Friday, February 3, 2012

மந்திரவாதியிடம் யார் ஏமாறுவர்?


மந்திரவாதியிடம் யார் ஏமாறுவர்?



31.12.2009 வரை மகர ராசிக்காரர்களும்,1.1.2010 முதல் தனுசு ராசிக்காரர்கள் 1 1/2 வருடகாலத்திற்குள்ளும் ஏமாறுவார்கள்.பெரும்பாலான காளி கோவில் பூசாரிகள் மந்திரவாதிகளாக உள்ளனர்.உங்களது வாழ்வில் நடந்த கடந்தகால சம்ப்வங்களை அப்படியே அருள்வாக்கு அல்லது ஜாதகம் பார்த்து சொல்லுவர்.அது உங்களுக்கு விரிக்கப்படும் வலை.பெரும்பாலும் பணமோசடி அல்லது பெண்சுகம் இவர்களது இலக்காக இருக்கும்.

மாந்திரீகம் செயல்ப்டவும் காளியே துணை நிற்கிறாள்.மாந்திரீகத்திலிருந்து மீளவும் அதே காளிதான் துணை.பெரும்பாலும் ஏழரைச்சனி காலத்தில்-ராகுதிசை நடந்தால் மந்திரவாதியால் ஏமாற்றம் உண்டு.

குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்தல் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு செய்தல் மட்டுமே ஏமாற்றத்திலிருந்து காக்கும்.எந்த கொம்பனாலும் நமது கஷ்டத்தை -ஏழரைச்சனி வேதனைகளை நீக்க முடியாது.தப்பித்தால் போதும் என மந்திரவாதிகளிடம் சிக்கி மானத்தை இழக்க வேண்டாம்.

No comments:

Post a Comment