Wednesday, January 28, 2009

நிம்மதி தரும் நவபிருந்தாவனம்,ஆந்திரமாநிலம்



தமிழ்நாட்டில் நாகர்கோவில் டூ மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.அது பற்றி விரைவில் முழுத்தகவல்களுடன்!

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.
உங்கள் பிரச்னைகள் தீர்ந்தால்,இந்த புகைப்படத்தை 10 நகல்கள் எடுங்கள்.உங்கள் வார்த்தைகளுக்கு யார் மதிப்பு தருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நவபிருந்தாவனம் புகைப்படம் தருக!
எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம்.இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது.
மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ சமாதியாகும்.

Tuesday, January 27, 2009

உங்கள் கடன் தீர ஒரு சூப்பர் ஐடியா


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.
இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.
2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை

இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை
இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.
வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு


காயத்ரி மந்திரமும் அதன் மகிமைகளும்

சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.
எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.




Monday, January 26, 2009

வாலை பூஜை செய்யுங்கள்:ஆதிபராசக்தி அருள் பெறுங்கள்


ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.
மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்..


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).
அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “ஓம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.
இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.
ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

Thursday, January 22, 2009

திருக்குறள் ஞான அமுது-ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கான புத்தகம்


திருக்குறள் ஞான அமுது-தவத்திரு.ரெங்கராஜ தேசிகசுவாமிகள்
திருக்குறளைப் பற்றி இவ்வளவு எளிதாக வேறு எவரும் விளக்கம் அளித்திருப்பார்களா? சந்தேகமே!
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அற்புத வழிகாட்டி.
பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமல் கூறுவது போல பழமொழியைச் சொன்னால் புரியாது.அதை அனுபவித்துப்பார்த்தால் தான் புரியும் என்பது போல் இந்த புத்தகம் ஒரு சிறந்த ஆன்மீகப் பொக்கிஷம்.இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
*இதயத்தில் தூய்மை இல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அது பயன் தராது.
*துறவு மேற்கொள்கிறவனுக்கு முன் செய்த நல்வினை இருந்தால்தான் ஞானம் கைகூடும்.
*தினமும் தலைவனை(அகத்தியர் முதலான சித்தர்களில் ஒருவரை) நினைத்து உருகி பூஜை செய்தால் பாவங்கள் சேராது.காமம் அடிபட்டுப் போகும்.கோபம் அடிபட்டுப்போகும்;நான் என்ற கர்வமும் அடிபட்டுப் போகும்.
*காய்கறி உண்பதால் மனதில் சாந்தம் திகழும்.அதே சமயம், எந்த கர்ம வினையும் நம் ஆன்மாவிற்கு வராது.

*அசைவம் உண்பதால் மனதிலும்-உடலிலும் மூர்க்கத்தனம் வளரும்.காம வெறியைத்தூண்டும்.அறிவை(பகுத்தறிவை) மங்கச் செய்யும்.

*ஒருவரது தவம் முற்றுப் பெற 27,000 ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
*தவசிகள்( மாபெரும் துறவிகள்) மனமகிழ்ந்து ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார் சாப்பிட்டதற்குச் சமம்.மேலும் 1024 அண்டங்களில்(காலக்சி)உள்ளவர்கள் சாப்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்கும்.
*தாம்பத்திய உறவுக்கு முன் 10 நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சிமாவட்டம்.தமிழ்நாடு.
விலை.ரூ.38/-ஆடியோவாகவும் கிடைக்கிறது.
போன் எண்:04327-255684,255184.
குறிப்பு:இங்கு சுமார் 12 வருடங்களாக அனாதைகள்,வயதான முதியவர்களுக்கு தினமும் அன்னதானம் 3 வேளையும் வழங்கப்பட்டுவருகிறது.சித்தர் வழிபடும் முறை சொல்லித்தரப்படுகிறது.விரும்பும் அன்பர்கள் அன்பளிப்பு(பணம் அல்லது உணவுப் பொருட்கள்) வழங்கலாம்.
நான் ஒருமுறை கூட இங்கு நேரில் சென்றதில்லை.

Friday, January 16, 2009

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?-அனுபவ விளக்கம்



குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?
விளக்கமளிப்பவர்:தவத்திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கணவன்,மனைவி, அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள் சேர்ந்து இருப்பதுதான் குடும்பம் எனப்படுகிறது.
பொருள் ஈட்டும் திறன்,வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக, நிறைவாக நன்கு நடைபெறும்.

குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது.வயது முதிர்ந்தவர்(பெற்றோர்கள்)களால் பொருள் ஈட்ட முடியாது.வாலிபப் பருவத்தினர்தான் உழைத்துப் பொருள் ஈட்ட முடியும். அதை குழந்தைகளும்,முதியோர்களும் கூடித் துய்த்து குறைவின்றி வாழ வேண்டும்.இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது.இந்த இயற்கை நியதியானது பெற்றோர்,மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் போது அதைத்தான் குடும்பம் என்கிறோம்.

குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்ககி அறத்தை கணவன் மனைவி இருவருமே உயிர் போலக் காக்க வேண்டும்.இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும்,இன்பமும் அமையும்.

















Tuesday, January 13, 2009

மந்திரவாதியிடம் யார் ஏமாறுவர்?



31.12.2009 வரை மகர ராசிக்காரர்களும்,1.1.2010 முதல் தனுசு ராசிக்காரர்கள் 1 1/2 வருடகாலத்திற்குள்ளும் ஏமாறுவார்கள்.பெரும்பாலான காளி கோவில் பூசாரிகள் மந்திரவாதிகளாக உள்ளனர்.உங்களது வாழ்வில் நடந்த கடந்தகால சம்ப்வங்களை அப்படியே அருள்வாக்கு அல்லது ஜாதகம் பார்த்து சொல்லுவர்.அது உங்களுக்கு விரிக்கப்படும் வலை.பெரும்பாலும் பணமோசடி அல்லது பெண்சுகம் இவர்களது இலக்காக இருக்கும்.


மாந்திரீகம் செயல்ப்டவும் காளியே துணை நிற்கிறாள்.மாந்திரீகத்திலிருந்து மீளவும் அதே காளிதான் துணை.பெரும்பாலும் ஏழரைச்சனி காலத்தில்-ராகுதிசை நடந்தால் மந்திரவாதியால் ஏமாற்றம் உண்டு.


குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்தல் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு செய்தல் மட்டுமே ஏமாற்றத்திலிருந்து காக்கும்.எந்த கொம்பனாலும் நமது கஷ்டத்தை -ஏழரைச்சனி வேதனைகளை நீக்க முடியாது.தப்பித்தால் போதும் என மந்திரவாதிகளிடம் சிக்கி மானத்தை இழக்க வேண்டாம்.

ஜீனியஸ் தமிழ் புத்தகங்கள்--வலைப்பூவிற்கு அனைவரும் வருக! ஜீனியஸ் ஆகுக! நமது



ஜீனியஸ்தமிழ்புக்ஸ் வலைப்பூவிற்கு வருக! வருக!! வருக!!!


இன்று இணையம் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பல முக்கிய வேலைகள் மனிதனால் மட்டுமே செய்யமுடியும்.என்வே,presence of Mind & Soft Skill ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அந்தத் தேர்வினை ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணிப்பொறி இருந்தால் போதும்.அந்த தேர்வினை சுலபமாக எழுதிவிடலாம்.


நீங்கள் உங்களது உலகத்தில் ஜீனியஸ் என்று மதிக்கப்பட வேண்டுமா?
தனிமனித வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ வேண்டும்.அதற்குத் தேவை முதலில் ஞாபக சக்தி.இந்த ஞாபக சக்தி படிப்பதால் மட்டுமே வளரும்.இந்த வலைப்பூ படிப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.வெறும் டிகிரி,டிப்ளமோவால் ஓரளவே உபயோகம் உண்டு.அதற்கும் வெளியே ஒரு பிரம்மாண்டமான உலகம் உள்ளது.அந்த உலகத்தை எதிர்கொள்ள புத்தகம் படிப்பது ஒரு அவசியத் தகுதியாக உள்ளது.புத்தக உலகம் ஒரு மாபெரும் கடல்.அதில் குப்பைகளே அதிகம்.அதில்,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ள புத்தகங்களை –கடந்த 20 ஆண்டுகளாக நான் படித்து-அதன்படி பின்பற்றி-வெற்றி பெற்றதால்-இந்த புத்தகங்களை உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.

டாக்டர் அப்துல்கலாம்,சுவாமி விவேகானந்தர்,எழுத்தாளர் பாலகுமாரன்,இந்திரா நூயி,பாரதியார்,பாரதிதாசன்,ஏக்நாத் ரானடே,விநாயக தாமோதர சாவர்க்கர்,நாதுராம் விநாயக் கோட்சே,ஓசோ,சுத்தானந்தபாரதி,கவிப்பேரரசு கண்ணதாசன்,வ.ரா.,அகிலன்,மிஸ்டிக் செல்வம்,எம்.எஸ்.உதயமூர்த்தி... என மிகப்பெரிய ஆத்மாக்கள் உயிரைக் கொடுத்து தமிழில் படைப்புகள் படைத்துள்ளனர்.அவற்றில் நமது வாழ்க்கையைத் திருப்புமுனையாக்கும் புத்தகங்களைப் பற்றி பார்ப்போம்:

படிப்பது என்பது இலக்கில்லாத பயணம்.. .. அதன் சுகத்தை உணர்ந்தவர்கள் வேறு எதற்கும் மயங்கமாட்டார்கள்.
கல்வி கரையில கற்பவை நாள் சில
மெல்லநினைக்கின் பிணி பல
இந்த வலைப்பூ ஆரம்பத்தில் உங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றும்.சில வருடங்களில் உங்கள் துறையில் சாதனையாளராக மாற்றும்.நீங்கள் இந்த வலைப்பூவில் பரிந்துரைக்கும்புத்தகங்களைப் படித்தால்.. ..

Monday, January 12, 2009

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பத்திரகாளியம்மன்,ஸ்ரீவில்லிபுத்தூர்

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும்,இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.

இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு.அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம் த்ருபவள் பத்திரகாளி!!


உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.இந்த பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தினமும் நேரில் வந்து வழிபடுங்கள்.வழிபட்டபின்னர் நேராக உங்களது வீட்டிற்குச் செல்லுங்கள்.இப்படி ஒருவருடம் வந்து வழிபடவும்.உங்களது சகல பிரச்னைகளும் தீரும்.
நீங்கள் முதல் நாள் இங்கு வந்து பத்திரகாளியை வழிபட்டுவிட்டுப் போனதும்-24 மணிநேரத்திற்குள் ஒரு அதிசய சம்பவம் உங்களது வாழ்வில் நடக்கும்.அது எப்படி நடந்தது ? என்று உங்களது பகுத்தறிவால் புலனாய்வு செய்து பாருங்கள்.விடை கிடைக்காது.இந்த பத்திரகாளியை வழிபட்டதால் தான் அந்த அதிசயம் நடந்தது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.
சரி! விருதுநகர் மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு தினமும் வரமுடியும்.மற்ற மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளைச் சேர்ந்தவர்களால் எப்படி தினமும் வர முடியும்?
அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும்.
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும்.
இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்:அவற்றில் சில..
சாதரணமாக தொழில் செய்து வந்த ஒரு நபர் இங்கு தினமும் ஒரு முறை வீதம் 4 வருடங்கள் வந்து வழிபட்டார்.இப்போது அவரது தொழில் சொத்து மதிப்பு சில கோடிகள்....

8 வருடமாக டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு நடையாய் நடந்த ஒருவர் இந்த பத்திரகாளியை சில மாதங்கள் தினமும் வழிபட்டுக் கொண்டே வந்தார்.
ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லாத விதத்தில் டைவர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.

பிறவியிலிருந்தே மனநிலை சரியில்லாமல் இருந்த ஒரு 21 வயது இளைஞன் இந்த கோவிலுக்கு 2 வருடமாக அழைத்து வரப்பட்டான்.தற்போது சராசரி மனிதனாகி விட்டான்.தற்போது அவன் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டான்.

ஒரு டெய்லர் அவர்,14 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறார்.மிக சாதாரண நிலையிலிருந்தவர்.கடைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்.இது வரை 20 முறை தனது டெய்லர் கடையை மாற்றியிருப்பார்.தற்போது,ஊருக்கு இதயப் பகுதியில்-நிரந்தரமான கடை அவருக்கு அமைந்துவிட்டது.சிலருக்கு நிரந்தரவேலை தருமளவிற்கு வளர்ந்து விட்டார்.
இருந்தபோதிலும், இன்றும் அந்த டெய்லர் ஒரு நாள் விடாமல் பத்திரகாளியை வழிபட்டபின்பே தனது
கடையைத் திறக்கிறார்.
இரண்டு பெண்குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒரு 33 வயது
இளைஞ்ர்.மனைவி,பெற்றோர்,உறவினர் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்.ஒரே காரணம்-அந்த இளைஞரின்
முன்கோபம்,நிரந்தர வேலையின்மை.,
4 வருடங்களாக தினமும் பத்திரகாளியை வழிபட்டு வருகிறார்.இன்று அவருக்கு நிரந்தரத் தொழில் அமைந்துவிட்டது.அவரது மனைவி பொறுப்பற்று இருந்ததால் அந்த மனைவி தானாகவே பிரிந்து போய்விட்டாள்.
ஆக,நிம்மதியும்,செல்வவளமும் 101% காரண்டி.

Tuesday, January 6, 2009

ஞாபக சக்தி பெருக -முருக மந்திரமும் தமிழ்ப் பாடலும்


ஞாபக சக்தி பெருக கூற வேண்டிய முருக மந்திரம்

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!

ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா

தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்
.

வீட்டில் நவரத்தினங்கள் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்-அனுபவத்துடன்


பொன்னும் நவரத்தினங்களும் பெருக சொல்லவேண்டிய மந்திரம்

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.அலங்கரிப்பது உங்கள் வசதியைப் பொறுத்தது.
கீழ்காணும் மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜபிக்கவும்
ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

இப்படி 108 முறை ஜபித்தபின்,பக்கத்தில் உள்ள சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குங்கள்.
வாரா வாரம் இவ்வாறு செய்து வந்தால்,வீட்டில் பொன்னும் நவரத்தினங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.இதை பரீட்சை செய்து பார்த்ததில்,குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்குகிறது.

காமமும் வாழ்க்கையும்:சில ஆன்மீக விளக்கங்கள்


காமம் பற்றிய சில விளக்கங்கள்:

இந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு சமுதாய நன்மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
மனைவியைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் பெற்ற தாய்க்குச் சமம்.
மேல் நாடுகளில்-பெற்ற தாயைத் தவிர அனைத்து பெண்களும் மனைவிக்குச் சமம்.
இந்து தர்ம கோட்பாட்டால் காம நோய்கள் உருவாகுவதே குறைவு.மேல்நாட்டுக் கோட்பாட்டால் காம நோய்களால் பாதிக்கப் படாதவர்கள் குறைவு.

ஒரு தொழில்ஸ்தானத்தில்(அலுவலகம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியிடம்) ஒருமுறை காம நடவடிக்கை(உடலுறவு) நிகழ்ந்துவிட்டால் அங்கிருந்து தொழில் தேவதை வெளியேறிவிடும்.காம தேவனின் ஆட்சி துவங்கிவிடும். காமம் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தால்-தொழில் நலிவடையத்துவங்கும்.

ஒரு பெண்ணை அவளது அனுமதி-ஆசையின்றி அவளது வாயில் உடலுறவு கொண்டால்-அந்த வினாடி முதல் அந்த ஆணின் வாழ்க்கை,குடும்ப அமைப்பு சர்வநாசமடையத் துவங்கிவிடும்.ஒரு தனிமனிதனது நிலையே இப்படி என்றால்,இந்தத் தவற்றை ஒரு நாட்டின் மன்னன் செய்தால்.. ..இதைத் தான் பில்கிளிண்டன் செய்தான்.அமெரிக்கா ஏன் சர்வநாசமடையத் துவங்கியுள்ளது?என்பது புரிகிறதா?
பில்கிளிண்டன் தனது அலுவலக உதவியாளினி மோனிகா லெவின்ஸ்கியிடம் மேலே சொன்னது போலத் தான் நடந்து கொண்டான்.இதற்குப் பரிகாரம் கிடையாது.
பில்கிளிண்டனுக்கு என்ன தண்டனை தெரியுமா?
கருடபுராணம் கூறுகிறது:விந்துக் கடலில் வாழ்க்கை வாழ
வேண்டும்.விந்து தான் (சொர்க்கத்தில்)மூன்று வேளை உணவும்.

ஒரு ஆண் அல்லது பெண் உங்கள்மீது காமவெறி கொள்கிறான் அல்லது கொள்கிறாள்.நீங்கள் அவன/ளது காம இச்சையைத் தீர்க்க வேண்டும்.தீர்க்காவிட்டால்,அதன் அடையாளமாக உங்களது வீட்டில் சிறிய சிற்றெறும்புகள் வரும்.இதற்குப் பரிகாரம்-விநாயகருக்கு வெல்லம் அன்பளிப்பாக வழங்க வேண்டும்.இதனால் சிற்றெறும்புகள் வராது.ஆனால்,ஏங்க வைத்த பாவத்தால் நீங்கள் சில மாதமாவது உங்களது துணையைப் பிரிந்து இருக்கவேண்டும்.இது தான் தண்டனை!

ஒரு முறை மட்டும் உங்களால் காமசுகத்தை அனுபவித்தவர்கள்-உங்களை நினைத்து ஏங்கினால் அதுவும் உங்களுக்கு பாவத்தைச் சேர்க்கும்.இதனால் தான் நீங்கள் யாருடன் காம உறவு கொள்கிறீர்களோ,அவர்களையே வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இதுவே,இந்து தர்ம-குடும்பக் கோட்பாடு.

கோபம்,ஆவேசம்,எதற்கெடுத்தாலும் சண்டை போடும் பெண்கள்-அடங்குவது காமசுகத்திற்கு மட்டுமே.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் மனைவிக்கு சுகம் தர மறந்துவிடாதீர்கள்.அப்படி மறந்தால்.. ..திருட்டுப் பயலே கதையாகிவிடும்.ஜாக்கிரதை!
நமது பெர்சனாலிட்டியால் ஒரு ஆண் அல்லது பெண் நம்மீது காம வயப்பட்டால் நமக்கு பிரம்மஹத்தி தோஷமாக மாறும்.
முற்பிறவியில் துறவிகளாக இருந்தவர்களே இப்பிறவியில் நடிகர்-நடிகைகளாக பிறந்துள்ளனர்.நாம் அவர்கள் வாழ்க்கை காமச்சுவை நிரம்பியது என நம்புகிறோம்.அது முழுக்க உண்மைதான்!! அதே சமயம் அவர்களது திரைப்படங்களைப் பார்க்கும் நாம் காம வயப்பட்டால், (அது அந்த நடிகையாக-நடிகராக இருந்தாலும் சரி,வேறு யாராக இருந்தாலும் சரி) அந்த பாவத்தை உருவாக்கிய நடிகர்-நடிகை-திரைப்பட இயக்குநர்-இவர்கள் அனைவரும் அடுத்த பிறவியில் என்ன பாடு படுவார்கள்?

காமம் சார்ந்த வெப்சைட்டுகள் நடத்துபவர்கள்-அதில் நடித்துள்ளவர்கள்; காமக்கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக சினிமா எடுத்து-கோடி கோடியாக சம்பாதித்துள்ள தமிழ் இயக்குநர்கள்-அடுத்த பிறவியில் எப்பேர்பட்ட பாவியாக பிறப்பார்கள்?!
எனவே புரிந்து கொள்ளுங்கள்-பாவங்களில் கொடியது பிறரின் காம உணர்ச்சியைத் தூண்டுவது தான்!!!
முற்பிறவியில் அடுத்தவர் மனைவியை புணர்ந்தவன் இப்பிறவியில் விரை சிதைக்கப் பட்ட குதிரையாக அல்லது ஆணும் பெண்ணுமல்லாத அலி/பேடியாக பிறப்பான்.
முற்பிறவியில் சிவாலயத்தில் ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றிப் புணர்ந்தவனே இப்பிறவியில் எய்ட்ஸ் வியாதியால் அவதிப்படுவான்.