Wednesday, August 12, 2015

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்



அடி என்றால் அடி அண்ணாமலை என்று பொருள்;
அண்ணன் என்றால் விநாயகர்;தம்பி என்றால் முருகக் கடவுள்;

அடியாகிய அண்ணாமலையார் நமது கோரிக்கைகளுக்கு உடனடியாக வரம் தருவார்;யாருக்கு? அடிக்கடி அண்ணாலை கிரிவலம் செல்பவர்களுக்கு!

ஒருமுறை அண்ணாமலை என்று சொன்னாலோ அல்லது அருணாச்சலம் என சொன்னாலோ 3,00,000 தடவை ஓம்நமசிவாய என்று ஜபித்ததற்குச் சமம்;இதைச் சொன்னவர் யார் தெரியுமா? அந்த ஆதிசிவபெருமான்!

அண்ணாமலை கிரிவலம் அடிக்கடி(மாதம் ஒருமுறையாவது) சென்று கொண்டிருந்தால்,நமது ஆத்திர அவசரத்திற்கு அண்ணாமலையாரிடம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டினாலே போதும்;வேண்டுதல் நிறைவேறிவிடும்;

;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment