Friday, April 13, 2018

வாராஹி ஜபம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்


ஏன் வாராஹி ஜபம் தினமும் செய்ய வேண்டும்?

ஏனென்றால்,நாம் வேலைக்குச் சென்று கொண்டு இருந்தாலும் சரி;சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருந்தாலும் சரி;அரசுப் பணியில் இருந்தாலும் சரி;அரசியலில் இருந்தாலும் சரி;நமக்கு என்று போட்டியாளர்கள் இருக்கின்றார்கள்;

சரி; போட்டி என்று இருந்தால் தானே நமது பலவீனங்களைக் கைவிடுவோம்;நமது முழுத் திறமையும் வெளிப்படும். . . ?

உண்மைதான்;உங்களை போட்டியில் இருந்தே விலக்கி,உங்கள் சிந்திக்கும் திறனை முடமாக்குபவர் உங்கள் போட்டியாளராக இருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?


ஜெயிக்குறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் உங்கள் போட்டியாளராக இருக்கின்றார்;அது உங்களுக்குத் தெரியவில்லை;

போட்டியின் இறுதிச் சுற்றில் படுதோல்வி அடைந்த பின்னர் தான் உங்கள் போட்டியாளர் எப்படி ஜெயித்தார்? என்பதை கண்டறிகின்றீர்கள்.மீண்டும் ஒரு இறுதிச் சுற்றுக்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையை (படுதோல்வி அடைந்த பின்னர்) அறிந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?


(நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு) ஒண்ணும் செய்ய முடியாது;
ஆனால்,என்னிடம் நேர்மை இருக்கின்றதே. . .

அதுதான்;நாம் நேர்மையாக இருந்துவிட்டால்,நாம் உண்மையாகவும்,தர்மப் படி வாழ்ந்துவிட்டால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணுகின்றீர்கள் அல்லவா? அதுதான் உங்கள் பலவீனம்;

என்ன சொல்றீங்க? அது எப்படி பலவீனம் ஆகும்?

ஒரு பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்;காதலிலும் போரிலும் தர்மநியாயம் பார்க்கக் கூடாது;அங்கே வெற்றி மட்டுமே முக்கியம்;

நீதி,நேர்மையாக வாழ்ந்து வரும் நீங்கள் ஒரு மகத்தான வெற்றி பெற்றால்,உங்களை மட்டும் நம்பியுள்ளவர்களும் முன்னேறிவிடுவார்கள்;

பதிலாக,

பித்தலாட்டம்,சூது,நயவஞ்சகம் என்று மட்டும் வாழ்ந்து வருபவர்கள் ஜெயித்தால் என்ன ஆகும்?

அப்போ,என்னையும் நீதி,நேர்மை,தர்மம்,நியாயம் இதை எல்லாம் கைவிட்டுட்டு ஜெயிக்கச் சொல்றீங்களா?

(புன்னகையுடன்) இல்லை;இல்லவே இல்லை;உங்கள் நேர்மைத் தன்மை ஜெயிக்க,உங்களுக்கு உரிய ஆன்மீக பலத்தை அதிகப்படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம்;


அதுக்கு வாராஹி ஜபம் தான் செய்யணுமா? எத்தனை தெய்வங்கள் இருக்குது. . .

(குறுக்கிட்டு) இப்போதான் சரியான கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளீர்கள். . .

உங்கள் செல் போனை வெறும் 5 நிமிடம் சைலண்ட் மோடில் வைக்க முடியுமா?

எதுக்கு?

ஒரு கருத்தினை உங்கள் மனதில் பதிய வைக்கணும்னா இது அவசியம்;இன்றைய வேகமான உலகத்தில்,தேவையில்லாத இம்சையாக செல்போன் அழைப்புதான் முதலில் இருக்கு. . .


(கண்களை அகலமாக விரித்து) கரெக்ட்! நீங்க சொல்றது சரிதான்;
இதோ சைலண்ட் போட்டாச்சு,பேக்குக்குள்ளயும் போட்டுட்டேன்;
ம் இப்போ சொல்லுங்க


விநாயகர்,முருகன்,கருப்பசாமி,சுடலைமாடன்,பத்திரகாளி,
வனப்பேச்சி,வீரபத்திரர் என்று ஏராளமான தெய்வங்கள் இருக்கின்றார்கள்;இவர்களுக்கு முறையான பூஜை,அபிஷேகம் செய்து வந்தால் நாம் வேண்டும் வரத்தை இந்தக் கடவுள்கள் தந்துதான் ஆக வேண்டும்;பூஜை,அபிஷேகம் செய்தவர்கள் நேர்மையானவரா? ஊழல்,லஞ்சம்,பித்தலாட்டம் செய்தவரா? என்று எந்த தெய்வமும் பார்க்காது;

ஆனால்,மஹாவாராஹி என்ற வராகியை தினமும் ஜபிக்க ஆரம்பித்தால்,ஜபிக்க ஆரம்பித்த அன்றே நமது ஆத்மாவுக்குள் புகுந்து “நாம் யார்? நாம் நேர்மையாக வாழ்ந்து வருகின்றோமா? தர்மம்,நீதி,நேர்மையை நிலைநாட்டிட போராடுகின்றோமா?” என்று மஹாவாராஹியே கவனிப்பாள்;


யார் மனதால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காமல்,தான் உண்டு,தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்து வருகின்றார்களோ அவர்கள் தினமும் மஹாவாராஹியை ஜபித்து வந்தால்,ஓடோடி வந்து வரம் தருவாள்;நமது கண்ணின் இமை போல நம்மை பாதுகாப்பாள்;


சரி,எவ்வளவு நாட்கள் ஜபிக்க வேண்டும்?


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் ஜபிக்க வேண்டும்;

எப்போது ஜபிக்க வேண்டும்?

இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;

மஹாவாராஹி மந்திரம் என்ன?

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சம்ஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைதான் மஹாவாராஹி மந்திரம்;

ஓம் பஞ்சமீ நமஹ என்று சொல்லக் கூடாதா?

சொல்ல வேண்டிய அவசியம் இல்லை;

எந்த திசையை நோக்கி ஜபிக்க வேண்டும்?

கிழக்கு திசையை நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும்; நீங்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அதற்கு உரிய சந்தர்ப்பம் அமையாத பட்சத்தில் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;

என்ன தீபம் ஏற்ற வேண்டும்?

ஒரு இலுப்பை எண்ணெய் தீபமும்,ஒரு நெய் தீபமும்


ஏன் மூன்று ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்?


நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் நமது உணவில் இயற்கைத் தன்மை குறைந்துவிட்டது;குடிக்கும் நீரில் இயற்கை தன்மை சுருங்கிவிட்டது;வாழும் வாழ்க்கையில் செயற்கைத் தன்மைகளும்,தீமைகளும் அதிகமாகிவிட்டதால்,நமது ஆத்ம பலம் பல மடங்கு குறைந்துபோய்விட்டது;அதை ஈடுசெய்ய ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 1008 நாட்கள். . . அதாவது சுமாராக 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டி இருக்கின்றது;


வீட்டில் மஹாவாராஹி ஜபம் செய்யலாமா? மஹாவாராஹி போட்டோ வைக்கலாமா?


இங்கே யாம் உபதேசம் செய்வது உபாசனை அல்ல;உபாசனையை இல்லறத்தில் இருப்பவர்களால் ஒரு நாள் கூட செய்ய முடியாது;பக்தி மார்க்கத்தின் மூலமாக ப்ரபஞ்ச அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறும் முறையை மட்டுமே தெரிவிக்கின்றோம்;


கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு,300 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் பகுதி மக்கள் தினமும் அன்னை மஹாவாராஹியை ஜபித்து வந்தார்கள்;அதனால் தான்,16,000 நெல் ரகங்களை கண்டறிய முடிந்தது;தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜசோழ மன்னனால்,உலகத்தையே வெல்ல முடிந்தது;
மாவீரன் அலெக்ஸாண்டர் போரின் மூலமாக இன்றைய இத்தாலி முதல் இந்தியாவின் பஞ்சாப் வரையே கைப்பற்ற முடிந்தது;


ஆனால்,ராஜராஜ சோழனின் சோழ சாம்ராஜ்ஜியம் இன்றைய மொத்த ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,கடலுக்குள் முழுகிப் போன குமரிக் கண்டம் வரை பரவியிருந்தது;


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பாரத நாடு முழுவதும் ஒவ்வொருவரும் தினமும் அன்னை மஹாவாராஹியை ஜபித்து வந்தார்கள்;அதனால் தான் நமது நாட்டில் மட்டும் துரோகிகளே கிடையாது;


இன்றோ,ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு துரோகக் கூட்டம் பெரும் வெளிநாட்டுப் பணபலத்துடன் தேசத் துரோகச் செயல்களில் துணிந்து ஈடுபட்டு வருகின்றது;


தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜபித்தால் என்ன ஆகும்?

அதைத் தாங்கும் ஆத்ம பலம் ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த கலியுகத்தில் உண்டு;அது ஒரு வேளை நீங்களாக இருந்தால்,தினமும் 3 மணி நேரம் வரை ஜபியுங்கள்;

தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரம் வரை ஜபித்ததுமே,உங்கள் உடல் கடும் வெப்பமாக இருந்தாலோ அல்லது அதிகமான உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்தாலோ உடனடியாக ஒரு மணி நேர ஜபமாக குறைத்துவிடுங்கள்;


இந்த மஹாவாராஹி ஜபித்தை கோவிலுக்குள் ஜபிக்கலாமா?


அன்னை மஹாவாராஹியின் சன்னதிகள் அல்லது தனிக் கோவில்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக இருக்கின்றன;
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்தால் இரவு 7 முதல் கோவிலின் இராக்கால பூஜை நிறைவு ஆகும் வரை ஜபிக்கலாம்;


மஹாவாராஹி உக்கிரமான பெண் தெய்வமே! எப்படி வீட்டில் ஜபிப்பது?


நமது நட்பு வட்டத்தில் யார் ரொம்ப கோபக் காரர்களோ,அவர்களே ரொம்பவும் பாசக்காரர்களாக இருக்கின்றார்கள்; என்பது உண்மையா இல்லையா?

உண்மை தான்!!!

அதே போலத்தான் அன்னை மஹாவாராஹியும்!


அப்போ,இல்லறத்தில் இருக்கக் கூடாதா?


இல்லறத்தில் இருந்து கொண்டே அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறும் வழிமுறையைத் தான் உங்களுக்கு தெரிவித்திருக்கின்றோம்;


ஒரே நிபந்தனை:அசைவம் சாப்பிடக் கூடாது;மது அருந்தக் கூடாது;


தினமும் இரவில் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு இந்த ஜபத்தை ஜபித்துவிட்டு,தூங்கச் செல்லவும்;


அல்லது

அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு ஜபிக்கலாம்;உடல் சுத்தம் இங்கே முக்கியம்;


யாரெல்லாம் மஹாவாராஹியை தினமும் ஜபிக்கலாம்?


18 வயது நிரம்பியவர்கள்
நிம்மதியான வாழ்க்கை (வம்பு,வழக்கு இல்லாமல்) வாழ விரும்புவோர் யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;

சீக்கிரம் அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறுவது எப்படி?


இதிலும் அவசரமா. . . வராகி மாலை என்ற வராகி பரணி என்ற பாடலை ஒரு நாளுக்கு ஐந்து முறை வீதம் 90 நாட்கள் ஜபித்து வர வேண்டும்; பெண்களாக இருந்தால் விட்டு விட்டாவது 90 நாட்கள் ஜபிக்க வேண்டும்; அதன் பிறகு 91 வது நாள் முதல் 1008 வது நாள் வரை தினமும் ஒரு முறை ஜபித்தால் போதும்;


வராகி மாலை என்பது 32 பாடல்களின் தொகுப்பு; ஒரு பாடல் 4 வரிகளைக் கொண்டது;இதற்கு வராகி அந்தாதி என்று ஒரு பெயரும் உண்டு;


இதைத் தவிர,வேறு தெய்வங்களை வழிபடலாமா?


குல தெய்வ வழிபாடு முதன்மையானது;அன்னை மஹாவாராஹியை இஷ்ட தெய்வமாக நாம் தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்;அப்படி ஆக்கிக் கொண்டால்,துரோகிகளும்,எதிரிகளும் ஒரு போதும் (3 ஆண்டு ஜபித்திற்குப் பிறகு) உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடவே மாட்டார்கள்;


மிகப் பெரும் புண்ணியம் செய்தவர்களால் தான் இந்த அன்னையை தினமும் ஜபிக்க முடியும் என்று வராகி கல்பம் தெரிவிக்கின்றது;


$ இப்போது நீங்கள் உங்கள் செல்போனின் சைலண்ட் மோடினை ஆப் செய்யலாம்;


Thursday, April 5, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 8.4.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் இருக்கின்றது;




ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

ஞாயிற்றுக் கிழமை குளிகை காலம் மாலை 3 முதல் 4.30 வரை அமைந்திருக்கின்றது;


 ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம்,கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:விளம்பி வருடம்,சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 7.5.2018 திங்கட்கிழமை மாலை 5.13 முதல் 8.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.24 வரை வர இருக்கின்றது;


இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Sunday, April 1, 2018

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!
அருள்வாக்கு சொல்லும் திறன் ஒருவருக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அந்தத் திறன் அவருக்கு ஆயுள் முழுவதும் இருக்குமா? அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை இருக்குமா? என்பதை அவரே கண்டறிய அவரது ஜாதகம் தேவை;


அருள்வாக்கு சொல்லும் திறன் மட்டும் அல்ல;கூடு விட்டு கூடு பாயும் திறன்,ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்சியளித்தல் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு செயல்களில் ஈடுபடுதல்;வானில் பறந்து செல்லுதல்;இந்த பூமியில் வாழ்ந்து கொண்டே வேறு உலகங்களுக்குச் சென்று வருதல் போன்ற பலவிதமான சூட்சுமக் கலைகள் ஒருவருக்கு கைகூடும் என்பதை அறிய அவரது ஜனன ஜாதகம் அவசியமாகின்றது;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;


ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் குறிப்பிட்ட தலைப்பில்(அரசியல்,ஆன்மீகம்,கம்யூனிஸம் என்ற தொழிலாளித்துவம்) எழுதப்படும் நூல்கள் அதிகமாக விற்பனை ஆகும்;ஆனால்,இந்த நூற்றாண்டுகள் என்ற நூல் அனைத்து பத்தாண்டுகளிலும் அதிகபிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டே இருக்கின்றன;தமிழில் மொழிபெயர்த்தும் தமிழ்நாட்டில்,தமிழர்கள் பேசும் உலகில் இந்த நூல் இன்றும் அதிகப் பிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றது;

இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது என்ன?
மனிதர்களின் ஆழ்மனத்தில் எதிர்காலத்தை அறியும் ஆவல் எப்போதும் இருக்கின்றது என்றுதானே அர்த்தம்???!!!


இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!


அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?
1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;
உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;
ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;



அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்


உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;


அப்போ கேரளா,கர்னாடகா,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசிகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்;அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு;கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது;    ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?


விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்;இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்;இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்;

அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?


அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!


சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள்,தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;


மனிதனாக பிறந்த நாம்  புண்ணிய ஆத்மாவாக இருந்தால்   பணம் சம்பாதிக்கவும்,சொத்துக்கள் சேர்க்கவும்,சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;

     இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியை பரம்பொருள் நமக்கு கொடுத்துள்ளார்;

 ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் இருக்கின்றன;உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்;அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா;பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்;முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து;


ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;


இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்;முறைப்படி தீட்சை பெற்றவர்கள்,உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள்,முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;


பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;

தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;


காலையில்,மதிய நேரத்தில்,மாலையில்,இரவில்,நள்ளிரவில்,பின்னிரவில்,
அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;


சிவனை அப்பாவாக,நண்பனாக,மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை உணருவார்கள்;


$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;


முதல் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
($ நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை;

$ 3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

நமச்சிவாய

( $   நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சல சிவ
($அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆம் ஹெளம் செள
($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவையை நம
($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)


எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:


ஓம் ரீங் சிவசிவ
($ சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)


ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:


சிவாய நம
($ நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:


ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
($ ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)


பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவசிவ
($ இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய சிவாய
($ நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவாய நம ஓம்
($ சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயசிவ
($ இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)

15 ஆம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சலாய சிவ நமஹ

16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ