Monday, March 29, 2010

திருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருடங்களுக்குப்பின்பு (தி.பி)

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்

காத்திருந்தேன்

அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் :என்னை திட்டுவாயா ?

அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று

நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?




(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்


திருமணம் பற்றி சில பழமொழிகளும்,பல அனுபவ மொழிகளும் இருக்கின்றன.அவற்றில் சில: ஒரு திறமையும்,சாமர்த்தியமும்,பொறுப்பும் கொண்ட மனைவி,அப்பாவிக் கணவனை சாதனையாளனாக்குவாள்.
நயவஞ்சகமும்,பித்தலாட்டமும்,பொறுப்பற்ற குணமும் கொண்ட மனைவி, சாதனைசெய்யும் கணவனை நாசமாக்குவாள்.
கல்யாணம் என்பது ஒரு வினோத சிறைச்சாலை.வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரத்துடிப்பார்கள்.உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் (ஆயுள் முழுக்க) தவிப்பார்கள்.

காதல் என்ற மயக்க மருந்து கொடுக்காமல்,கல்யாணம் என்னும் ஆபரேஷனை இளைய சமுதாயத்துக்கு செய்ய முடியாது.




1 comment: