Friday, May 25, 2018

சாது மிரண்டால் காடு கொள்ளாது;சாதுக்கள் நாடு மிரண்டால்.?


உலகத்தை ஒரு வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரதநாடு  அந்த நாட்டின் பூஜை அறையாக இருக்கும்;நம்
பாரத நாட்டின் ஆத்மாவாகவும்,உயிர் மூச்சாகவும் இருப்பது நமது தமிழ்நாடும்,தமிழ் இலக்கியங்களும்,சைவ வழிபாடும்,சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகளின் ஜீவசமாதிகளும் தான்!


ஈசன் படைத்த தெய்வீக சக்திகளில் ஒருவர் வீரபத்திரர்;தட்சனுடய ஆணவத்தை அடக்கிட அவரை அனுப்பினார்;முருகக் கடவுளுடைய தளபதிகளில் ஒருவராக போர்களில் பங்கேற்றார்;

முருகக் கடவுளின் ஆணைப்படி,அசுரர்களிடம் தூது சென்றவரும் வீரபத்திரர்.அவர் தூது சென்ற இடம் தான் முற்காலத்தில் தூதுகுழி என்று இருந்தது;அதுவே தற்போது தூத்துக்குடி என்று ஆகியிருக்கின்றது;

ஆளுடையத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்= திருசெந்தூர் புராணம்

சென்ற நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும்,பாரத நாட்டின் பல பகுதிகளிலும் வீரபத்திரர் உபாசனை இருந்துள்ளது;மிகவும் கடினமான மற்றும் அதிக அளவில் பொருள் செலவு பிடிக்கும் இந்த உபாசனை இந்த நூற்றாண்டில் மறைந்துவிட்டது;இதே போலவே மிகவும் கடினமான உபாசனைகள்:நரசிம்மர் உபாசனை,மஹாகால பைரவர் உபாசனை,மஹாவராகி உபாசனை,காளி உபாசனை;துர்கை உபாசனை;


பக்தி மார்கத்தின் மூலமாகவும் இந்த கடவுள்களின் அருளைச் சுலபமாகப் பெற முடியும்;அப்படி அருள் பெற்று அருள் வாக்கு சொல்பவர்களாகவும் பலர் இன்றும் தமிழ்நாட்டிலும்,பாரதநாடு முழுவதிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;

கிறிஸ்தவ மதமாற்றம்,நாத்திகப் பிரச்சாரம்,தமிழ் டூ சமஸ்க்ருத மொழி பெயர்ப்பு இன்மை,சமஸ்க்ருதம் டூ தமிழ் மொழி பெயர்ப்பு இன்மை,தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் ஆன்மீகம் தொடர்பான பாடங்கள்,பாடத்திட்டங்களை நீக்கியது போன்றவைகளால் இம்மாதிரியான பரம ரகசிய வழிபாடு பற்றி பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டது;

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில்,வில்லிவாக்கம்,சென்னையில்,பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அகத்தியரின் சிவபூஜைக்கு சில துஷ்ட சக்திகள் இடையூறு செய்திருக்கின்றன;அதை தடுத்து அவரது சிவபூஜை வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் வீரபத்திரர் ஆவார்;


மாலிக் காபூர் காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பு நடைபெற்றது;பல அரிய சிவாலயங்கள் இஸ்லாமிய படையெடுப்பினால் சூறையாடப்பட்டன;அப்போது ஒரமுறை,கும்பகோணத்திற்கு இஸ்லாமிய படைகள் வந்தன;
அகத்தியர் ஜீவசமாதியாக ஐக்கியமாகி இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்குள் இஸ்லாமியப் படை புகுந்தது;அவர்களின் கண்ணில் முதலில் பட்டது அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் சன்னதி தான்;மிகவும் நேர்த்தியான வேலைப்பாடும்,அளவற்ற தெய்வீக காந்த சக்தியும் கொண்டது;அதை இஸ்லாமியப் படை சிதைக்க முற்பட்டது;

உடனே,அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் ப்ரசன்னமானார்;இஸ்லாமியப் படைகளை துவம்சம் செய்தார்;ஒவ்வொருவரும் எரிந்து சாம்பலானார்கள்;சுமாராக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்ஹார நிகழ்ச்சியை இன்றும் கும்பகோணம் மக்கள் அடிக்கடி பேசுவதுண்டு;


இந்த சம்பவத்திற்குப் பிறகு,இஸ்லாமிய ஆட்சியாளர்களும் சரி;அதன் பிறகு வந்த கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் சரி;கோவிலை தொடுவதே இல்லை;

மாறாக,மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது,மதம் மாற்றுவது,மதம் மாறியவர்கள் மூலமாகவே இந்து கோவில்கள்,வழிபாட்டுக்கு எதிராக பலவிதமான சதித் திட்டங்களை செயல்படுத்துவது,நாத்திகப் பிரச்சாரம் மூலமாக எல்லோரும் சமஸ்க்ருதம் பேசி,எழுதிக் கொண்டு இருந்ததை மாற்றி எல்லோரும் கிறிஸ்தவ ஆங்கிலம் பேச,எழுத வைத்தது,சனாதன தர்மமாகிய இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருந்த கோவில்,விவசாயம்,பசு,பெண் இனம் இவைகளை சீரழித்தது;இதன் மீது இந்து மக்களுக்கு இருந்த மரியாதையை கெடுத்தது போன்ற துக்கிரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றார்கள்:


1800 வரையிலும் நாடு முழுவதும் ஸ்ரீவித்யா உபாசனை தான் ரகசிய வழிபாடாக இருந்தது;இந்த உபாசனைதான் இந்த தேசத்தை துரோகிகளிடம் இருந்தும்,எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வந்தது;எத்தனை ஆண்டுகளாக தெரியுமா? சுமாராக 20,00,000 ஆண்டுகளாக. . .


   

கிழக்கே தட்சிண காளி உபாசனை(அருணாச்சல பிரதேசம் முதல் ஒரிசா வரை);

மேற்கே பவானி உபாசனை (இன்றைய ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,குஜராத்,கோவா,கர்னாடகா);

வடக்கே வைஷ்ணவி உபாசனை(ஜம்மு காஷ்மீர்,பஞ்சாப்,உத்திரபிரதேசம்,பீகார்,டெல்லி,இமாச்சலப் பிரதேசம்);

தெற்கே வராகி உபாசனை(தமிழ்நாடு,அந்தமான்,கேரளா,ஆந்திரா,ஸ்ரீலங்கா) என்று இருந்த ஸ்ரீவித்யா உபாசனையை சிறுகச் சிறுக கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்துவிட்டான்;எப்படி அழித்தான் தெரியுமா? செயற்கைப் பஞ்சம்,மதமாற்றம்,குருகுலக் கல்வியை அழித்தல்,விவசாயத்தை நிர்மூலமாக்குதல்,நாடு முழுவதும் இருந்து வந்த ஆயுர்வேத,சித்த,இயற்கை மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடுதல் போன்றவைகளால் அழித்துவிட்டான்;


அதனால் தான் இன்று தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் இதே கிறிஸ்தவ ஆங்கிலேயனின் ஐந்தாம் படையான பாதிரியார் படை,அதன் அரசியல் சக்திகளான டம்ளர்,17 போன்றவை அவநம்பிக்கையையும்,தேச விரோதத்தையும் பரப்பிக் கொண்டே இருக்கின்றன;


ஒரு கோடி தமிழர்கள் தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை  மஹா வராகி ஜபம் செய்து வந்தாலே போதும்;தேச துரோகிகள் அழிந்துவிடுவார்கள்;



சனாதன தர்மத்திற்கு மீண்டும் இதே போல ஆபத்து வந்துள்ளது;இதன் முடிவாக இந்த உலகம் முழுவதும் இந்து மதம் பரவிவிடும்;

அனைத்தையும் அள்ளித் தரும் சொப்பன வராகி!!!




உலகமக்கள் ஒவ்வொருவருடைய தலைவிதியையும் நவக்கிரகங்கள் நிர்ணயிக்கின்றன;நவக்கிரகங்களை நிர்வகித்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;இவர் சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் ஆணைப்படி,உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அவரது பெயரால் ஆட்சி புரிந்து வருகின்றார்;


மனிதனாக வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் எட்டுவிதமான செயல்களை தினமும் செய்து வருகின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் செய்வதன் மூலமாக 64 விதமான பாவம் அல்லது புண்ணியச் செயல்களை செய்ய முடியும்;எனவே,மனிதனின் கர்ம பரிபாலனத்தை தீர்மானிக்க மஹா கால பைரவப் பெருமான் எட்டுவிதமான பைரவர்களாக தோன்றினார்;இந்த எட்டுவிதமான பைரவர்களும் தோன்றிய வரலாறு வெகுசிலரிடம் மட்டுமே இருக்கின்றது;அட்டவீரட்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இவை தான் எட்டு பைரவர்கள் தோன்றியதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள்;இந்த எட்டு பைரவர்களும் மேலும் எட்டாக உதயமாகி 64 பைரவர்களாக அவதாரங்கள் எடுத்துள்ளார்கள்;

64 பைரவர்களுக்கு துணையாக 64 யோகினிகள் துணையாக இருந்து வருகின்றார்கள்;


இதில் உன்மத்த பைரவரின் துணை சக்தியே உன்மத்த வராகி!
வராகியின் அவதாரங்களும் 64 இருக்கின்றன;அவைகளில் அரிய வராகி அவதாரங்களின் பெயர்களை அறிந்து கொள்வோம்:

1.அஸ்திர வராகி
2.ஆக்ஞேசீ வராகி
3.இந்திர வராகி
4.ஈசான்ய வராகி
5.உச்சிஷ்ட வராகி
6.ஊர்த்வ வராகி
7.ருந்தினி வராகி
8.ரத்னேசீ வராகி
9.லவண வராகி
10.லிகித வராகி
11.ஏகாக்ஷரி வராகி
12.ஐந்தினி வராகி
13.ஓம்கார வராகி
14.ஓளஷத வராகி
15.அஸ்வாரூட வராகி
16.அக்ஷர வராகி
17.காகினீ வராகி
18.காமிய வராகி
19.கபாலினி வராகி
20.கிரிசக்ர வராகி
21.நித்ய வராகி
22.சமயேசீ வராகி
23.சங்கேதா வராகி
24.ஜம்பினி வராகி
25.ஜ்யேஷ்டா வராகி
26.ஞானேசீ வராகி
27.டாகினீ வராகி
28.டாமினீ வராகி
29.டாமர வராகி
30.டீகர வராகி
31.நீலி வராகி
32.தந்திர வராகி
33.தக்ஷிண வராகி
34.தண்டினி வராகி
35.தூம்ர வராகி
36.நவ வராகி
37.பஞ்சமீ வராகி
38.பந்தன வராகி
39.ப்ருஹத் வராகி
40.பக்த வராகி
41.மந்திர வராகி
42.யந்திர வராகி
43.ராகினீ வராகி
44.லாகினீ வராகி
45.வார்த்தாளீ வராகி
46.ஸங்கார வராகி
47.ஷோடேசீ பூஜித வராகி
48.ஸாகினீ வராகி
49.ஹாகினீ வராகி
50.ளளித வராகி
51.க்ஷேத்ர வராகி

அஸ்திர வராகியின் இன்னொரு பெயர் பகளாமுகி.பகளாமுகி உபாசகர்கள் இன்றைய கால கட்டத்தில் அஸ்ஸாம்,நேபாளம்,காசி போன்ற இடங்களில் மட்டுமே இருக்கின்றார்கள்;பகளாமுகி என்ற அஸ்திர வராகி உபாசனைக்கு வளம் சேர்ப்பது ஸ்ரீசதாசிவ உபாசனை ஆகும்;

சதாசிவ உபாசனை புரிந்து,அது ஸித்தி ஆன பின்னரே பகளாமுகீ வித்யை உபாசனை கைகூடும்;பகளாமுகி உபாசனை ஸித்தி ஆகிவிட்டால்,இப்பிறவியிலும்,இனி வரும் பிறவிகளிலும் அனைத்து வளங்களும்,நலன்களும் அஸ்திர வராகியின் அருளால் கைகூடும்;நீடித்து நிலைக்கும்;

ஆதாரம்:ஸ்ரீவாராஹி ஸித்தர் உபாஸனா மார்க்கம்(பகுதி 9)ஜோதிட பூமி,பக்கம் 36,37,வெளியீடு டிசம்பர் 2009


சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள்;இந்த அன்னையை உபாசனை செய்து,இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கனவில் வந்து பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பாள்;தமிழ்நாட்டில் பலர் இந்த அன்னையின் அருள் பெற்று பிறருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்;


தாங்களும் அதே போல ஆக வேண்டுமா? ஒருமுறை எம்மை நேரில் வந்து பாருங்கள்;

சொப்பனத்தில் வந்து பதில் தரும் தெய்வங்கள் சில இருக்கின்றன;பத்மாவதி,எட்சிணி,வராகி போன்றவை இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன;

சொப்பன வராகி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர,வராகி அருளால் சகல சித்திகளும் கூடி வரும்;துஷ்ட பிரயோகங்களால்(ஜின்,குறளி,மோகினி) அவதிப்படுபவர்கள் தினமும் வராகி மந்திரத்தை ஜபித்து வர,அதில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்;அம்பாள் உபாசனை,ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு வராகி மந்திரம் மிகப் பெரிய,மஹா சக்தி வாய்ந்த கவசம் ஆகும்;

வராகியின் சக்தியை மனித மனத்தினால் மதிப்பிடவே முடியாது;வராகித் தாயை தனது அன்னையாக ஏற்றுக் கொண்டு தினமும் (இல்லறவாசிகள்) ஒரு மணி நேரம்;

(உபாசனையின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்) இரண்டு மணி நேரம்; 

(இப்பிறவியிலேயே அன்னை வராகியின் பாதத்தில் ஐக்கியமாக விரும்புவோர் அல்லது அரசியலில் உச்சத்துக்குச் செல்ல விரும்புவோர்) மூன்று மணி நேரம் 

வராகியின் 13 பெயர்களை ஜபித்து வந்தால் இப்பிறவி முழுவதும் எதிரிகளும்,துரோகிகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்;

தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாக்க எப்பேர்ப்பட்ட மந்திரவாதியாக இருந்தாலும்,அவனது மாந்திரீக ஆற்றல்களை ஒரே விநாடியில் நிர்மூலமாக்கிவிடுவாள்:

தனிமையில் செல்லும் போதும்

இரவில் சுடுகாடு/இடுகாடு வழியாக செல்லும் போதும்

இரவில் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் போதும்



ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தையோ

ஸ்ரீவாராஹி ஸகாயம் என்ற மந்திரத்தையோ ஜபித்துக் கொண்டு வரவேண்டும்;

இதனால்,தேவையற்ற பயம் நெருங்காது;நாய்கள் குரைப்பது கூட நின்றுவிடும்;எதிர்பாராமல் வரும் துஷ்ட சக்தி விலகிச் சென்றுவிடும்;நெருப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அன்னையின் பெயரைச் சொன்னாலே அனைத்தும் விலகிச் சென்றுவிடும்;

சில மாணவ விடுதிகள்,சில தங்கும் லாட்ஜ்கள்,சிலபல வாடகை வீடுகளில் கடந்த காலத்தில் யாராவது தற்கொலை செய்து இறந்திருப்பார்கள்:அவர்களுடைய ஆத்மா அங்கேயே தான் இருக்கும்;அங்கே புதியதாக யார் குடியேறினாலும் அவர்களுக்கு தொல்லையாக ஒவ்வொரு நாளும் நகரும்;இன்றைய கால கட்டத்தில் பலர் ஆத்ம பலம் குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள்;அவர்கள் பின்வரும் அன்னை மஹாவராகியின் 13 பெயர்களை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால்,ஆவிகள்,பேய்கள்,பிசாசுகளின் தாக்கம் நெருங்காது;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நி

இவைகள் மிகவும் சக்தி வாய்ந்த அன்னை மஹாவராகியின் பெயர்கள்;

அன்னை மஹாவராகியின் மந்திரம் எதுவாக இருந்தாலும்,குரு ஒருவர் உபதேசம் செய்த பின்னர்,ஜபித்தால் மட்டுமே அன்னையின் அருள் கிட்டும்;ஆன்மீகத்தில் இன்றைக்கு உண்மையான குருமார்கள் குறைந்துவிட்டார்கள்;எனவே,அன்னை மஹாவராகியிடம் மன்றாடி வேண்டிக் கொண்டு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;அதன் மூலமாக,அன்னையே கனவில் வந்து உபதேசம் செய்வாள்;

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை விதமான தோஷங்கள்,சாபங்கள் இருந்தாலும் அன்னை மஹாவராகியைச் சரணடைந்தாலே போதும்;சொப்பன வராகி மந்திரத்தை தினமும் ஒருவர் 1008 முறை ஜபித்து வந்திருக்கின்றார்;ஒவ்வொரு மாதம் ஆனதும்,அவரது கடுமையான சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கை படிப்படியாக வசந்தம் நிரம்பியதாக மாறியிருக்கின்றது;

சிலருக்கு சொப்பன வராகி மந்திரம் ஸித்தி ஆன, பின்னர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்களை அறியும் சக்தி உண்டாகும்;

சொப்பன வராகி மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 3 ஆண்டுகள் வரை ஜபித்துவிட்டவர்கள்,யார் வீட்டுக்குச் சென்றாலும் அவர்களுடைய சோகங்களை நீக்கும் ஆற்றல் உண்டாகும்;எனவே,ஜோதிடர்கள்,அருள் வாக்கு சொல்பவர்கள்,குல தெய்வத்தின் ஆசிகளைப் பெற்றுள்ளவர்கள் ஒவ்வொருவருமே தினமும் சொப்பன வராகி மந்திரம் ஜபித்து வருவது அவசியம்;

தினமும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வர எல்லோரையும் வசீகரிக்கும் சக்தியுள்ளவராக மாறிவிடுவீர்கள்;


மான் தோல் ஆசனத்தில் (வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே வீட்டில் மான் தோல் ஆசனத்தை பயன்படுத்த முடியும்) அமர்ந்து,தாமரை மணிமாலையால் தினமும் இரவு 11 மணி முதல் 12 மணி வரை 1008 முறை ஜபித்து வந்தால்,1008 நாட்களுக்குள் கனவில் சொப்பன வராகியின் தரிசனம் கிடைக்கும்;


ஓடும் நதியில் நின்று சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை என்று தினமும் ஜபித்து வர சகலவிதமான செல்வ வளமும் தேடி வரும்;ஒவ்வொரு நாளும் வரும் புதன் ஓரை அல்லது குரு ஓரையில் 1008 முறை ஜபிக்க வேண்டும்;முதல் ஆரம்பித்த ஓரையில் தான் தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் பூஜை அறையில் தினமும் இரவு 11 முதல் 12 மணிக்குள் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்;   பவளமணி மாலையால் தினமும் 330 முறை உரு செய்து வர வேண்டும்;இதனால்,ஜன வசீகர சக்தியை அன்னை சொப்பன வராகி நமக்கு அருளுவாள்;


ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு 11 முதல் 12 மணிக்குள் வீட்டில் இருக்கும் மஹாவராகி படத்திற்கு சிகப்பு மலர்களால் பூஜிக்க வேண்டும்;ருத்ராட்ச மணி மாலையால் சொப்பன வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இதனால்,எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள்;துரோகிகள் சிதறி ஓடிவிடுவார்கள்;ராஜ சன்மானம் கிடைக்கும்;குறைந்தது 1008 நாட்கள் ஜபிக்க வேண்டும்;

பெண்கள் மாத விலக்கு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ஜபிக்கலாம்;


துக்க வீடுகளில் கலந்து கொண்டால் ஏழுநாட்களுக்குப் பிறகு,மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;ருது வீடுகளுக்குச் சென்றாலும் இதே நாட்கள் கட்டுப்பாடுதான்;குழந்தை பிறந்த அன்றே சென்று பார்த்தால் மறுநாளில் இருந்து ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


துரோகிகளும்,எதிரிகளும்,பொறாமை பிடித்தவர்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொடூரங்கள் நிறைந்த கலிகாலம் இது;எனவே.அன்னை மஹாவராகியின் பலவிதமான மந்திரங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது 1008 நாட்கள் ஜபித்து நிம்மதியாகவும்,வலிமை மிக்கவராகவும் வாழ்க!

இணையத்தில் ஒருபோதும் இதுபோன்ற மந்திரங்களை எவரும் வெளியிடுவது இல்லை;ஒரு வேளை யாராவது வெளியிட்டால் அது உண்மையான மந்திரம் அல்ல;என்பதை உணருங்கள்;


சொப்பன வராகி மந்திரம் வேண்டுவோர் நேரில் வந்து சந்திக்கவும்;வாட்ஸ் அப்:9092116990

Wednesday, May 23, 2018

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!



ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நாம் பின்பற்றப்பட்டு வரும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர்;கடந்த 300 ஆண்டுகளில் கட்டாயப்படுத்தியும்,மிரட்டியும் இந்த காலண்டர் முறையை கிறிஸ்தவ இங்கிலாந்து நம்மிடையே பழக்கப்படுத்தியது;

நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான மற்றும் துல்லியமான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய (தெளிவில்லாத,முறையற்ற)   கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;


க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;

சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;

அதன் பிறகு,ஜோதிடப்படி,  நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.
இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;

ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

மன அடக்கம் தரும் அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி!


உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் முந்தைய பிறவிகள் நான்கில் செய்த பாவ,புண்ணியத்தினால் விளைந்த கர்மவினைகளை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளார்கள்;இதில் விலங்குகளும்,மரம் செடி கொடிகளும் அடங்கும்;

புராணங்களை வாசித்துப் பார்த்தால்,ஒரு உண்மை விளங்கும்;இந்திரன்,தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள் என்று யாராக இருந்தாலும் முறையற்ற காம இச்சையால் ரிஷியிடம் அல்லது துறவியிடம் சாபம் பெற்றிருப்பார்கள்;அல்லது நான் என்ற அகங்காரத்தினால் சாபம் பெற்று தனது பதவியை இழந்திருப்பார்கள்;

அது எப்படி தேவ உலகத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கும் நான் என்ற அகங்காரம் உண்டாகின்றது;முறையற்ற காம இச்சை தோன்றுகின்றது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை;

ஆக,பல கோடி பிறவிகளாக ஒவ்வொரு மனிதனும் சேமித்த புண்ணிய சக்திகளின் தொகுப்பாகவே ஒருவன் இந்திரப் பதவியை அடைகின்றான்;அல்லது அஷ்டதிக்கு பாலகர் என்ற பொறுப்பினை ஏற்கின்றான்;பிரம்மா என்பதும் ஒருவித பதவியே;விஷ்ணு என்பதும் ஒரு வித பதவியே;அதனால் தான் 1970 க்கு முந்தைய ஜோதிட நூல்கள்,வைத்திய நூல்கள்,ஆன்மீக வெளியீடுகளை வாசித்தால் இறைவன் என்றால் அது ஈசன் என்பதை உணரலாம்;

மஹா கணபதி உபாசனை செய்வதன் மூலமாக தடைகளை நீக்கி விடலாம்;

பைரவ உபாசனை செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகளை கரைத்துவிடலாம்;

ஸ்ரீவித்யா உபாசனை செய்து வருவதன்  மூலமாக பாவமற்ற நிலையை அடைந்துவிடலாம்;

அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக மீண்டும் இந்த பூமியில் பிறவாத முக்தியை அடைந்துவிடலாம்;


இன்றைய கலியுகத்தில் உபாசனை என்ற ஆன்மீக வழிமுறையை பின்பற்ற யாராலும் இயலாது;மனிதர்களே உட்புக முடியாத வனப்பகுதிக்குள் சிலர் உபாசனை செய்து வருகின்றார்கள்;இன்றைய ஜனத்தொகை விகிதப்படி 1 கோடியில் ஒருவருக்கு உபாசனை கைகூடும்;மற்றவர்களுக்கு உபாசனையை போதிப்பதற்குக் கூட ஆன்மீக குரு கிடைப்பதில்லை;


இங்கே யாம் தெரிவிப்பது பக்தி மார்க்கத்தில் தான்;

இறைசக்தியின் அருளை பெற நான்கு விதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்பெருமக்கள் போதித்திருக்கின்றார்கள்;

1.ராஜ யோகம் = ப்ராணயாமம்,யோகா,வாசி யோகம் மூலமாக முயற்சிப்பது

2.ஞான யோகம் = பக்தி நூல்களை வாசிப்பது,குருவின் வழிகாட்டுதல் படி செயல்படுவது

3.கர்ம யோகம் = மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த எவரும் இதைச் செயல்படுத்தலாம்;சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய கர்ம யோகம் நூல் தான் இதற்கு வழிகாட்டி;

4.பக்தி யோகம் =இன்றைய கால கட்டத்தில் இல்லறவாசிகளான நமக்கு இதுதான் ஒத்து வரும்;காவடி எடுப்பது,பாத யாத்திரை செல்வது;அன்னதானம் செய்வது;கோவில் கட்டுவது/மறு நிர்மாணம் செய்வது/சீரமைப்பது; தினசரி மந்திர ஜபம் செய்வது;ஆன்மீக முயற்சிகளை ஜோதிடத்தின் அடிப்படையில்,ஜோதிட வழிகாட்டுதலின் படி செயல்படுத்துவது;

 அஸ்வாரூடா மாலையை    தினமும் ஒருமுறையும்,ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து அல்லது இருபத்தைந்து முறையும் ஜபிக்க வேண்டும்;அஸ்வாரூடா வராகிக்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு ஜபிப்பது சிறப்பு;அந்த சமயத்தில் மனதில் அன்னையின் உருவம் தெரியும் விதமாக நினைத்துக் கொண்டே(இதற்கு பாவனை என்று பெயர்) ஜபிக்க வேண்டும்;

சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு,அஸ்வாரூடா வராகியின் அருளை சூசகமாக உணரலாம்;அதன் பிறகு தொடர்ந்து அஸ்வாரூடா மாலையை ஜபித்து வர மூன்று முதல் ஐந்து  ஆண்டுகளுக்குள் மனமானது மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையில் இருந்து முழுமையாக விலகிச் சென்றுவிடும்;


நமது ஆன்மீக லட்சியங்களை நோக்கி அதன் பின்னர் படுவேகமாக முன்னேறலாம்;



அஸ்வாரூடா மாலையையும்,அஸ்வாரூடா வராகியின் முழுமையான வழிபாட்டுமுறையையும் பெற விரும்புவோர் எம்மை நேரில் சந்திக்கவும்;

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!

உலகத்தில் இருந்து நிலாவுக்கு ராக்கெட்டில் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பியவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்;ஆல்ட்டிரின் குழுவினர்;அனுப்பி வைத்து அந்த புகழுக்கு காரணமாக இருந்தது அமெரிக்கா;

இவர்களைத் தவிர இன்னும் மூன்று குழுவினரை அமெரிக்கா நிலாவுக்கு அனுப்பிட பயிற்சி அளித்து தயார் செய்திருந்தார்கள்;

முதலாளித்துவ அமெரிக்காவுக்கு ஒரு தாகம் எப்போதும் உண்டு;ஒரு சவால் என்று வந்தால் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்;

நிலாவுக்கு யார் முதலில் செல்வது என்ற போட்டி ரஷ்யாவுக்கும்,அமெரிக்காவுக்கும் 1960களில் இருந்தது;


எனவே,நிலாவுக்கு அனுப்ப இருக்கும் விண்வெளிவீரர்களின் பிறந்த குறிப்பினை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஜோதிட ஆலோசனை கேட்டார்கள்:இங்கேதரப்பட்ட ஜோதிட ஆலோசனையின் படியே ஆர்ம்ஸ்டிராங் குழுவினை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள்;

இன்றைய காலகட்டத்தில் நமது ஊரில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ப்யூன் முதல் நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் வரை அவரவர் ரேஞ்சுக்கு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை கேட்ட பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்கின்றார்கள்;

இந்த சூழ்நிலை நமது பாரதநாட்டில் மட்டும் இருக்கின்றது என்று எண்ண வேண்டாம்;ஆசிய நாடுகளான ஸ்ரீலங்கா,மாலத்தீவு,மொரிஷியஸ்,சிங்கப்பூர்,மலேஷியா போன்ற நாடுகளில் வெளிப்படையாகவும்,உலகம் முழுவதும் படுரகசியமாகவும் உண்டு;

ஜோதிடத்தின் பிறப்பிடம் குமரிக்கண்டம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சில தினசரி செய்தித்தாள் நிறுவனங்கள் தமது நிறுவனத்திற்கு முக்கிய பணியாளர்களான எடிட்டர்கள்,சப் எடிட்டர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் தான் தேர்வு செய்கின்றார்கள்;

உலக வல்லரசுகளில் முதன்மையான வல்லரசு அமெரிக்கா! அதன் முதுகெலும்பாக விளங்குவது அதன் உளவுத்துறை அமைப்புகள்;இந்த அமைப்புகள் தமது பணியாளர்களை தேர்வு செய்வதே அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தான்;


ஐரோப்பாவில் இருக்கும் விமானம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் தனது தயாரிப்புகளை செய்யத் துவங்குவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாள் அன்று மட்டுமே!

நாத்திகத்தை கொள்கையாகக் கொண்டது கம்யூனிஸம்;உலகில் இன்று இருக்கும் ஒரே கம்யூனிஸ நாடு சீனா;சீனாவின் முக்கிய அரசு உயர் அமைப்பு அதன் மத்திய அமைச்சரவை;இது ஒவ்வொரு மாதமும் சீனாவின் சுதந்திர ஜாதகப்படி,அரசபட்சி நாள் அன்று மட்டுமே கூடி முக்கிய முடிவுகளை எடுத்துவருகின்றது;அதனால் தான்,உலக அரசியலில் சீனா இன்றும் வலுவான நாடாக ஐரோப்பாவுக்கும்,அமெரிக்காவுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது;

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் இருக்கும் தனியார் விண்வெளி ஏஜன்ஸிகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் உலக ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைப்படியே விண்ணுக்கு செயற்கைக் கோள்களையும்,ராக்கெட்டுகளையும் அனுப்பி வருகின்றது;

அமெரிக்காவின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் இணைய தளமுகவரி:https://acvaonline.org/

இங்கிலாந்தின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் முகவரி:
http://www.bava.org/

உலக அரசியல் வரலாற்றில்,ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த வெறும் ஒன்பது மாதங்களில் ஆளும் கட்சியாக மாறியது நமது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் தான்;அந்த கட்சியை ஆரம்பித்தவர் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே (அச்சுப்பிசகாமல்) பின்பற்றியதால் தான்! அது நமது தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் ஆகும்;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;
இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!

அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?

1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;

உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;

ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;



         

இயற்கை நலவாழ்வு என்றால் என்ன?

நாம் உண்ணும் காய்கறிகள்,பழங்கள்,தண்ணீர் இவைகளைக் கொண்டே எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் மிகவும் பழைய உணவுமுறைக்கு இயற்கை நலவாழ்வு என்று பெயர்;

கம்யூட்டர் யுகம் போய்,ஃபேஸ்புக்,டுவிட்டர் யுகத்தில் இதெல்லாம் சாத்தியமா?

கம்யூட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தான் சாப்பிட்டோம்;டுவிட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தானே சாப்பிடுகிறோம்?

உண்ணும் உணவும்,உடுத்தும் ஆடைகளும் மாறியிருக்கலாமே தவிர வேறு என்ன மாறியிருக்கிறது? ஆண் கர்ப்பிணன் ஆகி குழந்தை பெறும் அளவுக்கா அறிவியல் முன்னேற்றமடைந்துவிட்டது?இல்லையே!

வாழ்க்கை வேகமானாலும் உணவை சீரணிக்கும் நமது உடல் அமைப்போ,ஜீரண மண்டலமோ இன்னும் மாறவில்லை;

தவறான உணவுப்பழக்கத்தாலோ அல்லது முறையற்ற உணவுப் பழக்கத்தாலோ தான் நோய்கள் உருவாகியிருக்கின்றன;இவைகளூக்குப் பின்னால் சர்வதேச உணவு அரசியலும் நிழலாக இயங்குகிறது;

இதில் இருந்து மீள்வதற்கு பின்வரும் இடங்களில் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம்கள் நடைபெற இருக்கின்றன;அவைகளில் உங்களுக்கு அருகில் இருக்கும் முகாம்களில் கலந்து கொள்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்;

1.அரவிந்த் ஆஸ்ரமம்,140,முடங்கியார் சாலை 4 வது கி.மீ,ராஜபாளையம்;முதல் நாள் மாலையே வந்து சேரவேண்டும்;கட்டணம் இல்லை;சில பொருட்கள் மட்டும் ஆஸ்ரம வாசலில் வாங்கிட ரூ.250/-தேவைப்படும்;
முன் பதிவு அவசியம்; 91 4563 233308

2.இயற்கை மருத்துவ சந்தியா வித்யாலயம்,முருக பவனம்,திண்டுக்கல்;செல்:9842836928
ஞாயிறு மாலை 5 மணிக்கு

3.ஆயர்பாடி இயற்கை மருத்துவமனை,அம்மாபாளையம்,திருப்பூர் இயற்கை மருத்துவ முகாம்;நபருக்கு ரூ.1000/-
அலைபேசி:9345442687,9965042543

ஒவ்வொரு வாரமும் வெள்ளி,சனி,ஞாயிறு தோறும்;

நன்றி:இயற்கை மருத்துவம் மாத இதழ்;நவம்பர் 2015


இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;

மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை மஹாவராகி வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!


வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;


ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;

கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;இது இன்றும் தொடர்கின்றது. . .தமிழ் உணர்வாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு......

நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;


இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?
பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய மஹாவராகியை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;


தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;


மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;


இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;


மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;


குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;

யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;($ 48 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து தினமும் சிவாலயம்/அம்மன் ஆலயம் செல்ல வேண்டும்)


ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி

என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(வாட்ஸ் அப்:9092116990) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

அல்சரும் அன்னதானமும்



யார் கடந்த மூன்று பிறவிகளில் ஒரே ஒருமுறை கூட அன்னதானம் செய்யவில்லையோ,அவர்களே இப்பிறவியில் அல்சரால் அவதிப்படுகின்றனர்;இது பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஆன்மீக உண்மை;


அன்னதானத்தை உள்ளூர் சிவாலயத்தில் அமாவாசை தோறும் செய்யலாம்;

அன்னதானத்தை சனிக்கிழமைகளில் செய்யலாம்;இதன் மூலமாக சனியின் தாக்கம் பெருமளவு குறையும்;

அன்னதானத்தை தினமும் சிவாலயத்தில் வாசலில் செய்வது சிறப்பு;

அன்னதானத்தை நாம் பிறந்த தமிழ் மாதத்தில்,பிறந்த நட்சத்திரத்தன்று அண்ணாமலையில் செய்வதன் மூலமாக நமது கர்மவினைகளை பாதியாக்கிவிடும் சுலப வழியாகும்;

அன்னதானத்தை, ‘பசி’ என்று யார் எங்கே கேட்டாலும் உடனே செய்வது கோடி மடங்கு புண்ணியத்தைத் தரும்;

அன்னதானத்தை சொந்த ஊரில் தினமும் செய்யலாம்;அல்லது இப்போது வசிக்கும் ஊரிலும் தினமும் செய்யலாம்;(அவரவர் பொருளாதார வசதி,பூர்வபுண்ணியத்தைப் பொறுத்தது)

அன்னதானம் செய்தால் அதன் பிறகு அல்சர் வராது;ஒருவேளை வந்தால்,அதற்கு வேறு ஏதோ ஒரு ஜோதிட/ஆன்மீகக் காரணம் இருக்கும்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அன்னதானத்தால் மட்டுமே நமது கர்மவினைகளை ஈஸியாகக் கரைக்க முடியும்;

அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாளில் அன்னதானம் செய்தால் அதற்கு மிஞ்சிய புண்ணியம் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது;

ஒரு ஆலயத்தில் அல்லது ஜீவசமாதியில் 1000 பேர்களுக்கும் மேலானவர்களுக்கு நாம் அன்னதானம் செய்வதாக வைத்துக்ககொள்வோம்;1001 வது மனிதராக நமது முன்னோர்களில் யாராவது ஒருவர் சித்தராகவோ,துறவியாகவோ,ரிஷியாகவோ,ஞானியாகவோ இருந்திருப்பார்கள்;அவர் அங்கே வந்து அந்த அன்னதானத்தில் கலந்து கொள்வார்;இதன் மூலமாக நமது கர்மவினைகளை ஏற்றுக் கொள்வார்;

யார் ஒருவர் ஒரே பிறவியில் 30,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்கின்றார்களோ,அவருக்கு இந்த உலகில் பேசும் அனைத்து மொழிகளும் தானாகவே பேசும் ஆற்றல் உருவாகிவிடும்;அதுவும் தேவைப்படும் போது மட்டுமே வெளிப்படும்;எல்லா நேரங்களிலும் அந்த அருளாற்றல் இருக்கும் என்று எண்ணக் கூடாது;

சில விதிமுறைகளை கண்டிப்பாக அன்னதானம் செய்பவர்கள் பின்பற்றியே ஆக வேண்டும்;

1.ஒருபோதும் கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;

2.ஒரு போதும் நள்ளிரவில் (அகால நேர) அன்னதானம் செய்யக் கூடாது;

3.ஒரு போதும் அசைவ உணவுகளை அன்னதானம் செய்யக் கூடாது;

4.ஒரு போதும் விளம்பரப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;(இன்றைய காலகட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே)

5.நண்பர்கள்,உறவினர்களுக்கு வீடு/ஹோட்டலில் உணவு வாங்கித்தருவது அன்னதானம் ஆகாது;

6.வீடு வாசல் இல்லாத அனாதைகளுக்கு இலவசமாக தரும் உணவுக்கு அன்னதானம் என்று பெயர்;

7.அன்னதானத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும்;இந்தப் பிறவியில் நம்மைப் படைத்த ஈசன் நம் மூலமாக இந்த தெய்வீக செயலைச் செய்கின்றான் என்றே எண்ண வேண்டும்;

8.அன்னதானம் செய்ய விரும்பி,அதற்கு சந்தர்ப்பமே அமையாத சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்கள்,தமது குலதெய்வம் கோவிலில் சுவாமிக்கு படையல் (தளுவை) செய்ய மாதம் தோறும் அரிசி வாங்கித் தரலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு அருளியவர் இடியாப்ப சித்தர் ஆவார்;அவரது சீடரும்,நமது சூட்சும சத்குருவுமாகிய வெங்கடராம சுவாமிகளுக்கு இக்கணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

அரிய சிவலிங்க வழிபாடு!


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;

இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;

2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;

தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;


சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;

16,000 கோடி சிவ மந்திரங்கள் உள்ளன;ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை;

உதாரணமாக, 28 கோடி முறை சிவாய நம என்று ஜபித்துவிட்டு,செம்பைப்பார்த்தால்,அது தங்கமாக மாறிவிடும்;




சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;


சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;


சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்ததால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;



ஓம் அருணாச்சலாய நமஹ