Sunday, March 7, 2010

இந்தியாவின் சுதந்தர ஜாதகப்படி அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்:மறுபதிப்பு


AMJ இன் இந்திய சுதந்திரஜாதகம் பற்றிய கணிப்பு

22 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர் AMJ கணித்திருக்கிறார்.
எனது பெற்றோரின் ஆசியாலும் என் இதயத்தில் இருக்கும் இறைசக்தியின் அருளாலும் இந்த பலன்களை நான் எழுதுகிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் 15.8.1947.ரிஷப லக்னம் கடகராசி பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் இந்தியா பிறந்தது.
ஜனன கால சனி மகா திசை 17 வருடங்கள், 10 மாதங்கள்,13 நாட்கள்.
நடப்பில் இருப்பது சூரிய மகா திசை! சுய புக்தி 6.10.2009 வரை.பிறகு 6.4.2010 வரை சந்திர புக்தி!!

7.10.2009 முதல் 15.5.2010 வரை கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் வக்கிரமடைகிறார்.இந்தியாவின் ரிஷப லக்னத்துக்கு 7, 12க்குரியவராகிறார்.இவர் புரட்டாசி 28 ஆம் நாள் காலை 10 மணி முதல் ஐப்பசி 20 வரை பூச நட்சத்திரத்தில் நிலை கொள்கிறார்.இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும். நமது சகோதர் நாடுகளான பாகிஸ்தான்,இலங்கை,பங்களாதேஷில் இனக்கலவரங்களும் சட்ட ஒழுங்குப்பிரச்னைகளும் தலைதூக்கும். அந்த நாடுகளின் உயர்பொறுப்பில் உள்ளோருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

16.11.2009 முதல் 6.4.2010 வரை இந்தியாவின் பூமிப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடக்கும்.இந்தியாவை ஆள்பவர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படும்.ராணுவ நிலைப்பாடுகளில் குழப்பமும் நட்பு நாடுகளிடம் கருத்துவேறுபாடும் ஏற்படும்.
எனவே நாடாளுபவர்கள் அமைதியுடன் செயல்படவேண்டும்.
மிகப்பெரிய நாடு என தம்பட்டமடித்துக்கொள்ளும் நமது நட்பு நாடு நம்முடன் நட்புறவு கொள்வதுபோல நடித்து நமக்கெதிராக செய்துவந்த நயவஞ்சகச்செயல்கள் பகிரங்கமாகும்.கோசாரப்படி கும்ப குருவானது அதிசாரமாகி மீனத்தில் சில மாதங்கள் தங்கப்போவதால் இந்த அத்தனை பிரச்னைகளையும், இறையருளாலும் பல தேசபக்தர்களின் தியாகத்தாலும் பல இழப்புக்களாலும் நாம் சரி செய்வோம்.ஜெய் ஹிந்த்!!!

No comments:

Post a Comment