Monday, February 26, 2018

அகத்தீஸ்வரர் ஆலயங்களின் பட்டியல்

நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;
தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி உருவாக்கப்பட்டுள்ளன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;
மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;
குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;
தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;
இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;
அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;
அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1.அனகாபுத்தூர்,சென்னை

2.வில்லிவாக்கம்,சென்னை

3.பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை

4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.
6.
7.
8.அகத்தியான்பள்ளி,நாகை மாவட்டம்.
9.
10.
11....

108.அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;
எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;
அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;
அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!
தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

யாரெல்லாம் வராகி ஜபம் செய்யலாம்?


1)போதுமப்பா இந்த மனிதப் பிறவி;இனி எப்போதும் இந்த பூமியில் பிறக்கவே கூடாது என்ற மனநிலையில் இருப்பவர்கள்(சோகங்கள்,அவமானங்கள்,வீண் அபவாதங்களை வாழ்நாள் நெடுக இன்று வரை சந்தித்தவர்கள் அதில் இருந்து மீண்டு கவுரவமாக வாழ விரும்புபவர்கள்)
2)இப்பிறவியிலேயே முக்தியை அடைய விரும்புபவர்கள்
3)எவருக்கும் மனதால் கூட பிறருக்குத் தீங்கு நினைக்காமல் தான் உண்டு;தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்தாலும் போட்டி,பொறாமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள்
4) என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அலுவலகத்தில் சீனியாரிட்டிப்படியோ அல்லது சாதனை செய்ததால் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் (பிறரின் சதிவேலைகளால் பாதிக்கப்பட்டு) தனிமையில் கண்ணீர் வடிப்பவர்கள்
5)லஞ்சம் வாங்காமல் கிடைக்கும் வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்திட முடியாமல் மாதம் தோறும் கடன் வாங்கி அவதிப்படுபவர்கள்
6)குறளி,ஜின் முதலான மாந்திரீகப் பாதிப்பினால் படாத பாடுபடுபவர்கள்(அஷ்டகர்மாக்களின் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடத் துடிப்பவர்கள்)
7)ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள்,ராகுவுடன் ஏதாவது ஒரு கிரகம் சேர்ந்திருந்து அந்தக் கிரகத்தின் திசை நடப்பில் இருப்பவர்கள்;ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை அல்லது சுவாதி அல்லது சதயத்தில் பிறந்துள்ளவர்கள்
8)கனவில் அடிக்கடி மாமிசம்,ரத்தம்,கோரமுகங்களைக் கண்டு அவதிப்படுபவர்கள்
9)ஸ்ரீவித்யா உபாசனையைப் பின்பற்ற சரியான குருவைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்
10)சித்தர்கள் கூட்டத்துடன் ஒருவராக மாற ஆசைப்படுபவர்கள்
11)சிந்தையில் சிவனை எப்போதும் வைத்திருப்பவர்கள்(இப்பிறவியிலேயே சிவத்துடன் கலக்க விரும்புவோர் அல்லது சிவகணமாக மாறிடும் லட்சியத்துடன் பிறந்துள்ளவர்கள்)
12) பிரபஞ்ச அன்னையான வாலை/திரிபுரசுந்தரி/மனோன்மணியை தரிசனம் செய்ய விரும்புவோர்
13) இப்போது இருக்கும் அனைத்து குறைகளும் நீங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு சகல வளங்களும் பெற்று வளமோடும்,நலமோடும்,சீரோடும் சிறப்போடும் வாழ விரும்புவோர்,அப்படி வாழ்வதற்காக தினமும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஆன்மீகரீதியாக உழைக்க விரும்புவோர்(ஆமாம்! யாராலும் எவர் விதியையும் மாற்றிட முடியாது;தற்காலிகமாக மாற்றியது போல நம்ப வைக்கலாம்;நாம் தான் நமது விதியை மாற்றிட முயற்சிக்க வேண்டும்)
14) குறிப்பிட்ட ஆன்மீக சக்தியைப் பெற விரும்புவோர்
15) ஜோதிடத்தில் வாக்குப் பலிதம் உண்டாகி,பொருளாதாரத் தன்னிறைவை எட்டிட விரும்புவோர்
16) எதிர்காலத்தில் வர இருக்கும் ஜாதகரீதியான துயரங்களை எதிர்கொள்ள அல்லது வரும் முன்பாகவே அதை பக்தியால் தீர்த்துவிட்டு நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ(கர்மவினைகளை இப்பிறவியுடன் மொத்தமாக அழித்துவிட)
தேவையானவை:
பச்சை நிறத் துண்டு(புதியது)
புதிய மண்விளக்கு அல்லது புதிய காமாட்சிவிளக்கு
ஐந்து முக ருத்ராட்சங்கள் இரண்டு புதியவை(கதர் ஸ்டோர்களில் கிடைக்கும்)
எப்போதும் அசைவம் சாப்பிடாத மன வைராக்கியம்
18 வயது நிரம்பிய ஆண்,பெண் எவராக இருந்தாலும்
இலுப்பை எண்ணெய் மற்றும் புதிய பஞ்சுத்திரி
தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் புதிய விளக்கில் கிழக்கு நோக்கி ஏற்றவும்;வடக்கு நோக்கி பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ளவும்;
சில வீடுகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும்;அங்கே வடக்கு நோக்கி இலுப்பைஎண்ணெயில் பஞ்சுத்திரியில் தீபம் ஏற்றிவிட்டு,கிழக்கு நோக்கியும் அமர்ந்து கொள்ளலாம்;
இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு,கைகளை மூடிக் கொள்ளவும்;
ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாத குரு சரணம்,சரணம் என்று ஒரு முறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்கவும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லலாம்;அதுவும் இல்லாதவர்கள்/அறியாதவர்கள் அடுத்த வரிக்குச் செல்லவும்)
பிறகு,ஓம் மஹா கணபதி நமஹ என்று ஒரு முறை ஜபிக்கவும்;
பிறகு,ஓம் அருணகிரி வசிவசி என்று ஒருமுறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை நமஹ என்று ஒருமுறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற அன்னை அரசாலை(வராகி) மந்திரத்தை இன்று முதல் 7 நாட்கள் வரை 15 நிமிடம் ஜபிக்கவும்;இதே போல மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒரு 15 நிமிடம் ஜபிக்கவும்;
8 வது நாள் முதல் 14 ஆம் நாள் வரையிலும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்கவும்;
15 வது நாள் முதல் 21 ஆம் நாள் வரையிலும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்கவும்;
21 வது நாள் முதல் 1008 வது நாள் வரையிலும்( 3 ஆண்டுகள்) காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபிக்கவும்;
ஜபிக்கும் நாட்களில் துக்க வீடுகளில் கலந்து கொள்ள நேரிட்டால் 28 நாட்கள் வரை ஜபத்திற்கு விடுமுறை விடவும்;
தீட்டுவீடுகளில் கலந்து கொண்டாலும் இதேநாட்கள் வரை விடுமுறை விடுவது அவசியம்;
இந்த 1008 நாட்களில் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும்,(சிவாலயம்,அம்மன் ஆலயம்,பெருமாள் ஆலயம்) அங்கே மூலவர் முன்பாக 30 நிமிடத்திற்குக் குறையாமலும்,அம்பாள்/தாயார் சன்னதி முன்பாக 30 நிமிடத்திற்குக் குறையாமலும் ஜபிக்கவும்;அப்போது காலை,மதியம்,மாலை,இரவு என்று எந்த நேரப் பாகுபாடும் பார்க்க வேண்டியதில்லை;
45 வது நாளில் இருந்து நமது மனபாரம் குறையத் துவங்கும்;
90 வது நாளில் இருந்து அன்னை அரசாலையின் அருட்பார்வை கிட்டும்;
120 வது நாளைக் கடந்துவிட்டால்,கூடவே இருந்து நமக்கு எதிராக செயல்படுபவர்கள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்;
அதே சமயம்,நம் மீது உள்ளன்போடு இருப்பவர்கள் நம்மிடம் வலிய வந்து உதவி செய்வார்கள்;பக்கபலமாக இருப்பார்கள்;
சிலருக்கு குலதெய்வத்தின் அருளாசி பிறந்தது முதல் இருந்து வரும்;அதை 180 வது நாளுக்குப் பிறகு ஜபிப்பவர்கள் உணருவார்கள்;
200 நாட்களுக்குப் பிறகு என்னென்ன ஆன்மீக ஆச்சரியங்களை அன்னை அரசாலை(வராகி)யால் உணர்ந்தீர்கள் என்பதை எமக்கு தெரிவிக்கவும்;
பஞ்சமி,அஷ்டமி,நவமி,தசமி நாட்களில் மட்டும் அதிகநேரம் ஜபிக்க முயற்சிக்கவும்;
;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Saturday, February 3, 2018

மஹாவராகியின் அருளைத் தரும் மந்திரம்


உலக வரலாற்றில் ஒரு நாட்டின் காவல் தெய்வம் என்று இருப்பது நமது பாரத நாட்டுக்கு மட்டுமே!

மிகவும் பழமையான இலக்கியங்களில் மாநிலத்தின் காவல் தெய்வம் மஹாவராகி என்று குறிப்பிடப்பட்டுள்ளது;அன்றைய கால கட்டத்தில்,சுமாராக 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி பாரத நாடு முழுவதும் பேசப்படும் மொழியாக இருந்தது;இன்றைய பத்ரிநாத்,கேதார்நாத்,அமர்நாத் போன்ற ஆலயங்களில் இருக்கும் கல்வெட்டுக்களும் இதையே தெரிவிக்கின்றன;

இன்னொரு கருத்தும் இருக்கின்றது;தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகி;கிழக்கு பாரதத்தின் காவல் தெய்வம் தட்சிணேஸ்வரம் காளி;மேற்கு பாரதத்தின் காவல் தெய்வம் பவானி;வடக்கு பாரதத்தின் காவல் தெய்வம் வைஷ்ணவி;இந்த  தெய்வ வழிபாடுகள் மங்கிப் போனதால் தான் இன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அவதியோடு வாழ்ந்து வருகின்றார்கள்;


ராஜராஜசோழன் காலத்தில் அவரது சோழப் பேரரசு இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் பரவி இருந்தது;இது அலக்ஸாண்டரின் ஆட்சிப்பிரதேசத்தை விடவும் சுமார் 100 மடங்கு பெரியது ஆகும்;

ராஜராஜசோழனின் இப்படிப்பட்ட பேரரசு உருவாகிடக் காரணம் ப்ருஹத் வராகியை தொடர்ந்து வழிபட்டதால் தான்;கருவூர் சித்தரும்,போகரும் ப்ருஹத் வராகி வழிபாட்டினை சோழர்களுக்கு போதித்தார்கள்;அதனால் தான் உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு 1,00,000 நெல் ரகங்களை சோழ நாட்டில் பயிரிட்டார்கள்;கி.பி.1875 வரை இதை 16,000 நெல் ரகங்களாக சுருங்கியது;தற்போது சில ஆயிரம் நெல் ரகங்களை சிறு தானியங்களாக நாம் அறுவடை செய்து வருகின்றோம்;

மூன்றுவிதமான வராகி அன்னைகள் இருக்கின்றார்கள்;
1.ராஜராஜேஸ்வரியின் படைத்தளபதியாக
2.சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான சதாசிவனின் துணைவி சக்தியாக
3.புதன் கிரகத்தின் (ஜோதிடப்படி) ப்ராண தேவதையான உன்மத்த பைரவரின் துணை சக்தியாக உன்மத்த வராகி;
தவிர,64 வித வராகி அவதாரங்களும் இருக்கின்றார்கள்:

மகத்தான பெரும் பூர்வபுண்ணியம் உள்ளவர்களால் மட்டுமே இந்த கொடூரங்கள் நிறைந்த கலியுகத்தில் தினமும் அன்னை மஹாவராகியை ஜபிக்க முடியும்;

அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்களுக்குக் குறையாமல் ஜபித்து/எழுதி வர அன்னை மஹாவராகியின் அருள் 1008 வது நாளுக்குள் கிட்டிவிடும்;

ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்களுக்கும்

தான் உண்டு,தனது வேலை உண்டு என்று வாழ விரும்புபவர்களுக்கும்

அன்னை மஹாவராகியை முழு முதல் தெய்வமாக எண்ணுபவர்களுக்கும்

முற்பிறவிகளில் சாக்த வழிபாடு செய்து வருபவர்களுக்கும்

அம்பாள் உபாசனை செய்ய விரும்புபவர்களுக்கும் 

இம்மந்திரம் அரிய வரப்பிரசாதம் ஆகும்;


முக்தி தரும் அண்ணாமலை கிரிவலம்..!!!



உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் என்ற மூன்றுவிதமான கடன்கள் இருக்கின்றன;இவைகளை எப்படி அடைக்க வேண்டும் தெரியுமா?

போன ஐந்து முற்பிறவிகளில் செய்த பாவ கர்மா மற்றும் புண்ணியக் கர்மாவின் தொகுப்பை அனுபவித்துக் கொண்டே தான் அடைக்க வேண்டும்;


ஒவ்வொரு மாதமும் ஷண்ணாவதி தர்ப்பண நாட்கள் என்று வரும்;அந்த நாட்களில் சேஷம்பாடி,திலதைப்பதி,பூவாளூர் போன்ற பித்ரு முக்தி தலங்களில் தர்ப்பணம் அளித்து,ஒருவருக்காவது வயிறார உணவளிக்க வேண்டும்;இதனால் விளையும் அபூர்வமான பலன்கள்,மூதாதையர்களுக்கு பலத்த ஆன்ம சக்திகளை அளித்து,அவர்களுடைய பல நூறு ஆண்டுத் தளைகளை களையக் கூடியது;

ஏன் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்?

நம் முன்னோர்களில் பித்ரு நிலைகளை அடைந்தவர்கள்,
பித்ரு நிலைகளை அடைய இருக்கின்றவர்கள்,
பித்ரு நிலைகளை அடைய முடியாமல் தவிப்பவர்கள்;
பித்ரு நிலைகளை அடைந்து பிறவி எடுக்காதவர்கள்;
பித்ரு நிலைகளை அடைந்தும் வலுத்த கர்மவினைகளால் வாடி,ஆவியாக அலைபவர்கள் என்று பலவிதங்களில் இருக்கின்றார்கள்;

தற்கொலை செய்தவர்களும்,கொலைக்குச் சமமான பாவத்தைச் செய்து ஆவியாகவும்,பேயாகவும்,பிசாசாகவும் அலையும் நமது முன்னோர்கள் பல ஆயிரம் பேர்கள். . . இவர்கள் ஓரறிவு பிறவியாகிய புழு,புல்லாக கூட மாறாமல் தவிப்பவர்களும் உண்டு;

இவர்களுக்கு கதி மோட்சம் தர முயற்சிக்காமல் நாம் இப்பிறவி முழுவதும் வாழ்ந்து வந்தால் நமக்கு அடிக்கடி பொருளாதார நெருக்கடி வரத்தான் செய்யும்;அவ்வப்போது தரித்திரம் நம்முடன் வரவும் செய்யும்;


நாம் ஒவ்வொருவருமே இந்த பூமியில் மனிதப் பிறவி எடுத்து,இதுவரை குறைந்தது 20,000 முறை மனிதனாக வாழ்ந்திருக்கின்றோம்;அதிகபட்சம் 3,00,00,000 முறை  மனிதவாழ்க்கை வாழ்ந்திருக்கின்றோம்;அதன் பிறகுதான் இந்த கட்டுரையை வாசிக்கும் புண்ணியத்தை அகத்திய மகரிஷியின் அருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் வாசிக்கும் பெரும் பேறு பெற்றிருக்கின்றோம்;

ஆனால்,நமது இப்பிறவியில் நமது முந்தைய 20,000 பிறவிகளில்(அல்லது 3,00,00,000 பிறவிகளில்) செய்த கர்மவினைகளை அனுபவிப்பதில்லை;அதற்குரிய ஆயுளும் நமக்கு இருப்பதில்லை;

எப்போது சிவபெருமானைச் சரணடைகின்றோமோ அப்போது முதல் நமது அனைத்து கர்மவினைகளையும் அனுபவிக்காமலேயே அழித்துவிட முடியும்;சிவனால் மட்டுமே நமது அனைத்து கர்மச் சுமைகளையும் ஏற்று நமக்கு கதி மோட்சம் என்ற முக்தியைத் தர முடியும்;

தமிழ்நாடு மாநிலம்,விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலை தான் நமக்கு முக்தியைத் தரும்;2665 அடி உயரத்தில் இருக்கும் இந்த அருணாச்சலம் என்ற அண்ணாமலையை யார் ஒரே பிறவியில் 1008 முறை கிரிவலம் வருகின்றார்களோ அவர்களுக்கு மீண்டும் இந்த பூமியில் பிறவி கிடையாது;

ஆமாம்!

1008 முறை அண்ணாமலை கிரிவலம் முடித்ததும்,உங்கள் ஜன்ம நட்சத்திர சத்குருவை சந்திப்பீர்கள்:அவர் அருணாச்சலேஸ்வரரின் அருளால் உங்களது அனைத்து முற்பிறவி கர்மச்சுமைகளையும் வெறும் 60 நொடிகளில் எரித்து சாம்பலாக்கிவிடுவார்;அந்த நிமிடம் முதல் உங்களுக்கு சத்குருவின் வழிகாட்டுதல் கிடைக்க ஆரம்பிக்கும்;

இப்பிறவியில் தாங்கள் செய்த புண்ணியத்தின் அளவைப் பொறுத்து உங்களது அடுத்த பிறவி இந்திர லோகம் அல்லது பிரம்ம லோகம் அல்லது சிவலோகத்தில் இருக்கும்;

திருக்கையிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001 வது குருமஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அடிமை நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவேங்கடராம சுவாமி அவர்களின் உபதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தெய்வீக ரகசியம் இது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் இடியாப்ப சித்தர் நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம், தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி  7.2.2018 புதன்கிழமை மதியம் 12.58 முதல் 8.2.2018 வியாழக்கிழமை மதியம் 2.02 வரை அமைந்திருக்கின்றது;




ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

புதன் கிழமை குளிகை காலம் காலை 10.30 முதல் 12 வரை அமைந்திருக்கின்றது;

வியாழக்கிழமை குளிகை காலம் காலை 9 முதல் 10.30 வரை அமைந்திருக்கின்றது;

 புதன்கிழமை  இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 வரை இருக்கின்றது;
வியாழக்கிழமை இராகு காலம் மதியம் 1.30 முதல் 3 வரை இருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம்,கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி  9.3.2018 வெள்ளிக்கிழமை காலை 6.44 முதல் 10.3.2018 சனிக்கிழமை காலை 8.11 வரை வர இருக்கின்றது;



இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;