Monday, June 27, 2016

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!





ஆனி மாத தேய்பிறை அஷ்டமி 27.6.16 திங்கட்கிழமை காலை 11.32 முதல் 28.6.16 செவ்வாய்க்கிழமை காலை 8.53 வரை


 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

30.தின்னக்கோணம் கிராமம்,முசிறி தாலுகா,திருச்சி மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அமைந்திருக்கின்றது;பராந்தகச் சோழன் கட்டியது இது;



31.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

32.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

33.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

தினமும் துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவ அஷ்டகம் 33 முறை வீட்டிலேயே முறைப்படி ஜபித்துவருவதன் மூலமாக நீண்டகாலக் கடன்,நீண்டகாலமாக வராமல் இருக்கும் கடன் இவைகளைத் தீர்க்க முடியும்;கடந்த சில ஆண்டுகளில் பலர் முறைப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வீட்டிலேயே வழிபட்டு வளமான வாழ்க்கையை அடைந்துள்ளனர்;

அடுத்த தேய்பிறை அஷ்டமி:26.7.16 செவ்வாய்க்கிழமை மாலை 6.15 முதல் 27.7.16 புதன் கிழமை மதியம் 3.22 வரை (சதுர்முகி வருடம்,ஆடி மாத தேய்பிறை அஷ்டமி)

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;9092116990



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Wednesday, June 22, 2016

வேண்டியதையெல்லாம் அருளும் ஸ்ரீவாராகி ஸகாயம்!


உங்களுடைய முற்பிறவிகள் ஐந்தின் கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

முற்பிறவிகள் ஐந்தில் நீங்கள் செய்த பாவச்சுமைகளே இப்பிறவியில் உங்களது கடனாக,நோயாக,துரோகமாக,அவமானமாக,நஷ்டமாக உங்கள் வாழ்க்கையை வழிநடத்துகின்றது;நீங்கள் ஏமாந்தாலும் அதுவும் இப்பட்டியலில் வரும்;


முற்பிறவிகள் ஐந்தில் நீங்கள் செய்த புண்ணியச்சுமைகளே இப்பிறவியில் உங்களது சொத்துக்களாக,புகழாக,திறமையாக,திறமையால் கிடைக்கும் சாதனையாக,வருமானமாக,கவுரவமாக,சுவை மிக்க உணவாக,வாகனங்களாக,சொகுசு வாழ்க்கையாக,மந்திர உபதேசமாக,கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதையாக இப்பிறவியில் அமைகின்றது;


பாவச்சுமையின் விளைவுகளும்,புண்ணியச் சுமையின் விளைவுகளும் உங்கள் மனத்தை பாதிக்காதவிதமாக எதிலும் பற்றற்று இருந்துவிட்டால் நீங்கள் சித்தராகத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்;அவமானம் வரும் போது அதனால் நிலைகுலையாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்;


புகழ் வரும் போது அதனால் திமிர்த்தனம்,அகங்காரம் வராமல் இருக்கப் பழகவேண்டும்;காம சுகங்களை அனுபவித்தப் பின்னர் அதை நினைத்து ஏங்காமல் இருக்கப் பழக வேண்டும்;இந்த மனோபாவம் உங்களுக்கு எப்போது உருவாகின்றதோ,அப்போது நீங்கள் உங்களின் பிறவிக் கணக்கினை குறைக்கத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்;


இந்த மனோபாவம் உருவாகிட ஒரு சுலபவழியை எமது ஆன்மீக குரு சிங்கம்புணரி முத்துவடுகநாதர் எமக்கு உபதேசித்துள்ளார்;அவரது அருளாசியினால் உங்களுக்கு போதிப்பதை எமது கடமையாகக் கொள்கின்றோம்;


ஏற்கனவே,பைரவ வழிபாடு செய்பவர்களும்,அன்னை வராகி மந்திரம் ஜபிப்பவர்களும் இதைப் பின்பற்றலாம்;வேகமான வாழ்க்கையில் தினமும் பைரவ மந்திர ஜபம் அல்லது வராகி மந்திர ஜபம் செய்பவர்களே ஈசனால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்;


பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தொடர்ந்து ஜபித்து வரும் உங்களது அனைத்து கஷ்டங்களும் விரைவில் விலகிவிடும் என்பது வராகி சத்தியம்!


இந்த வராகி லிகிதத்தை வீட்டில் இருக்கும் பிறரைச் செய்ய வைப்பதுதான் நன்று;(நேரம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்ய?)


ஒரு பச்சைத் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்தவாறு,ஒரு மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;இன்னொரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;


ஒரு கட்டுரை நோட்டில் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பின்வரும் அன்னை வராகியின் மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்;


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா(ஒரு முறை மட்டும்)

ஸ்ரீ வாராகி ஸகாயம்(108 முறை)


இதுதான் அந்த சர்வசக்தி வாய்ந்த வராகி மந்திரம்;பச்சை நிற மையினால் எழுதுவது மிகவும் நன்று;


பல்வேறு வேலைகள் பார்ப்பவர்கள் நாடு முழுவதும் மட்டுமல்ல;உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றார்கள்;அனைவருக்கும் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் இந்த மந்திரத்தை எழுதுவது சாத்தியப்படாது தான்;அவரவர் தமது இரவு தூங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக இந்த மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்;தினமும் மேலே கூறியவாறு வராகி சித்தரின் பெயரை ஒருமுறையும்,அதற்குப் பிறகு, ஸ்ரீவாராகி ஸகாயம் என்ற மந்திரத்தை 108 முறையும் எழுதவேண்டும்;


எழுத ஆரம்பித்துவிட்டால்,108 முறை எழுதி முடிக்கும் வரையிலும் பாதியில் எழுந்து செல்லக் கூடாது;செல்போனில் பேசக் கூடாது;டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;பூஜை அறையில் எழுதுவது மிகுந்த நன்மைகளைத் தரும்;


சிலரது வீடுகளுக்கு அருகில் பழமையான ஆலயங்கள் இருக்கலாம்;அது விநாயகர் ஆலயமாக இருந்தாலும்,சிவாலயமாக இருந்தாலும்;பெருமாள் ஆலயமாக இருந்தாலும்,அம்பாள் ஆலயமாக இருந்தாலும்,குலதெய்வ ஆலயமாக இருந்தாலும்,முனீஸ்வரன் ஆலயமாக இருந்தாலும்,ஆஞ்சனேயர் ஆலயமாக இருந்தாலும் சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதலாம்;(இரவு 9 மணிக்கு எப்படி இந்த கோவில்கள் திறந்திருக்கும்? நீ என்ன லூசாப்பா ? என்று நினைப்பது புரிகின்றது; அதனால் தான் முடிந்தால் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றோம்;மாலை 6 மணிக்கு மேல் இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்திற்குள் உங்களூக்கு வசதிப்படும் நேரத்தில் எழுதலாம்;அருகில் கோவில் இல்லாதவர்கள் தான் இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டில் எழுத வேண்டும்)

இன்று முதல் தினமும் 108 முறை ஸ்ரீவாராகி ஸகாயம் என்று குறைந்தது 1008 நாட்கள் எழுத வேண்டும்;அதிகபட்சமாக உங்கள் வாழ்நாள் முழுவதும் எழுதலாம்;


இதை எழுதிட வயது வரம்பு இல்லை;10 வயது முதல் 120 வயது வரை யார் வேண்டுமானாலும் எழுதலாம்;அனைத்து ஜாதி,மத,மொழியைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எழுதலாம்;


பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஐந்து நாட்களில் எழுதக் கூடாது;தீட்டுக்களில்(பிறப்பு,ருது மற்றும் இறப்பு) கலந்து கொண்டால் மூன்று வாரங்கள் வரை எழுதக் கூடாது;

தாங்கள் எழுத ஆரம்பித்த  3வது நாள் சில அதிசயங்கள் நடைபெறும்;30 நாட்கள் கடந்ததும் உங்கள் வாழ்க்கைமுறை எப்படி மாறுகின்றது? என்பதை உணருங்கள்;90 வது நாளுக்குப் பிறகு என்ன நடைபெறுகின்றது? என்பதை எமக்குத் தெரிவிக்கவும்;

அடுத்த சில பிறவிகளோடு முக்தியை அடைய விரும்புவோரால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து 1008 நாட்கள் அன்னை வராகியைச் சரணடைய முடியும் என்பது வராகி சித்தர் சிங்கம்புணரி முத்துவடுகநாதர் ஐயா அவர்கள் உபதேசித்த வராகி ரகசியங்களில் ஒன்று!!!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!






Saturday, June 11, 2016

அனைத்து வளங்களையும் தரும் குளிகை கால வழிபாடு!


பரிகாரம் என்பது வர இருக்கும் துயரங்களில் இருந்து மீள்வதற்காக சில சுயக்கட்டுப்பாடுகளுடன் செய்யப்படும் முறையான பூஜை/ஜபம்/தானம்/இம்மூன்றும் இணைந்தது;


பரிகாரம் செய்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமலும்,மது அருந்தாமலும்,போதைப் பொருட்களை உபயோகப்படுத்தாமலும் இருக்க வேண்டும்;பரிகாரம் செய்த நாள் முதல் (குறைந்த பட்சம்) 90 நாட்கள் வரையிலும்;அதிக பட்சம் 300 நாட்கள் வரையிலும் மட்டுமாவது அசைவம்,மது,போதையைக் கைவிட்டால் மட்டுமே பரிகாரத்திற்கான பலன் நம்மை வந்து சேரும்;

பரிகாரம் செய்பவர்களுக்கு,யார் அந்தப் பரிகாரத்தை ஜோதிடப்படியோ அல்லது ஆன்மீக உபதேசப்படியோ உபதேசித்தார்களோ,அவர்களிடம் மட்டுமே பரிகாரம் செய்வதில் இருக்கும் நடைமுறை சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற வேண்டும்;


பரிகாரம் செய்வதற்கு முன்பாகவும்,செய்யும் போதும்,செய்தப் பின்னரும் ‘இந்த தோஷம் தீர்வதற்காக இப்படிப்பட்ட பரிகாரம் செய்கின்றேன்’ என்று தெரிவித்தால்,பரிகாரத்திற்கான பலன் நம்மை வந்து சேராது;அல்லது மிகவும் தாமதமாக பலன் வந்து சேருகின்றது;அல்லது முழுமையான பலன் நமக்குக் கிடைப்பதில்லை;என்பது எமது கடந்த 27 வருட ஜோதிட அனுபவம் ஆகும்;

மனிதனுக்கு விஷகலைகள் அதிகம்;அதனால் தான் புல்வெளியில் நடந்து சென்றப் பின்னர்,அங்கே புற்கள் முளைப்பதில்லை;நெகடிவ் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் அதிகம்;இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் துறையில் தமிழ்,தமிழினம்,தமிழ்நாடு என்று முகமூடி அணிந்து கொண்டு தமிழைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் நஞ்சை விதைத்துவருகின்றனர்;பொழுது போக்கு என்பதை ஒரு துறையாக்கி,அதன் மூலம் வருமானம் பார்ப்பதோடு,எப்படியெல்லாம் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கலாம்? எப்படி ஒற்றுமையான தம்பதியை பிரிக்கலாம்? எப்படி திமிர்த்தனத்தை வெளிப்படுத்தலாம்? எப்படி ஒருவருடைய கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையைச் சிதைக்கலாம்? என்பதைப் பிரதானமாகக் கொண்டு நமது கண்களையும்,காதுகளையும் நமது வீடுவரை ஒளிபரப்பி முட்டாளாக்குகின்றனர்;


இப்படிப்பட்ட சூழ்நிலையில் காலதேவனாகிய மஹா காலபைரவப் பெருமானின் அருளை விரைவாகப் பெறுவதற்கு சித்தர் பெருமக்கள் ஒரு எளிமையான அதே சமயம் வலிமை மிக்க வழிமுறைகளை உபதேசித்துள்ளனர்;

ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 3 மணி முதல் 4.30 வரையிலும்;
திங்கட்கிழமை அன்று மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரையிலும்;
செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் 1.30 வரையிலும்;
புதன்கிழமையன்று காலை 10.30 முதல் 12 மணி வரையிலும்;
வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும்;
வெள்ளிக்கிழமை அன்று காலை 7.30 முதல் 9 மணி வரையிலும்;
சனிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும்;
ஆலயத்தில் ஸ்ரீமஹா கால பைரவப்பெருமானை வழிபட மகத்தான நன்மைகள் தேடிவரும்;

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வர நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவோம்;

மேலே கூறிய நேரத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீமஹா கால பைரவப் பெருமானின் 1008 போற்றிகளை அவரது சன்னதியில் ஜபித்தாலே போதுமானது;கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டின் தெற்குப் பக்கச் சுவற்றில் எலுமிச்சைபழத்தினால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அதன் மீது குங்குமத்தால் மேல் பூச்சு பூச வேண்டும்;அதன் அருகில் நெய் தீபம் ஏற்றி வைத்து 1008 போற்றிகள் ஜபிக்கலாம்;(பாடக் கூடாது)

கோவிலில் மேலே கூறப்பட்ட நேரங்களில் கடைசி 30 நிமிடத்தில் மனப்பூர்வமான வேண்டிக் கொண்டு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தாலும் நமது கோரிக்கைகள் 

நிறைவேறும்;ஆமாம்! ராகு கால வழிபாட்டைவிடவும்,குளிகைக் கால வழிபாடு கோடி மடங்கு பலனைத் தரும்;
ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ 

ஜோதிடர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலைமை தெய்வம்!


காலத்தை தனது சுவாசத்தினால் இயக்கிவருபவரே காலபுருஷன்! (இவரது சுவாசமே வாக்கிய கணிதப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும்,எபிமரிஸ் பஞ்சாங்கமாகவும் விரிவடைகின்றது)இந்த காலபுருஷனின் இன்னொரு பெயர் தான் மஹா கால பைரவப் பெருமான்!! 

ஈசனாகிய சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒருபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி வெளிப்பட்ட சக்திகளில் முதன்மையானதும்,முக்கியமானதுமே மஹாகாலபைரவப் பெருமான்!!!(மற்ற சக்திகள்:ஆறுமுகக் கடவுள்,வீரபத்திரர்)
யார் ஒருவர் கடந்த மூன்று பிறவிகள் முழுவதும் சித்தர் ஒருவரின் சீடராக இருந்தார்களோ அவரே இப்பிறவியில்  மஹாகாலபைரவப் பெருமானை தினமும் வழிபடமுடியும்;


அல்லது

யார் ஒருவர் கடந்த மூன்று பிறவிகளிலும் பழுத்த சிவனடியாராக இருந்தார்களோ,அவரே இப்பிறவியில் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை வழிபடமுடியும்;என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் அவர்களின் சித்தர் உபதேசமொழி!


மனிதர்களின் செயல்களை எட்டுவகைகளாகப் பிரிக்கலாம்;ஆமாம்!ஒவ்வொரு மனிதனும் செய்யும் அனைத்து செயல்களையும் எட்டுவிதங்களுக்குள் வகைப்படுத்தலாம்;அதனால் தான் மஹா கால பைரவப் பெருமான் அஷ்ட பைரவர்களாக வடிவம் எடுத்தார்;எடுத்து ஒவ்வொரு செயலையும் செய்வதை கட்டுப்படுத்தும் தெய்வீக சூட்சும சக்தியாக இயங்க ஆரம்பித்தார்கள்;இந்த எட்டு பைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த சிவபடைப்புதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமான்!


இவரே சூரியனின் ப்ராண தேவதை;இவரே பூமியில் இருக்கும் தந்தைகளின் பிராண தெய்வம்;இவரே மனிதர்கள் அனைவரது மூளைக்குள் இருந்து இயக்குபவர்;இவரே செல்வத்தின் மூல முதற் கடவுள்!!!

மனிதர்கள் செய்யும் எட்டுவிதமான செயல்களின் மூலமாக 64 விதமான பாவவிளைவுகள் அல்லது 64 விதமான புண்ணிய விளைவுகள் பிறருக்கு ஏற்படும்;எனவே,இந்த அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் தலா எட்டு விதவடிவங்களாக துணை வடிவங்கள் எடுத்து 64 பைரவர்களாக அவதாரம் எடுத்தனர்;அஷ்ட பைரவர்களே அஷ்டகர்மா எனப்படும் மாந்திரீகத்திற்குள் ஆதிபிதாக்கள் ஆவர்;(வசியம்,மோகனம்,ஸ்தம்பனம்,ஆகர்ஷணம்,பேதனம்,
வித்வேஷணம்,மாரணம்)


அரசியலில் கிச்சன் கேபினெட் என்று கேள்விப்பட்டிருப்போம்;என்னதான் முதலமைச்சர், மந்திரிகள் என்று இருந்தாலும் முதலமைச்சரின் மனைவியானவர் தமது எண்ணங்களை முதலமைச்சரின் ‘மூடு’ பார்த்து சொல்லி,அதன் மூலமாக அரசாங்கத்தையே இயக்கிக் கொண்டிருப்பதற்கு கிச்சன் கேபினெட் என்று கிண்டலாகச் சொல்வது வழக்கம்;இந்த சூழ்நிலை இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மட்டுமல்ல;உலகம் முழுவதும் பல நாடுகளில் பல கால கட்டங்களில் இந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் பல அரசுகள் இயங்கி இருக்கின்றன;தற்போதும் இயங்கிவருகின்றன;எதிர்காலத்திலும் இயங்கும்;


நிஜவாழ்க்கையில் எந்த ஒரு ஆண் மகனும் தான் யார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பேச்சை கேட்கிறாரே(அந்தப் பெண் அந்த ஆணின் கள்ளக் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை;மகளாக இருக்கலாம்;அம்மாவாக இருக்கலாம்;மனைவியாகவும் இருக்கலாம்;செகரட்டரியாக இருக்கலாம்;மந்திரப் பாதுகாப்பு வழங்கி வரும் பெண் ஜோதிடராக இருக்கலாம்;பெண் மந்திரவாதியாகவும் இருக்கலாம்) அவரே பொது வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவார்;(ஆனால்,ஆணின் ஈகோ மிகவும் வலிமை மிக்கது;பிறரின் பேச்சைக் கேட்டாலும்,அதை பரமரகசியமாக வைத்துக் கொண்டு தானாகவே ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகத் தான் காட்டிக் கொள்வர்)

இது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமான ஒரு மனோதத்துவ ஆராய்ச்சியை மேல்நாடுகளில் பல ஆயிரம் தம்பதிகளிடம் மேற்கொண்டார்கள்;அதன் முடிவாக ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்;கடந்த 60 ஆண்டுகளில் 50,00,000 பிரதிகள் விற்று இன்றும் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது;

இந்த புத்தகத்தை சாதிக்க விரும்பும் ஒவ்வொரு ஆணும் பலமுறை வாசிக்க வேண்டும்;அதே போல,சாதிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வாசிக்க வேண்டும்;இந்த நூல் தமிழில் வெளிவந்திருக்கின்றது:அதுவே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மனம் தரும் பணம்! ஆங்கிலத்தில் Think & Grow Rich என்று வெளிவந்துள்ளது;
அதே போல,கடவுள்களிலும் பெரும்பாலான ஆண்கடவுள்களுக்கு சூட்சுமமான சக்தியாக இருந்து வழிநடத்துவது பெண் கடவுள்களே!

பிரம்மா என்ற அயன் கடவுளை சரஸ்வதி என்ற கலைவாணியும்;
விஷ்ணு என்ற பெருமாள் கடவுளை மஹாலட்சுமி என்ற பெண் கடவுளும்;
ருத்ரன் என்ற மகேஸ்வரன் கடவுளை ருத்ரி என்ற மகேஸ்வரியும்;
காலபைரவப் பெருமானை காலபைரவியும்;
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை அஜாமிளை என்ற சொர்ணதா தேவியும்;
உன்மத்த பைரவப் பெருமானை உன்மத்த பைரவி என்ற வராகியும்;
சதாசிவன் என்ற சிவபெருமானை சதாவராகி என்ற ஆதி வராகியும்
இயக்கிவருகின்றனர்;மனோதத்துவ ரீதியாக இந்த பூமியில் எந்த ஒரு ஆணும் அனாதை அல்ல;எந்த ஒரு பெண்ணும் அனாதை அல்ல;அப்படி இறைசக்தி எந்த ஒரு உயிரையும் படைக்கவில்லை;ப்ரம்மச்சாரி கடவுள்களான பிள்ளையாருக்கும்,ஆஞ்சநேயருக்கும் கூட வாழ்க்கைத் துணை உண்டு;இதன் சூட்சும அர்த்தம் என்ன?

எந்த ஒரு ஆணும் பெண் இல்லாமல் தனித்து இயங்க முடியாது;
எந்த ஒரு பெண்ணும் ஆண் இல்லாமல் தனித்து இயங்குவது இயலாது;

(விதிவிலக்குகளாக சில மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் வாழத்தான் செய்கின்றார்கள்;அவர்களின் அந்தரங்கத்தைத் துருவிப் பார்த்தால் அந்த தனித்து வாழும் ஆணுக்கும் ஒரு பெண்ணின் துணை நிச்சயமாக இருக்கும்;தனித்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கும் அதே நிலைதான்!)

எப்போதுமே ஆணுக்கு பெண் தெய்வம் வெகுவிரைவாக வரம் தரும்;
அதே போல,பெண்ணுக்கு ஆண் தெய்வம் சீக்கிரம் அருள் புரியும்;மீராவுக்கு கண்ணனின் அருள் ஏன் கிட்டியது என்பது புரிகின்றதா?

ஆண்டாளுக்கு அரங்கநாதப் பெருமாளின் ஆசி ஏன் விரைவாகக் கிட்டியது என்பது இப்போது உணர்கிறீர்களா?
 புனரபி மரணம்;புனரபி ஜனனம் என்று ஜோதிடக் கலை சொல்கின்றது;இதற்கு அர்த்தம் என்ன?

மீண்டும் இந்த பூமியில் பிறக்கின்றோம்;பிறந்து வாழ்ந்துவிட்டு இறக்கின்றோம்;இந்த பிறப்பு இறப்புச் சுழல் லட்சக்கணக்கான முறை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது;இதில் இருந்து மீண்டு இந்த பூமிக்கும்,வேறு எந்த பூமியிலும் பிறக்காமலும் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடுதான் பைரவ வழிபாடும்,வராகி வழிபாடும்!!!

ஒவ்வொரு ஆணும் அன்னை வராகியை வழிபடவேண்டும்;
ஒவ்வொரு பெண்ணும் பைரவப் பெருமானைச் சரணடைய வேண்டும்;
வராகியில் மூன்று வித வராகிகள் இருப்பதாக இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்;

முதல் வராகி:உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என்று அனைவருக்கும் தலைமை பெண் தெய்வம் லலிதா பரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதி சக்தி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி! இந்த அன்னை லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைமைத் தளபதி! இந்த அன்னையின் பிறப்பினை அறிந்த கொள்ள விரும்புவோர் பிரும்மாண்ட புராணம் என்ற நூலை வாசிக்க வேண்டும்;

இரண்டாம் வராகி:மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நவக்கிரகங்கள்;
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்;
பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துவது ப்ரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகள்;(சிவன் அல்ல ருத்ரன்!)
இந்த மும்மூர்த்திகளையும் இயக்குவது பரசிவம்;
பரசிவத்தை பராமரிப்பது சிவசிவம்;
சிவசிவத்தை விட சக்தி வாய்ந்த தெய்வம் ஆதி சிவம்;
ஆதிசிவத்தை இயக்குவது சதாசிவம் என்ற அண்ணாமலையார்;
இந்த சதாசிவத்தின் சக்தியே வராகி என்ற அபிதகுஜலாம்பாள் என்ற உண்ணாமுலை;(தற்காலத்தில் உண்ணாமலை என்பது பழக்கத்தில் அழைக்கின்றோம்)

பிரபஞ்ச அன்னை வராகியைச் சரணடைவது மிகவும் எளிது;
பின்வரும் அன்னையின் 12 பெயர்களை காலையில் 4.30 முதல் 6 மணிக்குள் ஒரு மாதம் வரை தினமும் 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;மாலை 6 மணிக்கு மேல் இரவு தூங்குவதற்கு முன்பு அதே போல 15 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

இரண்டாம் மாதத்தில் காலையில் 30 நிமிடம் வரையும்;இரவில் 30 நிமிடம் வரையும் ஜபித்து வரவேண்டும்;

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

மூன்றாம் மாதத்தில் இருந்து காலையில் 30 நிமிடம் வரை இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,வராகி பரணியை ஒருமுறை மனதுக்குள் பாடவேண்டும்;அதே போல,இரவில் 30 நிமிடம் வரை இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,வராகி பரணியை ஒரு முறை மனதுக்குள் பாடவேண்டும்;

பச்சைத் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி விட்டு,தரமான பத்தி அல்லது சாம்பிராணி அல்லது குங்கிலிய தூபம் ஏற்றி வைத்து விட்டு தினமும் ஜபித்து வரவேண்டும்;

வராகி பரணி என்பதும் வராகி மாலை என்பதும் வராகி அந்தாதி என்பதும் ஒன்றே தான்;ஒரு பாடல் நான்கு வரிகள் வீதம் 32 பாடல்களாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு அருகில் அமைந்திருக்கும் வீரசோழனில் திரு.பண்டித கவிராயர் இயற்றியது;

யார் தினமும் இருமுறை வராகி பரணியை அவர்கள் இருப்பிடத்தில் பாடிவருகின்றார்களோ,அவர்களுக்கு எந்த விதமான மாந்திரீக பாதிப்பும் ஏற்படாது;ஏற்கனவே,பிறரின் பொறாமையால் மாந்திரீக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அது விலகி ஓடிவிடும்;

அப்படி ஒடுவதற்கு ஒரு நாளுக்கு இரண்டுமுறை வீதம் குறைந்த பட்சம் 90 நாட்கள் தினமும் ஜபித்திருக்க வேண்டும்;அதிகபட்சமாக 1008 நாட்கள் ஜபித்துவிட்டால்,அதன்பிறகு,இப்பிறவி முழுவதும்(ஆயுள் முழுக்க) எப்போதும் எந்த வித மாந்திரீக பாதிப்பும் சிறிதும் ஏற்படாது;

அஷ்டகர்மாக்களில் பெரும்பாலானவர்களுக்கு வசியமும்,ஸ்தம்பனமும் மட்டுமே கைகூடும்;இந்த இரண்டை மட்டும் கற்றுக் கொண்டு தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்,தம்மைப் பாதுகாப்பதற்காக துஷ்ட சக்திகளில் ஏதாவது ஒன்றை அல்லது சிறு/குறு தெய்வங்களை தம்முடன் வைத்து ஆன்மீக சேவை செய்து வருகின்றனர்;இந்த துஷ்ட சக்திகள் மற்றும் சிறு/குறு தெய்வங்களின் பட்டியலை எடுத்தால் அது மிகவும் பெரியது;எமக்குத் தெரிந்ததை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;சுடலை மாடன்;இசக்கி,முனி,எட்சிணி,ஜின்,கருப்பசாமி,அதர்வண காளி,மயானகாளி,ஆஞ்சனேயர்,குரளி,காட்டேரி,குட்டிச் சாத்தான் மற்றும் இஸ்லாமிய,கிறிஸ்தவ சிறு தெய்வீக மற்றும் துஷ்ட சக்திகள்!

விநாயகர்களில் எப்படி 33 விதமான விநாயக அவதாரங்கள் உண்டோ,அதே போல காளியிலும் 30/40/50 விதமான காளிகள் உண்டு;எட்சிணிகளில் ஆயிரக்கணக்கான எட்சிணிகள் இருக்கின்றன;

அஷ்டகர்மா என்பதே மாந்திரீகம் ஆகும்;அஷ்ட கர்மங்களும் ஒருவருக்கு கைகூடிவிட்டால்,அந்த மந்திரங்கள் சித்தி அடைந்ததைக் கொண்டு ஆன்மீக முன்னேற்றத்தில் அடுத்த லெவலுக்குப் போக வேண்டும்;ஒட்டு மொத்த 130 கோடி இந்தியர்களில் 100 பேர்களுக்கு மட்டுமே அஷ்டகர்மாக்கள் கைகூடியிருக்கும்;மற்றவர்கள் அஷ்டகர்ம ஞானி என்றோ அல்லது அஷ்டகர்ம ஆசான் என்றோ தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டு தம்மைத் தேடி வருபவர்களுக்கு ஆன்மீக அல்லது ஜோதிட வழிகாட்டுதல் செய்து கொண்டிருக்கின்றனர்;இம்மாதிரியான ஆட்களின் நோக்கம் பெரும்பாலும் பணம் பண்ணுவதே முதன்மையான குறிக்கோளாக இருக்கின்றது;அரிதிலும் அரிதாகவே ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் இருக்கின்றனர்;சிலருக்கு பணம் பண்ணுவதோடு,பிறர் பல ஆண்டுகளாக இறைவழிபாடு,தொடர்ந்த மந்திர ஜபம்,தொடர்ந்த அன்னதானம்,தொடர்ந்த உழவாரப் பணி,தொடர்ந்த ஆன்மீகத் தொண்டு செய்து சேமித்து வைத்திருந்த புண்ணியத்தைத் திருடுவதை தடயம் இல்லாமல் திருடுவும் செய்கின்றனர்;

இம்மாதிரியான ஆன்மீகத் துரோகங்கள் நம்மை பாதிக்காமல் இருக்கவே அன்னை வராகியைச் சரணடைவது நமது கடமை ஆகும்;ஒராண்டுக்குக் குறையாமல் அன்னை வராகியைச் சரணைந்து ஒரு நாள் விடாமல் தினமும் அன்னையை ஜபித்து வந்தால்,அடுத்த கட்டமாக சில தெய்வீக பெண் தெய்வ வழிபாடுகள் தேடி வரும்;

இந்த ரகசிய பெண் தெய்வ வழிபாடுகள் ஒருபோதும் ஆன்மீக வார இதழ்களில்,மாத இதழ்களில்,தினசரி செய்தித் தாள்களில் வந்ததில்லை;இனி எப்போதும் வரப் போவதுமில்லை;இந்த வழிபாடுகளைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பல பரம ரகசியமாகப் பின்பற்றி எல்லோரையும் ஆட்டிப் படைத்து வருகின்றனர்;அமெரிக்கா,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முக்கியத் தலைமை அதிகாரிகளும்,இந்தியாவை மறைமுகமாக ஆட்டிப் படைப்பவர்களும் இந்த ரகசிய தெய்வங்களை தலைமுறை தலைமுறையாக வழிபட்டே இன்றும் சர்வ சுகபோகங்களுடனும்,எந்த ஒரு தீவினைகள் தாக்காத விதமாகவும் சுபிட்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்;

நாடாளும் யோகம் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்க வேண்டுமா? நமக்கு இருக்கக் கூடாதா? இல்லை நமக்கு அந்த அருகதை கிடையாதா?

ஜோதிடர்களின் குலதெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இருக்கின்றார்;ஜோதிடத்தின் ஆதி சக்தியாக அன்னை வராகி இருக்கின்றாள்;அன்னையைச் சரணடைந்தோர் தமது பிறப்பின் ரகசியத்தை இப்பிறவியிலேயே அறிந்துவிடுவார்;

சாதாரண மனிதர்களுக்கே காம உணர்ச்சி அதிகம்;குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்,குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள் சேர்ந்திருக்கும் போது பிறந்தவர்களுக்கும்,குறிப்பிட்ட லக்னத்தில்பிறந்தவர்களுக்கும் காம உணர்ச்சி மிக மிக மிக அதிகம்;பிறரின் தலைவிதியை ஜோதிட ஆலோசனையின் மூலமாக மாற்றும் ஜோதிடர்களுக்கு அதன் கர்மவினைகள் தாக்கும் அல்லவா? அதனால் அவர்களுக்கு பிறரை விட அதிகமாகத் தானே இருக்கும்;இந்த மித மிஞ்சிய சிற்றின்பத்தில் இருந்து மீள்வதற்கு 64 வராகி அவதாரங்களில் ஒரு வராகி அவதாரம் இருக்கின்றது;இந்த அன்னையைச் சரணடைந்துவிட்டால்,காமத்தையும் இப்பிறவியிலேயே ஜெயித்துவிடலாம்;(யாருக்கு தீவிரமான தேடல் இருக்கின்றதோ,அவரே இந்த அன்னையின் அருமை பெருமைகளையும்,வழிபாட்டு முறைகளையும் பெற்றிடுவார்)


ஓம் வராகி சிவசக்தி ஓம்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ