Thursday, September 29, 2011

பயனுள்ள ஆன்மிக வினா - விடை

For Good Reading, Click On That Images & Again once Click


ஓம்சிவசிவஓம் நேரடியாக பரவத்துவங்கியது










2010 முதல் இன்று வரையிலும் சுமார் நான்கு தடவை சனிப்பிரதோஷ நாட்களில் அண்ணாமலையில் சுமார் 5000 ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை பற்றிய நோட்டீஸ்கள் விநியோகித்திருக்கிறோம்.

ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.



இந்த மாதத்தில் ஒரு வியாழக்கிழமையன்று,ஈரோட்டில் ஒரு சிவாலயத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 3000 நோட்டீஸ்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவர் விநியோகித்திருக்கிறார்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை 25.9.11 அன்று பிரதோஷமும் சிவராத்திரியும் ஒருங்கே வந்தது.இந்த நாளில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நமது வாசகரும்,எனது ஜோதிட சீடருமான ஒரு இளைஞர் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகித்தார்.



அதே நாளில் எட்டுபேர்கள் கொண்ட குழுவினர்,திரு அண்ணாமலையில் உட்பிரகாரம் எனப்படும் மலையை ஒட்டி இருக்கும் வனப்பாதையில் கைகளில் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு பிரதோஷ நேரம் முடியும் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் சென்றனர்.



ஜோதிடராக நான் இருப்பதால்,ஜாதகம் பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை பரப்பிக்கொண்டே இருக்கிறேன்.



இந்தபுனிதமான பணியில் உங்களின் பங்களிப்பு என்ன?





ஓம்சிவசிவஓம்










பள்ளிகளில் பாடமாக பகவத் கீதை





நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பகவத் கீதை பாடம் போதிக்கப்பட இருக்கிறது.இதற்கான பாடங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.இது மத்தியப்பிரதேச மாநிலத்தில் திரு.சிவராஜ்சிங் தலைமையிலான பா.ஜ.கட்சி அரசு இந்த முடிவெடுத்துள்ளது.இந்துக்கள் அல்லாதோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால்,பகவத்கீதையை பாடமாக போதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அந்த மாநில அரசு உறுதியாக இருக்கிறது.ஆதாரம்:தினமணி 2.7.11.விஜயபாரதம் பக்கம் 8,23.9.11



ஆன்மீகக்கடலின் கருத்து:பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கும்,புதிய நிர்வாகிககளை தயார் செய்வதற்கும் பகவத் கீதையை பயன்படுத்தத் துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்டன.இந்த முடிவு தாமதமான முடிவு.



காமரீதியான பிரச்னைகளும்,கலியுகத்தின் வீச்சும்










ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர்ப் பண்பாடிலும் கூட மனித ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது.காம இச்சை என்பது மிருக குணம்தான்.அது அளவு மீறும்போது!!!தமிழர் பண்பாடுதான் இந்துப் பண்பாடாக பரிணமித்திருக்கிறது.



சுக்கிலம் என்பது விந்து அல்ல;அது காமக்கிளர்ச்சி உண்டாகும்போது ஆணின் உடலில் இருந்து வெளிப்படுவது! அதே போல பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுவதற்கு சுரோணிதம் என்று பெயர்.





ஒரு பெண் ஒரே ஒரு ஆணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்துவருவதாலும்,ஒரு ஆண் ஒரேஒரு பெண்ணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்து வருவதாலும் இந்த ஆணின் சுக்கிலம்,அவனது ஜோடியான பெண்ணின் உடலுக்குள் பாய்கிறது.அதே போல,அந்தப் பெண்ணின் சுரோணிதம்,இந்த ஆணின் உடலுக்குள் பாய்கிறது.இப்படி மாறிமாறிப் பாய்வதால்,இருவரின் உடல் நலமும் பரிபூரணமடைகிறது.இதை 20,00,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழினம் ஆராய்ந்து கண்டறிந்து,ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தனது அடையாளமாக்கிக் கொண்டுவிட்டது.(2005 ஆம் ஆண்டு மாலை முரசு,தீபாவளி மலர்,திருச்சி பதிப்பில் இது தொடர்பாக எனது கட்டுரை வெளிவந்திருக்கிறது)



இந்த தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாகவும் பரிணமித்து,மேற்கு நாடுகள் பொறாமைப் படுமளவுக்கு இந்தியா இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், ‘ காம இச்சை என்பது நெருப்பைப் போன்றது.அது ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் வளர்ந்து கொண்டே செல்லும்’ என்றும்;



ஒரு மனிதனுக்கு= அவன் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்,அவனு/ளுக்கு= காம இச்சையை விட மோசமாக பிணி எதுவும் இந்த பூமியில் இல்லை’ என்றும்;



“ எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் குடும்பம் என்ற அமைப்பு ஆகும்.ஆனால்,அதைவிட வேறு எதுவும் இந்த சமுதாயத்தை கட்டமைக்க உதவாது” என்றும் கூறியிருக்கிறார்.



கலியுகம் பிறந்து 5112 ஆண்டுகள் ஆகின்றன.கடந்த 1000 ஆண்டுகளில் நமது இந்துப்பண்பாடும்,தமிழர் பண்பாடும் இஸ்லாமியப்படைப்பாலும்,கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பாலும் சிதைந்துவிட்டது.இதில் இஸ்லாமியப் படையெடுப்பால் சிதைந்தது மிக மிகக் குறைவு; கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பால் சிதைந்ததே மிக மிக அதிகம்.



தமிழ்ப் பண்பாடு பற்றி கடந்த சில ஆண்டுகளாகத் தேடித் தேடி படித்ததன் சுருக்கம்:



ஒரு பெண் தனது உடலைக் காட்டி யாருக்காவது காமக் கிளர்ச்சியை உண்டாக்கினால்,அவனது காமக் கிளர்ச்சியைத் தணிக்க வேண்டும்.அந்தக் காலத்தில் போட்டோக்கள் கிடையாது;ஆனால்,இன்று வக்கிர மனிதர்களாக பிறக்கும் கொடூரம் நிறைந்த காலம்! கேமிராவின் தரமோ,நிஜத்தை விடவும் துல்லியம்.போதையிலோ,காதலனுக்காகவோ ஒரு பெண் தனது முழு உடலை போட்டாவாக / வீடியோவாக எடுக்கச் சம்மதிப்பது தவறில்லை;ஆனால்,அந்த காதல் உடைந்துபோனால்,இணையத்தில் அவளது உடலைத் தாங்கும் போட்டோவும்/வீடியோவும் பல கோடி ஆண்களால் ரசிக்கப்படும்.எத்தனை கோடி ஆண்கள் காம வசப்படுவார்கள்?அது யாரென்றே அந்த பெண்ணுக்குத் தெரியாது.



தவிர,அந்தக் காதலியின் உடலை இணையத்தில் வெளியிடும் காதலன்,வெளியிடும் இணையதளம்,அதை பரப்புபவர்கள் அனைவருமே மறு ஜன்மத்தில் இதே மாதிரியான அவமானத்தை அனுபவிப்பதற்காகவே அப்பாவிப் பெண்ணாகப் பிறப்பார்கள்.இதற்கு பரிகாரமே கிடையாது.

ஒரு கண்டமே இதை பொழுதுபோக்காக செய்தால்?

ஐரோப்பாக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் இதை பொழுது போக்காக செய்வதால், இன்று ஐரோப்பா பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கிறது.1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு இணையம் பரவத்துவங்கியது;இன்று 16 ஆண்டுகளில் இந்த இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் ஒழுக்கம் தவறி நாசமாகிட இந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் மட்டுமே காரணம்.எனவே, ஐரோப்பாவும்,அமெரிக்காவும் வெகு விரைவில் பொருளாதார பிச்சைக்கார நாடுகளாக மாறப்போவது உறுதி.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த பரிகாரங்களாலும் நிறுத்திட முடியாது.



காமிரா செல்போன்கள்,டிஜிட்டல் கேமிராக்கள்,நீலப்படங்கள்,விபச்சார தரகர்கள்,வறுமையால் விபச்சாரம் செய்வோர்கள்,சினிமாவில் கவர்ச்சி போட்டி போட்டு நடித்து பல கோடி ஆண்களை காமக்கிளர்ச்சிக்குள்ளாக்குபவர்கள்,கவர்ச்சியால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இயக்குநர்கள்,நடிகைகள்,தயாரிப்பாளர்கள் என மிகப் பெரிய நெட்வொர்க் இன்று கலியுகத்தின் அடையாளமாக பெரிய அளவில் செயல்பட, யாகூ குரூப்ஸ்,கூகுள் குரூப்ஸ்,காமரீதியான வலைப்பூக்கள்,காம வீடியோக்களை வெளியிடும் இணையதளங்கள் அனைவருமே பெண் சாபத்துக்கு உள்ளாவர்கள்.இவர்கள் செய்யும் பாவத்தை இவர்களால் ஒரு ஜன்மத்தில் கரைக்க முடியாது.தவிர, இதுபற்றி கிசுகிசு என எழுதுபவர்கள்,நமது தெரு/அலுவலகத்தில் பிறரது அந்தரங்கங்களை சிலாகித்துப் பேசுபவர்களும் இப்படிப்பட்ட பாவத்துக்கு ஆளாவர்கள்.



யாருக்குமே தெரியாமல் காமரீதியான பேராசைகளைச் செய்துவிடலாம்.அதுயாருக்குத் தெரியும் என நினைத்துவிடாதீர்கள்.நம் ஒவ்வொருவரின் கூடவே,நவக்கிரகங்களின் பிரதிநிதிகள் நாம் பிறந்ததிலிருந்து வருகின்றனர்.நாம் செய்யும் பாவ புண்ணிய காரியங்களை உடனுக்குடன் அஷ்டதிக் பாலகர்களிடம் சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்திலும் இந்த நவக்கிரக பிரதிநிதிகளில் தலா ஒரு பிரதிநிதி நம்மோடு இருந்தாலும்,சனியின் பிரதிநிதி இரண்டுபேர்கள் வந்துசேர்கின்றனர்.அவர்கள் சூட்சுமமாக நமது நன்மைகளை உடனே அனுபவிக்க முடியாமல் தடுக்கின்றனர்.நமது சேமிப்பைக் கரைக்கின்றனர்;நமது மன உறுதியைக் குலைக்கின்றனர்;நம்மை எந்த ஒரு முடிவும் எடுக்க விடாமல் திணறடிக்கின்றன.அதுவும் காமரீதியாக ஆடாத ஆட்டம் ஆடியவர்களின் கதி அதோ கதிதான்.மற்றவை பாவங்களுக்கான தண்டனைகூட,நமது மன உறுதியால் தாங்கிவிடலாம்.காமரீதியான குற்றங்களுக்கான தண்டனை நமக்கு 20 முதல் 40 சதவீதம் நமது அஷ்டமச்சனி சமயத்தில் கிடைக்கிறது.மீதி அடுத்த ஜன்மங்களுக்கு சேமிப்பாகிறது.விடாத பைரவர் வழிபாடு மட்டும் ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.



எனவே,எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களே, காமரீதியான தவறுகள் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம்.நிம்மதியாக வாழ்வதும்,ஒழுக்கமாக வாழ்வதுமே கோடீஸ்வர வாழ்க்கை ஆகும்.



தவறான பாதையில் எவ்வ்வ்வளவு தூரம் போயிருந்தாலும் சரி! உடனே திரும்புங்கள்.இந்த நொடியிலிருந்து சரியான பாதையில் வாழத்துவங்கவும்.கூடவே,செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 6 தடவை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவிலுக்குச் சென்று,நெய்தீபம் ஏற்றி,1008 முறை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு வருக!!!

படத்தில் காணப்படுவது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலில் ஒரே சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனியும்,சனியின் குரு காலபைரவரும்!!!



ஓம்சிவசிவஓம்








பெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேலப்பெரும்பள்ளம்











நம் எல்லோருக்கும் கீழப்பெரும் பள்ளம் தெரியும்.கேதுஸ்தலம் என்பதும்,கேது சார்ந்த தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போய் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.மேலப்பெரும்பள்ளம்?



ஸ்ரீ தோஷம் நீக்கும் ஸ்தலம் என இணையப்பெருங்கடலில் இந்த கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.வேறுவிபரங்கள் கிடைக்கவில்லை.எனது ஆன்மீக குருநாதர்களில் ஒருவர் இந்த ஸ்தலம் பற்றி கூற,கூற இப்படி ஒரு கோவில் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அதுவும் நமது தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கும் பூம்புகாருக்கும் நடுவே ஒரு சிறு கிராமத்தில் வலம்புரநாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பது புரிந்தது.இந்த பதிவில் காட்சியளிப்பது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் தான்.இந்தப் பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.



சரி! யாரெல்லாம் இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?



முற்பிறவிகளில் பெண்ணை(*மனைவியை/சகோதரியை/தாயை/மகளை/மருகளை *)அவமானப்படுத்தி,அலங்கோலப்படுத்தியவர்கள் இந்த பிறவியில் அதே மாதிரியான அவமானங்களை அனுதினமும் சந்திப்பார்கள்.



யாருக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருக்கின்றதோ அவர்கள் கட்டாயமாக 24 முறை இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்.ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்து,ராகு திசையோ அல்லது சுக்கிர திசையோ வந்தால் அந்த ஜாதகரின் நிலை என்ன தெரியுமா?



சொல்லவே கூச்சமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் வேறு வழியில்லை.உரிய ஜாதகர் இனி நிம்மதியாக வாழ வழி காட்டித்தான் ஆக வேண்டும்.



ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிரதிசையோ அல்லது ராகு திசையோ வந்தால் அவரது முழு உடலும் புகைப்படம் அல்லது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துவிடும்.சரி,சுக்கிரனும்,ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிர திசை அல்லது ராகு திசை வராவிட்டால்? வாழ்க்கையில் ஒருதடவையாவது காமரீதியான அவமானத்தை அடைய வேண்டும்.இந்த சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இவர்களின் முன் ஜன்மத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது.இந்த சுக்கிரன் ராகு சேர்க்கையை குருவின் ஏழாம் பார்வை பார்த்தாலும்,குரு சேர்ந்திருந்தாலும் இதே நிலைதான்!



வெள்ளைக்காரர்கள்,வெள்ளைக்காரிகளுக்கு இது பொருந்தாது.ஏனெனில்,அவர்களின் நாகரீகம் அம்மண நாகரீகம்.மானங்கெட்ட நாகரீகம்.



இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் எந்த மதமாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் மேற்கூறிய கிரக அமைப்புள்ள ஆண்/பெண் பிறந்தால்,அந்த ஜாதகர் உரிய திசையான ராகு திசை அல்லது சுக்கிரதிசை வரும் போது இந்த மகத்தான அவமானத்தை அடைவார்;



இந்த திசை வருவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு அதிக பட்சமாக 24 முறையும்,குறைந்த பட்சமாக 6 முறையும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 க்குள் (ஆமாம் ,இராகு காலத்தில்)108 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டப்பின்னர், இந்த வலம்புரநாதரின் சன்னிதிக்கு முன்பாக மஞ்சள் பட்டுத்துண்டில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசிவஓம் என ஜபிக்க வேண்டும்.அகல் விளக்குகள் இந்தக் கோவிலில் போதுமான அளவில் இருக்கின்றன.எனவே ,நெய் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றால் போதுமானது.



தவிர,சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருக்க ஒரு பெண் பிறந்திருந்தால்,அந்தப் பெண்ணுக்கு ஒரு தடவையாவது கர்ப்பம் கலையும்.தவிர வாழ்நாளில் ஒரு தடவையாவது காமரீதியான அவமானங்களை அடைந்தாக வேண்டும்.இதே கிரக அமைப்பில் ஒரு ஆண் பிறந்தால்,ஆண்மைக்குறைவுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.அல்லது காதலால் அல்லது பெண்ணால் அவமானப்பட வேண்டும்.



அப்படி அவமானப்படாமலிக்க இந்த மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலுக்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வருகை தந்து காலை 11 முதல் 12 மணிக்குள்ளும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளும் நெய் தீபங்கள் ,அகல் விளக்கில் 108 எண்ணிக்கையில் ஏற்றி வழிபட வேண்டும்.



மேலும்,எந்த ஒரு பெண் அல்லது ஆணின் பிறந்த ஜாதகத்தில் ,(எந்த ராசியாக இருந்தாலும்,எந்த நட்சத்திரமாக இருந்தாலும்,எந்த லக்னமாக இருந்தாலும்) கன்னி ராசியில் சுக்கிரன்,செவ்வாய்,இராகு சேர்ந்திருந்தால் அல்லது சுக்கிரன்,செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால் 24 செவ்வாய்க்கிழமைகளும்,12 வெள்ளிக்கிழமைகளும் இங்கு வருகைதந்து 108 நெய் தீபம் அகல் விளக்கு எனப்படும் மண் சட்டியில் ஏற்றிவிட்டு,சன்னதியில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவர்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை;



தமிழ்நாட்டில் பல ஆண்களும் பல பெண்களும் பெற்ற தாய் தந்தையாலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர்.ஆமாம்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வயது 25.எம்.எஸ்.ஸி படித்துவிட்டு,வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.21 வயதில் ஒருவனை காதலித்திருக்கிறாள்.22 ஆம் வயதில் இந்த காதல் அவளது அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.அவர் இந்த காதல் பற்றி எதுவுமே சொல்ல வில்லை;எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவுமில்லை;இவளோ பயந்துபோய்,தனது காதலனை உதறியிருக்கிறாள்.இவளது அப்பா தனது அலுவலக நண்பர்கள்,தெரு நண்பர்கள்,உறவினர்கள் என எல்லோரிடமும் இந்த 22 வயது மகளைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ,அவ்வளவு இழிவாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.இப்போது அந்த பெண்ணுக்கு வயது 27.பெற்ற அப்பாவே இப்படி அவதூறு பரப்புவதால்,அந்தப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.இவரது ஜாதகத்தினைப் பார்த்தப்பின்னர்தான் காரணமும்,இவரது முன் ஜன்ம ரகசியங்களும் புரிந்தது. பரிகாரமாக இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி வழிகாட்டிட,4 தடவை மட்டுமே இந்தப் பெண் தனது அம்மாவுடன் மிகுந்த போராட்டத்துக்கிடையே போயிருக்கிறாள்.தற்போது மிகச்சிறந்த கணவன் அமைந்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.



செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தப் பரிகார வழிபாட்டு முறையை நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும்,தான் செய்த தவறுக்கு மனதார வருந்தி,உரிய பரிகார வழிபாட்டைச் செய்தால் மட்டுமே கிரகங்கள் தீமைகளைக்குறைக்கும்; ‘கடமைக்கே’ என்றோ அல்லது ஜாலி ட்ரிப்பாக செய்தால் பலனில்லை;



மேலப்பெரும்பள்ளம் செல்வது எப்படி?



மயிலாடுதுறை ,சீர்காழி , பூம்புகார் இந்த மூன்று ஊர்களும் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த முக்கோணத்துக்கு நடுவே அமைந்திருக்கிறது.மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் மேலையூரில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.அல்லது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்னுமிடத்தில் இறங்க வேண்டும்.இங்கிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.கோவிலின் அருகிலேயே கோவில் காவலாளியின் வீடு அமைந்திருக்கிறது.பல மகான்களும்,சித்தர்களும் சூட்சுமமாக இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகைதந்து வழிபட்டு வருகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது.கோவிலின் உள்ளே ஒரே சன்னதியில் நம்மை இயக்கும் சனிபகவானும்,அவரது குருவும் பிரபஞ்சத்தை இயக்கும் கால பைரவரும் காட்சியளித்துவருகின்றனர்.ஒரு முறை போய்வருவது நல்லது.கோவிலை ஒட்டி ஒரு டீக்கடை கூட கிடையாது.எனவே, அருகில் இருக்கும் ஊரிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்லவும்.



இன்னொரு சுலப வழி உண்டு.கீழப்பெரும் பள்ளம் செல்லவும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்தும் செல்லலாம்.




ஓம்சிவசிவஓம்









Monday, September 26, 2011

பத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது







இந்த பதிவின் ஒரு பகுதியாக இருப்பது பத்திரகாளியம்மாளின் புகைப்படம்.சென்ற ஆவணிமாதம் பவுர்ணமிபூஜையன்று,பவுர்ணமி பூஜை நிறைவடைந்த நேரத்தில் எடுக்கப்பட்டது இந்தப்புகைப்படம்.

இதை உங்களின் கணினியின் முகப்பை அலங்கரிக்கும் விதமாக வைத்துக்கொள்ளலாம்;அல்லது இதை கலர் இங்க் ஜெட் பிரிண்டர் மூலமாக பிரிண்ட் எடுத்து ,ஃபிரேம் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் குளித்து,வேலைக்கு அல்லது தொழிலகத்துக்குப் புறப்படும் முன்பாக இந்த பத்திரகாளியம்மாளின் போட்டோவின் முன்பாக நின்று கொண்டு(முடியாதவர்கள் அமர்ந்துகொண்டு) மனதுக்குள் உங்களுக்கு என்ன வேண்டும்? என்பதை வேண்டுங்கள்.(இந்தக் கோரிக்கையை எவரிடமும் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக் கூடாது)

15 நாட்கள் கடந்ததும் என்ன உணருகிறீர்கள்?        

45 நாட்கள் கடந்தபின்னர் என்ன நடக்கிறது?         

90 நாட்கள் கடக்கும் முன்பாக,நீங்கள் புரிந்துகொண்டது என்ன? ஆன்மீகக்கடலுக்கு எழுதுங்கள்.

குதர்க்கம் பேசும் நாத்திகக் கிறுக்கர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? அவனுங்களால் அவனுங்களுக்கே பிரயோஜனம் கிடையாது.நாம் நமது உள் நோக்கிய ஆன்மீகப் பயணத்தை,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியை வீட்டிலிருந்தே வழிபடுவதன் மூலமாக ஆரம்பிப்போம்.

கொஞ்சம் காதைக் கொடுங்கள்:ஒரு மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளிகோவில் பவுர்ணமிபூஜைக்கு வந்து கலந்து கொண்டாலே,அடுத்த நாளிலிருந்தே,நமது வாழ்க்கையில் அதிரடியான / நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் நடைபெற்றுவருகின்றன. 





Thursday, September 22, 2011

முக்கிய அறிவிப்பு



















வெளிநாட்டு ,வெளி மாநில,தமிழ் நாட்டு அன்பர்களே!
உங்களால் நிறைவேற்ற இயலாத பூஜை புனஸ்காரங்கள்,பரிகாரங்களை உங்கள் சார்பாக நாங்கள் நிறைவேற்றி பிரசாதங்கள் அனுப்பி வைக்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு:துரை : 9444996089ஆன்மிக ஆர்வலர்
மற்றும்
ஐம்பது வருடங்களாக வெளிவரும் "மாத ஜோதிடம்' ஆன்மிக பத்திரிகையின் தலைமை நிர்வாகி .

முன்னோர்கள் பாவம் உங்களை தீண்டாதிருக்க.

For Good Reading, Click On That Images & Again once Click



பக்தனுக்காக திரும்பிய சிவலிங்கம்



For Good Reading, Click On That Images & Again once Click





For Good Reading, Click On That Images & Again once Click












புரட்டாசி சனிக்கிழமையின் பெருமைகள்

For Good Reading, Click On That Images & Again once Click

For Good Reading, Click On That Images & Again once Click









நவகிரகங்கள் உட்கார்ந்தநிலையில் உள்ள கோவில்

For Good Reading, Click On That Images & Again once Click



இந்திரனின் இடி பூஜை

For Good Reading, Click On That Images & Again once Click




கவியரசுவைரமுத்துவின் முகத்திலறையும் சூப்பர்கட்டுரை








இந்த கட்டுரை மூன்றாம் உலக போர் என்று ஆனந்தவிகடனில் வைரமுத்து எழுதும் தொடரில் வெளி வந்தது



For Good Reading, Click On That Images & Again once Click










For Good Reading, Click On That Images & Again once Click










For Good Reading, Click On That Images & Again once Click





















இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷின் தினசரி சம்பவம்




For Good Reading, Click On That Images & Again once Click





தண்டம் தனியாக மிதக்கும் அதிசய கோவில்

For Good Reading, Click On That Images & Again once Click



Wednesday, September 21, 2011

துவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்








நமது சொந்த ஊரில் தினமும் 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் (ஒரு வேளை நாம்) செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளன்று அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



காசியில் தங்கி ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால்,காசியில் நாம்,நமது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்தளவுக்குப் புண்ணியம் கிடைத்துவிடும்.அதுபோக,நமக்கு மறுபிறவியில்லாத முக்தியும் கிடைத்துவிடும் என்று சிவமகாபுராணம் தெரிவிக்கிறது.



24.9.2011 அன்று சனிக்கிழமையன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளானது மஹாளய பட்சம்(பட்சம் என்றால் தூய தமிழில் அரை மாதம் அல்லது 14 நாட்கள் என்று பெயர்.தமிழர்களுக்கே தமிழ் சொல்லித்தருமளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவன் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறான்)நாட்களுக்குள் அமைந்திருப்பது கோடி பங்கு விஷேசம் ஆகும்.



எனவே, ஆன்மீகக்கடல் வாசகர்கள்,இந்தப்பதிவு மூலமாக 24.9.2011 சனிக்கிழமை வரும் துவாதசி திதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்.நமது ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக இந்த புனிதமான நன்னாளில் ,திரு அண்ணாமலையில் அன்னதானமும்,வஸ்திர தானமும்,பழதானமும் செய்யப் போகிறேன்.மேலும்,இந்த நாளையொட்டி ஐந்து கிலோ நவதானியங்களை வாங்கி திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் மனித காலடி படாத இடங்களில் தூவப்போகிறேன்.அண்ணாமலைக்கு வருகிறீர்களா நமது பித்ருக்கடன்களை சுலபமாகவும்,நிறைவாகவும் தீர்ப்பதற்கு?



இந்த வாய்ப்பை எனக்கு அளித்த கூகுளுக்கும்,எனது ஜோதிட குருநாதர்களுக்கும்,எனது அன்னை பத்திரகாளியம்மாளுக்கும்,எனது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா  அவர்களுக்கும் எனது மானசீக குரு(அண்ணாமலையை அறிமுகப்படுத்தியவர்)திரு.பி.எஸ்.பி,அய்யா அவர்களுக்கும் கூகுள் நன்றிகள்!!!



ஓம்சிவசிவஓம்

மஹாளய அமாவாசை என்றால் என்ன?







பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து,அந்தந்த நாட்களுக்குரிய பித்ரு பூஜைகளை செய்துகொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் இருக்கும் அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மஹாளய அமாவாசை நாள்(26.9.11 திங்கள்) ஆகும்.இந்த 14 நாட்களில் தாம்பத்தியம் செய்யக்கூடாது;காமரீதியான நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்திட வேண்டும்.இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.



பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப்பின்னர்தான்,அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை என்னவென்று கூறுவது.



பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்(சோறு),பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆய்வு முடிவுப்படி,ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.



பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன் அல்லது நோய் அல்லது விபச்சாரம் அல்லது சோரம் போகுதல் அல்லது வாழ்க்கைத்துணைக்குத் துரோகம் செய்தல் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் =இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் உலகிற்கு நாகரீகம் கற்றுத்தந்த நம் தமிழினம் தற்போது நாத்திகம் என்னும் நரகலால் பித்ரு தர்ப்பணத்தின் பெருமையை உணராமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.நாத்திகம் பேசும் நமது தலைவன்கள்,திருட்டுத்தனமாக பித்ரு தர்ப்பணங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வளவு சுயநலம்? தனது தொண்டர்கள் மீது எவ்வளவு அக்கறை?



சரி போகட்டும்.நாம் இந்த மஹாளயபட்சத்தன்று(26.9.11 திங்கள்) செய்ய வேண்டியது என்ன?



நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.



அங்கிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது.மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள்.அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.



தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும்.மனைவியின் அனுமதியை தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த ஆண்கள் பெற வேண்டும்.அப்பொழுதுதான் தர்ப்பண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.மகரிஷிகள்,சித்தர்களின் ஆசி கைகூடும்.பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்.இந்த 15 நாட்களில்(12.9.11 முதல் 26.9.11 வரை) தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள்,புரட்டாசி அமாவாசை எனப்படும் மஹாளயபட்ச அமாவாசை நாளான 26.9.11 அன்று மட்டுமாவது அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,உளுந்தம்பருப்பு,ரவை,மைதா,கனிகள்,சாத வகைகள்,உலர்ந்த கனிகள்,ஆடைகள்,பாதணிகள்,ஆபரணங்கள் தானம் அளிக்கலாம்.வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான சிவாலயங்களில் செய்யலாம்;சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம்.அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்;



இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும்) அளிக்கவேண்டும்.இதை புரட்டாசி அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும் என்றில்லை;இன்று 21.9.11 மட்டும் அல்லது 21.9.11 முதல் 26.9.11 வரை தினமும் அல்லது 26.9.11 மட்டும் செய்யலாம்.



ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்பு ஆன்மீகப் பரிசு:24.9.2011 சனிக்கிழமை அன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளில் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,நூறு ட்ரில்லியன் கோடி கோடி கோடி புண்ணியம் நமது பித்ருக்களின் ஆசியால் நமக்குக் கிடைக்கும்.வருகிறீர்களா அண்ணாமலைக்கு? என்னை அங்கே சந்திக்கலாம்.



படத்தில் இருப்பது நமது முன்னோர்களின் வடிவமாகிய அண்டங்காக்கை.



ஓம்சிவசிவஓம்










Monday, September 19, 2011

பணம் நிறைய வர ஒரு யோசனை





மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் மிஸ்டிக் செல்வம்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,தென்காசி அவர்கள்.

1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற்கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.

2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.

3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

4. இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.

நாளை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.நாளை ராகு காலம் மாலை 3.00 முதல் மாலை 4.30 வரை வருகிறது.செவ்வாய்க்கிழமை இல்லையா?

தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை:

1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.

3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.

4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.

5.சிதம்பரத்தில் இருக்கிறார்.

6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.

7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.

ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?

பின்குறிப்பு:தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு!!!

பசியோடு தினமும் போராடுபவனுக்கு ஆன்மீகத்தைப் போதிப்பதால் என்ன பயன்?







Thursday, September 15, 2011

அணுஆட்டம்:ஜீ.வி.தொடர்








பொதுமக்கள் பணத்தைத் திருடுவதைத் தவிர,பிற துறைகள் அனைத்திலும் இந்தியா பின் தங்கியேதான் இருக்கிறது.ஒரே நாளில்(செப் 7,2011) இந்தியத் தலைநகர் டெல்லியில் தீவிரவாதக் குண்டுவெடிப்பும்,4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் நிகழ்ந்திருக்கிறது.பாதுகாப்பின்மைக்கு இதைத் தவிர,வேறு உதாரணம் தேவையில்லை.



‘யாரிடம் சொல்லி அழ?’ என்று தலைப்பிட்ட 8.6.2011 தலையங்கத்தில் தினமணி நாளிதழ் சொல்லிற்று. ‘இந்தியாவின் அணு உலைக்கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல;இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடுவது,வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் எளிது.இதை மும்பைத்தாக்குதல் தொடர்பான அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வளவு இருந்தும் இந்திய அரசு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்துவிட்டால் போதுமானது.அணு உலைக்கலன்களால் பிரச்னை இருக்காது’ என்று சொல்கிறது எவ்வளவு பொறுப்பற்றத்தனம்?



நிலநடுக்கமும் ,தீவிரவாதக் குண்டுவெடிப்பும் நடந்து முடிந்த கையோடு,பகல் 12.30 மணிக்கு ‘அணு பாதுகாப்பு ஒழுங்காற்று அதிகாரச் சட்டம் 2011’ எனும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.AERB எனும் அணு சக்தி ஒழுங்காற்றுவாரியத்திற்குப்பதிலாக இந்த புதிய அதிகார அமைப்புத் தோற்றுவிக்கப்படுகிறது.பழைய கள். . .புதிய மொந்தையில்!



பிரதமரும்,சுற்றுச்சூழல்,வெளிவிவகாரம்,நல்வாழ்வு,உள்துறை,அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சர்களும் அணுபாதுகாப்புக்குழு என்ற பெயரில் இயங்குவார்கள்.இதன் கீழே ஒழுங்காற்று அதிகார அமைப்பு இயங்கும்.இதன் உறுப்பினர்கள்,தலைவர் அனைவருமே அணு உலை,அணு சக்தி வல்லுநர்களாக இருப்பார்கள்.இந்த அமைப்பு திறந்தவெளித் தன்மை கொண்டு இயங்குமாம்.ஆனால்,முக்கியமான தகவல்களை யாருக்கும் தராதாம்.தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு தற்போது செய்து கொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும் செய்யலாம்.



ஜீனியர் விகடன் பக்கம் 30,31,18.9.2011.



***அணு உலை அமைப்பதிலும்,பராமரிப்பதிலும் இந்தியா எப்படியெல்லாம் சொதப்பி வருகிறது என்பதை அறிய வாரம் இரு முறை வரும் ஜீனியர் விகடன் இதழில் வெளிவரும் அணு ஆட்டம் என்னும் தொடரைப் படியுங்கள்.



ஆன்மீகக் கடலின் கருத்து: இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியவனுக்கே இன்னும் தூக்கு போடவில்லை.போட்டுவிட்டால் இந்திய முஸ்லீம்கள் காங்கிரஸீக்கு ஓட்டு போடமாட்டார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிந்திக்கிறது.டூர் வருவது போல, பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து குண்டுகள் வைத்து நமது சகோதர சகோதரிகளைக் கொன்றுகொண்டே இருக்கிறார்கள்.இதையே ஒழுங்காகக் கட்டுப்படுத்த துப்பில்லை.சீரிஸான அணு உலையை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்?






சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?







ஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை!



விநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெரிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.



இந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.

பி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;

பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.



சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.



எஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.














இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”








‘காந்தி கொலையில் சாவர்க்கரின் கைவரிசை உண்டு’ என்று பாடும் பாட்டு புதிதல்ல;இதில் சாவர்க்கருக்கு சம்பந்தம் கிடையாதென்று நீதிமன்றமே விடுதலை செய்தது.காங்கிரஸ் ஏஜண்டுகளாக வாழும் சில புத்திசாலிகள் நம்பமுடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் கல் எறிந்து தேசபக்தியை காட்டினர்.சாவர்க்கரின் தம்பி நாராயணராவ் கல்வீச்சில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அன்றைக்கு சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘இந்த கொலையில் சாவர்க்கரின் பங்கு இல்லை’ என்று நேருவிடம் கூறினார்.இருந்தும் நேரு கேட்கவில்லை;1948 மார்ச் 11 ஆம் தேதி ஒரு குற்றவாளி ஆக்கப்பட்டார்.வழக்கறிஞர் போபட் அவர்களுக்கு விவரம் கிடைத்தது.வீரசாவர்க்கர் நிரபராதி என்று தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.மேல்முறையீட்டு முயற்சியை தைரியமில்லாமல் கைவிட்டார் ஜவஹர்லால் நேரு.



நாட்டின் முதல் குடியரசு நாளின் கொண்டாட்டத்திற்கு சாவர்க்கருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று நேரு நினைக்கவே இல்லை.பிரிட்டிஷ் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்ட சாவர்க்கரின் வீட்டை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை;ஆனால்,இதே நேரு 1950 ஏப்ரல் 4 இல் பாகிஸ்தான் தலைவர் லியாகத் அலி நம் நாட்டிற்கு வந்தபோது சாவர்க்கரை ‘சட்ட ஒழுங்கு’பிரச்னையைக் காரணம் காட்டி கைது செய்ய மறக்க வில்லை;



சாவர்க்கரின் நண்பர்கள் கவுரவபூர்ணமாக ‘ம்ருத்யுஞ்ச நாள்’ கொண்டாடியதை வானிலை ஒலிபரப்பு செய்யாமல் இருக்க நேரு தடுத்தார்.அந்தமான் செல்லூலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அறையை தரைமட்டமாக்கிட முயன்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.கணேசவரின் எதிர்ப்பினார் கைவிட்டார் நேரு.சாவர்க்கரின் வாழ்நாளின் கடைசி நாட்களில்(இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும்) சி,ஐ,டிக்கள் வேலை செய்தனர்.



கடைசியில் 1966 பிப்ரவர் 26 அன்று சாவர்க்கர் வீரமரணத்தைத் தழுவியபோது கூட சவப்பெட்டி(கன் கேரேஜ்) கிடைக்காமல் செய்தவர் இந்த ஜவஹர்லால் நேரு.உடலைக் கொண்டு செல்ல கன் கேரேஜை ஏற்பாடு செய்தவர் சினிமா நடிகர் வி.சாந்தாராம் ஆவார்.சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை; நாடாளுமன்றத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தக்கூட அனுமதியளிக்க வில்லை;உறுப்பினரல்லாதவர்கள்(எம்.பி.இல்லாதவர்கள்) நாடாளுமன்றத்தில் கண்ணீர் அஞ்சலி செய்ய அவசியமில்லை என்றார் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் உக்கும் சிங்.



ஆனால்,ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் மரணமடைந்தபோது,இந்தியப்பாராளுமன்றம் கண்ணீர் சிந்தியது.இப்போது சொல்லுங்கள் நேரு போன்றவர்களே இப்படி சிறு மனப்பான்மையில் ஊன்றி இருந்தபோது,அவர் குடும்பத்தின் வாலாக இருக்கும் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பேசியது தவறா?

‘விஸ்வேஸ்வரபட் நூற்றெட்டு பேச்சு’ பக்கத்தில் விஜயகர்நாடகா 16.9.2004.



நன்றி:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்148,எழுதியவர் பேராசிரியர் தச்சம்பட்டு திரு.கே.பழநி(கிரிவலப்பிரியன்) வெளியீடு:ராஷ்ட்ரீய சாகித்ய சங்கமம்,கேசவன்குடில்,தச்சம்பட்டு-606806.திருவண்ணாமலை மாவட்டம்.விலை ரூ.60/-










ஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:18.9.11



இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?



!:ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!



“அஞ்சு வருஷம் எம்.எல்.ஏவா இருந்தார்.நல்லா சம்பாதிச்சார்” என்றுதானே நாமே சொல்கிறோம். ‘அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப்பொறுப்பு உணர்வு அற்றதன்மைதான் அனைத்துக்கும் காரணம். ‘ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள்.எனவே,அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!



ஆன்மீகக்கடலின் கருத்து:நாமே பிராடாக இருந்தால்,நம்மை ஆளும் நமது தலைவர்கள் யோக்கியமாகவா இருப்பார்கள்?



?:தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?



!: அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!



?:கச்சத்தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.க்ருஷ்ணா கூறியிருப்பது குறித்து?



!:எஸ்.எம்.க்ருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்.



ஆன்மீகக் கடலின் கருத்து: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது,இந்த அமைச்சர் கொந்தளித்ததும் எனக்கு மைல்டாக டவுட்டு வந்தது.இந்திய அமைச்சரவை எப்போதுமே பிரச்னையைக் கண்டு பயப்படுமே? எதுவுமே செய்யாதே? எப்படி இந்த அமைச்சர் மட்டும் இப்படி தன்மானத்தோடு வீறிட்டு எழுகிறார் என எனது வட நாட்டு நட்பு வட்டத்தில் விசாரித்துப் பார்த்தால்,உண்மை தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டும்,அடிவாங்கியும் தவித்த அனைத்து மாணவர்களும் வட இந்தியா மாணவர்களாம்.ஆக,வட இந்திய மீனவர்கள்,இலங்கைக் கடற்படையிடம் அடிவாங்கினால்தான் இந்த மந்திரிக்கு அறிவு வருமா?





?:முதல்வரைப் பாராட்டி சீமான்(சைமன் என்பது நிஜப்பெயர்) நடைபயணம் கிளம்பியதும்,பாராட்டு விழா நடத்தியதும் பற்றி?



!: மூன்று தமிழர்களை முழுமையாக மீட்டபிறகு ,நிச்சயமாகச் செய்யலாம்.காரியம் முடியாவிட்டால்,பின்னோக்கி நடக்க முடியாது.

சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?





பசுவின் சாணத்தை உருண்டையாகப்பிடித்து வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் உலர்த்த வேண்டும்;உலர்ந்த உருண்டைகளை மூடக்கூடிய அளவுக்கு நெல் உமியைக் குவித்து தீக்கனல் இட வேண்டும்.இதற்குப் பெயர்தான் புடம் போடுதல்!!!மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு அவை நன்றாக நீர்த்து இருக்கும்.உமியும்,சாணியும் சாம்பலாகி இருக்கும்.உமிச்சாம்பலை நீக்கிவிட்டு,நீறு இருக்கும் சாணி உருண்டைகளை எடுத்து துணியினால் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.இதுவே சைவ முறையிலான விபூதி அல்லது திருநீறு ஆகும்.



எந்தப் பொருளையும் நெருப்பிலிட்டுச் சுட்டால் கருமை நிறமாக மாறும்(சங்கு மட்டும் விதிவிலக்கு);ஆனால்,கருப்பு நிறமான சாணி/சாணம் உருண்டையை நெருப்பிலிட்டு எரித்தால் அது வெண்மை நிறமாக மாறிவிடுகிறது.



இந்தியா,தமிழ்நாடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கே.பி.எஸ்.செல்வக்குமார் என்பவர்27.1.2010 முதல் சைவமுறைப்படி(மேற்கூறிய முறைப்படி) விபூதி தயாரித்து,ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு (மாதம் ஒன்றுக்கு 18 கிலோ)வழங்கி வருகிறார்.



இந்த சைவ விபூதியை நாமும் விலைக்கு வாங்கலாம்.ரூ.150/-செலுத்தினால்,(ஓராண்டுக்கு) மாதம் தோறும் விபூதி கூரியரில் பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாட்டு அன்பர்கள் இவரது செல் போனில் பேசி எவ்வளவு என்பதை உறுதி செய்துகொண்டு,பெற்றுக்கொள்ளலாம்.



K.P.S.செல்வக்குமார்,இந்து கலாச்சார விரிவாக்க மையம்,கே.பி.எஸ்.நகை மாளிகை,47,நேதாஜி ரோடு,ஸ்ரீவில்லிபுத்தூர்-626125.விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.போன்:04563-261274. செல் எண்:94428 40524.











நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7









எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.





நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.





யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.





குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.





இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.





இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.





தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே



நாவினால் சுட்ட வடு.



என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.





ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.





இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.





அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.





பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.





சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.





எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.





எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.





மேலும் படிப்போம்.....





-என்.கணேசன்





நன்றி: வல்லமை













sasthira pantham

Wednesday, September 14, 2011

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வழிபாடு

கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் கோயில் விழாவில் ஆண்கள் வினோத வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி அருகே உள்ளது செங்கப்படை கிராமம். இங்குள்ள அழகு வள்ளியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நேற்று நடந்தது. ஆண்கள் சாக்குப்பையும், காலில் சலங்கை அணிந்து, உடலை சுற்றி வைக்கோலை கட்டிக் கொண்டனர். முகத்தையும் முழுமையாக சாக்குப்பையால் மூடிவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, உறவினர்கள் சாக்குப்பையின் மீது தண்ணீர் ஊற்றி விசிறியபடி இருந்தனர். பின்னர் பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியே கும்மி அடித்து முளைப்பாரியை சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நவரத்தினங்கள் எப்படி உருவாகின்றன?










For Good Reading, Click On That Images & Again once Click








விபத்தில்லாத பயணம் வேண்டுமா?




For Good Reading, Click On That Images & Again once Click