Monday, August 31, 2015

இயற்கை உணவு,இயற்கை உணவு பயிற்சி,இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு!!!



அலோபதி,யுனானி,சித்தா,ஆயுர்வேதம் என்று ஏராளமான வைத்திய முறைகள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் அல்லது வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள்,பலசரக்குகளைக் கொண்டே நமது நோய்களைக்குணப்படுத்திடமுடியும் என்று கடந்த 20,000 ஆண்டுகளாக இயற்கை மருத்துவம் நிரூபித்திருக்கிறது;

இது தொடர்பாக தினசரி,வார,மாத இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன;ஆனால்,இதில் கூறப்படும் பொருட்கள்,தானியங்கள்,அரிசி வகைகள் எங்கே கிடைக்கும்? எப்படி இதைப் பயன்படுத்த வேண்டும்? எந்த மாதிரியான உடல் வாகு (வாத உடல்,பித்த உடல்,சிலேட்டும உடல்) அமைப்புள்ளவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்? என்பது பற்றி தெரிவதில்லை;

அப்படித் தெரிந்து கொள்ள விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளைத் தயாரிக்க விரும்புவோர்;

இயற்கை உணவு வகைகளுக்கு என்று ஒரு ஓட்டல் நடத்திட விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளை விளைவிக்க விரும்புவோர்,

இயற்கை உணவுகளுக்குள் மறைந்திருக்கும் சித்தர் ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புவோர்;

இதுவரை இயற்கை நலவாழ்வு பற்றி புத்தகத்தில் மட்டும்  படித்திருப்பவர்கள்,அதை நேரடியாக அறிந்து கொள்ள விரும்புவோர்,

ரசாயன உரங்களின் பக்கவிளைவுகளை அறிந்து,வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைக்க விரும்புவோர்,

 நமது குடும்பத்திற்கு மட்டும் இயற்கை உரங்களால் காய்கறிகள்,கீரைகள் அந்த மாடித்தோட்டத்தின் மூலமாகவே விளைவிக்க விரும்புவோர்,

செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை வாங்க விரும்புவோர்,விற்க விரும்புவோர்;

இயற்கை விளைபொருட்கள் மூலமாகவே நோய்களைக் குணப்படுத்திட விரும்புவோர்;

விளைநிலங்களில் மூலிகை அல்லது சிறுதானியங்கள் விளைவிக்க விரும்புவோர்;

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு,

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகரம்,தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருக்கும் தாய் வழி இயற்கை உணவகத்திற்கு ஒருமுறை வருகை தருவது நன்று;


மேலே கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழு பக்கபலமும் , வழிகாட்டிதலும் இவர்களிடம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது;


No comments:

Post a Comment