Monday, June 19, 2017

இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை மஹாவராகி வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!

வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;


ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;


இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;

இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய மஹாவராகியை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;

தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;

மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;

இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;

மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;

குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;

ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி

என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(வாட்ஸ் அப்:9092116990,செல் எண்:9629439499) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(28 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)


சதுர்முகி & ஹேவிளம்பி வருட மைத்ர முகூர்த்தங்கள்;

3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40

18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24

2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52

18.3.17 சனி இரவு 10.15 முதல் 12.15

25.3.17 சனி காலை & இரவு 7.44 முதல் 9.44;மதியம் 1.44 முதல் 3.44

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04

14.4.17 வெள்ளி இரவு 8 முதல் 10

26.4.17 புதன் காலை 6 முதல் 7.08

11.5.17 வியாழன் மாலை 6.16 முதல் 8.16

12.5.17 வெள்ளி மாலை 6.18 முதல் 8.18

22.5.17 திங்கள் காலை 5.03 முதல் 6.28

23.5.17 செவ்வாய் காலை 4.32 முதல் 6.32

8.6.17 வியாழன் மாலை 4.28 முதல் 6.28

20.6.17 செவ்வாய் விடிகாலை 1.16 முதல் 3.16

5.7.17 புதன் மதியம் 2.48 முதல் 4.48

16.7.17 ஞாயிறு நள்ளிரவு 12 முதல் 2

2.8.17 புதன் மதியம் 1.04 முதல் 3.04

5.8.17 சனி காலை 6 முதல் 6.48;காலை 10.48 முதல் 12.48;மாலை 4.48 முதல் 6.48;

13.8.17 ஞாயிறு இரவு 10.16 முதல் 12.16

19.8.17 சனி காலை & இரவு 10.08 முதல் 12.08;மாலை 4.08 முதல் 6.08

29.8.17 செவ்வாய் காலை 11.10 முதல் மதியம் 1.10

9.9.17 சனி இரவு 8.32 முதல் 10.32

25.9.17 திங்கள் காலை 7.30 முதல் 9.30

26.9.17 செவ்வாய் காலை 7.34 முதல் 9.34

7.10.17 சனி மாலை 6.48 முதல் இரவு 8.48

23.10.17 திங்கள் காலை 6.20 முதல் 8.20

3.11.17 வெள்ளி மாலை 4.56 முதல் 6.56

19.11.17 ஞாயிறு காலை 6.15 முதல் 8.15

30.11.17 வியாழன் மதியம் 3 முதல் மாலை 5

16.12.17 சனி அதிகாலை 4.07 முதல் 6.07

28.12.17 வியாழன் மதியம் 1.10 முதல் 3.10

30.12.17 காலை & இரவு 7.11 முதல் 9.11;மதியம் & நள்ளிரவு 1.11 முதல் 3.11

12.1.18 வெள்ளி நள்ளிரவு 2.08 முதல் 4.08

25.1.18 வியாழன் காலை 11.20 முதல் மதியம் 1.20

8.2.18 வியாழன் இரவு 12.20 முதல் 2.20

20.2.18 செவ்வாய் காலை 9.24 முதல் 11.24

8.3.18 வியாழன் இரவு 10.28 முதல் 12.28

20.3.18 செவ்வாய் காலை 8.20 முதல் 10.20

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;

பாரதமாதா என்ற மகாவராகி!


எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே நமது பாரத தேசம் அனைத்து துறைகளிலும்(இல்லற வாழ்க்கை,நீதி நிர்வாகம்,விவசாயம்,பொருளாதாரம்,உணவு உற்பத்தி மற்றும் உணவு மருத்துவம்,ஆன்மீகம்,போர்க்கலை,சூட்சுமக்கலைகள் மற்றும் நிதி நிர்வாகம்,அரசியல்) அன்னை மஹாவராகியை தினமும் உபாசனை செய்து வந்ததால்     தன்னிறைவை பெற்றிருந்தது;

ஒரு நாடு முழுவதும் வெளிப்படையாக மஹாகால பைரவப்பெருமானையோ அல்லது மஹாவிஷ்ணுவையோ அல்லது சிவபெருமானையோ வழிபடுவதாகக் காட்டிக்கொண்டு,மறைமுகமாக அனைவரும் தினமும் ஜபித்து வந்தது பாரதமாதா என்ற மஹாவராகியைத்தான்!!! 

அதனால் தான் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் துரோகம் என்பதே இல்லாமல் இருந்தது;

1980 களில் ஆங்கில வழி பள்ளிகளுக்கு லைசென்ஸ் கொடுக்க ஆரம்பித்ததன் மூலமாக தமிழ்நாட்டில் தமிழே தெரியாத சமுதாயத்தை உருவாக்கும் நயவஞ்சகச் செயல்திட்டம் நடைமுறைக்கு வந்தது;இதன் பின்விளைவுதான் இன்று பலருக்கு(100 க்கு 95 பேர்கள்) சைவ சித்தாந்தப் பாடல்களான தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்றவைகளுக்கு அர்த்தமும்    புரியவில்லை;சரியான விதத்தில் உச்சரிக்கவும் தெரியவில்லை;

முத்தமிழை வித்தவர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் தமிழ்மொழியையும்,தமிழ்ப் பண்பாட்டையும் கடந்த 30 ஆண்டுகளாக     தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்கும் வேலையைத் தந்திரமாகச் செய்தார்;ஆமாம்! தமிழ் மொழியை தன்னால் மட்டும் தான் காக்க முடியும் என்ற மாயையை அரசியல் களத்தில் உருவாக்கி,அந்த பொய்ப் பிம்பம் உடையாமல் பாதுகாத்து தமிழ் வம்சாவழியினர் தமிழே அறியாத விதமாக உருவாக்கும் கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றார்.


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் தான் ஒரு குழந்தையை சரளமாக பேசவும்,அழகாக எழுதவும் பயிற்றுவிக்கின்றது;பத்தாம் வகுப்பு வரையிலும் ஒவ்வொரு குழந்தையும் தாய் மொழியில் கல்வி பயில வேண்டும்;


ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டத்தினால் தமிழ் மீடியத்தில் படிக்கும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை சரியானவிதத்தில் எழுத விடாமல் கெடுக்கும்;இதன் மூலமாக,தாய் மொழியில் பயின்றாலும்,உருப்படாமல் போவதற்குரிய வேலையை செயல்படுத்தியுள்ளது வேதனைக்குரிய விஷயம்;இந்தத் திட்டத்தை செயல்படுத்திய நிழல் யார் தெரியுமா? உலகத்தையே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இலுமுனாட்டிகள் தான்!(அவர்களை எதிர்த்துப் போராடும் ஒரே இனம் தமிழ் இனம் என்று அறிந்தமையால் அவர்கள் இப்படிப்பட்ட தமிழ் இன அழிவு வேலைகளைச் செய்து வருகின்றார்கள்)

2016 ஆம் ஆண்டு மத்திய அரசுத்துறையானது ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டத்தை அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டமியற்றியுள்ளது இன்னும் வேதனைக்குரிய விஷயம்;

இதுமாதிரியான துரோகச் செயல்களை நமது நாட்டில் சர்வசாதாரணமாகச் செயல்படுத்துவது எதனால் தெரியுமா?


பாரதமாதா என்ற மஹாவராகியை ஜபிக்காமல் போனதுதான் காரணம்! தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகி என்ற தகவலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டது;

தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் என்ற பூர்வீக ஜாதிகள் சுமார் 440 இருக்கின்றன;இவர்கள் பல நூற்றாண்டுகளாக சப்தகன்னியரை குலதெய்வமாகவும்,சதாசிவனை இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வந்துள்ளார்கள்.கடந்த 300 ஆண்டுகளில் இந்த கருத்து படிப்படியாகவும்,திட்டமிட்டும் பொதுமக்களிடம் இருந்து அதாவது இந்த 440 சமுதாய மக்களிடம் இருந்து அழிக்கப்பட்டு வேறு தெய்வ வழிபாடுகள் புகுத்தப்பட்டன;இதன் பின்விளைவாகத்தான் இன்று ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு சமுதாயத்திலும்,ஒவ்வொரு குலதெய்வ உறவுகளிலும் துரோகிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றார்கள்;கலியுகம் என்பதும் ஒரு காரணமாகும்;

ஞாயிற்றுக்கிழமையும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாட்களிலும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாட்களிலும்
செவ்வாய்க்கிழமையும் உத்திராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும் ஒருங்கிணையும் நாட்களிலும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் வரும் நாட்களிலும் 

பிறப்பவர்கள் முற்பிறவிகளிலும் சில சொல்ல முடியாத தவறுகளை சந்தர்ப்பவசத்தால் செய்துவிடுகின்றார்கள்:இவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற ஒரே ஒரு வழி மட்டும் தான் உண்டு;அது,மறைமுகமாக அன்னை மஹாவராகியையும்,இஷ்ட தெய்வமாக அவரவர் ஊரில் இருக்கும் அல்லது பக்கத்து ஊரில் இருக்கும் சுயம்புலிங்க ஆலயத்திற்கு தமது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத் தொண்டு ஆற்றிடவேண்டும்;

ராஜராஜசோழன் என்ற அருண்மொழித்தேவன் என்ற சோழமன்னனும் அவரது முன்னோர்களும் வெளிப்படையாக மஹாகால பைரவப் பெருமானையும்,பரம ரகசியமாக அன்னை மஹாவராகியையும் தான் வழிபட்டு வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்;ராஜராஜசோழனின் அப்பா திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு தங்கத்தால் ஆன பசுவை தானமாக அளித்தார்;அதன் விளைவாக உலகத்தை ஆளும் யோகம் நிறைந்த மகனான ராஜராஜசோழனை மகனாக பெற்றார்;


இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,குமரிக்கண்டம் முழுவதும் ராஜராஜசோழன் ஆட்சி நடைபெற்றது;அவரது ஆட்சிக்காலம் வரையிலும் தமிழ் மொழி வட்டெழுத்து முறைதான் புழக்கத்தில் இருந்து வந்தது;அவர் தமிழ் மொழியில் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இன்றைய சீனா,ஜப்பான்,தாய்லாந்து நாடுகளுக்குப் பரவாமல் போனது;அதனால் அவர்கள் மொழியினால் வேறுபட்டுப் போனார்கள்;ஆனால்,பண்பாட்டில் அவர்கள் இன்று வரையிலும் தமிழ் பண்பாட்டைத்தான் பின்பற்றிவருகின்றார்கள்:தவிர,விவசாயத்திற்குரிய ஒரே தெய்வம் அன்னை மஹாவராகி என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத உண்மை;அன்னை மஹாவராகியை பல நூற்றாண்டுகளாக உபாசித்து வந்தமையால் தான் தமிழ்நாட்டில் அதுவும் சோழ நாட்டில் 16,000 நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன;($இதனால் தான் சோழ வளநாடு சோறுடைத்து என்ற பழமொழியே உருவானது)

எந்த ஒரு கடவுளையும் முறைப்படி வழிபாடு,பூஜை,யாகம் செய்தால் அந்த தெய்வீக சக்தி மந்திரங்களுக்கும்,அவிர்ப்பாகத்திற்கும்,படையலுக்கும் கட்டுப்பட்டு வரங்கள் தந்துதான் ஆக வேண்டும்;

ஆனால்,அன்னை மஹாவராகியை அப்படி பூஜை,பரிகாரம் மூலமாக ஏமாற்றிடமுடியாது;மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் அன்னை மஹாவராகி ஓடோடி வந்து வரங்களை அள்ளித்தருவாள் என்று வராகி கல்பம் தெரிவிக்கின்றது;

ஆக,ராஜராஜசோழன் ஆட்சி காலம் வரையிலும் ஒரு சமுதாயம் மொத்தமும் மனதால் பிறருக்கு தீங்கு தர எண்ணாமல் வாழ்ந்திருக்கின்றது;அந்த வம்சாவழியில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் மற்றும் அயல்நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;இவர்கள் நேர்மையாக வாழத் துடிக்கின்றார்கள்:இவர்களுக்காகவே அன்னை மஹாவராகி வழிபாடு பற்றி எழுதுகின்றோம்!!!

சிவபெருமான் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தமது சக்தியில் ஒரு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;சிவபெருமானின் முதல் அவதாரமாக ஒரு சிறு சக்தி சிவத்திடம் இருந்து வெளிப்பட்டது;அதுதான் மஹா கால பைரவம்!

ப்ரபஞ்சத்தின் நலன் கருதி அந்த மஹா கால பைரவம் 8 வித அவதாரங்கள் எடுத்தன;அந்த 8 மஹா கால பைரவமும் 64 ஆக விரிவடைந்தன;இந்த 64 வித பைரவ சக்திகளின் துணை சக்திகள் தான் மஹா வராகி சக்திகள்!


நமது பூலோகத்தில் தான் பல குடும்பங்களில் மனைவியரின் ஆட்சி என்று நம்புகின்றோம்;மேல் உலகங்களிலும் இதே நிலைதான்;சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற பழமொழி சாதாரண பழமொழி அல்ல;அதனுள் ஏராளமான தத்துவங்கள் புதைந்திருக்கின்றன;அது இழிவான பழமொழி என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்;அது மாபெரும் தவறு;


மனிதர்கள் எட்டுவிதமான செயல்களைச் செய்கின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவச் செயல்கள் அல்லது 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்ய முடியும்;அதற்காகவே 64 விதமான பைரவ அவதாரங்கள் தோன்றின;64 வித பைரவ அவதாரங்களுக்குத் துணையாக 64 விதமான வராக சக்திகளும் உருவாகின;
மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இல்லறவாசிகளாக இருப்பதால்,முதன்மையான அஷ்டவராகிகளை படிப்படியாக வழிபட்டு வந்தாலே போதுமானது;


1.ஆதி வராகி

ஸ்ரீவித்யா மகார்ணவம் என்ற நூலில் ஆதி வராகியைப் பற்றி முழு விளக்கங்கள் இருக்கின்றன;மாத்ருகா தேவதைகளும்,பைரவர்களும் இந்த ஆதி வராகிக்கு பணிவிடை செய்ய காத்துக் கிடக்கின்றார்கள்;மனிதர்களுடைய நோய்களைத் தீர்க்கும் சாஸ்திரங்கள்,அஸ்திரங்களை தாங்கி அருள்பாலித்து வருகின்றாள் ஆதி வராகி;
மனிதர்களின் வினைகளால் ஏற்பட்டுள்ள தன்மைகளை அறிந்துள்ளாள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;அந்த வினைகளை எதிர்ப்பதற்கான மார்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றாள்;

2.லகு வார்த்தாளி என்ற லகு வராகி

மஹாவராகியின் அபிமானக் கோட்டையான மரகதக் கோட்டையில் சொப்பன வராகி,திரங்கரிணி,பஞ்சமி ஆகியோருடன் இந்த உன்மத்த வராகி வசித்துவருகின்றாள் என்று லலிதோபாக்யானம் தெரிவிக்கின்றது;
மஹாவராகியின் அங்கதேவியான இவள்,எதிரிகளின் திமிரை அடக்குபவள்;எதிரிகளின் அறிவுத்திறனை நிர்மூலமாக்கி அவர்களை பைத்தியமாக்கிவிடுவாள்;சத்தியத்திற்காகவும்,நீதி நேர்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் என்ற கொள்கை உடையவர்கள் இந்த அன்னையை தினசரி தியானிக்க வேணும்;
மிகப் பெரிய கொம்புகளையும்,மிகப் பிரம்மாண்டமான உருவத்தையும் கொண்ட இந்த அன்னை மஹாவராகியின் பிரதான செயலாளராகச் செயல்பட்டுவருகின்றாள்;நமது கோரிக்கைகளை உடனடியாக முடித்துக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவள் இந்த அன்னை!!!

3.பஞ்சமி வராகி

நாம் தெய்வீக நிலைகளை கொஞ்சம் அறிந்தால் மட்டும் தான் பஞ்சமி வராகியின் அவதாரத்தை புரிந்து கொள்ள முடியும்;

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் சூட்சுமமாக இயக்குவது நவக்கிரகங்கள்;இவர்கள் நமது முற்பிறவிகள் ஐந்தில் செய்தவைகளை அனுபவிக்கும் விதமான கிரக அமைப்பில் பிறக்க வைக்கின்றார்கள்;இவர்களை பல்வேறு சதவீத கலவையால் ஆட்டுவிப்பது பஞ்சபூதங்கள்;பஞ்சபூதங்களுடன் ஆட்டுவிப்பது அஷ்டதிக்பாலகர்கள்;பஞ்சபூதங்களை மும்மூர்த்திகளும்,மும்மூர்த்திகளை பதினோரு ஏகாதசருத்ரர்களும்,இவர்களை ஐந்துவிதமான சிவன்களும்,ஐந்துவிதமான சிவன்களை லலிதாபரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியும் இயக்கிவருகின்றார்கள்;

லலிதாபரமேஸ்வரியைத் தாங்குவது ஐந்துவிதமான சிவபெருமான்கள்;இந்த ஐந்துவிதமான சிவபெருமான்களில் ஒருவர் தான் சதாசிவன்;இவரது துணை சக்தியாக இருப்பவளே பஞ்சமீ வராகி!

சதாசிவனுடன் இணைந்து படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐந்துவிதமான தொழில்களையும் புரிகின்றாள்;

மோட்சங்கள்  ஐந்து வகைப்படும்;அவைகள்:-சாமிப்யம்,சாருப்யம்,சாயுஜ்யம்,கைவல்யம்
இந்த ஐந்து விதமான மோட்ச நிலைகளில் கைவல்ய நிலையை அருள்பவள் பஞ்சமி வராகி!

லலிதா சகஸ்ரநாமம் இவளை பஞ்சபூதேசி என்று அழைக்கின்றது;

4.அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி

லலிதாபரமேஸ்வரியின் குதிரைப்படைகளின் தலைவி இந்த அஸ்வாரூடா வராகி;
பக்தர்களின் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றல் படைத்தவள் இவள்;இவளை தொடர்ந்து வழிபட்டால் அரசாங்கமே உங்கள் காலடியில் கிடக்கும்;
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் நியாயமான வழியில் வெற்றியைப் பெறச் செய்யும் அன்னை இந்த குதிரைக்காரி;ஒற்றுமையான குடும்ப வாழ்க்கையை உருவாக்குபவளும் இவளே!

5.தண்டநாத வராகி

தவறு செய்பவர்களுக்குத் தண்டனையையும்,அன்புள்ளம் கொண்டு பிறரது தீங்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அபயத்தையும் அளிப்பவள் தண்டநாத வராகி!

6.தூம்ர வராகி

காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாச்சரியம் போன்ற துர்க்குணங்களுக்கு இவள் பகையானவள்;
இந்த அன்னையைச் சரணடைந்தால் மட்டும் தான் நமது ஆழ்மனதில் பல பிறவிகளாக புதைந்து கிடக்கும் துர்க்குணங்கள் அழியும்;
அழுக்கான ஆடைகள் மற்றும் சரியாக வாரப்படாத கூந்தலுடன் காட்சியளிப்பவள் இந்த தூமாவதி;
பிரளயத்திற்கும் படைப்புக்கும் இடையே பாழாக இருக்கும் வெற்றிடைத்தில் இருப்பவள் தான் இந்த அன்னை;


7.ப்ருஹத் வராகி

இவளது மறுபெயர் வார்த்தாளி;வடமொழியான சம்ஸ்க்ருதத்தில் வார்த்தா என்றால் ஆரோக்கியம்,நல்வாழ்வு என்று பொருள்;செழிப்பை உண்டுபண்ணி பூமியைக் காப்பாற்றும் விவசாயத்தின் சக்தியாக இருப்பவள் தான் இந்த ப்ருஹத் வராகி;
சொல்லின் வன்மை உடையவர்களாக இருந்தால் உங்களுக்கு உறுதுணையாக நின்று அருள்பாலிப்பவள்;
இவள் தான் சோழர்களை உலகாளும் அரசுக்கு உரிமையானவர்களாக மாற்றியதோடு,உணவுப் பஞ்சமே இல்லாத அன்னம் நிறைவு தேசமாக மாற்றியதும் இந்த அன்னையே!

8.சொப்பன வராகி

மந்திரமஹோததி என்ற நூல் 64 விதமான வராகி வழிபாட்டு முறைகளையும் தெரிவிக்கின்றது;
குருவின் மூலமாக முறையாகக் கற்று இத்தேவியின் மந்திரத்தை ஜபித்து வந்தால் அவர்களின் கனவில் தோன்றி நல்ல பலன்களை வாரி வழங்குபவள்;

எல்லா மனிதர்களும் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கலாம்;ஒரே நிபந்தனை;அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;முடியாத பட்சத்தில் முதல் மூன்று ஆண்டுகள் வரையாவது கைவிடவேண்டும்;


பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தாலே ஒரு ஆண்டுக்குப் பின்னர் 64 வராகி அவதாரங்களில் தாங்கள் எந்த அவதாரத்தைச் சேர்ந்த வம்சாவழியினர் என்பதை அறிந்து கொள்வீர்கள்!!!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ

தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா

ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை தினமும் 15 நிமிடம் வரையிலும்
இரண்டாவது வாரம் முழுவதும் 20 நிமிடம் வரையிலும்
மூன்றாவது வாரம் முழுவதும் 25 நிமிடம் வரையிலும்
நான்காவது வாரம் முழுவதும் 30 நிமிடம் வரையிலும்
ஐந்தாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடம் வரை ஜபித்துவிட்டு,வராகி மாலையை ஒரு முறை ஜபிக்க வேண்டும்;
ஆறாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடமும்,ஒருமுறை வராகி மாலையும்,வராகி 64 போற்றிகள் ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

ஆறாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை இப்படிச் செய்ய வேண்டும்;

ஒரு பச்சைத் துண்டு மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்,இன்னொரு மண் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபத்தையும் ஏற்றி வைத்து ஜபிக்க வேண்டும்; தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது இரவுப் பொழுதில் அல்லது இரண்டு நேரங்களிலும் இவ்வாறு அமைத்து ஜபிக்கலாம்;

வராகி சித்தர் என்று போற்றப்படும் ஸ்ரீவாத்தியார் ஐயாவின் அருளாசிகளோடு அன்னை மஹாவராகியைச் சரணடைவோம்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்