நிலைகுலையாத மனப்பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதே அந்த உளவுப்பிரிவின் முடிவு.

படைத்தலைவன் சிரிக்கிறான்.சீசர் சிரிக்கவில்லை;ஆயுத பலத்தை சமாளித்துவிடலாம்;அறிவுபலத்தை சமாளிக்க முடியாது என்பதை உணர்கிறான்.பிறகு துவங்கிய போரில் அவன் முதன்முதலில் அழித்தது அந்த நூலகத்தைத் தான்!!!

புத்தகங்களை அழிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை குருடாக்கிவிடலாம்.பெண்களை அழிப்பதன்மூலம் ஓர் இனத்தை மலடாக்கிவிடலாம்.

இலங்கையில் இரண்டும் நிகழ்ந்திருக்கிறது.குள்ள நரி ராஜபக்சே பரம்பரையினர் யாழ்ப்பாணத்தில் தமிழ் நூலகத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினர்.சீன அடிமை ராஜபக்சேவை கொடும்பாவியாக எரிக்க விடாமல் தமிழறிஞரின் சுயநல அரசியல் தடுத்திருக்கிறது.இலங்கையில் வாழும் நமது சகோதரிகளை வன்புணர்ச்சி செய்து,புதிய கலப்பினத்தை உருவாக்கிவருகிறான் பிசாசு மகன் ராஜ பக்ஷே!!!

ஓம்சிவசிவஓம்

இன்னும் கொஞ்சம் ஹி ஹி ஹி

முதல் பக்கத்தை பார்த்ததும் நீங்கள் சிரிக்காவிட்டால்,உங்களின் பூர்வீகம் ஆப்ரிக்கா காடு!!! ஓ! ஸாரி பக்ச் சே வீடு!!!

சிரிப்பதற்கு ஒரு தமிழ்வலைப்பூ

தமிழில் சிரிப்பதற்கு ஒரு வலைப்பூ இருக்கிறது.அதே வலைப்பதிவு ஹீமோகுளோபினர் இன்னொரு வலைப்பூவையும் நடத்துக்கிறார்.சிரிக்க மறந்துவிட்ட நான்,சிரிப்பதை நிறுத்த மறந்தேன்.                             கொஞ்சம் சிரிச்சுட்டு வருவோமா?

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..! | Jul 23, 2011



I am a blogger , I am a blogger என்று  காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் , சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும்  " Post your comments "  வசதியால் வந்த வினை இது. 

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல்  - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது.. 

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள்.  வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர்.  பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார். 

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி  எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு,  தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த  அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது.. 

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர். 

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர்  நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க..  உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

 நன்றி,

ரிஷி... 



Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html#ixzz1TE4WsJm1