Tuesday, February 28, 2012

குடுமி வைத்திருப்போரை கிண்டல் செய்யாதீர்கள்=ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் (தனித்துணை சிவனே! என்ற தலைப்பில் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி)


எத்தனையோ மேல்நாட்டுக்காரர்கள்(இத்தாலி,இங்கிலாந்து,ஜர்மனி,நெதர்லாந்து,ஸ்பெயின்,போர்ச்சுகல்) குடுமி வைத்துக்கொண்டு,பஞ்சகச்சம் அணிந்தபடி திரு அண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர்.இதை அடிக்கடி பார்க்கலாம்;ஏராளமான மேல்நாட்டுப்பெண்மணிகள் நம் பாரத நாட்டின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்தபடி கிரிவலம் வருகின்றனர்.

ஆனால்,இங்குள்ளவர்களோ குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள்.தற்காலத்தில் குடுமி வைத்திருப்போர்களைக் காண்பதே மிக அபூர்வம்.அவ்வாறு குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து பலர் கேலியும்,கிண்டலும் செய்கின்றார்கள்.ஏன்,குடுமியைக் கட்டாயமாக வைக்க வேண்டியவர்களே இப்போதெல்லாம் குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள்.என்றுமே குடுமி வைத்திருப்பவர்களைப்பார்ட்து யாரும் கிண்டல் செய்யக்கூடாது.
குடுமியின் பல வகைகள்
குடுமிகளில் 1008 வகைகள் உண்டு.கோலிக்குடுமி, கொண்டைக்குடுமி,சிறு குடுமி,சுருக்குக் குடுமி,தானக்குடுமி,வண்டக்குடுமி,வட்டுக்குடுமி,வாரக் குடுமி, நிட்டக்குடுமி,சேறு குடுமி, சேர்க்கும் குடுமி, நாறு குடுமி,நறுக்குக் குடுமி, நோருக் குடுமி,தோகும் குடுமி, தோகைக்குடுமி, சுவட்சக் குடுமி ,சுபக் குடுமி என்று பலவகையான குடுமிகள் உள்ளன.

தோகைக்குடுமி வைத்திருப்பவர்களுக்கு அபார சக்தி உண்டு.இந்தக் குடுமி வைத்திருப்பவர்கள் பொறுமையாக இருப்பார்கள்.ஆனால்,சில வார்த்தைகளைச் சொல்லும்போது,மனதில் நறுக்கென்று தைக்கும்படியாகச் சொல்லுவார்கள்.இத்தகைய வாக்குச் சக்தியைக் கொடுப்பதே இந்த வகைக்குடுமி.
ஒரு மனிதன் கோபத்தின் வயப்படும்போது பல தவறுகள் செய்கிறான்.பிறர் குற்றங்களைப் பார்ப்பதால் அதிகமாக தவறுகளைச் செய்கிறான்.அந்தக் குற்றங்களை மன்னித்துவிடுவதால் அதிலிருந்து அதிலிருந்து விடுபடுகிறான்.அப்பொழுதுதான் அவனுக்கு “தனித்துணை சிவனே!” என்பது புரிய வரும்.   “தனித்துணை சிவனே !” என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது யார் தெரியுமா? பூரண அவதாரமூர்த்தியான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஆவார்.

நன்றி:தனித்துணை சிவனே! பாகம் 2 பக்கங்கள் 25,26,27.

  வெளியீடு:ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயா, சேம்பர் எண்:7 , சாகாஸ் காம்ப்ளக்ஸ், எண்:4,ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்குமாடவீதி,மயிலாப்பூர்,சென்னை -4.இணையதளம் இருக்கிறது.விலை ரூ.20/-

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment