Monday, February 20, 2012

குமுதம் ஜோதிடம் கேள்வி பதில் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது(குமுதம் ஜோதிடம்,பக்கம் 19; வெளியீடு 17.2.12)


கடிதங்கள்: ‘குமுதம் ஜோதிடம் 6.1.12’ தேதியிட்ட இதழில் ‘வன்முறையைத் தூண்டுவது யார்?’ என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ள தலையங்கத்தைப் பாராட்ட தகுந்த வார்த்தைகள் இல்லை.

பலம் வாய்ந்த யானையின் துதிக்கையினுள் தந்திரமாக நுழைந்துவிடும் சாதாரண சிறு கட்டெறும்பு.அந்த யானையின் உயிர்நாடியான நரம்பைத் துண்டித்து அந்த யானையையே கொன்றுவிடும்.அதே போன்றுதான், இந்து மன்னர்கள் மற்றும் இந்து மக்கள் ஆகியோரின் அன்புகனிந்த தாராள மனப்பான்மையைப் பயன்படுத்தி,இந்திய நாட்டினுள் ஊடுருவிய கிறிஸ்தவ மதமாற்ற போதகர்கள்,இன்று இந்து சமுதாயத்தையே அழித்து வருகின்றனர்.
புதுச்சேரியைக் கிறிஸ்தவ பிரஞ்சுக்காரர்கள் தங்கள் வசப்படுத்தி ஆண்ட போது இடிக்கப்பட்ட திருக்கோயில்கள்,கடலில்  வீசி எறியப்பட்ட அற்புதமான, அழகிய ஸ்வாமி விக்கிரகங்கள்,இடம் பெயர்க்கப்பட்ட கோவில்கள் ஆகியவை ஏராளம்.பிரஞ்சு கவர்னரான டூப்ளே மட்டுமல்ல;அவனது மனைவியும் எவ்விதம், எந்த அளவிற்கு இந்துக்களை சீரழித்தனர் & அவமானப்படுத்தினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.தாங்கள் அறைகூவி அழைப்பது போல் இனி நம் இந்து சமூகம் இருப்பதா அல்லது அழிவதா என்பது நம் இளைஞர்கள் கைகளில்தான் உள்ளது.
இந்தியாவில் சென்றகால சரித்திரமும்,இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் நம் குழந்தைகளுக்குத் தெரியாமலே செய்துவிட்டனர் நம் ஆட்சியாளர்கள்.வேண்டுமென்றே மறைக்கப்பட்ட இந்துக்களின் சோக சரித்திரத்தை அரும்பாடுபட்டு வெளிக்கொண்டுவரும் தங்களது பணியைப் பாராட்டுகிறோம்.

பதில்:தங்களின் கடிதங்களுக்கு மிகவும் நன்றி.இந்திய சரித்திரம் இந்தியர்களுக்கே தெரியாமல் செய்துவிட்டனர்  சுயநலம் பிடித்த  நமது ஆட்சியாளர்கள்.அது ஏன் என்பதை நாங்கள் சொல்லத் தேவையில்லை;அதனை மக்கள் அறிவார்கள்.
இருப்பினும் இந்த அரசியல் கிரகணத்திலிருந்து விடுபட்டுச் சென்ற கால இந்துக்களின் சரித்திரம் நிச்சயம் வெளிவரும்.அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.
ஓம்ஹரிஹரிஓம்  ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment