Friday, February 17, 2012

நீண்டகால மற்றும் தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் ஜன்ம நட்சத்திரத்தன்று , விருட்ச வழிபாடு





உங்களுக்கு பல மாதங்கள்/வருடங்களாக தீராத பிரச்னைகள் இருக்கின்றனவா? குழந்தையின்மை,சொத்துத் தகராறு, குடும்ப ஒற்றுமையின்மை, மோசமான திசாபுக்தி காலம் என எதுவாக இருந்தாலும் சரி.அவைகளை தீர்த்து,நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ பின்வரும் வழிபாட்டுமுறையைப் பின்பற்றவும்.
உங்களது பிறந்த நட்சத்திரத்திற்கு என்று ஒரு விருட்சம் இருக்கும்;உங்கள் பிறந்த ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்;அல்லது உங்களது ஆஸ்தான ஜோதிடரிடம் உங்களது நட்சத்திர விருட்சம் எதுவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்;தெரிந்த பின்னர்,அந்த நட்சத்திர விருட்சம்( நட்சத்திரமரம்) எங்கே இருக்கிறது? என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.பிறகு,ஒவ்வொரு தமிழ்மாதமும் ஒரு நட்சத்திரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை உதயமாகும்.அப்படி உதயமாகி,ஒரு நாள் வரையிலும் நிற்கும்.(குறைந்த பட்சம் 18 மணி நேரம்;அதிக பட்சம் 36 மணிநேரம்) இந்த ஒரு நாளில் உங்களது கோரிக்கைக்கு ஏற்றவாறு உரிய ஓரையில் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள படி வழிபட வேண்டும்.
அரசுப்பணியில் சேர விரும்புவோர் சூரிய ஓரை வரும் நேரத்தில் முதல் 12 நிமிடத்தில் இவ்வாறு விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் அல்லது சேர்ந்து வாழ்ந்து மனக்கசப்புகள் அடிக்கடி வந்துகொண்டிருந்தாலும்,உணவுத்தொழில் செய்து கொண்டிருந்து,அதில் போதுமான வளர்ச்சி இல்லாமலிருந்தாலும், சுக்கிர ஓரையில் முதல் 12 நிமிடங்களுக்குள் இவ்வாறு விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
கல்வியில் போதிய முன்னேற்றம் வேண்டுவோர்,உங்கள் ஜன்ம நட்சத்திரத்து நாளில்,புதன் ஓரையில் வரும் முதல் 12 நிமிடத்தில் இவ்வாறு விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
தெளிவான மன நிலை அல்லது மன உறுதி வேண்டுவோர், பெண்சாபம் நீங்கிட விரும்புவோர்  உங்களின் ஜன்ம நட்சத்திரநாளில்,வரும் சந்திர ஓரையில் முதல் 12 நிமிடத்தில் இவ்வாறு விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
சனியின் தாக்கம் தீர விரும்புவோர்,அதாவது ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதச்சனி,அர்த்தாஷ்டக சனி தாக்கம் தீர,உங்கள் ஜன்ம நட்சத்திரநாளன்று,சனி ஓரையில் முதல் 12 நிமிடங்களுக்குள் இவ்வாறு விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
குழந்தை வரம் வேண்டுவோர்,பணப்புழக்கம் போதுமான அளவுக்கு இல்லாமலிருப்போர்,குரு சாபம் நீங்கிட விரும்புவோர்,குல தெய்வ சாபம் நீங்கிட விரும்புவோர்,பிறந்த ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கப் பிறந்தவர்கள் அனைவரும் தமது ஜன்ம நட்சத்திர நாளன்று வரும் ஏதாவது ஒரு குரு ஓரையில் முதல் 12 நிமிடங்களுக்குள் இந்த விருட்ச வழிபாடு செய்ய வேண்டும்.
சொத்து தகராறு உள்ளவர்கள் அதிலிருந்து மீளவும்,சொந்தவீடு வாங்கிட ஆசைப்படுவோர்களும்,ரத்தம் சார்ந்த பிரச்னைகள்/நோய்கள் உள்ளோரும் செவ்வாய் ஓரையில் முதல் 12 நிமிடங்களுக்குள் இவ்வாறு விருட்ச வழிபாடு,அவரவர் ஜன்ம நட்சத்திரநாளன்று வழிபட வேண்டும்.


இப்படி ஒரு தமிழ் மாதத்திற்கு ஒரு தடவை வீதம்,எட்டே எட்டு மாதங்களுக்கு மட்டும் இந்த ஜன்ம நட்சத்திரநாளன்று விருட்ச வழிபாடு செய்தால் போதுமானது.இவ்வழிபாடு நிறைவடைந்த 90 நாட்களுக்குள் உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.

அப்படி நிறைவேறினால்,அந்த அனுபவத்தை தயவு செய்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பவும்.

இந்த தெய்வீக வழிபாட்டு ரகசியத்தை நமக்கு அருளிய ருத்ராட்சத்துறவி,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின்  சீடர்  அவர்களுக்கு கூகுள் கோடி நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்                                            








1 comment:

  1. I love this site... Remedial Measures are very simple and everyone can do it... Great service by this site to the human who are following the spiritual path... Expecting more valuable information... Om hari hari om, Om siva siva om...

    ReplyDelete