Sunday, October 31, 2010

அணுஇழப்பீட்டுச் சட்டம்:பாகம் 2:நன்றி தமிழ் வெப்துனியா

அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?
வெள்ளி, 22 அக்டோபர் 2010( 14:20 IST )

அந்த ‘பாதுகாப்பு’ இந்தியாவின் அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டால் மட்டுமே அந்நாட்டுடன் தங்களால் பிசினஸ் செய்ய முடியும் என்று தெரிவித்துவிட்டன. இதனால், உலகப் புகழ் பெற்ற இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வியே எழுந்துள்ளது!

அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக உலகின் முதன்மையான நாடு. அங்கு தர உத்தரவாதம் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவ்வாறிருக்க தங்களின் தயாரிப்பு தொடர்பாக அவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு? ஏன் என்று கேட்டால், பாபா அணு ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி பி.பி.சிங் கூறியதுபோல், இந்தியா 1969ஆம் ஆண்டு முதல் அணு உலைகளை இயக்கி வருகிறது. அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், பெரிய விபத்தென்று எதுவும் ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி, இந்தியாவின் அணு உலைகள் அமைப்பு மற்றும் கண்காணிப்பைச் செய்யும் அணு சகதி ஒழுங்குமறை ஆணையம் (Atomic Energy Regulatory Board - AERB) நமது அணு விஞ்ஞானிகளால் மிகத் திறமையாக நடத்தப்படும் அணு பாதுகாப்பு அமைப்பாகும். அதனால்தான் 40 ஆண்டுகளாக அணு உலைகளை இயக்கிவரும், இன்றைக்கு ஒரு முழுமையான அணு சக்தி தொழில் நுட்ப நாடாக விளங்கிவரும் (நமக்கு பிரச்சனையே யுரேனியம் சப்ளைதான், அதுதான் போதுமான அளவிற்கு இல்லை. அதனைக் காரணமாக்கியே இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது) முன்னணி நாடாகத் திகழ்கிறோம்.

அதுமட்டுமின்றி, அயல் நாடுகளில் இருந்து வாங்கி இங்கு நிறுவப்படும் அணு உலைகளை இயக்கப்போவது இந்திய அணு அணு சக்திக் கழகமாகும் (Nuxclear Power Corporation of India - NPCIL). இது மிகத் திறன் வாய்ந்த அரசு அமைப்பு. அவ்வாறிருக்க இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் நிறுவனங்களை இழப்பீட்டிற்குப் பொறுப்பாக்கும் சட்டத்தைக் கண்டு அமெரிக்க நிறுவனங்கள் அஞ்சுவதேன்?

அவர்களுக்கு விறக வேண்டும், பணத்தைப் பெறவேண்டும். பறந்துவிட வேண்டும். இலாபம் மட்டுமே குறி! அதற்குத்தான் அவர்களுக்குத் தேவை இந்திய - அமெரிக்க உறவு!

இதே சட்டம் பிரான்ஸ், கனடா உள்ளிட்ட அணு உலை விற்கப் போகும் நாடுகளையும்தான் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் நாட்டின் தனியார் நிறுவனங்களு்டன்தான் இந்திய அணு சக்தி ஆணையம் ஒப்பந்தம் போடப்போகிறது. ஆனால் அந்த நாடுகள் இந்தச் சட்டத்தைப் பார்த்து அஞ்சவில்லையே?

அமெரிக்கா மட்டுமே அஞ்சுகிறது. அதற்கு உயிர்கள் முக்கியமல்ல, இலாபமே முக்கியம். இதற்குப் பெயர்தான் இந்தியா யு எஸ் ஸ்டாட்டிஜிக் பார்ட்னர்ஷிப். புரிந்துகொள்ளுங்கள்.

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள்,வாயால் பேசிய பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி)

உலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி தினமலர் 31.10.2010


மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இன வரலாற்றில் எட்ட இருக்கும் ஒரு முக்கிய மைல் கல்:

இலங்கைத்தமிழர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் நமது தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அவர்களின் கடும் உழைப்பினால் இன்று இலங்கை சொர்க்கபுரியாக இருக்கிறது.தமிழ்நாட்டில் எத்தனை தமிழ்ஜாதிகள் உண்டோ,அத்தனை ஜாதிகளும் இலங்கையில் உண்டு.அவர்கள் அங்கே என்னென்ன சிரமப்பட்டார்கள்? என்பதை சி.மகேந்திரன் என்பவர் எழுதிய ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற நாவல் விரிவாக விளக்குகிறது.இந்த நாவலை நாம் வாசித்தால்,இலங்கைத் தமிழர்களுக்காக நாம் ஒவ்வொருவருமே வீட்டுக்கு ஒரு குழந்தையை தமிழ் ஈழம் பெற்றுத்தர அனுப்பிவைப்போம்;அந்த அளவுக்கு கொதிக்கும் நிஜங்களை இந்த நாவல் விவரிக்கிறது.

எங்கு சென்றாலும் தமிழ் இனமக்கள் மொழி ஒற்றுமையோடு இருப்பதில்லை;தமிழினத்தின் வரலாற்றில் முதன் முதலில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒற்றுமையாகச் செயல்படத்துவங்கினர்.அதையும் சீனாவின் ஆதிக்கப்பேராசை அரசியல்,இந்தியாவின் தொலைநோக்கற்ற அரசியல்,இலங்கையின் அரக்கத்தனமான அரசியல் சிதைத்துவிட்டது.இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதிலும் மீன் பிடிக்கத்தான் பார்த்தார்களேயொழிய,உணர்வுபூர்வமான எதையும் செய்யவில்லை;

எப்படி இன்று தமிழ்நாட்டின் நடுத்தர,கீழ்மட்டக்குடும்பங்களில் திறமையும்,பொறுப்புணர்ச்சியும் உள்ள மகன் அல்லது மகளை அந்தக் குடும்பமே உதாசீனப்படுத்தி,அவமானப்படுத்தி வீட்டை விட்டே விரட்டுமோ,அதே போலத்தான் இலங்கைத்தமிழின விடுதலை வீரர்களை தாய் தமிழ்நாடு கைவிட்டு விட்டது.

சீறி எழும் தமிழ்நாட்டு மகன் மகள்களைப்போல, வெகு விரைவில் தமிழீழம் மலரும்போது இந்தியாவின் தமிழ்நாட்டின் அரசியல்தலைவர்கள் அதற்கும் அந்த வெற்றிக்கும் நான் தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்.

Saturday, October 30, 2010

இந்தியாவுக்கு தேவை ஒரு தேசபக்தி நிறைந்த சர்வதிகாரி :மறுபதிப்பு

இந்தியா ஒரு நடுநிலையுள்ள நாடா?

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா என அமெரிக்கா அடிக்கடி சொல்லும்.இதற்கு அர்த்தம் அமெரிக்காவால் நினைத்ததை சாதிக்கமுடியும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அர்த்தம்.

நிஜத்தில் நாம் நமது வெளியுறவுக்கொள்கை,உலக அரங்கில் நமது ஆளுமைத்திறன்,நமது செயல்படும் விதம் இவற்றை மாற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து 15 ஆண்டுகளாகிவிட்டன.ஆனால்,அரசியல் நிலைத்தன்மை (ஒரே கட்சி வலிமையாக மத்திய அரசை உருவாக்கும் அளவிற்கு வளராமை) இல்லாததால்,நாம் இன்னும் நமது நட்புநாடுகளிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.இது மிகப்பெரிய தவறு என்பதை உலக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

1940 களில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும்,உலகப்பொருளாதார மந்தம் ஏற்பட்டது.மீண்டும் உலகளவில் இப்படிப்பட்ட பொருளாதார மந்தம் ஏற்படாமல் இருக்க டங்கல் திட்டம் என்ற கொள்கைவரைவு உருவாக்கப்பட்டது.ஆர்தர் டங்கல் என்ற வக்கீல் இந்தத் திட்டத்தை உருவாக்கினார் என்று கூறப்பட்டது.இவரின் அந்தரங்க உதவியாளர் ஒரு இந்தியர்.இவரே இந்த திட்டத்தினை வடிவமைத்தார் என்பது பலருக்குத் தெரியாது.
இந்தத் திட்டத்தின்படி,உலகநாடுகள் அனைத்தும் இந்த டங்கல் திட்டத்தில் கையெழுத்திடவேண்டும்.கையெழுத்திட்ட நாள் முதல் இந்த டங்கல் திட்ட உறுப்புநாடுகளுக்குள் யார் வேண்டுமானாலும்,எந்தப்பொருளை வேண்டுமானாலும் குறைந்த விலையில் எத்தனை நாடுகளுக்கு வேண்டுமானாலும் விற்கலாம்;வாங்கலாம்;
கி.பி.1945 முதல் கி.பி.1995 வரை டங்கல் திட்டம் பேசி, பேசி முடிவு எடுக்கப்பட்டது.கி.பி.1945 முதல் நமது இந்தியா டங்கல் திட்டத்தில் உறுப்பினராக செயல்பட்டுவருகிறது.கி.பி.1990 முதல் டங்கல் திட்டத்தினுள் ஜி.8 எனப்படும் உலக வல்லரசு நாடுகள் ஊடுருவ ஆரம்பித்தன.டங்கல் திட்டத்தை தனது இஷ்டத்திற்கு வளைக்கும் விதமாக டங்கல் திட்டத்தின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன.இதன்படி, பணக்கார நாடுகள் மேலும் பணக்காரர்களாகவும்,ஏழைநாடுகள் மேலும் ஏழை நாடுகளாக்கவும் விதமாக திட்டமிடப்பட்டன.ஏழை நாடுகளின் தலைவனாக இந்தியா பார்க்கப்பட்டது.1.1.1995 அன்று உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளில் 185 நாடுகள் டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டன.1.1.1995 ஆம் நாளிலிருந்து டங்கல் திட்டம் 185 நாடுகளில் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல், 185 நாடுகளில் வாழும் எந்த மனிதனும் யாருக்கும் எந்தப்பொருளையும் குறைந்த விலைக்கு வாங்கலாம்;விற்கலாம்; என்ற நிலை உருவாகிவிட்டது.மேலோட்டமாக இது ஜனநாயக வர்த்தகம் என்று இருந்தாலும்,பேராசை மேலும் மேலும் பேராசை என்ற கொள்கையை உலக மயமாக்கக் காரணமாகிவிட்டன.கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதற்கு டங்கல் திட்டம் காரணமாகிவிட்டது.


ஆளும் கட்சியின் ஆதரவுடன் துவங்கப்பட்ட பூமாலை என்ற வீடியோ பத்திரிகை இன்று சன் டிவியாக பரிணமித்து, மொத்த தமிழ்நாட்டின் பொழுதுபோக்குத் தொழிலையும் தனது முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டது.இன்று சன் டிவி இந்தியாவின் ஆறுமொழிகளிலும், தமிழ் சன் டிவி வளைகுடாநாடுகள், அமெரிக்கா,கனடா, தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா,மலேஷியா,சிங்கப்பூர் என உலகம் முழுவதும் ஒளிபரப்புமளவிற்கு ஆலமரமாக வளர்ந்துவிட்டது.15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட சன் டிவியின் இன்றைய ஒரு நாள் நிகர லாபம் (எல்லா செலவுகளும் போக) ரூ.1000 கோடிகள் ஆகும்.
பிரான்ஸின் எஃப் டிவி இன்று இந்தியா முழுக்க ஒளிபரப்பாகவும் டங்கல் திட்டமே காரணமாகும்.டி.வி.எஸ்.நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை ஆசியா முழுக்க தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.அமெரிக்காவின்,பிரான்ஸின்,இங்கிலாந்தின் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவிலும் கிடைக்கத்துவங்கியுள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில்,இந்தியா அணிசேரா இயக்கத்தின் தலைவராகவும்,வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் சேராமலும் இருந்து வந்தது.ஆனால்,இந்தியாவை தனது இஷ்டத்திற்கு வளைக்க ஆரம்பித்தது அமெரிக்கா!

1950 களில் சீனாவின் ஆக்கிரமிப்புப் பேராசை துவங்கியது.புத்தர் ஞானம் பெற்ற கயா நமது இந்தியாவில் இருப்பதால்,புத்த மத நாடுகளின் புத்த தலைமை குருக்கள் இந்தியாவை தனது குருகுலமாக,ஆசானாக மதித்துக்கொண்டிருக்கிறது.புத்த மதத்தின் நாடுகளாக இலங்கை,திபத்,சீனா,தாய்லாந்து இருக்கின்றன.இதில் புத்த மதத்தை தனது உயிர் மூச்சாகக்கொண்டிருக்கும் நாடு திபத் ஆகும்.இந்த திபத்தினை சீனா தனது அடக்குமுறையால் ஆக்கிரமித்துக்கொண்டது.நமது(இந்தியாவின்) சீடன் எனப்போற்றப்படும் திபத் இவ்வாறு ஆக்கிரமித்ததைக்கண்டு நாம்(இந்தியா) ஒரே ஒரு எச்சரிக்கை அறிக்கை கூட விடவில்லை;இது பேடித்தனமேதான்.
திபத்தில் புத்தமதத்தின் சம்பிரதாயங்கள் ரவுடி சீனாவால் அழிக்கப்பட்டன;சிதைக்கப்பட்டன.திபத் சீன மயமானது.இந்தியாவாகிய நாம் இதை எதிர்த்து இருமக்கூட செய்யவில்லை;
கி.பி.2007 ஆம் ஆண்டு வந்தது.உலகின் ஒரே இந்து மத நாடான நேபாளம் கம்யூனிச நாடாக மாறியது.ஆயுதம் ஏந்திப் போராடி வந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவின் மறைமுக ஆதரவுடன் நேபாளத்தின் ஆளுங்கட்சியாக பரிணமித்தது.இப்போதும் இந்தியாவாகிய நாம் இதை எதிர்க்கவில்லை;எல்லா ராணுவ பலங்களும்,ராஜதந்திர வலிமையும்,அரசியல் நுண்ணறிவு இருந்தும் கூட நமது நண்பன் நேபாளம் சிதைவதைப் பார்த்து நாம் பரிதாபப் பார்வை கூட பார்க்க வில்லை;
உலக சமாதானப்புறா என புகழப்படும் ஜவஹர்லால் நேருவின் பஞ்சதந்திரக்கொள்கையை பாம்புகளை தின்னும் சீனா பஞ்சு மிட்டாய்க் கொள்கையாக மாற்றிவிட்டது.அப்போதே,ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மாதவ சதாசிவ கோல்வல்கர் எனப்படும் குருஜி சீனாவின் நயவஞ்சகத்தை எடுத்துரைத்தார்.நேருவின் காது அப்போது சமாதானக்காதலால் செவிடாகிப்போனது.இந்தியாவின் மானம் கப்பலேறியது.இந்தியா சீனாப்போரில் நாம் 50,000 சதுர கிலோ மீட்டர்களை சீனாவிடம் இழந்தோம்.ஆம்! சீனா நமது 50,000 கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்தது.இந்த ஆக்கிரமிப்பு பற்றி,இந்தியப் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிக்களே கேள்விகேட்டு நேருவை தர்மசங்கடப்படுத்தினர்.
அதற்கு நேரு, “ சீனா ஆக்கிரமித்த இந்தியப்பகுதி வெறும் புல் பூண்டு கூட முளைக்காத பகுதி.அது நம்மிடம் இருந்தால் என்ன? சீனாவிடம் இருந்தால் என்ன?” என தனது இந்திய ‘தேசபக்தியை’வெளிப்படுத்தினார்.உடனே, ஒரு காங்கிரஸ் எம்.பி.எழுந்து வேகமாக நேரு அருகே வந்து, வெடுக்கென நேருவின் கதர் குல்லாயை எடுத்து, ‘இங்கே கூடத்தான் ஒரு மயிர் கூட முளைக்கவில்லை;அதற்காக இந்தத் தலையை சீனாவிடம் ஒப்படைத்துவிடலாமா’ என ஆக்ரோஷமாகக் கத்தினார்.பாராளுமன்றமே சிரித்தது.
இந்த சம்பவத்திற்குப்பிறகே,சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க இந்திய ராணுவத்தை நேரு அனுப்பினார்.
மறுபுறம், இந்தியா பாகிஸ்தான் போருக்குப்பின்னர், பாகிஸ்தான் ஒரு விஷயத்தை தெளிவாகப்புரிந்து கொண்டது. “ஒருபோதும் நேரடியாக இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்காது” .இதன் விளைவுதான் உலகிலேயே தீவிரவாதத்தை மட்டுமே இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு பாகிஸ்தான்.இந்த ஏற்றுமதியை நிறுத்திவிட காங்கிரஸ் கட்சி இது வரை ஒன்றுமே செய்யவில்லை;இதில் அமெரிக்காவின் தலையீடு வேறு.
பாகிஸ்தானின் வெளிநாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் வளர்ச்சி அமெரிக்காவின் இரட்டை மாடித் தாக்குதல் வரை விஸ்வரூபமெடுத்தது.இருந்தும் அமெரிக்காவுக்கு புத்தி வரவில்லை;வருடம் தோறும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பல கோடி டாலர்கள் பணம்,ஆயுதங்கள்,பொருளாதார உதவியை இன்று 2010 வரையிலும் வழங்கிக் கொண்டேஇருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நேரமில்லை.நாம் இன்னும் நடுநிலை என்ற சோம்பேறித்தனத்தை கொள்ளையாக (கொள்கையாக) வைத்திருக்கிறோம்.

பாகிஸ்தானை அடக்கி ஒடுக்கும்படி நாம் ஒரு நாளும் அமெரிக்காவை மிரட்டியதே இல்லை.விளைவு? பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பாராளுமன்றத்தையே தாக்கினர்.நாம் கொஞ்சம் கூட ரோஷப்படவில்லை;(இந்தியா ஒருநாளாவது ரோஷப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க சர்வ உதவிகளையும் செய்தது.இன்று இந்தியாவாகிய நம்மால் அணுகுண்டைக் காட்டி பாகிஸ்தானை மிரட்டிட முடியாத அரசியல் சாதுர்யத்தை அமெரிக்கா உருவாக்கிவிட்டது.தற்போது, சீனாவானது பாகிஸ்தானுக்கு ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை வழங்கிவிட்டது.இதையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை)
நாம்(இந்தியா) நடுநிலை என்ற சுத்தமில்லாத கழிவறையிலேயே இன்னும் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.அதன் துர்நாற்றம் (தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படும் எனது இந்திய சகோதரர்களின் மரணங்கள்) இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு,அரசியல் தலைமைக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையைத் தரவில்லை.ஏனெனில், செத்தது சோனியாவின் சொந்தமா? எம்.கே.நாராயணனின் சொந்தமா?மன்மோகனின் சொந்தமா? யாரோ ஒரு மகளின் அப்பாவும் அம்மாவும் தானே.

கூகுள் எர்த்தின் வரைபடங்களை வைத்து,கராச்சியிலிருந்து மும்பைக்கு வெறும் படகில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்திறங்கினர்.சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் எல்லோர் முன்பாகவும் தனது எந்திரத் துப்பாக்கிகளை ஒருங்கிணைத்து,மும்பையின் சகல பகுதிகளையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.வீரமுள்ள,பொறுப்புள்ள மகாராஷ்டிர காவல்துறை,கடலோரக் காவல்படை,ராணுவம்,அதிரடிப்படை என எல்லோரும் சேர்ந்து பாகிஸ்தான் பொறுக்கிகளை சுட்டுத் தள்ளினர்.இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு பாகிஸ்தான் காரன் சிக்கினான்.இன்று இவன் ஒருவனே போதும்.பாகிஸ்தான் இந்தியாவின் மீது தீவிரவாதப்போரை நடத்துகிறது என்பதை நிரூபிப்பதற்கு! இந்திய அரசு இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கிறது.உலக வல்லரசு அமெரிக்கா இந்த சம்பவத்தால், தனக்கு என்ன ஆதாயம்? என்று மட்டும் கணக்குப்போட்டுக்கொண்டிருக்கிறது.

நம்மை 300 ஆண்டுகளாகச் சுரண்டிய பிரிட்டன் நாட்டினர், இலங்கையில் இருக்கும் தனது கரும்புத் தோட்டங்களில் வேலைபார்ப்பதற்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்களை அழைத்து சென்றனர்.அந்த தமிழ்ப்பணியாளர்கள்,இன்று இலங்கையை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டனர்.ஆனால்,ராஜபக்ஷே போன்ற அரக்கர் கூட்டம் தனது சிங்கள வேட்டைநாய்களால், தமிழ் இனப்பெண்களை,தமிழ்க் கர்ப்பிணிகளை கற்பழித்துக்கொன்றுகொண்டே இருக்கின்றனர்.கருணாநிதி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை;சோனியாவுக்கு இதன் வலி தெரியுமா? இலங்கையில் துடிதுடிக்கச் சாவது என்ன சோனியாவின் இத்தாலி சொந்தங்களா?தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியாவிற்கு மட்டும் விசுவாசமாக இல்லாமல், எல்லா இந்தியப் பிரதமர்களையும் குழப்பிக்கொண்டு,இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் பார்த்துக்கொண்டான்.இந்தியா தனது சொந்த ரத்தங்களைப்பற்றி சிறிதும் அக்கறையின்றி, அதே நடுநிலைக்கொள்கையில் தொங்கிக்கொண்டே இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 2,00,000 இந்திய மாணவர்கள் படிக்கச் சென்றுள்ளனர்.அவர்களை தினமும் ஆஸ்திரேலியர்கள் கொன்றுகொண்டே இருக்கின்றனர்.இதற்கு மட்டும் இந்தியாவின் முதன்மை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆஸ்திரேலியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவும் ஆடிப்போனது.ஆஸ்திரேலிய அரசும் தனது தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.எனக்கு ரொம்பப்பெருமையாக இருந்தது.என்னடா இது நம்மநாடு இப்படி ரோஷப்பட்டது கிடையாதே?! என்ன காரணமாக இருக்கும்னு விசாரிச்சுப்பார்த்தால் 2,00,000 இந்திய மாணவர்களில் 1,75,000 மாணவர்கள் வட இந்திய மாணவர்களாம்.அதனால் தான் இந்த ரோஷம்! அட!
இதே ரோஷத்தை இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில், காஷ்மீர் பிரச்னையில், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் பிரச்னையில்,சீனாவின் ஆக்கிரமிப்புப்பிரச்னையில் ஏன் காட்டவில்லை?!

இன்று,உலக அரங்கில் அமெரிக்காவின் அரசியல் பிடிமானம் நழுவிக்கொண்டே இருக்கிறது.அந்த இடத்தை சீனா படுவேகமாகப் பிடித்துக்கொள்ளத் துவங்கியுள்ளது.இந்தியாவை ஒழித்துக்கட்டிட முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான்,இலங்கை,மியான்மார்,பங்களாதேஷ்,நேபாளம்,திபத் போன்ற நமது அனைத்து நட்பு நாடுகளையும் வளைத்துப்போட்டுவிட்டது.நாம் இந்த நட்பு நாடுகளையும் அரவணைத்துச் செல்ல வில்லை;நமது வம்சாவழி இந்தியர்களையும் பாதுகாக்கவில்லை;ஆனால்,ஒரே ஒரு போர் வந்தால் சீனாவின் பொருளாதாரம் சீர்படுத்த முடியாத அளவிற்கு நொறுங்கிவிடும் என்பது சீனாவிற்கே தெரியும்.

நமது பிரச்னைகளான காஷ்மீர் பிரச்னை,தெலுங்கானாப்பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை,காவிரிப்பிரச்னை,சீனாவின் ஆக்கிரமிப்பு, திபத் பிரச்னையில் நமது நிலைப்பாடு, நேபாள அரசியல் மாற்றத்தில் நமது நிலைப்பாடு என எந்த பிரச்னைக்கும் இந்தியாவாகிய நாம் அமெரிக்கா உள்பட எந்த நாட்டின் தயவையும் நாட வேண்டிய அவசியமில்லை;நாமே உடனே தெளிவான ஆனால் சற்றே சர்வாதிகாரமான முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும்.வலிமையுள்ளவனுக்கே இங்கே வாழ்க்கை என்பதை இந்தியாவின் மத்திய துறைச் செயலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு நடுநிலை தேவையே இல்லை;அது இந்துதர்மத்தின் கொள்கையுமல்ல;
பகவத் கீதையின் சாரமே இதுதான்:
எதிர்ப்பது உனது உடன்பிறந்தவனாக இருந்தாலும்,போர்க்களம் என வந்த பிறகு அவனை கொன்றுவிடு;இதனால்,உனக்கு அரசுரிமை கிடைக்கும்.ஒருவேளை நீ இறந்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயம்.
இந்தியா வல்லரசானால்,அமெரிக்கா போன்ற போதையுள்ள குரங்கின் அட்டகாசம் ஒடுக்கப்படும்.உலகில் போரே இராது.சீனா போன்ற வெறிபிடித்த வல்லாதிக்கம் சிதைந்துவிடும்.
ஒரு வேளை இந்தியா அழிந்தால்,இந்த உலகமே நிம்மதியாக இராது.விரைவில் இந்த உலகமே அழியும்.

அமெரிக்கா எப்படி திவாலாகும் ?மறு பதிப்பு :

சுதேசிச் சிந்தனைகள்:1.அமெரிக்கா எப்படி திவாலாகும்?

அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்!
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.



இப்போது அந்த வங்கியை நமது ப.சிதம்பரத்தாலோ,மான் டேக்சிங் அலுவாலியாவாலேயோ,மன்மோகன்சிங்காலேயே காப்பாற்ற முடியுமா?

இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.



இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!

அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

எட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? மறுபதிப்பு :ஆண்மிகக்கடலின் மறுபதிப்பு




எட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17. நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17. கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான். தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17. இலங்கைத் தமிழர்களின் துருவநட்சத்திரம், மகா சரித்திரம் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26. கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.பெங்களூரில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ் நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில்! பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில்! சரி! இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா? கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்) இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய இயலாது.இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும். (ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்!) நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று?! நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா?’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது. (17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்) இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய அரசை திருப்பியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் எம்.கே.நாராயணன் என்ற அதிகாரிதான்.அந்த அதிகாரியின் நயவஞ்சகத்தை அரசியல் அரங்கில் தோலுரித்துக்காட்டியவர் தொல்.திருமாவளவன்.அதற்காக மத்திய அரசின் மிரட்டலுக்கும் ஆளானார்.ஆதாரம்:1.1.2009 முதல் 1.9.2009 வரை வெளிவந்த தமிழ்நாட்டு தினசரிப்பத்திரிகைகள்.ஆக அவரது பிறந்த தேதியான ஆகஸ்டு 17 இங்கு செயல்படுவது தெரிகின்றது. கி.பி.1970 முதல் இலங்கைத் தமிழ்இனத்தை அழித்துக்கொண்டே இருக்கும் இலங்கை அரசு பிரபாகரனின் அசுரப்பாய்ச்சலுக்குப் பின்னர் தான் சிங்கள ராணுவத்தின் கொட்டம் அடங்கியது.இலங்கைத் தமிழ்மக்களின் தலையெழுத்தை மட்டுமல்ல,இலங்கை அரசு, இந்திய அரசு இவைகளின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை சனியின் அம்சத்தில் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு என்பதை இதுவரை நாம் படித்த செய்திகள் சொல்லும்.பிரபாகரனின் வரலாற்றை எழுதவே 20 லட்சம் பக்கங்கள் தேவைப்படும்.அவர் பிறந்தது டிசம்பர் 26. பிரபாகரனிடம் சீனா பல முறை ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது. சீனா பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் வாங்கித் தருமாம்.அதற்குப் பரிசாக திரு கோணமலையை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு தரவேண்டுமாம்.(இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்கு நீண்டநாட்களாக காதல் உண்டு) பிரபாகரன் இந்தியா மீதும்,தமிழ்நாட்டின் மீதும்,தமிழ் சகோதர்கள் மீதும் உள்ள பாசத்தால் இதைச் செய்யவில்லை;(இதைச் செய்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தோடு உலக வரலாறே மாறிப் போயிருக்கும்) இப்போது, சீனா இலங்கை அரசிடம் இதே கோரிக்கையோடுதான் கொஞ்சிக்குலாவுகிறது. ஆதாரங்கள்:தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளும். கி.பி.2006,2007,2008,2009. தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம். எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார். 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர். இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.இவர்களுக்கு சுய தம்பட்டம் அடிப்பதில் விருப்பம் அதிகம். இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.

பேய் யாரை எல்லாம் பிடிக்கும்?ஆண்மிகக்கடலின் மறுபதிப்பு :அவசியம் கருதி !!!

பேய் யாரையெல்லாம் பிடிக்கும்?

தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும்,

கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும்,

வெட்டவெளியிலும், மொட்டை மாடியிலும் நிர்வாணமாக(உடல் மீது போர்வை போர்த்தியிருந்தாலும்) தூங்குபவர்களையும்,

உடலுறவுக்குப்பின்னர் வெட்டவெளிகளில் ஆடை உடுத்தாமலும்,குளிக்காமலும்(சுத்தப்படுத்தாமலும்) தூங்குபவர்களையும்,
அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும்

பேய் பிடிக்கும்.அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும்.

பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும்.
எனவே தினமும் குளிக்க வேண்டும்.மஞ்சள் பூசியும்,மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும்.
மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை

உங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா ?மறு பதிப்பு

குழந்தையின் வயது 12 முதல் 19க்குள் இருக்கிறதா?இந்தக் கட்டுரை உங்களுக்காக . . .

கி.பி.1999 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டில் பருவ வயது எனப்படும் டீன் ஏஜ்களின் தற்கொலை முயற்சி எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 400 ஆக இருந்தது.
இன்று கி.பி.2009 இன் விளிம்பில் இருக்கிறோம்.உலக மயமாக்கலின் வேகத்தால் உலகமே அமெரிக்க மயமாகிவிட்டது.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் சிறு நகரங்களிலும் பரவிவருகிறது.இந்த நிலையில் டீன் ஏஜ்கள் எனப்படும் பருவ வயதுகளில் இருப்பவர்களின் தற்கொலை முயற்சி ஒரு நாளுக்கு சராசரியாக 2500!

நீங்கள் வீட்டைவிட்டு வேலை அல்லது தொழில் நிமித்தமாகக் கிளம்புவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்கிக்கொண்டிருப்பான்/ள்.
நீங்கள் வேலை அல்லது தொழிலை விட்டு வீட்டுக்குள் களைத்துப்போய் வருவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்க ஆரம்பித்துஇருப்பர்.
சரி நாளைக்குப் பேசிக்கலாம் என பேசுவதற்குக்கூட நேரமில்லை.(அதான் செல் இருக்கே என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்)

பாசமோ,வியாபாரமோ நேரில் பேசுவது போன்ற பரிசு அல்லது வரம் எதுவும் கிடையாது.

நீங்கள் யாருக்காக பணத்தைத் தேடி ஓடுகிறீர்கள்?அவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதில் 50% நீங்களும் உங்களின் வாழ்க்கைத்துணையும்தான் என்பதை அறிவீர்களா?
அவர்களிடம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது மனம்விட்டு பேசுகிறீர்களா?
அவர்களின்(உங்கள் பருவ வயது மகன் அல்லது மகள்) தினசரி வாழ்க்கையில் என்ன நடந்துவருகிறது என தினமும் உங்களால் நேரடியாகக் கேட்கமுடிகிறதா?
அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?(ஆம் எனில் அந்த 2500 தற்கொலை முயற்சியில் நிச்சயம் உங்களின் குழந்தை இருக்காது)
சாப்பிடும் முன்பும்,சாப்பிட்டப்பின்பும் கை கழுவ கற்றுத் தருகிறோம்.காதல்,காமம்,ஏமாற்றுதல்,செல் போன் வழியே உருவாகும் பிரச்னைகள் இவற்றினை எப்படி எதிர்கொள்வது என்பதை உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஒரு நாளாவது சொல்லிக்கொடுத்ததுண்டா?(உங்களது அனைத்து செல் போன்களையும் அணைத்துவைத்துவிட்டு)


இதையெல்லாம் செய்யாமல் என் மகள் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறா? சார் நீங்கதான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க என டியூசன் ஆசிரியர்களிடம் கெஞ்சாதீர்கள்.
(உங்கள் மகளின் 5 வயது முதல் 15 வயது வரை அவள் கேட்கும் சந்தேகத்தை அவளின் கண்களை நோக்கிப்பார்த்து பொறுமையாகக் கேட்டிருந்தால் யாரோ ஒரு டியூசன் ஆசிரியரிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம்)
ஆனால் உங்கள் மகள் உங்களது டியூசன் ஆசிரியர் வார்த்தைகளைக் கேட்பாள்.உங்களை மதிக்க மாட்டாள்.ஏனெனில் டியூசன் வாத்தியாரின் வேலையே மாணவியின் (மகளின் அல்ல) பேச்சுக்களைக் கூர்ந்து கவனிப்பதுதான்.
அதே மகளிடன் அந்தரங்கப் பிரச்னைகளை (பெற்றோராகிய)நீங்கள் பகிர்ந்ததுண்டா?
ஏன் டியூசன் ஆசிரியரை மகன் மற்றும் மகள்கள் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.?
சில இடங்களில் டியூசன் ஆசிரியரே தனது மாணவியைத் திருமணம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது .ஏன்?

உங்கள் மகன் அல்லது மகள் அல்லது இருவரும் இன்று முதல் உங்களை அதிசயமாகத் தான் பார்ப்பார்கள்.இன்றே மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிட உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுங்கள் அல்லது அரட்டையடியுங்கள்.

காதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.
அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.
கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.
ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.
காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.
இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]
ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.
காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?
காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.
உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.
அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.
காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.
அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.
இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.
எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.
உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.
முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]
எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.
தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
நன்றி:www.writerpara.com/paper/

நன்றி:தமிழ் வெப்துனியா மற்றும் அன்மிகக்கடலின் கருத் து

இந்தியாவை எங்களின் ஏற்றுமதிக்கான பெரிய சந்தையாகவே பார்க்கிறோம்: அமெரிக்கா
அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை நீக்க இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் பாதுகாப்பு துணை ஆலோசகர் மைக் ஃபுரோமேன், “அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை, அதே நேரத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான ஊற்று. இதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு உள்ள தடையை நீக்க அதிபர் ஒபாமா பேசுவார்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்கள் இந்திய சந்தையை அடைவதற்கு உள்ள தடைகளை அகற்றவும், ஏற்றுமதியின் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதுமே பராக் ஒபாமாவின் முக்கிய பயண நோக்கமாக இருக்கும் என்றும் மைக் ஃபுரோமேன் தெரிவித்துள்ளார்.


ஆமாம் ஆமாம் .அமெரிகாவாகிய எங்களுக்கு இந்தியா ஒரு குப்பை தொட்டி. எங்களது நாட்டின் தடை செய்யப்பட்ட மருந்துகள் , உரங்கள், உணவுப் பொருட்கள் ,அணு மின்சார உற்பத்தி உதிரி பாகங்கள் அனைதைதிலும் பயன்படுத்தி வீணாக போனவை கல் அனைத்தையும் ஐந்து மடங்கு விலைக்கு உங்கள் தலையில் கட்டவே எங்கள் அதிபர் டெல்லி வருகிறார். நீங்களும் எங்கள் குப்பையை வாங்காவிட்டால் விபரமான சீனாவா வாங்கும்? என்று இதறுகு அர்த்தம்.

எதிலும் அசால்டாக இருக்கும் இந்தியா ,இதிலும் வழக்கம் போல இருக்கும்.நமக்கு நமது பலம் தெரிய வில்லை.இன்னும் எதனை நாளுக்குத்தான் இளிச்சவாய நாடாக இருக்கப்போகிரோமோ?

நன்றி:தமிழ் வெப்துனியா

கிரக அமைப்பும் அசைவ உணவும்
தமிழ்.வெப்துனியா.காம்: புதன் கிரகத்தை குறிப்பிடும்போது சைவ உணவிற்குரிய கிரகம் என்று குறிப்பிட்டீர்கள். இதுபோல அசைவ உணவிற்கும் கிரகங்கள் இருக்கிறதா?

ஜோதிட ரத்னா முனைவர் ..வித்யாதரன்: சனி, ராகு, கேது போன்ற ராசிகளின் பார்வையில் உள்ளவர்கள் கொஞ்சம் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள். இதில், சைவ உணவிலேயே கொஞ்சம் அசைவத் தன்மை கொண்டதாக சில உணவுகள் இருக்கிறதல்லவா - காலிஃபிளர், காளாண் போன்றவைகள், அவைகளை அதிகம் வறுத்துச் சாப்பிடுவது போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் சைவம். அவருடைய நண்பர் ஒருவர் அசைவம். அசைவ நண்பர் சிக்கன் 65 சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சைவ நண்பர் அவருடன் உட்கார்ந்துகொண்டு காலிஃபிளவர் பிரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபோலவும் இந்த கிரக அமைப்பு உள்ளவர்கள் இருப்பார்கள்.

பொதுவாக சனி, ராகு, கேது இருந்தால் பொறித்தது, வறுத்தது, நடப்பன, பறப்பன போன்று குத்து வெட்டு என்று உணவு இருக்கும்.

செவ்வாய் காரமான உணவு. சூரியனுக்கு இயல்பான உணவு. அப்படியே நெருப்பில் போட்டு சாப்பிட்டுவிட்டார், கம்பியில் காட்டி சுட்டு சாப்பிடுகிறார் என்று சொல்வார்களே அந்த மாதிரி.

மேலும் சுக்ரன் ராகு உடன் சேர்ந்தாலும் அசைவ உணவுகளை சாப்பிட வைக்கும். தசாபுத்தியை வைத்து எந்த மாதிரியான உணவுகளில் நாட்டம் இருக்கும், எந்த கிரகம் அவர்களை ஆட்சி செய்கிறது என்பதை கண்டறிந்தாலே தெரிந்துவிடும்.

குரு, சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்தினால் பால், மோர், தயிர், நெய், சர்க்கரைப் பொங்கல் இந்த மாதிரியான உணவுகளில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

நன்றி: தமிழ் வெப்துனியா

கோபுரங்கள் பாதிப்பு ஆபத்தின் அறிகுறியா?
தமிழ்.வெப்துனியா.காம்: கோயில் கோபுரங்களில் விரிசல் ஏற்படுதல், மின்னல் தாக்கி பாதிக்கப்படுவது, இடிந்து விழுதல் போன்றவை ஏதாவது ஆபத்தின் அறிகுறியா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: கோபுரம் என்பது ஒரு அடையாளச் சின்னம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் அரசு சின்னமாகவே அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் அரசையும், ஆட்சியையும் குறிப்பிடக்கூடியது என்று சொல்லலாம்.

கோபுரங்களில் இருக்கும் கலை, பரிணாமங்கள், சிற்பங்கள், எழுந்து நின்றிருக்கக் கூடிய கோபுரங்களின் அமைப்பு, அதற்கு மேல் முத்தாய்ப்பாய் பதித்திருக்கக் கூடிய அந்தக் கலசங்கள் போன்ற இவையெல்லாம் பாதுகாக்கப்படக் கூடியவை.

இதில் சில சென்சிடிவ்வான சில விஷயங்களும் உண்டு. கோபுரக் கலசங்கள் ஏதாவது தவறி விழுந்தாலோ, கோபுரத்தில் விரிசல்கள் அல்லது பின்னங்கள் ஏற்பட்டாலோ பொதுவாக நாட்டினுடைய பொருளாதாரம், நாட்டை ஆள்பவருடைய நிலைமை, பருவ நிலை மாறிப் பொழிதல், தற்கொலை அதிகரித்தல், முர‌ண்பாடான உறவுகள் இதுபோன்ற சீர்கேடுகள் எல்லாம் ஏற்படும்.

நன்றி; தமிழ் வெப்துனியா

குரு பூ‌மி‌க்கு அரு‌கி‌ல் வ‌ந்‌திரு‌ப்பதா‌ல்...
தமிழ்.வெப்துனியா.காம்: குரு பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. இதனால் நன்மை, தீமை ஏதாவது ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: தனம், பலம், தங்கம் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு பகவான். இவர் அருகில் வந்தாலே விலைவாசியெல்லாம் உச்சத்தில்தான் இருக்கும்.

தற்பொழுது பூமிக்கு அருகில் வந்துள்ள குரு கிட்டத்தட்ட மே 7 ஆம் தேதி வரையிலும் அருகிலேயே இருப்பார். இந்த காலகட்டத்தில் பொதுவாகவே அனைத்தும் உச்சமாகவே இருக்கும்.

விலையுயர்ந்த பொருட்களான தங்கம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்கும். இதே நேரத்தில் பதுக்குகிறவர்களும் அதிகரிப்பார்கள். ஆனால், எது எப்படியிருந்தாலும் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள் என்பார்களே அந்த நிலையும் இருக்கும்.

மேலும், குருதான் ஆண் வாரிசுகளுக்கு உரிய கிரகம். எனவே, ஆண் பிள்ளை பிறப்பு அதிகரிக்கும். இதுதவிர, கல்வி, வேதம், மந்திரம் இதற்கெல்லாம் உரிய கிரகமும் குருதான். ஆகையால் கல்வித் துறையில் மாற்றங்கள் போ‌ன்றவை நடக்கும்.