Monday, August 31, 2015

நாமும் அண்ணாமலையும்


யார் ஒருமுறை கூட அண்ணாமலைக்கு வந்ததில்லையோ,அவருக்கு இன்னும் பல ஆயிரம் பிறவிகள் இருக்கின்றன என்று அர்த்தம்;

யார் ஒருமுறை கூட அண்ணாமலை கிரிவலம் செல்லவில்லையோ,அவருக்குரிய கர்மவினைகள் அப்படியே இருக்கிறது(மனதிற்குள் ஆன்மீக மனோபாவம் மலரவில்லை) என்று அர்த்தம்;

யார் அண்ணாமலையாரை தரிசிக்கும் போது உடல் சிலிர்க்கவில்லையோ,அவர்கள் இன்னும் மனப்பூர்வமாக ஆன்மீக வாழ்க்கைக்குத் தயாராகவில்லை(தனது குறைகளைத் திருத்திக்கொள்ளத் தயாராகவில்லை) என்று அர்த்தம்;

அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ ஒருமுறை கூறினால் 3,00,000 முறை ஓம் நமசிவாய நமஹ என்று ஜபித்தமைக்குச் சமம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;

பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும்;என்பது பன்னிருத்திருமுறைகள் தெரிவிக்கும் சிவரகசியம்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment