Saturday, March 13, 2010

பெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்

சில்லறை வணிகம் எனப்படும் பெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதி அளித்ததால் நம் நாட்டில் 4 கோடி வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என சி.ஐ.டி.யு.,சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளன.

நமது வணிகர்களின் பண்பாடு மனித நேயம் சார்ந்தது.வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டைப்பூச்சிக்குச் சமமானவை.
நாம் நியாயமான விலை வைத்து விற்பனை செய்பவர்கள்.அவர்கள் நஷ்டம் வந்தாலும் பொதுமக்களைக் கவர ஆரம்ப காலத்தில் விலையை அடிமட்டத்தில் குறைத்துவிற்பர்.இதன்மூலம்,நம் நாட்டு சுதேசி வர்த்தகர்களை ஓட்டாண்டியாக்கிவிடுவர்.பிறகு தாம் மட்டுமே அந்த வர்த்தகத்தில் இருக்கும் நிலையை,வர்த்தக சர்வாதிகார நிலையை உருவாக்கியதும்,விலையை தாறுமாறாக உயர்த்துவர்.இதனால்,நமது நாட்டின் சாதாரண மக்களால் எதையும் வாங்கிட முடியாது.இந்த முட்டாள் அரசு கோடிக்கணக்கில் கமிஷனும்,லஞ்சமும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு,நமது நாட்டின் பெட்டிக்கடை வியாபாரத்தின் கழுத்தை நெறிக்கிறது.

No comments:

Post a Comment