Sunday, February 5, 2012

ஸ்ரீதோஷம் எனப்படும் பெண்சாபம் நீக்கும் அற்புத ஸ்தலம் மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணியம்மன் திருக்கோவில்,தரங்கம்பாடி தாலுகா





உங்களுடைய  பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருக்கின்றதா? ஆம் எனில் நீங்கள் மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் அமைந்திருக்கும் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோவிலுக்கு கட்டாயம் சென்றே ஆகவேண்டும்.ஆண் எனில் குறைந்தது 6 ஞாயிற்றுக்கிழமையும்,அதிகபட்சம் 24 ஞாயிற்றுக்கிழமையும் சென்று பின்வருமாறு வழிபாடு செய்வது உங்களின் கடுமையான பெண்சாபத்தைப் போக்கும்; பெண் எனில் குறைந்தது 6 வெள்ளிக்கிழமையும்,அதிகபட்சம் 24 வெள்ளிக்கிழமையும் இங்கே சென்று வழிபட வேண்டும்.
நம்மைச் சுற்றியிருப்பவர்களில் பலரது வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால்,ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.உதாரணமாக,30 வயதுக்குட்பட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணைப் பற்றி அவரின்/அவளின் பெற்றோரே மிகவும் இழிவாகவும்,கீழ்த்தரமாகவும் பிரச்சாரம் செய்துவருவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அப்படிப் பிரச்சாரம் செய்தாலும்,அந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ளமுடியாமல் அந்த 30 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் தன்னிடம் பழகும் ஒவ்வொருவரிடமும் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பர்;அந்த தன்னிலை விளக்கத்தைக் கேட்கத்தான் யாருமே இருக்க மாட்டார்கள்.இப்படிப்  பட்ட வாழ்க்கை வாழ்பவர்களின் பிறந்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால்,அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீதோஷம் எனப்படும் பெண் சாபம் இருப்பது தெரியவரும்;அவர்களின் பிறந்த ஜாதகக் கட்டத்தில் ராசிக்கட்டத்தில் காதல் கிரகமான சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருக்கும்;இதனால்,அந்த ஜாதகரின் வாழ்க்கை ஒரு தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழ்ந்துவந்தும் கூட,காமவெறிபிடித்தவர்களாக சித்தரிக்கப்பட்டுவருவர்;இதற்குப் பெயர்தான் ஸ்ரீதோஷம் எனப்படும் பெண் சாபம்.
சரி,பெண்ணுக்கு எப்படி பெண் சாபம் ஏற்படும்? இந்த மாதிரியான பெண்ணானவர்,முந்தைய ஐந்து பிறவிகளில் ஆணாகப் பிறந்திருப்பார்.அவர் தனது ரத்த உறவுகளுக்குச் செய்த அதே அவமானத்தை இப்பிறவியில் மொத்தமாக அனுபவிக்கப் பிறந்திருக்கிறார் என்றே பொருள்.
இதைச் சரி செய்ய மேலப்பெரும்பள்ளம் எனப்படும் திருவலம்புரம் என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணியம்மன் கோவிலுக்கு 2 கிலோ நெய்,108 மண் விளக்குகள்,ஒரு மஞ்சள் துண்டு,இரண்டு ஐந்துமுக ருத்ராட்சங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.பெண் எனில்,வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு இந்தக் கோவிலில் இருக்க வேண்டும்.அந்தப் பெண்ணே 108 மண்விளக்குகளில் நெய்யை நிரப்பி திரியை வைத்து தானே தீபம் ஏற்ற வேண்டும்;அப்படி ஏற்றியப் பின்னர்,வடக்கு நோக்கி மஞ்சள் துண்டினை விரித்து,இரண்டு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,மனதில் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தருமாறு அருள்மிகு வலம்புரநாதரிடம் வேண்டியவாறு ஒரு மணி நேரம் வரை மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அவ்வாறு ஜபித்தபின்னர்,அங்கிருக்கும் பசுக்களுக்கு ஆறு வாழைப்பழங்களை தானமாக வழங்க வேண்டும்.இந்த ஸ்ரீதோஷம் இருக்கும் பெண்ணின் வயது 21ஐ விடக்குறைவாக இருந்தால், கோவிலுக்குள் வடக்கு நோக்கியவாறு மஞ்சள் துண்டினை விரித்து அதில் வடக்கு நோக்கியவாறு அமர்ந்து 108 முறை ஓம்சிவசிவஓம் எழுத வேண்டும்.ஆணாகப் பிறந்து 21 வயதுக்குள் இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றி எழுத வேண்டும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment