Wednesday, March 30, 2011

ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை அதிகரிக்கும் அண்ணாமலை கிரிவலம்





நீங்கள் விரைவாகவும்,எளிதாகவும்,சுலபமாகவும் உங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா?

சுத்தமான(கோடுகள்,டிசைன்கள் இல்லாத) மஞ்சள் வேட்டியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்;அதே போல்,மஞ்சள் நிறத்தில் ஒரு சட்டையைத் தைத்து வைத்துக்கொள்ளுங்கள்.வசதியிருந்தால்,மஞ்சள் பட்டில் ஆடைகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

மூன்று ஐந்து முக ருத்ராட்சங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.ஒன்றை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்.(பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் அணிந்திருக்கலாம்.தீட்டு/பாவம் கிடையாது)மற்ற இரண்டையும் வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது உள்ளங்கைகளில் வைத்து,கைகளை மடக்கி வைத்து ஜபிக்க வேண்டும்.



அதே போல, உங்களால் முடிந்த பிரதோஷம்,அமாவாசை,பவுர்ணமி,திருவாதிரை நட்சத்திர நாள்,துவாதசி திதி வரும் நாள் அல்லது எந்த ஒரு சாதாரண நாளிலும் மேற்கூறியவற்றை எடுத்துக்கொண்டு,விழுப்புரம் அருகிலிருக்கும் திருஅண்ணாமலைக்குச் செல்லுங்கள்.எந்த நாளிலும்,நேரத்திலும்,கிழமையிலும்,கிரிவலம் செல்லலாம்.

மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.அண்ணாமலையின் கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் முனீஸ்வரரை வழிபட்டு விட்டு,அண்ணாமலையாரை சாலையிலிருந்தே வணங்கிவிட்டு,கிரிவலம் புறப்படலாம்.



கிரிவலத்தின் 14 கிலோ மீட்டர்கள் தூரமும் எவரிடமும் பேசாமல்,ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறே செல்லுங்கள்.களைப்பாக இருக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்திக்கொள்ளவும்.முடிந்தால் இளநீர் அருந்தலாம்.(இளநீர் அருந்தினால் அதுவரை நீங்கள் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் உங்கள் உடலுக்குள் பதிவாகிவிடும் என மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது)

எட்டு லிங்கங்களோடு தற்போது சந்திர லிங்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.எனவே,இனி ஒன்பது லிங்கங்கள்!! ஈசான லிங்கத்தைக் கடந்து,பூத நாராயணர் கோவிலில் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.அதுவரை மானசீகமாக ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வரவும்.

உங்களின் சொந்த ஊர் திரும்பிய சில நாட்களிலேயே நீண்ட கால பிரச்னை தீருவதற்கான வழிமுறை அல்லது உதவி கிடைப்பதை அனுபவபூர்வமாக உணருவீர்கள்.அப்படி உணர்ந்ததும் ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்கு எழுதவும்.

சிலருக்கு ஓரிரு முறை இதேபோல கிரிவலம் சென்றவாறே ஓம்சிவசிவஓம் ஜபித்தப்பின்பே பிரச்னைகள் தீரும்.

கிரிவல மந்திரம் ஓம்சிவசிவஓம் என நமது குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இது தவிர,திருப்பதிக்கு மலையேறிச்செல்லும்போதும்,சபரிமலைக்கு விரதமிருந்து மலையேறும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமாம்

Tuesday, March 29, 2011

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்





ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே

நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:

வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே

ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:

தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

Monday, March 28, 2011

மாபெரும் துன்பங்களைப் போக்கும் நவபிருந்தாவன் வழிபாடு



நவபிருந்தாவனத்தின் படத்தையும்,ஒரு மட்டைத் தேங்காயையும் வைத்து நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.இந்த நவபிருந்தாவனத்தின் படத்தை 12 முறை வலம் வர வேண்டும்.நவபிருந்தாவனத்து நாயகர்களின் பெயர்களைக் கூறியோ அல்லது துதிகளையோ மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் இவ்வாறு ஆறு நாட்கள் வழிபட்டு,ஏழாம் நாளன்று ஸ்ரீஇராகவேந்திரர் சன்னதியிலோ அல்லது ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியிலோ பொங்கல் நைவேத்தியம் செய்து,அந்த மட்டைத் தேங்காயை உரித்து,உடைத்து,பிரசாதமாக வழிபட்டவர் உட்கொள்ள வேண்டும்.

மாபெரும் பிரச்னைகள்,துன்பங்கள் தீர இது ஒரு சுலபமான பரிகார பூஜை ஆகும்.இந்த வழிகாட்டுதலை ஸ்ரீஇராகவேந்திரர் பிருந்தாவனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் நமக்கு அருளியுள்ளார்.நன்றி:குமுதம் ஜோதிடம் பக்கம் 19,28.5.2004

Sunday, March 27, 2011

பணப்பிரச்னைகளைத் தீர்க்கும் குபேரலிங்க வழிபாடு




உங்களது தொழிலில் வெளியில் நிலுவையில் நிற்கும் பணம் அதிகமாக இருக்கின்றதா?

அல்லது

சேவை சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு உழைத்தும் திட்டமிட்டபடி மாத வருமானம் அல்லது லாபத்தை ஈட்ட முடியவில்லையா?

அல்லது

குடும்பப்பிரச்னையால் உங்களுக்கு வர வேண்டிய பங்குச் சொத்து சிறிதும் கிடைக்காமலிருக்கின்றதா?

அல்லது

நேர்மையாக உழைத்தும் பணம் சேமிக்க முடியவில்லையா?

இவை அனைத்திற்கும் தீர்வாக ஒரு ஆன்மீகப்பெரியவர் சொன்ன ஆலோசனையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு அபிஷேகத்துக்குத் தேவையான பால்,பூக்கள்,நல்லெண்ணெய் தானமாகத் தரவேண்டும்.தந்து,உரியவர் அல்லது உரியவரது ரத்த உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.இப்படி 24 நாட்கள்(வளர்பிறைப்பிரதோஷம்,பவுர்ணமி,தேய்பிறைப்பிரதோஷம்) தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலமாக,வர வேண்டிய பணம்,கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து,உழைத்துக் கிடைக்க வேண்டிய லாபம் முழுமையாக வந்து சேரும்.

ஆனால்,ஆரம்பிக்கும் நாள் கண்டிப்பாக வளர்பிறை பிரதோஷமாக இருக்க வேண்டும்.

இந்த 24 நாட்களில் தொடர்ந்து குபேரலிங்கத்துக்கு வருகை தந்து இவ்வாறு வழிபாடு செய்யும் போது,எதிர்பாராத தடை(பெரியவர்களின் மரணம் முதலானவை) வந்தால் உரிய இடைவேளை விட்டும் செய்யலாம்.

உதாரணமாக,18 பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்கள் வரை பால் மற்றும் நல்லெண்ணெய் குபேரலிங்கத்துக்கு தானமளித்துவிட்டு,குபேரலிங்க சன்னதியில் நடக்கும் பிரதோஷ பூஜை மற்றும் பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு வந்திருப்போம்;19 வது நாளுக்குரிய குபேரலிங்க பூஜையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால்,ஒரு மாதம் அல்லது அவரவரின் ஜாதி வழக்கப்படி இடைவெளிவிட்டு மீதி 6 நாட்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குபேரலிங்கத்து பிரதோஷபூஜை மற்றும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளும்போது,குபேர பகவானின் காயத்ரி மந்திரம் மற்றும் மூல மந்திரங்களை மனதில் ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.கலந்து கொள்பவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;முடிந்தால் மஞ்சள் பட்டாடையை அணிந்திருப்பது சிறப்பு.

ஓம்சிவசிவஓம்

Saturday, March 26, 2011

மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்







எந்த ஒரு நாட்டிற்கும், நமக்கு கிடைத்துள்ள அற்புதமான ‘தூய திருவாளர்’ மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைக்கவே மாட்டார்.



அண்மையில் காஷ்மீரில் (மார்ச் 4) அவர் பேசுகையில் ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



உச்ச நீதி மன்றத்தின் ‘பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து’ என்ற உத்தரவுக்குப் பிறகு, இவ்வாறு மொழிந்திருக்கிறார், பிரதமர். இவர் பொறுப்பேற்காவிட்டால் யார் இவரை விடப் போகிறார்களாம்? தீர்ப்பு வெளியானவுடன் (மார்ச் 3), ”தீர்ப்பை மதிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக (!) வேறு கூறினார் பிரதமர்.



மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக ஊழல்கறை படிந்த பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுவதற்கு (செப். 6, 2010) முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) தேர்வுக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை சட்டை செய்யாமல் “பாமாயில் ஊழல் புகழ்’ தாமஸை மிகுந்த பிடிவாதத்துடன் சிவிசி.யாக நியமனம் செய்து மகிழ்ந்தனர் பிரதமர் மன்மோகனும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும். அதனை எதிர்த்து, லிங்டோ உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. ஒரு பொய்யைக் காப்பாற்ற ஒன்பது பொய் சொன்ன கதையாக, தாமஸ் மீதான வழக்கு விவரமே மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறி நீதிபதிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது மத்திய அரசு. அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.



அப்போதும் கூட பதவி விலக மறுத்தார் பி.ஜே.தாமஸ். அவரிடம் மத்திய அரசின் தூதர்கள் பலர் கெஞ்சிக் கேட்டும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். தான் நியமித்த ஒருவரையே ‘கண்டனத் தீர்மானம்’ கொண்டுவந்து நீக்குவது என்பது அரசு தன் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது போன்றது தான். கடைசியில், தாமஸின் விதியை நீதி மன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது மன்மோகன் சிங் குழுவால்.



இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரா குமார் ஆகியோரடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.



”ஊழல் கண்காணிப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு பரிந்துரைகளில் எவ்வித சட்ட விதிமுறைகளும் இல்லை. இதன்படி செப். 3, 2010-ல் இந்தக் குழு வெளியிட்ட பரிந்துரைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல. எனவே, சிவிசி.யாக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்கிறோம்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.



”ஊழல் கண்காணிப்பு அமைப்பின் மீதான நம்பகத் தன்மை, இந்த அமைப்பின் தலைவர் மீதான நம்பகத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் சிவிசி சட்ட விதிகளுக்கு உட்பட்டவை. பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உயர் நிலைக் குழு உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை. தாமஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இக்குழு பரிசீலிக்கவில்லை. அவரது படிப்பு, பதவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்த இக்குழு, கண்காணிப்பு ஆணையத்தின் நம்பகத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது மக்களின் நம்பகத்தை இழந்துவிட்டது” என்று தீர்ப்பில் கூறினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா.



அது மட்டுமல்ல, ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரசு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிற துறைகளில் உள்ள நேர்மையானவர்களைப் பரிசீலிக்கலாம்” என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.



இத்தீர்ப்பு வெளியானவுடன் தாமஸ் பதவி விலகிவிட்டதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், அதனை தாமஸின் வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூஸ் மறுத்துவிட்டார். தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு செய்ய தாமஸ் தயார். இப்போது அவரிடம் பதவி விலகுமாறு மன்றாடிக் கொடிருக்கிறது மத்திய அரசு. தாமஸை நியமிக்க வேண்டாம் என்று மன்றாடிய சுஷ்மாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த இழிநிலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்குமா?



”இத்தீர்ப்பு மத்திய அரசின் முகத்தில் பூசப்பட்ட கரி” என்று சரியாகவே சொல்லி இருக்கிறார் பாஜக தலைவர் நிதின் காட்கரி. ”சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசு மீதான இந்தக் கண்டனத் தீர்ப்பிற்கு சோனியாவும் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அத்வானி. செவிடன் காதில் சங்கு ஊதியது போலவே, இப்போதும் அமைதி காக்கிறார், காங்கிரசை வாழவைக்க வந்த இத்தாலிய அன்னை.
thanks:http://www.tamilhindu.com/

Friday, March 25, 2011

ஒம்சிவசிவஓம் எங்கெல்லாம் ஜபிக்கலாம்?மறு ஆய்வு




இன்று பல வீடுகளில் நமது வலைப்பூவை வாசித்தவாறு ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கத்துவங்கியுள்ளனர்.ஒரு குடும்பத்துக்கு ஒரே ஒருவர் மட்டும் இவ்வாறு ஜபித்துவருகின்றனர்.(சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர்!)

ஓம்சிவசிவஓம் ஜபிப்பவரின் வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டால்,அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என வலைப்பதிவில் தெரிவித்திருந்தோம்.

இந்தக் கட்டுப்பாடு தேவையில்லை;மீண்டும் எனது குருநாதரை சந்தித்து இந்த சந்தேகத்தை உறுதிபடுத்திக் கேட்டபோது,ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர் மட்டும் அசைவத்தைத் தவிர்த்தால் போதுமானது;அவர் வசிக்கும் வீட்டில் இருப்பவர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்காத மற்றவர்கள் அசைவம் தினமும் சாப்பிட்டால் கூட அது ஜபிப்பவரை எந்த விதத்திலும் பாதிக்காது என உறுதிபடுத்தினார்.



யாரெல்லாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என்ற சந்தேகத்தை எனது குருநாதரிடம் விளக்கம் கேட்ட போது பலர் இருந்தபடியால் முழுமையாகவும்,தெளிவாகவும்,விளக்கமாகவும் கேட்க இயல வில்லை;(எனது குருவை சந்திப்பவர்களிடம் இந்த ஓம்சிவசிவஓம் வலைப்பூ நடத்துவதைக் காட்டிக்கொள்ள வில்லை)எனவே, தவறான விளக்கத்தைக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.வாசகர்கள் என்னை மன்னிக்கவும்.

ஓம்சிவசிவஓம்



Thursday, March 24, 2011

g mail banned at china

பீய்ஜிங்: உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்கபுகார் தெரிவித்துள்ளது. சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுனீசியா, எகிப்து, போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜி -மெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.‌என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












கிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்சிவசிவஓம்




24.3.2011 வியாழன் முதல் 45 நாட்களுக்கு ஜோதிடப்படி,செவ்வாயும் சனியும் நேர் எதிர் ராசிகளில் நிற்கப்போகின்றன.இதன் விளைவாக,மிதுனம்,கன்னி,கும்பம்,சிம்மம் ராசியினர் அதிகமாகப் பாதிப்படப்போகின்றனர்.தவிர,மீதி ஏழு ராசியினரும் ஏதாவது ஒருவிதத்தில் மன நிம்மதியிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்;அல்லது எதிர்பாராத விபத்து,கோபத்தில் தற்கொலை அல்லது கொலை செய்வதற்கான தூண்டலாக இருப்பதற்குக் காரணமாக இருக்கவுள்ளனர்.

எனவே,இந்த காலகட்டத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் கால அளவை அதிகரிப்பது நல்லது.இதன் மூலமாக யுத்த கிரகங்களின் போக்கினால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள்,விபத்துக்கள்,மன மற்றும் உடல் ரீதியான உபாதைகளின் தாக்கத்தை 80 சதவீதம் வரையிலும் குறைக்கலாம்.

கொடூரம் நிறைந்த இந்த கலிகாலத்தில் நமது சொத்து எதுவெனில்,கடன் இல்லாமலும்,நோய் இல்லாமலும்,எதிரி மற்றும் கர்ம நோய்கள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே! அப்படி வாழ நமக்கு வழிகாட்டியாகவும்,உறுதுணையாகவும் இருப்பது தினசரி ஒரு மணி நேர ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மட்டுமே!!!

Wednesday, March 23, 2011

அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்


சென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.

இவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

இப்படிச் செய்வது பத்து அஸ்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.

“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”

இதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.

இப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.

ஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

திரு.எம்.வி.ரமணி,மானேஜிங் டிரஸ்ட்,

செல்:98410 12779,98410 115322

திரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.

செல்:98409 22614.

Tuesday, March 22, 2011

சொர்ண ஆகர்ஷண பைரவரை நேரில் சென்று வழிபட முடியாதவர்களுக்கு:





அவரது மூல மந்திரத்தைக் கொடுத்துள்ளோம்:இதை 26.3.11 சனிக்கிழமை  9.00am முதல்10.30am  மணி வரையிலும் வரும் தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய இராகு காலத்தில் 330 முறை சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும் முன்பு,ஒலி இரைச்சல்கள்,செல்போன்,டிவி,வானொலியை அணைத்து வைப்பது நல்லது/அவசியம்,

சொர்ண ஆகர்ஷண பைரவர் இணையப் பெருங்கடலில் கிடைக்கிறது.அதை பெரிய அளவில் ப்ரிண்ட் எடுக்கவும்.எடுத்து பிரேம் போட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்.

பூஜையறையை சுத்தப்படுத்தி,பத்தி,தசாங்கம் ஏற்றி வைக்கவும்.நீங்களும் குளித்து சுத்தமாக்கிக்கொள்ளுங்கள்.நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பினை தயார் செய்து படையல் போட்டுக் கொள்ளுங்கள்.இவை அனைத்தும் 26.3.11 சனிக்கிழமை  9.00amக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்வரும் மந்திரத்தை 330 முறை வாய்விட்டுச் சொல்லாமல்,மனதுக்குள் ஜபித்துவர வேண்டும்.முடியும் போது ஜபித்தவர் ஒரு தம்ளர் இளநீர் அருந்த வேண்டும்.அதன் பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தூபதீபம் காட்டி,இனிப்பை(சர்க்கரைப்பொங்கல்,டைமண்டு கல்கண்டு,)அருகிலிருப்போருக்கு விநியோகிக்கலாம்.

இப்படிச் செய்வதன் மூலமாகவும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறலாம்.

வேலைப்பளு காரணமாக,இவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்ய முடியாவிட்டால் கூட,சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தினை வைத்து 330 முறை ஜபித்தால் கூட போதுமானது.

ஓம் ஏம் ஐம் க்லாம்

க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

சகவம்ஸ ஆபதுத்தோரணாய

அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மமதாரித்திரிய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

விரைவான பலன் தரும் ஓம்சிவசிவஓம்






எனது நண்பர் தனது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையைத் தெரிவித்தார்.நீங்களும் முயன்று பார்க்கலாம்.

அவரது தோட்டம் ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது.நமது வலைப்பூவைப் பார்த்து அதுபற்றி தனது ஆன்மீக குருவிடம் ஆலோசித்திருக்கிறார்.அவரது வழிகாட்டுதலின் படி,ஒரு செவ்வகமான கருங்கல்லை பலகை வடிவில் இருப்பதை வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.அதை மணை போல்,கொத்தி சமதளமாக்கியிருக்கிறார்.

இந்த கருங்கல் மணையை வீட்டு பூஜையறையில் வைத்து,மண் விளக்கு(கிளிஞ்சட்டி)ஒன்பது வாங்கி,அதில் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய்யை வாங்குவதில்லை)யினை நிரப்பி,அதில் ஒரு சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை கலந்து,தாமரைநூல் திரியிட்டு,தரமான பத்தியை எரிய விடுவார்.அப்படிச் செய்த கையோடு,அவர்,அவரது மனைவி,அவரது இரண்டு மகள்கள்(மூத்தவளின் வயது 11,இளையவளுக்கு 9) உடன் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.

அது சரி? 21 வயதுக்கு மேற்பட்டவர்தானே ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?எப்படி சிறுமிகளை வைத்து அவர் ஜபிக்கிறார்?

தனது மகள்களுக்கு ஓம்,ஓம்,ஓம் என்று மட்டும் ஜபிக்கும்படி பயிற்சியளித்திருக்கிறார்.

41 நாளிலிருந்து அவருக்கு ஓம்சிவசிவஓம் பலனளிக்கத்துவங்கியிருக்கிறது.ஆம்! சுமார் 18 மாதங்களாக அவருக்கு வராத பணம்(கொடுத்த கடன்) வட்டியோடு திரும்பியிருக்கிறது.அவரால் இதை நம்பவே முடியவில்லை;

அவரது முன்கோபம் பெருமளவு குறைந்திருக்கிறது;வீட்டிற்கு வந்ததும் ஆழ்ந்த மனநிம்மதியை உணர்ந்து வருகிறார்.இப்போது ஓம்சிவசிவஓம் பற்றி நோட்டீஸ் அச்சடித்து,அவரது ஊரிலிருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரதோஷம் தோறும் விநியோகம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கூகுள் (1க்குப்பின்னாடி 100 சைபர்கள்)நன்றிகள்!!!



எந்த ஒரு மந்திரத்தையும்,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,இடுப்பில் சுத்தமான மஞ்சள் பட்டு ஆடை அணிந்து,அதிகாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையிலும்,கருங்கல்லில் அமர்ந்து ஒரு முறை ஜபிக்க பத்தாயிரம்  மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது அவரது ஆன்மீக குரு உபதேசித்திருக்கிறார்.

தன ஆகர்ஷன பைரவர் அர்ச்சனை






ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி

ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குருநாதா பொறி

ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி

ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி

மீண்டும் ஒரு நினைவூட்டல்:சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு






நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது

கொடுத்த கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?

அல்லது

தொழிலில் நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா?(மின்சாரம் வரும் லட்சணத்துக்கு இதை வேற குத்திக்காட்டணுமா? எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்)

அல்லது

உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா?

அல்லது

அரசியலில் நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?



தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னிதியில் வழிபட வேண்டும்.

இன்று 22.3.2011 செவ்வாய்க்கிழமை!!

இந்த வாரக்கடைசி நாளான 26.3.2011 சனிக்கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.

பின்வரும் தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர் சன்னிதி இருந்தால் தகவல் தெரிவிக்கவும்)

இந்த சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத் துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.

படப்பை ஸ்ரீஜெயதுர்கா பீடம்,

காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,

சிதம்பரம் கனகசபை,

திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும் பெரியகடைவீதி,

திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,

திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர ராஜப்பெருமாள் கோவில்,

தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம் அருகே,

இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள் ஆலயம்(தாலுகா அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)

ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும் கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை

26.3.11 சனிக்கிழமை காலை மணி 11.22க்கு அஷ்டமி துவங்குவதால் அன்றைய ராகு காலமாகிய 9.00am முதல் 10.30am மணிக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் பூஜையில் கலந்து கொள்ள விரைவான,சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி 25.4.11 திங்கட்கிழமை காலையில் அஷ்டமி திதி கால் பங்கு நகர்ந்திருக்கும்.தயாராக இருக்கவும்.



யுத்தகிரகங்களின் நேரடிப்பார்வையும்,உலகளவில் பதட்டமும்




ஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.



சனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



மிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.



இது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவது உறுதி.

ஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்தர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை!!!

Thursday, March 17, 2011

பெண்களால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நீங்கிட

உங்களை உங்களது ரத்த உறவுகளான அப்பா,அம்மா,சகோதரன்,சகோதரி,மனைவி/கணவன்,மகன், மகள்,மருமகன்,மருமகள் போன்றவர்களே மிக இழிவாகப் பேசுகிறார்களா?

நீங்கள் ஒழுக்கமாக இருந்தும் கூட,உங்கள் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் பொறுக்கி /விபச்சாரி/காம வெறிபிடித்தவள் என்ற கெட்ட பெயர் உங்களது ரத்த உறவுகளாலேயே உருவாக்கப்படுகிறதா?

உங்களுக்கு இராகு மகாதிசை அல்லது இராகு சார திசை அல்லது ராகுவுடன் சேர்ந்து வேறு ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெறுகிறதா?(இதை உறுதிபடுத்திட,மேற்கூறிய அவமானங்கள் உங்களைப் பின் தொடர்ந்தால் போதும்)

இராகு மகாதிசையுடன் கூடிய ஏழரைச்சனி (2011 தீபாவளி வரையில் சிம்ம ராசி,கன்னி ராசி),அஷ்டமச்சனி(கும்பராசி) நடைபெற்றுவருகிறதா?
ஆம் எனில்,நீங்கள் செல்ல வேண்டிய ஸ்தலம் கேதுபகவானின் ஸ்தலமாகிய கீழப்பெரும்பள்ளம் அருகில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் சிவாலயம் ஆகும்.
இங்கு அடிக்கடி சென்று உங்களின் சொந்தச் செலவில் அபிஷேகம்,பூஜை செய்து கொண்டே வர வேண்டும்.இப்படி குறைந்தது ஒராண்டு வரையிலும் அல்லது 18 தடவை அபிஷேகம் செய்வதால்,அவர்களின் அவதூறுப்பிரச்சாரம் முடிவுக்கு வரும்.
நன்றி:ஷீர்டி சாய்பாபா

கேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு?

தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.

அதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒரு இடத்துல, ‘சாமி! எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா?

இன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.
நன்றி:குமுதம் பக்கம் 54,16.3.11

திருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்கவுரையுடன் இலவச வெளியீடு


சென்னையைச் சேர்ந்த திரு.கு.அறிவுநிதி என்பவர் திருமூலரின் திரு மந்திரத்தில் அரியக் கருத்துக்களைக் கொண்ட 100 பாடல்களுக்கு மதிப்புரை எழுதி அன்பே சிவம் என்ற 64 பக்க புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் திருமந்திர விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் வேதம் எனப்படும் திருமந்திரம் தமிழ் நெஞ்சங்களிடையே பரவும் நோக்குடன் இதை இலவசமாக வெளியிட்டுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
திரு.கு.அறிவுநிதி,
H/4/2 ஹபீப் காம்ப்ளக்ஸ்
என்:2-3,டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை,
ராஜாஅண்ணாமலைபுரம்,சென்னை-28.
செல்:9382155577,9380155577.
நன்றி:குமுதம் ஜோதிடம்,பக்கம் 27;18.3.11;

Monday, March 7, 2011

ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்




கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.

அடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.

சென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.

ஸ்பைருலினாவில் இருக்கு சத்துக்கள்:

வேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.

பீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.

தாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.

பாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

உடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

பாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.



பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.

80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.

80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.

20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்றவை.

ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.



Sunday, March 6, 2011

கேமத்துவ தோஷம் என்றால் என்ன?





பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.

இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.

இவர்கள் முற்பிறவியில் ரகசியா,டிஸ்கோ சாந்தி,சிலுக்கு ஸ்மிதா,குத்துப்பாட்டு நடிகைகளின் வேலையைப் பார்த்திருப்பர்.

முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.

ஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.

தவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.

மிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு காமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.

கடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.

மிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது? என்பதை சொல்லித்தருகின்றன.

Saturday, March 5, 2011

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி

திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.




விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.



வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள

"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.
thanks:www.dinamalar.com

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=199071

நேற்று (மாசி அமாவாசை 4.3.11)ஓம்சிவசிவஓம் ஜபித்தீர்களா?




ஒரே நாளில் நாம் நமது பிரச்னைகள் தீர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.ஆனால்,நமக்கு வரும் பிரச்னைகள்,நாம் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள்,பொறாமை,திமிரின் விளைவுகளே! எனவே, ஒரே நாளில் நமது பிரச்னைகள் தீராது.

எப்படி எறும்புகள் ஒரு பாறையின் மீது நடந்து,நடந்து அந்த பாறை தேய்கிறதோ,அதேபோல்,நாம் தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது பிரச்னைகள் படிப்படியாக மட்டுமே தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

உதாரணமாக,நாம் செய்திருக்கும் முற்பிறவிக் கர்மங்களின் விளைவு 450 கோடி டன் என வைத்துக்கொள்வோம்.இதன் விளைவாக,37 வயது வரை நமக்கு திருமணம் ஆகாமலிருக்கும்;அல்லது 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தாலும் குடும்பமே கோர்ட்,கேஸ்,என சுமார் 14 ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும்;அல்லது தொழில் பார்த்து 1 கோடி ரூபாய் கடன் உருவாகும்;அல்லது திருமணமாகி ஓரிரு குழந்தைகள் பிறந்து அவைகளுக்கு 10 வயதாகும் முன்பே,கணவன் ஓரிடம்,மனைவி ஓரிடம்,குழந்தைகள் ஓரிடம் என தனித்தனியே சுமார் 7 ஆண்டுகள் வரையிலும் வாழ வேண்டியிருக்கும்;அல்லது உங்களது முற்பிறவிகர்மாவைப் பொறுத்து கர்ம நோய் அல்லது கடன் அல்லது எதிரி அல்லது அரசாங்க விரோதம் என ஏதாவது ஒரு தொல்லை நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.

கொஞ்சம் சீக்கிரமாக தீருவதற்காகத் தான்,தமிழ்மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சிவராத்திரி,பிரதோஷம் முதலான நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

நேற்று மாசி மாத அமாவாசை,வெள்ளிக்கிழமை,ராகுவின் நட்சத்திரமாகிய சதயம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருந்தது.4.3.11 மாசி அமாவாசையாகிய நேற்று நீங்கள் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்திருந்தால்,நீங்கள் எவ்வளவு தடவை ஓம்சிவசிவஒம் ஜபித்தீர்களோ,அந்த எண்ணிக்கை பெருக்கல் ஆயிரம் கோடி மடங்காக பெருகியிருக்கும்.

ஜோதிட அறிவியலின் படி,ஒவ்வொரு தமிழ்மாதமும் சூரியன் அடுத்த ராசியில் நுழைந்திருப்பார்.அப்படி நுழைந்த நாளில் அந்த ராசியில் நமது ஆத்மாக்காரனாகிய சூரியனின் பலம் பலமடங்கு அதிகமாக செயல்படும்.

அமாவாசையன்று ஆத்மாக்காரன் எனப்படும் சூரியனும்,மனக்காரன் எனப்படும் சந்திரனும் ஒன்று சேரும் நாள்.இந்த நாளில்,நாம் ஒருமுறை ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் பல கோடிமடங்கு ஜபித்தமைக்கான பலனைத் தரும்.இந்த நாளில்,நாம் முடிந்தவரையிலும் காலையில் ஒரு மணிநேரமும்,மாலையில் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிப்பது நன்று.

பவுர்ணமி நாளன்று சூரியனுக்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் நிற்கும்.சூரியனும் சந்திரனும் முழு சக்தியைப் பெறுவர்.எனவே,இந்த நாளிலும் நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மிகுந்த உற்சாகத்தோடு பல மடங்காக அதிகரிக்கும்.ஏனெனில்,மனக்காரனகிய சந்திரன் முழுபலத்தோடு இருப்பதால்,நாம் தெளிவான மனநிலையோடு இருப்போம்.

சூரியக் கிரகணம்,சந்திரக்கிரகணம் அதிக பட்சமாக இரண்டு மணிநேரமும் குறைந்த பட்சமாக 7 நிமிடமும் நாம் வாழும் பகுதியில் தெரியும்.அந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பாருங்கள்.உங்களை அறியாமலேயே வேகமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பீர்கள்.இந்த கிரகண நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஒரு முறை ஜபித்தாலோ ஆயிரம் கோடி தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நமக்குக் கிடைக்கும்.



கலிகாலத்தில் பூஜைகள்,யாகங்கள் இவற்றினை செய்யும் போது பல மனிதர்களின் ஆதரவோடு செயல்பட வேண்டியிருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் அந்த பல மனிதர்களில் ஒரு சிலராவது உள்ளன்போடு,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செயல்பட முடியாத நிலை இருக்கும்.எனவே,அவை ஓரளவுக்கு மேலாக நன்மைகளை ஒரே தடவையில் தருவதில்லை.(இது எனது சொந்தக் கருத்து அல்ல;ஆன்மீகப்பெரியவர்களின் கூற்று)

மந்திர ஜபத்துக்கும்,இறை நாமத்தை ஜபிப்பதற்குமே உடனடி பலன் கிடைக்கும் என கீதையில் துவங்கி,திருமூலர் வரை ஏராளமானவர்கள் விவரித்துள்ளனர்.எனவே, தினமும் ஒரு மணிநேரமும் முக்கிய நாட்களில் இரண்டு மணிநேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கவும்.

இப்படி நல்ல நாட்களில் அதிகமான நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக நமது முற்பிறவிகர்மாவின் அளவு 450 கோடி டன் என்பது 50 கோடி டன் என்ற அளவுக்கு குறைய நாம் குறைந்தது ஒராண்டு வரையாவது தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இந்த 450 கோடி டன் என்பது சும்மா உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு அளவீடு மட்டுமே!



பாவம் என்றால் என்ன?

பிறரை மனதால்,உடலால் நோகடிப்பது;ஏமாற்றுவது;வெறுப்பேற்றுவது;காயப்படுத்துவது;

இதுவே விரிவாக கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.கலிகாலத்தில் காமம் அல்லது பணம் அல்லது சொத்து சார்ந்த பாவங்களைத் தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.