Thursday, September 30, 2010

இந்துக்களின் பெருந்தன்மைக்குக் கிடைத்த வெற்றி: அயோத்தி தீர்ப்பு

சர்ச்ச்சைக்குரிய அயோத்தி இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகாலமாக வழக்கு நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று மாலை தனது தீர்ப்பை வழங்கியது.
இத்தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய நிலம், 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதி ராம்லல்லாவுக்கும், ஒரு பகுதி வக்பு வாரியத்துக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை அகற்றப்படாது என்றும், அங்கு தற்போதைய நிலையே மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
வக்பு வாரியம் ஏற்பு : அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள வக்பு வாரியம், இதனடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. , வெற்றியுமில்லை, யாருக்கும் தோல்வியுமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் பொதுசெயலர் பிரவீண் தொகாடியா நீதித்துறை மீது இநதுக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபணமானது என கூறியுள்ளார்,
ஆர்.எஸ்.எஸ்., கருத்து: அயோத்தி வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் கருத்து: அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவீண் தொகாடியா கூறுகையில், நீதித்துறையின் மீது இந்துக்கள் வைத்துள்ள நம்பிக்கை இத்தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் வரவேற்பு: தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்னை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படவேண்டும் அல்லது கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் தீர்க்கப்படவேண்டும் என்பதே காங்., கட்சியின் நிலை. தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
உ.பி., முதல்வர் மாயாவதி: அயோத்தி தீர்ப்பு வெளியானதையொட்டி, மக்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி கருத்து: அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியுமல்ல தோல்வியுமல்ல என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பின் மூலம் நாட்டு மக்கள் ஒன்றுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இத்தீர்ப்பு யாருக்கும் வெற்றியுமல்ல தோல்வியுமல்ல என தெரிவித்தார்.
தீவிர பாதுகாப்பு: தீர்ப்பை ஒட்டி அலகாபாத் ஐகோர்ட் வளாகத்தில் உச்சகட்ட உஷார் நிலை அமல் படுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் ஒரு முறை கோர்ட்டுக்குள் சென்று விட்டால், தீர்ப்பு முழுமையாக வாசிக்கப்பட்ட பிறகு தான் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு தீர்ப்பின் பிரதிகள் லக்னோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் வழங்கப்பட்டது.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய லக்னோ கலெக்டர் சுனில் அகர்வால், 3 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என லக்னோ கலெக்டர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி., வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அமைச்சரவை கூட்டம்: இதற்கிடையில் டில்லியில் இன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. தொடர்ந்து அனைவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா இல்லத்தில் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றனர். நன்றி:தினமலர் 30.9.2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

சுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.
காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!
தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.

தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?
தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.

பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!
சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.

தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.10.2010 அன்று ஆரம்பாக இருக்கின்றன.

Thursday, September 23, 2010

ஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா? திருச்சிக்கு வருக!!!

ஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா?

பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச
பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. இறைவனே
சித்தரைப் போல வந்து திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டிய மதில் ஒன்று இங்குள் ளது. இம்மதில் "திருநீற்றுமதில்' என்று அழைக்கப்படுகிறது. சோழமன்னன் காவிரியில் நீராடிய போது கழன்று விழுந்த முத்தாரம் ஒன்று, அங்கு நீர் மொண்டு வருவதற்காக கொண்டு செல்லப்பட்ட அபிஷேக குடத்துக்குள் கிடந்தது. நீரை அபிஷேகம் செய்யும்போது, அந்த மாலை இறைவனின் கழுத்தில் விழுந்தது.
நாள் தோறும் கோபூஜை நடைபெறுவதும், சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடப்பதும், உச்சிக்கால பூஜையின் போது அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனைப் பூஜிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபாடு செய்து தாடங்கப் பிரதிஷ்டை(அம்மனின் காதணியான கம்மலில் சக்கரப்பிரதிஷ்டை) செய்துள்ளார்.


கடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு


கடன் தொல்லைக்கு விமோசனம

சிவபெருமானின் அனுமதியின்றி, தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான், தன் பாவத்தைப் போக்குவதற்காக 126 சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அதில் திருவாரூர் அருகிலுள்ள திருச் சேறை கோயிலும் ஒன்றாகும். இங்கு சாரபரமேஸ்வரரும், ஞானவல்லியம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் லிங்கத்தின் மீதும், அம்பிகை ஞானவல்லியின் திருவடிகளிலும், சூரியன் தன் செங்கதிர்களை பரப்பும் விதமாக கருவறைகள் அமைந்துள்ளன. இந்த சமயத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இச்சன்னதிக்குப் பின்புறம் ருணவிமோசன லிங்கேஸ்வரருக்கு சன்னதி அமைந்துள்ளது. கடன்தொல்லைகளில் இருந்து நம்மைக் காப்பவராக இப்பெருமான் விளங்குகிறார். ஒவ்வொரு திங்கட்
கிழமையும் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின், கஜலட்சுமியை தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோயிலில் மூன்று துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தல இறைவன் மீது பதிகம் பாடியுள்ளனர். மனிதனுக்கு தேவையான அடிப்படை
குணங்களைத் தந்து செந்நெறிக்கு வழிகாட்டும் இறைவன் என்னும் பொருளில் இத்தலத்து சிவபெருமானை "செந்நெறியப்பர்' என்கின்றனர்.


லட்சுமி கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையதளம்

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

சர்வபிரச்னைகளுக்கும் நிவாரணி: ஓம் சிவசிவ ஓம்

ஓம் சிவசிவ ஒம்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய,சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.இல்லாவிட்டால்,எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்;குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக்கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”/
இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.
இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும்.பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும்.ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும்.உடனே விட்டுவிடக்கூடாது.
அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்;பவுர்ணமி,அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.ஆனால்,திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.

பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.
நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டும்.
தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.
கல்வி,வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.
பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு,விரதமிருந்து(சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே,நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்.நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்;மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.
இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

இந்தியா சீனா இடையே மோதல் வருமா?:நன்றி தமிழ் வெப்துனியா

இந்தியா-சீனா இடையே மோதல் வருமா?


த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கொஞ்ச காலமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டு எதிரி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான ரகசிய வேலையில் சீனா ஈடுபடுவது. விசா கொடுப்பதில் இருக்கும் பிரச்சனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படுத்தும் பிரச்சனை என்று எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு மோதலை நோக்கி இந்தியாவும், சீனாவும் போவது போல் தெரிகிறது. இது எந்த அளவிற்கு இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு அல்லது எதிர்ப்பு, பகைமை எப்படி இருக்கும்? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எப்படிப் பார்த்தாலும், இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது சீனாவால் நமக்கு நிறைய தொந்தரவுகள் உண்டு. அதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், தற்பொழுது இந்தியாவினுடைய கிரக அமைப்புகள் சாதமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் முடிவு, அதாவது 27.12.2011க்குப் பிறகு சனி மாறுகிறார். அப்படி சனி மாறும் போது இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் உண்டாகும். இந்தியா சனியோட ஆதிக்கம் பெற்ற நாடு. சனி எதிரான கிரகம் என்பது செவ்வாய். இந்த செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுதான் சீனா. செவ்வாய்தான் கம்யூனிஸத்திற்கும், செம்மை நிறத்திற்கும் உரிய கிரகம். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்போதுமே ஆகாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் சீனாவால் இந்தியாவிற்கு பிரச்சனைகள் வரும். குறிப்பாக 2012, 2013, 2014 காலகட்டங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாக இருக்கும். அதில் இந்தியாவிற்குள்ளேயே சில உள்நாட்டுக் குழப்பங்கள், நக்சலைட்டுகள் தூண்டுவிடப்படுதல் போன்றதெல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு சீனாவால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கிடக்கிறது. இந்தியாவினுடைய அண்டை அயல்நாடுகள் அனைத்தையுமே சீனா தனக்கு கையடக்கமாக வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவை இயக்கக் கூடிய கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை இருக்கிறது. சீனா முழுக்க முழுக்க செவ்வாயினுடைய ஆதிக்கம் பெற்ற நாடாக இருந்தாலும் அதனுடைய யோகாதிபதியாக வருவது புதன். புதன் எப்படியென்றால், பதுங்கியிருந்து பாய்தல், பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்வார்களே அந்த மாதிரியான சில வேலைகளையெல்லாம் சீனா செய்து வருகிறது. ஏனென்றால் புதனுடைய அமைப்பு அந்த மாதிரியானது. சந்தையில் ஒரு தரமான பொருள் வந்தால் அதேபோன்ற பொருளை உருவாக்குவார்கள். இதனை இமிடேஷன் என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன்தான். இதுபோன்ற பல சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படிப் பார்த்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஆள்பவர்கள் விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது மிகவும் நல்லது.

Tuesday, September 21, 2010

திரு.மிஸ்டிக் செல்வம் :நமது ஆன்மீக வழிகாட்டி


தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்

கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படிப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார்.இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள்,சித்தர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும் பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார்.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்மம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.
40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாட்டுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங்குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.
திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத்தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.அகில உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.

திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர்’ ‘ஆன்மீகத்திறவுகோல்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார்.இவருடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கிடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம்,
ருத்ராட்சப் பிரயோகம்
மந்திரப்பிரயோகம்,
சங்குப்பிரயோகம்,
அஞ்சனப்பிரயோகம்,
யந்திரப்பிரயோகம்,
காலதோஷ நிவாரணம்,
வாஸ்துதோஷ நிவாரணம்,
பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமணி மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்றன:
1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்

2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்

3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்

4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்

5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்

6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்

இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையுடன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.அதை 5.2.2007 அன்று இந்திய ட்ரஸ்ட் ஆக்ட் 1882இன்படி பதிவு பதிவு எண்:433/2007 கீழ் நிறுவி பதிவு செய்துள்ளார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களின் எழுத்துக்களை ஒருமுறை வாசித்தால் /பேச்சினை ஒரு முறை கேட்டாலே நமது வாழ்க்கையில் நீண்ட காலப்பிரச்னைகள் தீருவதற்கான ஆன்மீக வழிமுறை அல்லது தீர்வு கிடைக்கும் என்பது எனது அனுபவ உண்மை!!!

Thursday, September 16, 2010


ஊழ்வினை என்றால் என்ன?

பாதாள உலகம்,நாக உலகம்,பேய் உலகம்,பிசாசு உலகம் என பூமிக்குக் கீழே ஏழுவிதமான உலகங்கள் இருக்கின்றன.அநியாயம்,அக்கிரமம்,திமிர்த்தனம்,விபச்சாரம்,போதைப்பொருட்கள் கடத்துதல்,குடும்பங்களளப் பிரித்தல்,தற்கொலை செய்தவர்கள்,நிறைய்ய கொலை செய்தவர்கள்-  போன்ற காரியங்களை மட்டும் செய்தவர்கள் இறப்புக்குப் பிறகு இங்குதான் பல ஆண்டுகளாக கிடக்க வேண்டும். பல ஆண்டுகளாக இருட்டு,அல்லது பல ஆண்டுகளாக வெளிச்சமும் கடும் வெப்பமும் இங்கு இருக்கும்.இன்றைய நவீன விஞ்ஞானத்தால் அவற்றை ஒரு போதும் நாம் காணமுடியாது.
அதேபோல்,பூமிக்கு மேலே ஏழு நல்ல உலகங்கள் இருக்கின்றன.அவற்றில் முதல் உலகத்தில் இருப்பவர்கள்,இந்த பூமியில் பிறருக்கு உதவியும்,வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் சில நூற்றாண்டுகள் வரை இருப்பர்.தேவைப் படும்போது மீண்டும் மீண்டும் பிறப்பர்.அதற்கு மேல் இருக்கும் உலகில் துறவியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.இவை விரும்பும் நேரத்தில்,விரும்பும் பூமி இடத்தில் பிறக்கும்.
இதற்கும் மேல் ஒரு உலகம் இருக்கின்றது.அங்குதான் சுவாமி விவேகானந்தர்,ராம கிருஷ்ணபரமஹம்ஸர்,யோகி ராம் சுரத்குமார்,ரமண மகரிஷி மற்றும் பல புண்ணியம் நிறைந்த ஆத்மாக்கள் வாழ்ந்துவருகின்றன.இவர்கள் கலியுகத்தின் முடிவில் கலியை முடித்துவைப்பதற்காக பிறப்பார்கள்.இந்த உலகத்துடன் தொடர்புகொள்ள நாம் தினமும் ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.அப்படி செய்து வந்தால் நமது முன்னோர்களில் ஒரு சிலர் மட்டுமாவது இங்கு வசித்துவருவார்கள்.அவர்களில் ஒருவர் அல்லது சிலர் நம்மை தொடர்புகொள்ளுவர்.

இந்த அறையில் செல்போன் சேவை நிறுவனங்களின் அலைகள் இருப்பதை நாம் நம்புகிறோம்;அவற்றைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என சொன்னால் அது முட்டாள்த்தனம்.அதேபோல்,இந்த உலகங்கள் இருப்பது நிஜம்.அவற்றை நம்பாத ஆத்மாக்களும்,இறப்புக்குப் பின்னர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு உலகிற்குச் செல்வது உறுதி.

ஆன்மீக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதி லட்சியமே முக்தி எனப்படும் பிறக்காத நிலைதான்.இந்த நிலையை அடைய ஒரு மனிதப்பிறவி எவருக்கும் போதாது;
இந்து தர்மநீதி நூல்களினை ஓரளவு வாசித்துக் கிடைத்த தகவல்களின் படி,3000 மனிதப்பிறவிகள் பிறந்தப்பின்னர்தான் ஒருவன்/ஒருத்தி தகுந்த குருவை அடைகிறான்/ள்.அதற்குப் பிறகு  புண்ணிய ஆத்மாவாகப் பிறந்து,ஜோதிடம்,யோகா,ரெய்கி,மனவளக்கலை,சிற்பசாஸ்திரம்,மாந்திரீகம் இவற்றில் ஏதாவது ஒன்றில் திறமைசாலியாகிறார்கள்.இந்தக் கலையில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.
மரணமடையும்போது எந்த ஆசையுமில்லாமல் இறப்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை;அப்படிப் பட்ட பக்குவநிலையை ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரால் மட்டுமே கண்டறிய முடியும்.இதற்கு ஒரே ஒரு ஜோதிட குறிப்பு சொல்லலாம்.யாரது பிறந்த ஜாதகத்தில்,லக்னத்துக்கு 12 ஆம் இடத்தில் கேது மட்டும் தனியாக இருக்கிறாரோ,அவருக்கு இந்தப் பிறவி இறுதியான மனிதப்பிறவி என சொல்லலாம்.

அந்த 12ஆம் இடம் எந்த ராசி என்பதையும் அடுத்து ஆராய வேண்டியிருக்கிறது.
சரி,3000 மனிதப்பிறவிகள் பிறப்பதற்குப்பதிலாக இந்த மனிதப்பிறவியோடு,அல்லது இன்னும் ஓரிரு மனிதப்பிறவியோடு முக்தியை அடைய என்ன வழி? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவே நடத்தப்படுகிறது.
பின்வரும் காரியங்கள் நாம் அடிக்கடி செய்வதால்தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.அவற்றை தவிர்க்கப் பாருங்கள்:

1.பிறரது சொத்துக்களை தனது அதிகாரம்,ஆளுமை,ஆளும் திறன்,தனித்திறமை,நயவஞ்சகம் இவற்றால் அபகரித்தல்

2.சொன்ன சொல்லைத் தவறுதல்
3.காம உணர்ச்சியைத் தூண்டுதல்;அப்படித் தூண்டிவிட்டு அதற்கு வடிகால் இல்லாமல் செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.(திரைப்படங்களை இயக்குபவர்கள்,கவர்ச்சியாக நடிப்பவர்கள்,நீலத்திரைப்படங்களை எடுப்பவர்கள்,நடிப்பவர்கள்,விநியோகிப்பவர்கள்,ஒளிபரப்புபவர்கள்,சேமித்து வைத்து விற்பவர்கள்)
4.அநியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்/சேவை செய்தல்
5.அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டுதல்; அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவர்களை அழித்தல்(இலங்கையின் தற்போதைய அதிபரின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)
6.வழிபாட்டுக்குரிய சொத்துக்களை திருடுதல்;அபகரித்தல்;அழித்தல்;சூறையாடுதல்;மோசம் செய்தல்
7.தன்னைப் பெற்றவர்களுக்கு அவர்களது இயலாத காலத்தில் அவர்களை பராமரிக்காமலிருத்தல்;அவர்களை சபித்தல்;அவர்களை கண்டுகொள்ளாமலிருத்தல்
8.தனது வாழ்க்கைத் துணையின் காம ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்;தனது வாழ்க்கைத்துணையைப் பற்றி இழிவாகப் பேசுதல்;தனது வாழ்க்கைத்துணையை தனது பெற்றோர்கள்/உடன்பிறந்தோருடன் சேர்ந்து இம்சித்தல்/சித்திரவதை செய்தல்/கொலை செய்தல்

9.தனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருத்தல்
10.தன்னை நம்பிவந்த தொழில் கூட்டாளிகள், நண்பனை கழுத்தறுத்து ஏமாற்றுதல்
11.அன்னதானம் செய்கிறேன் எனக்கூறி வசூல் செய்து அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துதல்
12.ஆன்மீகத்தின் பெயரால் யோகாசனம் மற்றும் தியானத்தை (நியாயமான குரு தட்சிணை வாங்காமல்) வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தல்
13.பிற மதங்களை இழிவாகப் பேசுதல்;பிற மதத்தைச் சேர்ந்தவர்களை குறுக்கு வழியில் தனது மதத்திற்கு மாற்றுதல்
14.அடுத்தவர்களின் காம ரீதியான அவமானங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழுதல்(புறங்கூறுதல்)
15. மாமியார் மருமகள் ஒற்றுமையை கெடுத்தல்

16.குடும்ப ஒற்றுமையைக் கெடுத்தல்
17.ஜாதிகள் அல்லது இனங்களுக்கிடையே தீராதப் பகையை அரசியல் ரீதியாகவோ,வெறுமனயோ தூண்டுதல்
18.தவறான மருத்துவ சிகிச்சை
19.தவறான ஜோதிட ஆலோசனை
20.மாந்திரீகத்தின் உதவியால் கெடுதிகள் செய்தல்;இது 16 தலைமுறைகளைப் பாதிக்கும்.
21.இறைவழிபாடு செய்யாமல் தடுத்தல்,இறைவழிபாடு,ஜோதிடம்,ஆன்மீகச் சேவைகளை இழிவுபடுத்துதல்(.விஜய் டிவி, சன் டிவி ஞாபத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
22.முறையற்ற உறவுகளை ஊக்குவித்தல்;உருவாக்குதல்;பரப்புதல்;உருவாகக் காரணமாக இருத்தல்( தொலைக் காட்சியின் மெகாத்தொடர்கள்?!)
23.எதற்கெடுத்தால்  கோபப்படுதல்;பொறாமைப் படுதல்; சந்தேகப்படுதல்.
இது தவிர,இன்னும் சில பாவங்கள் இருக்கின்றன.வார்த்தைகளால் அச்சிட முடியாத பாவங்கள் அவை.

இவற்றைத்தவிர்த்து நிம்மதியாக வாழ்ந்தால் மறுபிறவி நல்ல பிறவியாக அமையும்.வாழ்க வளமுடன்!!!
                   

                                       





Tuesday, September 14, 2010

போபால் விஷவாயு அழிவும் அமெரிக்காவின் சுயநலமும்

போபால் விஷவாயுஅழிவும் அமெரிக்காவின் சுயநலமும்







யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனம் நமது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில் தனது தொழிற்சாலையை ஊருக்குள் நிறுவியது.அதன் கழிவு டாங்க் கி.பி.1984 ஆம் ஆண்டில் வெடித்து பல்லாயிரம் இந்தியர்கள் சில நிமிடங்களில் மரணமடைந்தனர்.இந்த விபத்தின் விளைவாக,இந்த விபத்து நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகியும்,இறந்தவர்களுக்கும்,பாதிக்கப்பட்டு நடைபிணமாக வாழ்பவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை சிறிதும் தரப்படவில்லை;


விபத்து நிகழ்ந்ததும்,இந்த ஆலையின் தலைமை நிர்வாகி வாரன் ஆண்டர்சன் ராஜமரியாதையோடு அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்ல அப்போதைய மத்தியப்பிரதேச மாநில முதல்வர் அர்ஜீன்சிங்கும்,அப்போதைய இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.






தற்போது கி.பி.2010






இந்தியாவில் அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால்,இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.500 கோடிகள் வரை மட்டுமே இந்த அணு மின் உலைகளை அமைத்துத் தரும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்குத் தரும்.(உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால்,அணு உலைகளை அமைத்துத் தரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தரும் இழப்பீட்டுத்தொகை குறைந்த பட்சம் ரூ.1500 கோடிகள் தரும் என சட்டம் இயற்றியுள்ளன.)இந்த சட்டத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கியப் பின்னரே, அமெரிக்க நிறுவனங்கள்,இந்தியாவுக்கு அணுமின்சாரம் தயாரிக்கும் புதிய அணு மின் நிலையங்களை அமைத்துத் தரும் என அமெரிக்க அரசு அடம்பிடிக்கிறது.






(அதாவது போபாலில் நாங்கள் 40000 இந்தியர்களைக் கொன்றோம்.இந்தியர்களாகிய நீங்கள் எங்களை இன்னும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறீர்கள்.மிக்க நன்றி!!!


தற்போது, நாங்கள் ஓட்டை உடைசலான காயலான் கடைக்குப் போக வேண்டிய அணு ரியாக்டர்களை உங்களுக்கு கொள்ளை விலைக்கு தருவோம்;அது நிச்சயம் விபத்தினை உருவாக்கும்.ஆனால்,அதையும் உங்கள் நாட்டு சட்டப்படி, எங்களுக்கு சட்டப்பாதுகாப்புடன் தருவோம்.இதன் மூலம் இனிமேல் கோடிக்கணக்கான இந்தியர்களைக் கொல்வோம்; என சுயநல நயவஞ்சக அமெரிக்கா புரிய வைக்கிறது.)





















அகில இந்திய காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தியர்களின் நலனுக்கு ஆதரவாக இருந்ததில்லை;இந்தியாவின் சுயகவுரவத்தைப் பாதுகாக்கும் விதமாக செயல்பட்டதில்லை; ஒருநாளும் இந்தியாவும் அமெரிக்காவும் நட்புநாடாக இருக்கப் போவதில்லை;






காங்கிரஸ் கட்சியின் பிறந்த ராசி கன்னி;பிறந்த நட்சத்திரம் அஸ்தம்.






இந்தியாவின் சுதந்திர ஜாதகப் படி,இந்தியாவின் சுதந்திர ராசி கடகம்;நட்சத்திரம் பூசம்.






பழைய வல்லரசு அமெரிக்காவின் பிறந்த(சுதந்திர) ராசி கும்பம்.சுதந்திர நட்சத்திரம் சதயம்.தான் என்னநினைக்கிறோம் என்பதை யாருக்கும் காட்டாமல், பிறரை ஆழம் பார்ப்பதில் கும்பராசிக்கு நிகர் யாருமில்லை;






கும்பராசிக்கு ஆறாம் ராசியான கடகம்;கடக ராசிக்கு எட்டாம் ராசியான கும்பம். இரண்டு ராசிகளுக்கும் ஒருபோதும் ஒத்துப்போகாது;இரண்டு நாடுகளும் ஒருபோதும் நட்புநாடாக இருக்கவே முடியாது.










இப்பேர்ப்பட்ட தேசபக்த ஆட்சியாளார்களை நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் ஆன்மீகக்கடல் வாசகர்களே!!!

நீங்கள் பணக்காரர் ஆகிட ஒரு சுலபமான வழிபாடு

பெரும் செல்வ வளம் தரும் திருப்பதி வழிபாடு






உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்கள்,அவ யோகங்கள் இருந்தாலும் அவைகள் அடியோடு நீங்கி பெரும் செல்வச் செழிப்போடு வாழ ஒரு சுலப வழிபாடு இருக்கிறது.






நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலுக்குச் செல்லவேண்டும்.சென்று அங்கு சுப்ரபாத தரிசனம் செய்ய வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் (11 மாதங்கள்) சுப்ரபாத தரிசனம் செய்தால்,பெரும் செல்வ வளத்தின் அதிபதியாகிவிடுவீர்கள்.


இந்த சனிக்கிழமை சுப்ரபாத தரிசனத்தை ஒரு தவமாக,ஒரு யாகமாக,ஒரு லட்சியமாகச் செய்ய வேண்டும்.எப்பேர்ப்பட்ட இடர்ப்பாடுகள் வந்தாலும்,48 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்யும் வரை விடாமல் செய்ய வேண்டும்.






அப்படி திருப்பதிக்கே செல்ல இயலாத,ஆனால் வறுமையிலிருந்து அடியோடு நீங்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ விரும்புவோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.அவர்கள்,தமது வீட்டிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5 மணிக்குள் எழுந்து குளித்து தயாராகிவிடவேண்டும்.5மணிக்கு திருப்பதி வெங்கடாஜபதி படத்திற்கு மாலை அணிவித்து சுப்ரபாத கேசட்டை ஒலிக்கச் செய்ய வேண்டும்.சுப்ரபாத கேசட் ஒலித்து முடியும் வரை திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தின் முன்பாக தியானத்தில் அமர்ந்து மனப்பூர்வமாக நமது தேவை என்ன என்பதை வேண்ட வேண்டும்.சுப்ரபாதம் முடிந்ததும்,திருப்பதி வெங்கடாஜபதிக்கு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.


அதன்பிறகு,வீட்டுக்கு அருகில் இருக்கும் பசுவுக்கு இரண்டு வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும்;வாழைப்பழங்கள் கொடுத்தப்பின்பே,காலை உணவு அருந்த வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் செய்தால்,செல்வ வளம்மிக்கவர்களாக மாறுவது உறுதி!






நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல் பக்கம்3,மார்ச் 2008.

மலர் மருத்துவம் என்றால் என்ன?

மலர் மருத்துவம் சுருக்கமான வரலாறு







இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் MBBS,IRCP,MRCS முடித்துவிட்டு,சில காலம் ஆங்கில மருத்துவச் சேவை புரிந்தார்.ஆங்கில மருத்துவமான அலோபதி ஏராளமான பக்கவிளைவை உருவாக்கியதால்,அவர் ஓமியோபதி மருத்துவப்பட்டம் பெற்றார்.


பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மனமே என்பதை உணர்ந்ததால்,அவர் மலர் மருத்துவத்தைக் கண்டறிந்தார்.எந்த நோய்க்கும் மனமே மூலகாரணம்.மனதிலிருந்தே நோய்கள் ஆரம்பிக்கின்றன.எனவே,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமடைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.மனமகிழ்ச்சியானது உடலின் அனைத்துசெல்களுக்கும் பரவி,நோயாளி பரிபூரணகுணமடைகிறார் என்பதை தமது அனுபவத்தில் கண்டறிந்தார்.






இதனால்,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமாகும் என்பதைக் கண்டறிந்தார்.மனதில் வேலை செய்து அதனைக் குணப்படுத்தும் மருந்து எது என்பதை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.காடுகளில் கிடைக்கும் மரப்பட்டைகள்,இலைகள்,கனிகள்,காய்கள்,பூக்களை ஆராய்ந்து பார்த்தார்.டாக்டர் பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய பல நூல்களையும் வாசித்துப் பார்த்தார்.மலர்கள் மனிதமனங்களில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார்.மனித மனத்தை ஒழுங்குபடுத்தும் மலர்களைத் தேர்ந்தெடுத்தார்.38 வகையான மருந்துகளைத் தயாரித்தார்.இம்மருந்துகள் மனதைச் சீராக்கும்போது உடல் நலம் மேம்படுகிறது.


நன்றி:ஹோமியோபதி ஒரு அறிமுகம் தொடர் ,எழுதியவர் டாக்டர் ஏ.ராஜகோபால்,வியாசர்பாடி,சென்னை.செல்:9444163153.


நன்றி:டாக்டர் பி.எஸ்.பி.யின் விடியல் மாத இதழ் பக்கம் 31,மார்ச் 2008.

Monday, September 13, 2010

மரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்

ஆவிகள் உலகம் பற்றி







ஆவிகள் உலகத்தினைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில்,சில அதீத உளவியல் சம்பந்தப்பட்ட ஆழ்மனப்பயிற்சிகளை செய்துவரவேண்டும்.ஆவியுலகத் தொடர்பு,சூட்சும உடல் பயணம்,ஞான திருஷ்டி பயிற்சிகள் இதற்கு உதவும்.இதற்குத் தேவை மிகுந்த பொறுமையும் கடினப் பயிற்சியும் தான்.


இதற்குமுன் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:






டாக்டர் வெல் ஓவன் என்பவர் உயர் நிலை ஆவிகளைத் தொடர்புகொண்டு The Life Beyond The veil என்ற பெயரில் நான்கு பாகங்களில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.






கரோலின் லார்சன்(Caroline D.Larsen) எழுதிய Travels in the Spirit World என்ற புத்தகமும்,தியோசபிகல் சொசட்டியைச் சேர்ந்த சார்லஸ் லெட்பீட்டர் என்பவர் எழுதிய Astral Planes என்ற நூலும் அன்னிபெசன் ட் அம்மையார் எழுதிய Death and After என்ற நூலும் சூட்சும உடல் பயண அனுவங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.






இதேபோல்,சூட்சும உடல் பயணம் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த ஜார்ஜ் W மீக் என்பவர் After Death then What என்ற நூலும்,மறைமலையடிகள் எழுதிய மரணத்திற்குப்பின் மனிதர் நிலை என்ற புத்தகமும்,தம்மண்ணச் செட்டியார் அவர்கள் சூட்சும உடல் பயணம் என்ற புத்தகமும் ஏராளமான தகவல்களை தெரிவிக்கின்றன.






கி.பி.1996 வரை தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பாடத்திட்டத்தில் சூட்சும உடல் பயணம் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது.பிற்காலத்தில் பல்வேறுகாரணங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது.






நன்றி:மரணத்திற்குப் பின் மனித வாழ்வு தொடர்,பக்கம் 18,19,பி.எஸ்.பியின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்,பிப்ரவரி 2009.தொடரை எழுதியவர்:J.R.ஜீலியஸ்,ராமநாதபுரம்.செல்:9942338138.

சுதேசிச் சாதனை:மண்ணாலான குளிர்சாதனப்பெட்டி

சுதேசிக் கண்டுபிடிப்பு:களிமண்ணாலான குளிர்சாதனப்பெட்டி







குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மன்சுபாய் ப்ரஜாபதி என்பவர் மிட்டி கூல் என்ற குளிர்சாதனப்பெட்டியை களிமண்ணால் கண்டுபிடித்துள்ளார்.இதற்கு மின்சாரம் தேவையில்லை;காயகறிகள் தம் இயற்கை சுவை மாறாமலிருக்கின்றன.விலை மிகக் குறைவு.இதைப் பார்வையிட உலகெங்குமிருந்து விஞ்ஞானிகள்,பத்திரிக்கையாளர்கள் பார்வையிட வந்துகொண்டே யிருக்கின்றனர்.






இவரை நமது மானசீக நிரந்தர ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் “உண்மையான விஞ்ஞானி” என பாராட்டுகிறார்.






ஒரேநாளில் மண்ணால் செய்த தோசை சுடும் தவாக்கள் 600 ஐ தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும்போது இவருக்கு வயது 18.






தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி,தோசை சுடும் தவா,குக்கர்,குளிர்சாதனப் பெட்டி என இவரின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீள்கிறது.மேலும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும் திறனும் படைத்தவர்.






இவரதுபெரிய மகன் ‘’மண்பாண்டப்பொறியியலை”ப் பாடமாக எடுத்து பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 19,செப்டம்பர் 2010.

சுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்

சுதேசி கேள்வி பதில்கள்,செப்டம்பர் 2010







அமெரிக்க இந்தியப்பணியாளர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதே? உலக வர்த்தக அமைப்பில் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?






முறையீடு செய்யலாம்.உலக வர்த்தக அமைப்பின் ஷரத்துக்கு விரோதமானதுதான் என்றாலும் அமெரிக்கா அசைந்துகொடுக்காது.அவர்களது பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.அங்கு உள்ள அரசாங்கம் இளித்தவாய் அரசாங்கம் என தோன்றவில்லை.










ஹாலிவுட் நடிகை ஜீலியா ராபர்ட்ஸ் இந்துமதத்தைப் பின்பற்றுவது பற்றி?


மேற்கத்தியர்கள் கிழக்கு முகமாகத் திரும்புகிறார்கள்.நாம் நமது பாரம்பரியத்தை உணரவிடாமல் தடுப்பதை தனது அரசியல் கொள்கையாகவே காங்கிரஸீம் மேலும் சில கட்சிகளும் வைத்திருக்கிறது.அதன் நயவஞ்சகத்தை நாம் இன்னும் கூட உணரவில்லை;நம்மை இழிவுபடுத்துவதில் சன் டிவிக்கு அவ்வளவு சந்தோஷம்.






ஐ,டி.பொறியாளர்களில் 18% தான் பணிபுரிய லாயக்கானவர்கள் என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறியுள்ளதே?






அரசாங்கத்தை இழுத்து மூடு,ஆட்குறைப்பு செய் என தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கத்துவதற்கு இந்த ஆய்வு உதவலாம்.இது ஒரு பக்கமே.ஆனால் நமது பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் பொறியாளர்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் உண்மையே.அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவையே!!!






பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திவிட்டதே சீனா?






அமைதியாக நடந்துள்ளது இந்த மாற்றம்.(சீனா பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையானால்?)


இதே நிலையை இந்தியா செய்திருக்குமானால் இங்கே என்னென்ன அல்லாகலம் நடந்திருக்கும். . . கற்பனையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.






மாவோயிஸ்டுகளில் சண்டை நிறுத்தம் நீடிக்குமா?






யாருடன் தான் இந்த அரசு இறுதிவரை சண்டை செய்து வெற்றி பெற்றுள்ளது.ஆண்மையற்ற அரசு,பலவீனமான எதிர்க்கட்சிகளால் பலவானாகத் தெரிகிறது.






விஸ்வநாத் ஆனந்திற்கு டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டுள்ளதே?


அப்துல் கலாமிற்கு ஏன் மீண்டும் ஜனாதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது, அமிதாப் பச்சன் அரசுவிழாவில் கலந்து கொண்டதை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது அதே காரணம் தான் இதற்கும்.


(ஒரு முறை ஒரு செஸ் போட்டியில் விஸ்வநாத் ஆனந்த்,பா.ஜ.முதல்வர் நரேந்திர மோடியுடன் செஸ் விளையாண்டிருக்கிறார்).காங்கிரஸின் துக்கிரித்தனத்திற்கு அளவேயில்லை;மன்மோகன்,கபில்சிபில் என இந்த ஆண்மையாளர்களுக்குத் தேவை இத்தாலி சோனியாவின் அருள் மட்டுமே!மஹா கேவலம்.






விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் அமெரிக்க ராணுவம் பற்றி வெளியிட்டத் தகவல்களைப் படித்தீரா?


விக்கிலீக்ஸின் செய்திக்கசிவு கூட நல்லதுதான் செய்துள்ளது.ஆனாலும் அமெரிக்க இந்திய ஆட்சியாளர்களின் கண்களை இது திறந்துவிடாது.அவரவர்களுக்கு அவரவர் கணக்கு.குறைந்த பட்சம் அமெரிக்கக் கணக்கில் தேசபக்தியாவது இருக்கிறது.நமது இந்தியக் கணக்கில் ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே பிரதானம்.










தாலிபான்களை ஒழிக்க ஆண்டுக்கு 5000 கோடியை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுவருகிறது.இதில் பெரும்பகுதியை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்ற செய்தி பற்றி. . .


தாலிபான்களை விட இந்திய காஃபிர்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என இஸ்லாமிய பாகிஸ்தான் கருதுகிறது.பாகிஸ்தானின் நோக்கம் புரிந்தும் மைனாரிட்டி அரசியல் புரியும் நமது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அது பற்றிய உண்மையைக் கூட பொதுமக்களிடம் சொல்லத்தயங்குகிறார்கள்.இதுதான் மகா கொடுமை.






வறுமை இல்லாத் தமிழகமே என் லட்சியம் என்கிறரே கருணாநிதி.என்ன திடீர் ஞானதோயம்?


தமிழகம் அவரது குடும்பம்,அவரது குடும்பம் வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்பதுதான் அவரது கூற்றின் பொருள் என அறியவும்.










ப.சிதம்பரத்தின் ‘காவி பயங்கரவாதம்’ வார்த்தைப் பிரயோகம் பற்றி?






தான் மத்திய வர்த்தக ராஜாங்க அமைச்சராக இருந்தபோது உங்களை அனுப்பியது தவறு.மீண்டும் வர்த்தகம் செய்ய வாருங்கள் என 1997இல் வெள்ளையரை வருந்தி அழைத்தார்.கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த போது பாரதத்தின் பழம் பெருமையை பேசுவோரை தடைசெய்ய வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்றார்.


இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.எனவேதான் நரசிம்மராவ் இவரை நெருங்க விடவில்லை;சோனியாவிற்கு நெருக்கமாகிவிட்டார்.பிறகென்ன தேசியப் பெருமைகளை குறைத்துப்பேசித்தானே ஆக வேண்டும்.சமீபத்தில் சிபிஐயின் துஷ்பிரயோகத்தை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதிய இவர் நண்பர் கூட அதற்கு இவரை குறை கூறவில்லை.யாருக்கும் வெட்கமில்லை.






பலாத்காரம்,கற்பழிப்பு,தகாத பாலியல் உறவுகள் இவைதான் நக்சல்களின் வாடிக்கையாகிவிட்டது என சரணடைந்த சோபா மண்டி என்னும் நக்சல் இயக்க பெண் தீவிரவாதி காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?


இலங்கையிலும் காஷ்மீரிலும் இந்திய ராணுவத்தை குற்றம் சாட்ட நக்சல் இயக்கத்தவர் இந்த குற்றச்சாட்டைத் தான் முன்வைத்தனர்.இப்போதுதான் தெரிகிறது அவர்கள் எதைச் செய்கிறார்களோ,அதை இந்திய ராணுவத்தின் மீது பழியாக சுமத்தியிருக்கிறார்கள் என்று.


(நடைமுறை வாழ்க்கையில்,பிராடுகள்,ஒழுக்கங்கெட்டவர்கள் இதே மாதிரிதான் நேர்மையாகவும்,அப்பாவியாகவும் வாழ்பவர்கள் மீது பழி சுமத்திவருகின்றனர்.உலகமும் இந்தப் பொய்யுரையை நம்புகிறது:ஆன்மீகக்கடலின் கருத்து)

சொந்தமாக சிறுதொழில் துவங்கிட

நீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா?







ஆம் எனில்,பின்வரும் பொருட்களைத் தயாரிப்பதற்கும்,அதற்குத் தேவையான மூலப்பொருட்கள்,தயாரிப்புப் பயிற்சியும்,தொழில்நுட்ப விபரங்களையும் தர சென்னையைச் சேர்ந்த அஸ்ட்ரோ ட்ரேட் பிரைவேட் லிமிடெட் தரத் தயாராக இருக்கிறது.


இந்த நிறுவனம் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் காளிகாம்பாள் கோவில் அருகில் எண்:232 இல் செயல்பட்டுவருகிறது.தொலைபேசி:044 – 43412222 செல் எண்கள்: 98845 13369,96770 56804.






சலவை சோப்,குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு,தரையை சுத்தப்படுத்தும் க்ளீனிங் திரவங்கள்,பற்பசை,தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,முகப்பூச்சு க்ரீம்,குங்குமம்,ஊதுபத்தி,சூடக்கட்டி,ப்ளீச்சிங் பவுடர்,அழுக்கு நீக்கியான ஹைட்ரோகுளோரிக் ஆசிட்,சலவைப் பவுடர்,கழிப்பிடத்தை சுத்தப்படுத்தும் சாதனங்கள்,பல் தேய்க்கும் ப்ரஷ்,குளியல் சோப்,முகப்பூச்சு பவுடர்,பாத்திரம் துலக்கும் பவுடர்,சோப்பு,கம்யூட்டர் சாம்பிராணி, தரை


துடைப்பான்,பினாயில்,சானிடரி நாப்கின்.






இந்தியா வல்லரசாகிட,நாம் சுயச்சார்பான நாடாக மாற வேண்டும்.அதற்கு பக்கபலமாக இருப்பது சிறுதொழில்கள்தான்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 2, செப்டம்பர் 2010.

Thursday, September 9, 2010

இராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவர்களின் அதிசயம்

குருசாமி கோவிலுக்கு எதிரே ஒரு தெரு செல்கிறது.அந்தத் தெருவில் அமைந்திருப்பது சிவகாமி ஞானியார் ஜீவ சமாதி.






இங்கு தோப்புப்பட்டி சாலியர் தெருவில் ஆறுமுகச்சாமி என்ற அருளாளர் தோன்றினார்.அவர் கைத்தறி நெசவுத்தொழிலை மேற்கொண்டு இறைபக்தியில் சிறந்து விளங்கினார்.வேலை செய்யும்போது இறைவனின் திருவருளை பற்றிச் சுயமாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.ஓதாமல் உணர்ந்த உத்தம ஞானியாவார்.






ஒரு முறை ஆறுமுகச்சாமி அவர்கள் அருள்மிகு குருசாமி கோவிலில் அமர்ந்து இனிய அருள்பொழியும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.திடீரென குருநாதர் மீதே அறம்பாடத் துவங்கினார்.






உடனே,குருசாமி அவர்முன் தோன்றி, “நீ எனது திருவருளைப் பாடினாய்;கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால் என்னையே சாபமிடும் விதத்தில் அறம் பாட ஆரம்பித்துவிட்டாயே! பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே!!!” என்று அறிவுரை கூறினார்.










குற்றத்தை உணர்ந்த ஆறுமுகச்சாமி குருசாமி கோவிலுக்குக் கிழக்கே சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலில் தங்கி அருள்மிகு குருசாமி திருவருள் திறத்தை உணர்ந்து மகிழ்ந்து குருவருள் புகழ் என்னும் நூலை இயற்றினார்.அந்நூல் குருசாமியின் சிறப்புக்களையும்,பெருமைகளையும்,அருட்திறத்தையும் வெளிப்படுத்தும் செய்யுள் நூலாகும்.


ஆறுமுகச்சாமி ஞானம் பெற்றப்பின் வடதிசை சென்று ஆற்காட்டில் ஜீவசமாதி ஆனார்.குருநாதர் குருசாமியின் அறிவுரையால் மேல்நிலைக்கு உயர்ந்தார்.குருசாமியின் அருளாற்றலினை வெளிப்படுத்தும் சான்றில் இதுவும் ஒன்று.

இராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு

குருசாமி கோவில்,இராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது.
குருசாமி அவர்களின் பூர்விகம்,பெற்றோர்களைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை.
இவர் பல்லாண்டுகளாக பழனிமலையில் தவம் செய்துவந்தார்;ஒருநாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்தார்.
"நீ குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இல்லத்தில் பிச்சை ஏற்று உண்பாய்! பிச்சையளித்த பெண் உன்னிடம் பிள்ளை வரம் கேட்பாள்;நீயும் பெண் குழந்தை பிறக்க வரம் அளிப்பாய்; அப்பெண் குழந்தை உன் வளர்ப்புமகளாகி உனக்கு பணிவிடை செய்யும்.அக்குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நீயே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வாய்.

நீ ஜீவ ஐக்கிய சமாதி அடைந்தபின் உன் வளர்ப்பு மகளும் அவர் தம் கணவரும் உன் சமாதியைப் பராமரித்து வருவார்கள்.அவர்கல் காலத்திற்குப் பின் அவர்கல் பிள்ளைகள் வழிவழியாகப் பராமரித்து வருவார்கள்.

நீ ஜீவ சமாதி அடையும் இடம் சிறப்புற்று விளங்கும்.நாள் தோறும் உச்சிக்கால பூஜையில் உனக்குக் காட்சியளிப்பேன்.தென் அழகாபுரி நோக்கிச் செல்" என வரம் அளித்தார்.
குருசாமி காசியிலும் பழனி மலையிலும்பல காலம் தவம் மேற்கொண்டார் என்பதற்கு அக்கால ஒயில் கும்மியே சான்று!!!

காசியில் கன கோடி காலம்
ஆற்றங்கரையில் அநேக கோடி காலம்
பன்னிரெண்டாயிரம் வருஷம் பழனிமலையில்
நேர்த்தியதாகவே சாலியர்
கோத்திரம் நிலை நிறுத்த வந்த குருநாதன். . .

குருசாமிகளின் வளர்ப்புமகளின் பெயர் 'அன்னை பழனியம்மாள்'ஆகும்.அவரது கணவரின் பெயர் 'அய்யா அனஞ்சனேய பெருமாள்' ஆகும்.இவர்களின் வாரிசுகள் மூன்றுபேர்கள் ஆவர்.சி.சிவகுருநாதன் பூசாரி வகையறா; ரெ.சிவஞானம் பூசாரி வகையறா;சி.குருவாரெட்டியார் பூசாரி வகையறா இந்த மூன்று வம்சாவளியினர் இன்றும் குருசாமி கோவிலின் பூசாரியாக தொண்டுபுரிந்துவருகின்றனர்.

குருசாமி அவர்கள் ஆனிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜீவ ஐக்கியம் ஆனார்கள்.இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் நின்ற நாளில் பிற்பகல் 3 மணியளவில் சுவாமிக்கு ஆண்டுகுருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.அன்றும் ஒவ்வொரு கார்த்திகைக்கும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

குருபூஜை முடிந்து ஒரு மண்டலம் கடந்து(40 நாட்கள் கழித்து) ஒவ்வொரு  தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் 7 ஆம் தேதியில் குருநாதரின் சீடர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சாலியர்களின் தெருக்கள் வழியே நகர்வலம் வந்து  குருசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுவருகின்றனர்.

ஏனெனில்,குருசாமி ஜீவ ஐக்கியமான 40 நாளில் லிங்கம் அமைக்கப்பட்டது;அதனால் 40 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது.எனவே,ஆவணி 7 ஆம் தேதியானது பாலாபிஷேக நாளாகவும் இருந்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் குருசாமி கோயிலுக்கு வந்து வழிபடுபவர்க்கு பணக்கஷ்டம் நீங்குகிறது;ஓராண்டுக்கு மேல் தினமும் குருசாமி கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்களின் குடும்பக்குறைகள்,நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகின்றன என்பது அனுபவ உண்மை.

pithru parikaaram

‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா?









தமிழ்.வெப்துனியா.காம்: பித்ருக்களுக்கு திதி கொடுத்தல் என்பது நமது நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. என்றைக்கோ இறந்தவர்களுக்கு இன்றைக்கும் திதியா என்ற கேள்வி பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமல்ல, சாமி கும்பிடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இறந்த எவர் ஒருவரின் ஆத்மனும் அடுத்த 3 ஆண்டுகளில் பிறப்பு எய்திவிடுகிறது என்ற ஆழமான ஆன்மிக ஞானமும் இந்த நாட்டில் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் இதனை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது எத்தனை ஆண்டுகளுக்குச் செய்யலாம் ஏன்?






ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான விடயம் என்று வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசிப்போம். நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். பிறகு நமக்கு ஒரு பாதையை தெரிந்தோ, தெரியாமலோ அமைத்துத் தந்தவர்கள். இன்றைக்கும் பலர் பாட்டன் சொத்துக்களில் வாழக்கூடியவர்களை பார்க்கிறோம். அவர் மட்டும் அப்ப கஷ்டப்பட்டு கடையை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இவர் இன்றைக்கு காலாட்டிக்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களெல்லாம் இதில் வருகிறது. அதனால்தான் பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திதி கொடுக்கிறோம்.






பொதுவாக பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அமாவாசை அன்று. வானவியல் படி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. சூரியனை பிதுர்காரகன், சந்திரனை மாதுக்காரகன் என்று சொல்கிறோம். பிதுர் என்றால் பிதா, மாது என்றால் மாதா. இதேபோல சூரியனை ஆத்மக்காரகன் என்றும், சந்திரனை மனோக்காரகன் என்றும் சொல்கிறோம். ஆத்மாவும், மனதும், இந்த இரண்டிற்கும் உரிய கிரங்கங்கள் ஒன்று சேரக்கூடிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபடும் போது நமக்கு ஒருவித சக்தி கிடைக்கும். முடித்துவிட்டு வந்தார் திடீரென்று முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள்.






நல்ல முன்னுதாரணமாக இருந்த பாட்டன், பாட்டியை நினைத்து உட்கார்ந்து பிதுர்க்கு வேண்டிய கர்மாவெல்லாம் செய்யும் போது, அவர்களுக்குள் ஒரு இன்டீயூஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தற்காலிக ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருமாதி போன்றதையெல்லாம் பெரும்பாலும் நதியோரமாக செய்வார்கள். அந்த நதியில் நீராடும் போதும் எனர்ஜி கிடைக்கும். அதனால் இதெல்லாம் ஒரு சாதகமான செயல்கள்தான். அதனை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அதற்காக ஆடம்பரமாக செய்யக்கூடியது. நன்றிக்காக அவர்களை நினைத்துச் செய்ய வேண்டியது. அந்த நினைவுகளில் 10 நிமிடமோ, 15 நிமிடமோ இருப்பது. அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சிப்பது. இதற்கெல்லாம் அது உதவிகரமாக இருக்கும்.

rasi and 8 lingam

திருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம்

அண்ணாமலை கோவிலும் அஷ்டலிங்கங்களும்

திரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்

Friday, September 3, 2010

அன்றே கொல்லும் தெய்வம்:கள்ளக்காதலில் நடந்த ஒரு நிஜம்:நன்றி தினமலர் 3.9.2010

அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்'















அவினாசி : "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி பழசாகி விட்டது; தெய்வமும் இன்றே கொல்லும் என்பதை போல, அவினாசி பெருமாநல்லூர் அருகே கள்ளக்காதல் கொலை சம்பவம் நடந்துள்ளது.







திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.







அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.







விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.







கள்ளத்தொடர்பு அம்பலம்: கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.







இவ்வழக்கு குறித்து அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி கூறியதாவது: ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றினோம். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதும் தெரிந்தது. ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷûக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.







கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வாறு டி.எஸ்.பி., பழனிசாமி கூறினார்.







அன்றே கொன்ற தெய்வம்: "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி. ஆனால், ரமேஷ் - சீதாலட்சுமி விஷயத்தில், இது மாறி விட்டது. கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித்த இளந்தமிழ் விஞ்ஞானி:

பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்




















மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாணவர் மணிகண்டன் (18), பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.














இங்குள்ள ஒ.வெ.செ., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர் கண்டுபிடித்துள்ள கருவியின் பெயர் "3 ஜி வெய்கிள் கன்ட்ரோலர்'. இக்கருவியில் மொபைல் போன் பொருத்தப்பட்டுள்ளது. பைக் திருடு போகும் பட்சத்தில், அந்த மொபைல் போனை தொடர்பு கொண்டவுடன், அதே இடத்திலேயே இன்ஜின் நின்று விடும்; அலாரம் அடிக்கும், ஸ்டார்ட் ஆகாது. பைக் இருக்கும் இடம் குறித்து, நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வரும். (மொபைல் நிறுவனத்தின் டவர் அமைந்துள்ள இடத்தை சுட்டிக்காட்டும்). "சைடு ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி விட்டு, மறதியாக அதே நிலையில் பைக்கை எடுத்தால், ஸ்டார்ட் ஆகாது. பகலில் முகப்பு விளக்கை "ஆன்' செய்து பைக் ஓட்டினாலும், எரியாது; இரவில் தானாகவே விளக்குகள் ஒளிரும். ஹெல்மெட் அணிந்தால் தான் ஸ்டார்ட் ஆகும். செல்லும் போது ஹெல்மெட்டின் கிளிப்பை கழற்றினால் கூட, பைக் நின்றுவிடும். பிரேக் ஷூ தேய்ந்திருந்தால், அதுகுறித்து ஒலி எழுப்பும். விபத்து ஏற்படும் போது "108' ஆம்புலன்ஸ், போலீஸ், உறவினர் ஒருவருக்கும் தானாகவே எஸ்.எம்.எஸ்., செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.














மணிகண்டன் கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள், உறவினர் ஒருவரும் இக்கருவியை தயாரிக்க ஊக்கம் அளித்தனர். இதன்மதிப்பு 3,000 ரூபாய்,'' என்றார். இவரது தந்தை டீ கடையில் வேலை செய்கிறார். படிப்பில் முதலிடத்தில் வரும் மணிகண்டனுக்கு பொதுநல அமைப்புகள் உதவினால், இன்னும் பல கருவிகளை கண்டுபிடிப்பார்.

இவரைப் போன்ற பல கண்டுபிடிப்பாளர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இப்படிச் செய்வதாலும் நமது பாரதம் வல்லரசாகவும்,நல்லரசாகவும் மாறும். இவரது கண்டுபிடிப்புத்திறனுக்கு நமது ஆன்மீகக்கடல் தலை வணங்குகிறது.
நன்றி;தினமலர் 3.9.2010

இந்திரியங்களை இயக்குவது எது? நன்றி தமிழ்வெப்துனியா

இ‌ந்‌தி‌ரிய‌ங்களை இய‌க்குவது எது?



செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010( 15:19 IST )






தமிழ்.வெப்துனியா.காம்: சமீபத்தில் படித்தேன், இந்திரியங்களை வெள்ளி இயக்குகிறது. துக்கம், நரம்பு, தசை, மரணம் ஆகியவற்றை சனி தீர்மானிக்கிறது என்று பார்த்தேன். இது எந்த அளவிற்கு உண்மை? எப்படி?






ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: விந்தணுக்கள் இருக்கிறதல்லவா, சுக்கிலம். சுக்கிலத்திற்கு சுக்ரன்தான். இந்த சுக்கிலத்தோட வீரியத்தை நிர்ணயிப்பது சுக்ரன் கையில்தான் இருக்கிறது. ஆனால், கருவுறத் தகுதியில்லாத ஆண்களெல்லாம் உண்டு. அதனை நாம் ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை சுக்ரனை மட்டுமே பிரதானமாக வைத்துச் சொல்லிவிட முடியாது. செவ்வாய் மஜ்ஜைக்குரிய கிரகம். எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகிறது. 10 சொட்டு ரத்தம் சேர்ந்துதான் ஒரு விந்தணு உருவாகிறது என்பது ஒரு கணக்கு. எனவே, ரத்தத்தினுடைய அணுக்கள் எல்லாம் விகிதாச்சாரப்படி விந்தணு உருவானால், அந்த விந்தணுவிற்கு எல்லா விதத்திலும் கருவுறும் தன்மை இருக்கிறது.






பிரதானமாக பார்த்தால் செவ்வாய். ஏனென்றால், செவ்வாய்தான் ரத்தம் எப்படி இருக்கும், வீரியம் உண்டா என்பதையெல்லாம் நிர்ணயிக்கும். ஆண்களுக்கான எழுச்சி இதையெல்லாம் செவ்வாயை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கடுத்துதான் சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரன்தான் விந்தணுக்களுடைய நிறம், அதனுடைய தன்மை, பிறகு அதனுடைய வேகம் - வேகமாகப் போய் கரு முட்டையுடன் மோதி கலக்க வேண்டும் - இந்தப் பகுதியை சுக்ரன் எடுத்துக் கொள்கிறார். விந்தணுவினுடைய உருவாக்கம் செவ்வாய். விந்தணுவினுடைய செயல்பாடு சுக்ரன். எனவே விந்தணுவினுடைய பங்களிப்பில் செவ்வாய், சுக்ரனுடைய பங்களிப்பு அதிமாக உள்ளது. சுக்ரன் ஸ்லோகிதம் கலப்பது இதெல்லாம் சுக்ரன்தான்.






நரம்பெல்லா‌ம் சனி பகவான்தான். ஏனென்றால் சனி வலுவாக இருந்தால்தான் பக்கவாதமெல்லாம் வராமல் இருக்கும். சனி கெட்டுப் போயிருந்தால் பக்கவாதம், மூளைக் காய்ச்சல், சனி கெட்டிருந்து குரு பார்த்தாரென்றால் இடது கையைத் தாக்கும். மூளை வேறு விதத்தில் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.