Wednesday, August 19, 2015

சிவராஜ யோகம் தரும் ஆவணி மாதம்!!!(ஜோதிடம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் கட்டுரை)


மன்மத ஆண்டின் ஆவணி மாதம் இன்று 18.8.15 அன்று பிறந்துவிட்டது;ஏற்கனவே,சிம்மராசிக்கு குரு வந்துவிட்டார்;இன்று காலை முதல் சிம்மராசியின் ராசிநாதன் சூரியனும் வந்துவிட்டார்;சூரியனும்,குருவும் ஒரு ராசியில் இருந்தால் அதற்கு சிவராஜயோகம் என்று பெயர்;தனது உணர்ச்சிகளை அடக்கும் கலை இந்த யோகம் உள்ளவர்களுக்குக் கைகூடும்;பிறருக்கு உழைத்து தான் ஓடாய்த் தேய்ந்து போவார்கள்;தலைசிறந்த மந்திரியாக இருப்பர்;மிகச் சிறந்த ஜோதிடராக இருப்பார்;


இன்று முதல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பிறக்கும் குழந்தைகள்,முழுமையான சிவராஜ யோகத்துடன் பிறக்கும்;பெரும் வங்கிகள்,மகத்தான நிதி நிறுவனங்கள்,தங்கத்தை கையாளும் நிறுவனங்கள்,பெரும் அரசியல் கட்சிகள்,ரிசர்வ் வங்கி போன்றவைகளுக்கு முக்கிய ஆலோசகர் பொறுப்பிற்கு வருவர்;இம்மாதம் முழுவதும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இது போன்ற பதவிகளுக்கு வரும்;இவர்களின் அப்பாக்களுக்கு,குழந்தை பிறந்த 3 வது மாதத்தில் இருந்து மகத்தான பணப்புழக்கம் உருவாகும்;இந்தப்பணபுழக்கம் இப்பிறவி முழுவதும் தொடரும்;


ஒவ்வொரு நாளும் 4 நிமிடம் (மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை என்பது இன்று ஆவணி 1 மட்டுமே)வரை இந்த யோகம் குறைந்து கொண்டே வரும்;ஆவணி மாதம் 15 ஆம் நாள்(3/9/15) அன்றெல்லாம் இதே முழுயோகம் உள்ள குழந்தை இரவு 7 மணி முதல் இரவு 8 மணிக்குள் பிறந்தால் கிட்டும்;

அவரவர் பூர்வபுண்ணியப்படி இம்மாதம் முழுவதும் பிறக்கும் குழந்தைகள்,தனது 25 வது வயதில் இருந்து பணமும் அதிகாரமும் மிக்க பதவிகளை  அலங்கரிப்பார்கள்;வாழ்க சிவராஜ யோகம்!


வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!


No comments:

Post a Comment