Thursday, August 30, 2018

பால பைரவர் தரிசனம் கிடைக்க ஒரு சுலப வழி


இதைப் பின்பற்ற கண்டிப்பாக மது,அசைவம்,போதைப் பொருட்களை கைவிட்டிருக்க வேண்டும்;
இந்த ஜபத்தை வீடு அல்லது கோவிலில் பைரவர் சன்னதியின் முன்பாக செய்து வரலாம்;
தினமும் காலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும்,மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும் புருவமத்தியை நோக்கி கிலி அங் என மனதால் தியானித்து வந்தால் பால பைரவர் தோன்றி உங்களுக்குத்துணையிருப்பார்.இதை குறைந்தது 90 நாட்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.இது ஒரு தியான மந்திரம்.

எந்த ஒரு ஆன்மீக முயற்சியையும் எவரிடமும் தெரிவிக்காமல் செய்வதன் மூலமாக அதில் வெற்றியைப் பெற முடியும் என்பதை உணருங்கள்;

விளம்பி வருடத்தின் அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்கள்;


இந்த நாட்களில் உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் உங்கள் குல தெய்வத்தை அதன் இருப்பிடம் சென்று மனம் உருகி வேண்டுங்கள்;

குறைந்தது 24 நிமிடங்கள் உங்கள் குலதெய்வத்தின் சன்னதியில் வேண்டிக் கொள்ள வேண்டும்;அந்த சமயத்தில் அழக் கூடாது;பிறரை சபிக்கக் கூடாது;கோபம் கொள்ளக் கூடாது;
இப்படி வேண்டுவதன் மூலமாக உங்கள் வாழ்க்கை வளமுடனும்,நலமுடனும் சீரோடும் சிறப்போடும் இருக்கும்;
யாரெல்லாம் உங்கள் பார்வையில் எந்த குறையும் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களது குலதெய்வத்தின் ஆசிகள் பரிபூரணமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

விளம்பி வருடத்தின் அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்கள் பட்டியல் இதோ:
9.9.2018 ஞாயிறு முழுவதும்
13.9.2018 வியாழன் மாலை 6.54 முதல் 14.9.2018 வெள்ளி மாலை 6.40 வரை(வ/பி பஞ்சமி)
8.10.2018 திங்கள் காலை 11.18 முதல் 9.10.2018 செவ்வாய் காலை 9.45 வரை
13.10.2018 சனி காலை 8.02 முதல் 14.10.2018 ஞாயிறு காலை 8.53 வரை(வ/பி பஞ்சமி)
7.11.2018 புதன்
12.11.2018 திங்கள்(வ/பி.பஞ்சமி)
6.12.2018 வியாழன் மதியம் 12.41 முதல் 7.12.2018 வெள்ளி மதியம் 1.07 வரை
11.12.2018 செவ்வாய் இரவு 7.14 முதல் 12.12.2018 புதன் 9.21 வரை(வ/பி.பஞ்சமி)
5.1.2019 சனி
10.1.2019 வியாழன் மதியம் 2.58 முதல் 11.1.2019 வெள்ளி மாலை 4.47 வரை(வ/பி.பஞ்சமி)
4.2.2019 திங்கள்
8.2.2019 வெள்ளி காலை 8.22 முதல் 9.2.2019 சனி காலை 9.47 வரை(வ/பி.பஞ்சமி)
5.3.2019 செவ்வாய் மாலை 7.34 முதல் 6.3.2019 புதன் இரவு 9.34 வரை
11.3.2019 திங்கள்
3.4.2019 புதன் காலை 11.46 முதல் 4.4.2019 வியாழன் மதியம் 1.28 வரை
9.4.2019 செவ்வாய் மதியம் 3.13 முதல் 10.4.2019 புதன் மதியம் 2.07 வரை(வ/பி.பஞ்சமி)
$ கடந்த 70 ஆண்டுகளில் படிப்படியாக நாம் மறந்து போன குலதெய்வ வழிபாட்டு நாட்கள் இவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
அன்னை மஹாவராகியை தொடர்ந்து 1008 நாட்கள் (3 ஆண்டுகள்) ஜபித்து வருவதால் குலதெய்வத்தின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும்;குலதெய்வம் தெரியாதவர்களும் கூட அசைவம்,மதுவை கைவிட்டு தினமும் அன்னை மஹாவராகியை இரவு ஒரு மணி நேரம் வரை ஜபித்து வர வேண்டும்;
ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ


இந்த 13 பெயர்களை தினமும் ஜபித்து வருவதாலும் குலதெய்வத்தின் ஆசிகள் நமக்கு கிட்டும்;

Tuesday, August 14, 2018

தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மகாவராகி!


எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே நமது பாரத தேசம் அனைத்து துறைகளிலும்(இல்லற வாழ்க்கை,நீதி நிர்வாகம்,விவசாயம்,பொருளாதாரம்,உணவு உற்பத்தி மற்றும் உணவு மருத்துவம்,ஆன்மீகம்,போர்க்கலை,சூட்சுமக்கலைகள் மற்றும் நிதி நிர்வாகம்,அரசியல்) அன்னை மஹாவராகியை தினமும் உபாசனை செய்து வந்ததால்     தன்னிறைவை பெற்றிருந்தது;

1980 களில் ஆங்கில வழி பள்ளிகளுக்கு லைசென்ஸ் கொடுக்க ஆரம்பித்ததன் மூலமாக தமிழ்நாட்டில் தமிழே தெரியாத சமுதாயத்தை உருவாக்கும் நயவஞ்சகச் செயல்திட்டம் நடைமுறைக்கு வந்தது;இதன் பின்விளைவுதான் இன்று பலருக்கு(100 க்கு 95 பேர்கள்) சைவ சித்தாந்தப் பாடல்களான தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்றவைகளுக்கு அர்த்தமும்    புரியவில்லை;சரியான விதத்தில் உச்சரிக்கவும் தெரியவில்லை;

முத்தமிழை வித்தவர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் தமிழ்மொழியையும்,தமிழ்ப் பண்பாட்டையும் கடந்த 30 ஆண்டுகளாக     தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்கும் வேலையைத் தந்திரமாகச் செய்தார்;ஆமாம்! தமிழ் மொழியை தன்னால் மட்டும் தான் காக்க முடியும் என்ற மாயையை அரசியல் களத்தில் உருவாக்கி,அந்த பொய்ப் பிம்பம் உடையாமல் பாதுகாத்து தமிழ் வம்சாவழியினர் தமிழே அறியாத விதமாக உருவாக்கும் கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றார்.


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் தான் ஒரு குழந்தையை சரளமாக பேசவும்,அழகாக எழுதவும் பயிற்றுவிக்கின்றது;பத்தாம் வகுப்பு வரையிலும் ஒவ்வொரு குழந்தையும் தாய் மொழியில் கல்வி பயில வேண்டும்;


ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டத்தினால் தமிழ் மீடியத்தில் படிக்கும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை சரியானவிதத்தில் எழுத விடாமல் கெடுக்கும்;இதன் மூலமாக,தாய் மொழியில் பயின்றாலும்,உருப்படாமல் போவதற்குரிய வேலையை செயல்படுத்தியுள்ளது வேதனைக்குரிய விஷயம்;இந்தத் திட்டத்தை செயல்படுத்திய நிழல் யார் தெரியுமா? உலகத்தையே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இலுமுனாட்டிகள் தான்!(அவர்களை எதிர்த்துப் போராடும் ஒரே இனம் தமிழ் இனம் என்று அறிந்தமையால் அவர்கள் இப்படிப்பட்ட தமிழ் இன அழிவு வேலைகளைச் செய்து வருகின்றார்கள்)



இதுமாதிரியான துரோகச் செயல்களை நமது நாட்டில் சர்வசாதாரணமாகச் செயல்படுத்துவது எதனால் தெரியுமா?


தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகியை வழிபடுவது குறைந்து போனதால் தான்! தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகி தான் என்பதே பலருக்குத் தெரியாத ஆன்மீக உண்மை!

தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் என்ற பூர்வீக ஜாதிகள் சுமார் 440 இருக்கின்றன;இவர்கள் பல நூற்றாண்டுகளாக சப்தகன்னியரை குலதெய்வமாகவும்,சதாசிவனை இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வந்துள்ளார்கள்.கடந்த 300 ஆண்டுகளில் இந்த கருத்து படிப்படியாகவும்,திட்டமிட்டும் பொதுமக்களிடம் இருந்து அதாவது இந்த 440 சமுதாய மக்களிடம் இருந்து அழிக்கப்பட்டு வேறு தெய்வ வழிபாடுகள் புகுத்தப்பட்டன;இதன் பின்விளைவாகத்தான் இன்று ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு சமுதாயத்திலும்,ஒவ்வொரு குலதெய்வ உறவுகளிலும் துரோகிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றார்கள்;கலியுகம் என்பதும் ஒரு காரணமாகும்;

ஞாயிற்றுக்கிழமையும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாட்களிலும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாட்களிலும்
செவ்வாய்க்கிழமையும் உத்திராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும் ஒருங்கிணையும் நாட்களிலும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் வரும் நாட்களிலும் 

பிறப்பவர்கள் முற்பிறவிகளிலும் சில சொல்ல முடியாத தவறுகளை சந்தர்ப்பவசத்தால் செய்துவிடுகின்றார்கள்:இவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற ஒரே ஒரு வழி மட்டும் தான் உண்டு;அது,மறைமுகமாக அன்னை மஹாவராகியையும்,இஷ்ட தெய்வமாக அவரவர் ஊரில் இருக்கும் அல்லது பக்கத்து ஊரில் இருக்கும் சுயம்புலிங்க ஆலயத்திற்கு தமது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத் தொண்டு ஆற்றிடவேண்டும்;

ராஜராஜசோழன் என்ற அருண்மொழித்தேவன் என்ற சோழமன்னனும் அவரது முன்னோர்களும் வெளிப்படையாக மஹாகால பைரவப் பெருமானையும்,பரம ரகசியமாக அன்னை மஹாவராகியையும் தான் வழிபட்டு வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்;ராஜராஜசோழனின் அப்பா திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு தங்கத்தால் ஆன பசுவை தானமாக அளித்தார்;அதன் விளைவாக உலகத்தை ஆளும் யோகம் நிறைந்த மகனான ராஜராஜசோழனை மகனாக பெற்றார்;


இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,குமரிக்கண்டம் முழுவதும் ராஜராஜசோழன் ஆட்சி நடைபெற்றது;அவரது ஆட்சிக்காலம் வரையிலும் தமிழ் மொழி வட்டெழுத்து முறைதான் புழக்கத்தில் இருந்து வந்தது;அவர் தமிழ் மொழியில் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இன்றைய சீனா,ஜப்பான்,தாய்லாந்து நாடுகளுக்குப் பரவாமல் போனது;அதனால் அவர்கள் மொழியினால் வேறுபட்டுப் போனார்கள்;ஆனால்,பண்பாட்டில் அவர்கள் இன்று வரையிலும் தமிழ் பண்பாட்டைத்தான் பின்பற்றிவருகின்றார்கள்:தவிர,விவசாயத்திற்குரிய ஒரே தெய்வம் அன்னை மஹாவராகி என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத உண்மை;அன்னை மஹாவராகியை பல நூற்றாண்டுகளாக உபாசித்து வந்தமையால் தான் தமிழ்நாட்டில் அதுவும் சோழ நாட்டில் 16,000 நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன;($இதனால் தான் சோழ வளநாடு சோறுடைத்து என்ற பழமொழியே உருவானது)

எந்த ஒரு கடவுளையும் முறைப்படி வழிபாடு,பூஜை,யாகம் செய்தால் அந்த தெய்வீக சக்தி மந்திரங்களுக்கும்,அவிர்ப்பாகத்திற்கும்,படையலுக்கும் கட்டுப்பட்டு வரங்கள் தந்துதான் ஆக வேண்டும்;

ஆனால்,அன்னை மஹாவராகியை அப்படி பூஜை,பரிகாரம் மூலமாக ஏமாற்றிடமுடியாது;மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் அன்னை மஹாவராகி ஓடோடி வந்து வரங்களை அள்ளித்தருவாள் என்று வராகி கல்பம் தெரிவிக்கின்றது;

ஆக,ராஜராஜசோழன் ஆட்சி காலம் வரையிலும் ஒரு சமுதாயம் மொத்தமும் மனதால் பிறருக்கு தீங்கு தர எண்ணாமல் வாழ்ந்திருக்கின்றது;அந்த வம்சாவழியில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் மற்றும் அயல்நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;இவர்கள் நேர்மையாக வாழத் துடிக்கின்றார்கள்:இவர்களுக்காகவே அன்னை மஹாவராகி வழிபாடு பற்றி எழுதுகின்றோம்!!!

சிவபெருமான் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தமது சக்தியில் ஒரு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;சிவபெருமானின் முதல் அவதாரமாக ஒரு சிறு சக்தி சிவத்திடம் இருந்து வெளிப்பட்டது;அதுதான் மஹா கால பைரவம்!

ப்ரபஞ்சத்தின் நலன் கருதி அந்த மஹா கால பைரவம் 8 வித அவதாரங்கள் எடுத்தன;அந்த 8 மஹா கால பைரவமும் 64 ஆக விரிவடைந்தன;இந்த 64 வித பைரவ சக்திகளின் துணை சக்திகள் தான் மஹா வராகி சக்திகள்!


நமது பூலோகத்தில் தான் பல குடும்பங்களில் மனைவியரின் ஆட்சி என்று நம்புகின்றோம்;மேல் உலகங்களிலும் இதே நிலைதான்;சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற பழமொழி சாதாரண பழமொழி அல்ல;அதனுள் ஏராளமான தத்துவங்கள் புதைந்திருக்கின்றன;அது இழிவான பழமொழி என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்;அது மாபெரும் தவறு;


மனிதர்கள் எட்டுவிதமான செயல்களைச் செய்கின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவச் செயல்கள் அல்லது 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்ய முடியும்;அதற்காகவே 64 விதமான பைரவ அவதாரங்கள் தோன்றின;64 வித பைரவ அவதாரங்களுக்குத் துணையாக 64 விதமான வராக சக்திகளும் உருவாகின;
மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இல்லறவாசிகளாக இருப்பதால்,முதன்மையான அஷ்டவராகிகளை படிப்படியாக வழிபட்டு வந்தாலே போதுமானது;


1.ஆதி வராகி

ஸ்ரீவித்யா மகார்ணவம் என்ற நூலில் ஆதி வராகியைப் பற்றி முழு விளக்கங்கள் இருக்கின்றன;மாத்ருகா தேவதைகளும்,பைரவர்களும் இந்த ஆதி வராகிக்கு பணிவிடை செய்ய காத்துக் கிடக்கின்றார்கள்;மனிதர்களுடைய நோய்களைத் தீர்க்கும் சாஸ்திரங்கள்,அஸ்திரங்களை தாங்கி அருள்பாலித்து வருகின்றாள் ஆதி வராகி;
மனிதர்களின் வினைகளால் ஏற்பட்டுள்ள தன்மைகளை அறிந்துள்ளாள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;அந்த வினைகளை எதிர்ப்பதற்கான மார்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றாள்;

2.லகு வார்த்தாளி என்ற லகு வராகி

மஹாவராகியின் அபிமானக் கோட்டையான மரகதக் கோட்டையில் சொப்பன வராகி,திரங்கரிணி,பஞ்சமி ஆகியோருடன் இந்த உன்மத்த வராகி வசித்துவருகின்றாள் என்று லலிதோபாக்யானம் தெரிவிக்கின்றது;
மஹாவராகியின் அங்கதேவியான இவள்,எதிரிகளின் திமிரை அடக்குபவள்;எதிரிகளின் அறிவுத்திறனை நிர்மூலமாக்கி அவர்களை பைத்தியமாக்கிவிடுவாள்;சத்தியத்திற்காகவும்,நீதி நேர்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் என்ற கொள்கை உடையவர்கள் இந்த அன்னையை தினசரி தியானிக்க வேணும்;
மிகப் பெரிய கொம்புகளையும்,மிகப் பிரம்மாண்டமான உருவத்தையும் கொண்ட இந்த அன்னை மஹாவராகியின் பிரதான செயலாளராகச் செயல்பட்டுவருகின்றாள்;நமது கோரிக்கைகளை உடனடியாக முடித்துக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவள் இந்த அன்னை!!!

3.பஞ்சமி வராகி

நாம் தெய்வீக நிலைகளை கொஞ்சம் அறிந்தால் மட்டும் தான் பஞ்சமி வராகியின் அவதாரத்தை புரிந்து கொள்ள முடியும்;

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் சூட்சுமமாக இயக்குவது நவக்கிரகங்கள்;இவர்கள் நமது முற்பிறவிகள் ஐந்தில் செய்தவைகளை அனுபவிக்கும் விதமான கிரக அமைப்பில் பிறக்க வைக்கின்றார்கள்;இவர்களை பல்வேறு சதவீத கலவையால் ஆட்டுவிப்பது பஞ்சபூதங்கள்;பஞ்சபூதங்களுடன் ஆட்டுவிப்பது அஷ்டதிக்பாலகர்கள்;பஞ்சபூதங்களை மும்மூர்த்திகளும்,மும்மூர்த்திகளை பதினோரு ஏகாதசருத்ரர்களும்,இவர்களை ஐந்துவிதமான சிவன்களும்,ஐந்துவிதமான சிவன்களை லலிதாபரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியும் இயக்கிவருகின்றார்கள்;

லலிதாபரமேஸ்வரியைத் தாங்குவது ஐந்துவிதமான சிவபெருமான்கள்;இந்த ஐந்துவிதமான சிவபெருமான்களில் ஒருவர் தான் சதாசிவன்;இவரது துணை சக்தியாக இருப்பவளே பஞ்சமீ வராகி!

சதாசிவனுடன் இணைந்து படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐந்துவிதமான தொழில்களையும் புரிகின்றாள்;

மோட்சங்கள்  ஐந்து வகைப்படும்;அவைகள்:-சாமிப்யம்,சாருப்யம்,சாயுஜ்யம்,கைவல்யம்
இந்த ஐந்து விதமான மோட்ச நிலைகளில் கைவல்ய நிலையை அருள்பவள் பஞ்சமி வராகி!

லலிதா சகஸ்ரநாமம் இவளை பஞ்சபூதேசி என்று அழைக்கின்றது;

4.அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி

லலிதாபரமேஸ்வரியின் குதிரைப்படைகளின் தலைவி இந்த அஸ்வாரூடா வராகி;
பக்தர்களின் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றல் படைத்தவள் இவள்;இவளை தொடர்ந்து வழிபட்டால் அரசாங்கமே உங்கள் காலடியில் கிடக்கும்;
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் நியாயமான வழியில் வெற்றியைப் பெறச் செய்யும் அன்னை இந்த குதிரைக்காரி;ஒற்றுமையான குடும்ப வாழ்க்கையை உருவாக்குபவளும் இவளே!

5.தண்டநாத வராகி

தவறு செய்பவர்களுக்குத் தண்டனையையும்,அன்புள்ளம் கொண்டு பிறரது தீங்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அபயத்தையும் அளிப்பவள் தண்டநாத வராகி!

6.தூம்ர வராகி

காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாச்சரியம் போன்ற துர்க்குணங்களுக்கு இவள் பகையானவள்;
இந்த அன்னையைச் சரணடைந்தால் மட்டும் தான் நமது ஆழ்மனதில் பல பிறவிகளாக புதைந்து கிடக்கும் துர்க்குணங்கள் அழியும்;
அழுக்கான ஆடைகள் மற்றும் சரியாக வாரப்படாத கூந்தலுடன் காட்சியளிப்பவள் இந்த தூமாவதி;
பிரளயத்திற்கும் படைப்புக்கும் இடையே பாழாக இருக்கும் வெற்றிடைத்தில் இருப்பவள் தான் இந்த அன்னை;


7.ப்ருஹத் வராகி

இவளது மறுபெயர் வார்த்தாளி;வடமொழியான சம்ஸ்க்ருதத்தில் வார்த்தா என்றால் ஆரோக்கியம்,நல்வாழ்வு என்று பொருள்;செழிப்பை உண்டுபண்ணி பூமியைக் காப்பாற்றும் விவசாயத்தின் சக்தியாக இருப்பவள் தான் இந்த ப்ருஹத் வராகி;
சொல்லின் வன்மை உடையவர்களாக இருந்தால் உங்களுக்கு உறுதுணையாக நின்று அருள்பாலிப்பவள்;
இவள் தான் சோழர்களை உலகாளும் அரசுக்கு உரிமையானவர்களாக மாற்றியதோடு,உணவுப் பஞ்சமே இல்லாத அன்னம் நிறைவு தேசமாக மாற்றியதும் இந்த அன்னையே!

8.சொப்பன வராகி

மந்திரமஹோததி என்ற நூல் 64 விதமான வராகி வழிபாட்டு முறைகளையும் தெரிவிக்கின்றது;
குருவின் மூலமாக முறையாகக் கற்று இத்தேவியின் மந்திரத்தை ஜபித்து வந்தால் அவர்களின் கனவில் தோன்றி நல்ல பலன்களை வாரி வழங்குபவள்;

எல்லா மனிதர்களும் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கலாம்;ஒரே நிபந்தனை;அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;முடியாத பட்சத்தில் முதல் மூன்று ஆண்டுகள் வரையாவது கைவிடவேண்டும்;


பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தாலே ஒரு ஆண்டுக்குப் பின்னர் 64 வராகி அவதாரங்களில் தாங்கள் எந்த அவதாரத்தைச் சேர்ந்த வம்சாவழியினர் என்பதை அறிந்து கொள்வீர்கள்!!!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ

தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா

ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை தினமும் 15 நிமிடம் வரையிலும்
இரண்டாவது வாரம் முழுவதும் 20 நிமிடம் வரையிலும்
மூன்றாவது வாரம் முழுவதும் 25 நிமிடம் வரையிலும்
நான்காவது வாரம் முழுவதும் 30 நிமிடம் வரையிலும்
ஐந்தாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடம் வரை ஜபித்துவிட்டு,வராகி மாலையை ஒரு முறை ஜபிக்க வேண்டும்;
ஆறாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடமும்,ஒருமுறை வராகி மாலையும்,வராகி 64 போற்றிகள் ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

ஆறாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை இப்படிச் செய்ய வேண்டும்;

ஒரு பச்சைத் துண்டு மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்,இன்னொரு மண் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபத்தையும் ஏற்றி வைத்து ஜபிக்க வேண்டும்; தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது இரவுப் பொழுதில் அல்லது இரண்டு நேரங்களிலும் இவ்வாறு அமைத்து ஜபிக்கலாம்;

வராகி சித்தர் என்று போற்றப்படும் ஸ்ரீவாத்தியார் ஐயாவின் அருளாசிகளோடு அன்னை மஹாவராகியைச் சரணடைவோம்;

ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ

வராகி மாலை என்ற வாராஹி மாலை


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;

குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;

இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)

அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;

தீராத பிரச்சினை அல்லது கர்மவினையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்களா?

இந்த வராகி மாலையை ஒரு நாளுக்கு ஐந்து முறை வீதம் 90 நாட்கள் இடைவிடாமல் ஜபித்தால் போதுமானது;இந்த 90 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்தில் அம்பாள் சன்னதியில் ஜபிப்பது மிகவும் நன்று;இந்த 90 நாட்களும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;

இப்படி 90 நாட்கள் ஜபித்தால்,அதன் பிறகு அல்லது அந்த 90 நாட்களுக்குள் உங்கள் நீண்ட கால பிரச்சினை/கர்மவினை தீர்ந்துவிடும்; அல்லது தீர்வதற்கு வழிகிடைத்துவிடும்;

பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;

இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!

மஹாவராகியின் பிறந்த நாட்கள் 17.7.2018 & 15.8.2018

இந்த விளம்பி ஆண்டு,ஆடி மாதத்தில் இரண்டு முறை வளர்பிறை பஞ்சமி திதி வந்திருக்கின்றது;
ஆடி 1 ஆம் நாள்(17.7.2018 செவ்வாய்)
மற்றும்
ஆடி 30 ஆம் நாள் (15.8.2018 புதன்) அன்றும் வளர்பிறை பஞ்சமி திதி இருக்கின்றது;இந்த இரண்டு நாளுமே அன்னை மஹாவராகியின் பிறந்த நாள் ஆகும்;

ஸ்ரீசக்கரம் என்ற பெயருடைய அமைப்பின் மையத்தில் இருந்து அனைத்து தெய்வங்களையும் படைத்து,காத்து,பராமரித்து வருகின்றாள்;
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் அனைத்து படைகளையும் தலைமை தாங்கி நடத்துபவள் ஸ்ரீமஹாவராகி!

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் புருவ மத்தியில் இருந்து ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஆணையின் பெயரில் ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி அன்று உதயமானாள்;
இன்றும் நம் ஒவ்வொருவருடைய புருவ மத்தியிலும் சூட்சுமமாக இயங்கி வரும் ஆக்ஞ்சா சக்கரத்தை இயக்கிவருவது மஹாவராகி தான்!

மன வளக் கலை மன்றத்திற்கு தினமும் சென்றால்,ஒரு வாரம்/மாதம் கழித்து,குரு தட்சிணை பெற்றுக் கொண்டு நமக்கு ஒரு தீட்சை தருவார்கள்;
அங்கே,பேராசிரியர் என்ற பொறுப்பில் இருப்பவர்,நமது புருவ மத்தியைத் தொடுவார்;நமது மலத்துவாரத்திற்கு உள்ளே சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தி உடனே நமது புருவ மத்திக்கு வரும்;
100 பேர்களுக்கு இப்படி தீட்சை கொடுத்தால்,80 பேர்கள் வரை புருவ மத்தியில் ஒரு சக்கரம் சுழல்வது போன்ற உணர்வு உண்டாகும்;இது தமிழ்நாட்டில் பிறந்து,தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே நிகழும்;
அப்படி புருவ மத்தியில் சக்கரம் சுழலும் உணர்வு பெற்றவர்களுக்கு, இன்னும் ஒரு சில பிறவிகள் மட்டுமே இருக்கின்றன என்று அர்த்தம்;
அவர்களுக்கு மீதி 6 சக்கரங்களும் இயங்க ஆரம்பித்து விட்டதாகவும் அர்த்தம்;
புருவ மத்தியில் சக்கரம் சுழலும் உணர்வு பெறாதவர்களுக்கு கடுமையான கர்மச் சுமைகள் நிறைய இருக்கின்றன என்று அர்த்தம்;
தீட்சை பெற்ற ஒரு வாரத்திற்குள் மீண்டும் மனவளக் கலை மன்றத்திற்குச் சென்று மறு தீட்சை பெற வேண்டும்;புருவ மத்தியிலேயே நமது குண்டலினி சக்தி இருந்தால் நமது உடல் நிலை கெட்டுவிடும்;மறு தீட்சை பெற்ற பின்னர்,புருவ மத்தியில் இருந்து மீண்டும் மூலாதாரத்திற்கு குண்டலினி சக்தி சென்றுவிடும்;
அதன் பிறகு,தினசரி தியானம் செய்தாலும்
வாரம் ஒரு நாள் கோவிலுக்கு சென்றாலும்
ஏதாவது ஒரு செயலை ஆழ்ந்த கவனத்துடன் செய்தாலும் மீண்டும் தானாகவே புருவ மத்தியில் குண்டலினி சக்தி சக்கரம் போல சுழல ஆரம்பிக்கும்;
அதனால் தான்,அன்னை மஹாவராகியை ஆக்ஞாசக்ரேஸ்வரீ என்று அழைக்கின்றோம்;

இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யும் பற்பசைகளில் ஃப்ளூரைடு என்ற வேதிப் பொருளைச் சேர்க்கின்றார்கள்;இதை பயன்படுத்தி தினமும் பல் துலக்கினால்,நமது புருவ மத்தியில் இயங்கும் பீனியல் கிளான்டு அழிந்துவிடும்;அதன் பிறகு,நமது குண்டலினி சக்தியை எழுப்பவே முடியாமல் போய்விடும்;
உலக அளவில் வாழும் பல இனங்களில் ஆன்மீக ஆற்றல் நமது நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு;புருவ மத்தியில் கடுகு அளவுக்கு இருக்கும் ஒரு சுரப்பியே பீனியல் கிளாண்டு;மனவளக் கலை மன்றத்திற்கு சென்று தீட்சை எடுத்தால்,நமது மூலாதாரத்தில் சுருண்டு (பாம்பு போல கிடக்கும்) குண்டலினி சக்தி எழந்து புருவ மத்திக்கு வரும்;புருவ மத்தியில் இருக்கும் பீனியல் கிளாண்டு என்ற சுரப்பிக்குள் நுழைந்துதான் சக்கரம் போல சுற்றும்;அந்த பீனியல் கிளாண்டுவையே இல்லாமல் அழித்துவிட்டால்,ஆன்மீகத்தில் இனி வரும் காலங்களில் இந்துக்களாகிய நாம் யாரும் முன்னேறவே முடியாமல் போய்விடும்;

இலுமுனாட்டிகளின் அடிமைகளான பன்னாட்டு நிறுவனங்கள் நமது ஆன்மீக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை நிரந்தரமாக அழிக்கவே நமது பற்பசைகளில் இந்த பீனியல் கிளாண்டு சுரப்பியை நிரந்தரமாக அழிக்கும் ஃப்ளூரைடுவை கலந்து விற்பனை செய்து வருகின்றன;


காலையில் பல் துலக்கிட,நாம் பயன்படுத்தும் பல்பொடியின் சுவை கசப்பு அல்லது துவர்ப்பாக மட்டுமே இருக்க வேண்டும்;இனிப்பு பற்பசையாக இருந்தால் நம்மை நாமே நோயாளியாக ஆக்கிடத் துவங்கி இருக்கின்றோம் என்று அர்த்தம்;
தமிழர்கள் ஒவ்வொருவரும் தினமும் அன்னை மஹாவராகியை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;


அப்படி ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் ஜபித்தால் மட்டுமே நமது வாழநாள் முழுவதும் எதிரிகள்,துரோகிகள் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும்;

தினமும் இரவில் ஒருமுறை வராகி மாலையை ஜபிக்கலாம்;

அல்லது


பின்வரும் 13 பெயர்களை இரவு தூங்கிடச் செல்லும் முன்பு ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;
ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இந்த 13 பெயர்களை மட்டும் ஜபித்தால் போதும்;அன்னையின் கருணை நமக்கு கிட்டிவிடும்;


64 வகையான வராகி அவதாரங்கள் இருக்கின்றன;

சிவனின் ஐந்து முகங்களில் சதாசிவனின் மனைவியாக மஹாவராகி இருந்து நம்மை காத்து வருகின்றாள்;


புதன் கிரகத்தின் ப்ராண தேவதை உன்மத்த பைரவர் ஆவார்;இவரது துணை சக்தி உன்மத்த வராகி!

ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருப்பவளும் ஒரு மஹாவராகி!

வைஷ்ணவத்தில் மஹாவிஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு பக்கபலமாக இருந்தவள் மஹாவராகி;
எனவே,சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் என்ற மூன்று வழிபாட்டு முறைகளிலும் இருந்து நம்மை காப்பவள மஹாவராகி!
இல்லறத்தில் இருந்தவாறு யாராலும் வராகி உபாசனை செய்ய முடியாது;இங்கே,பக்தி மூலமாக அன்னை மஹாவராகியின் அருளைப் பெறும் வழிமுறையையே தெரிவித்துள்ளோம்;

Thursday, August 2, 2018

அகத்தீஸ்வரர் ஆலயங்களின் பட்டியல்

நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;
தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;
அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;
அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;
1.அனகாபுத்தூர்,சென்னை
2.வில்லிவாக்கம்,சென்னை
3.பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்
7.
8.அகத்தியான்பள்ளி,நாகை மாவட்டம்.
9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.
11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

108.அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;
எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;
அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;
அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!
தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!