Tuesday, February 7, 2012

நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சிவத்தொண்டு



ஓம்நமச்சிவாய என்ற சிவமந்திரத்தை ஜபிக்க ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.அவற்றுள் முதன்மையானது 45 வயதைக் கடந்திருக்கவேண்டும்;அசைவம்,பூண்டு,வெங்காயம் முதலியவற்றை ஒருபோதும் சாப்பிடக்கூடாது;காமம்,பொறாமை,ஏக்கம்,முன்கோபம் போன்றவைகளை கைவிட்டிருக்க வேண்டும்;பிறருக்கு  எப்போதும் தொந்தரவு தரக்கூடாது;முடிந்தால் உதவி செய்யவேண்டும்;இந்த ஓம்நமச்சிவாய மந்திரத்தை முறைப்படி,சிவதீட்சை பெற்றப்பின்பே ஜபிக்க வேண்டும்.ஓம்நமச்சிவாய மந்திரம் அளவற்ற வீரியமும்,சக்தியும் வாய்ந்தது.எனவே,நடக்கும்போதும்,பயணிக்கும்போதும் ஒருபோதும் ஜபிக்கக் கூடாது.சிவதீட்சை என்பது சிவாச்சாரியார் அல்லது சிவனடியார் அல்லது ஏற்கனவே ஓம்நமச்சிவாய மந்திரத்தை சிவதீட்சை பெற்றவர்கள் நமது காதில் எப்படி ஓம்நமச்சிவாய என்பதை ஜபிக்க வேண்டும் என்பதை சொல்லிக்காட்டுவர்.அதன்படி,அப்படி சொல்லிக்காட்டியபின்னரே,ஓம்நமச்சிவாய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.21 வயதுக்குட்பட்டவர்கள் ஓம்நமச்சிவாய மந்திரத்தை மந்திர ஜபமாக ஜபிப்பது தவறு.அப்படி ஜபித்துக்கொண்டு வந்தால்,அவர்களை துறவறத்திற்குக் கொண்டுசென்றுவிடும்.அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,தங்கை,தம்பி என எந்த ரத்த உறவின்மீது ஈர்ப்பில்லாமல் செய்துவிடும்.இவ்வாறு 21 வயதுக்குட்பட்ட பல ஆண்களும்,பெண்களும் தினமும் ஓம்நமச்சிவாய மந்திரத்தை ஜபித்துவந்ததால்,துறவற வாழ்க்கைக்கு போயிருக்கின்றனர்.போய்க்கொண்டிருக்கின்றனர்.ஆனால்,   அப்படி துறவற வாழ்க்கைக்குப் போனாலும்,அவர்களின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரகங்களின் செயல்பாடுகளால் அவர்களால் முழுமையான துறவறத்தை மேற்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.இதுபோன்ற குழப்பங்களால் அவர்களைப் பெற்றவர்கள் சிவனையே எதிரியாகவும்,கோவிலுக்குச் செல்வதையே வெறுப்பவராகவும் மாறியிருக்கின்றனர்.ஊருக்கு ஒரு சில உதாரணக்குடும்பங்களை இவ்வாறு காட்டமுடியும்.அதே போல,ஒரு நாளுக்கு 108 தடவைக்கு மேல் ஓம்நமச்சிவாய எழுதக் கூடாது என்பது சொல்லப்படாத சிவ வழிபாட்டு விதிமுறையாகும்.



கி.பி.1000 வாக்கில் இஸ்லாமியப் படையெடுப்பு இந்துயாவின் மீது ஆரம்பித்தது.அதற்கும் முன்பு, பல சிவ மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள் ரகசியமாக குரு சிஷ்யப் பரம்பரை வழியாக மட்டுமே பரவிவந்தன.கி.பி.1000 முதல் கி.பி.1700 வரையிலும் இஸ்லாமியப் படையெடுப்பும்,அதன்பிறகு கி.பி.1700 முதல் கி.பி.1947 வரையிலும் இருந்த கிறிஸ்தவ ஆங்கிலேயப் படையெடுப்பாலும் இந்து தர்ம வழிபாட்டுமுறைகளுக்கு மகத்தான ஆபத்து வந்தது;இஸ்லாமிய ஆட்சிகாலத்தை விடவும்,கிறிஸ்தவ ஆங்கிலேய ஆட்சியில் தான் கடந்த 300 ஆண்டுகளில் தான் இந்து தர்மத்துக்கு பலத்த சோதனைகளும்,ஆபத்துக்களும் வந்தன.இன்று இந்தியாவின் தலைமை பீடத்தினைக் கைப்பற்றி , மத வன்முறைச்சட்டம் என்ற பெயரில் ஒரே நாளில் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிறிஸ்தவ நாடாக்குமளவுக்கு திட்டம் வாடிகனாலும்,அமெரிக்காவின் உளவுத்துறையாலும் வகுக்கப்பட்டு,செயலுக்கு வர இருக்கிறது.

மறுபுறம் இந்து தர்மத்தின்பெருமைகளை இந்துக்களே அறியாமல் இருக்க காங்கிரஸ்,தி.மு.க.,கம்யூனிஸ்டுகள்,நாத்திகவாதிகள் அரும்பாடு பட்டுவருகின்றனர்.இதனால் இந்து தர்மத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் இன்று உருவாகிவிட்டது.இந்த சூழ்நிலையில் ஓம்நமச்சிவாய மந்திரத்தை முறைப்படி ஜபிக்க வழிகாட்டும் சிவாச்சாரியார்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர்.இந்த சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்,பல்லாண்டுகளாக பல சிவனடியார்கள்,சிவாச்சாரியார்கள்,ஆன்மீக குருநாதர்களை சந்தித்து இதுபற்றி விவாதித்து,நமக்காக தேடிக்கண்டுபிடித்துக் கொடுத்த சிவமந்திரமே ஓம்சிவசிவஓம் ஆகும்.
இந்த ஓம்சிவசிவஓம் ஜபிக்க சிவதீட்சை பெறவேண்டியதில்லை;உணவுக்கட்டுப்பாடு ஒன்றே ஒன்றுதான்;அது அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது;வயதுக்கட்டுப்பாடு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.அவ்வளவுதான்.பெண்களும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம்;மாதவிலக்கு நாட்களில் 5 நாட்களுக்கு ஜபிக்காமலிருப்பது உத்தமம்;உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும்,மனுஷியும் ஜபிக்கலாம்.21 வயதை விடக் குறைந்தவர்கள் ஒரு நாளுக்கு 108 முறை ஓம்சிவசிவஓம் எழுதலாம்.


நமது ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் எண்ணிக்கை 6 மாதத்தில் 1,00,000 ஐக் கடந்துவிடும்.அப்படி கடந்த பின்னர்,நாம் நினைக்கும் எண்ணங்கள் தாமாகவே செயலுக்கு வரும்.எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே, அதன் சக்தி என்னவென்று நிரூபணமாகும்.ஆனால்,ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளின் அனுபவப்படி 10,000 ஐ தாண்டியதுமே இந்த மந்திரம் அவர்களுக்கு பலவிதமான அனுபவங்கள்,உதவிகளைத் தந்துவருகிறது.ஏராளமான அனுபவங்களைத் தொகுக்கும் பணியைச் செய்துவருவதால்,விரைவில் அதுபற்றி தனிப்பதிவு வெளிவரும்.



ஓம்சிவசிவஓம் 1,00,000 தடவை ஜபித்தபின்னர்,நம்மைச் சுற்றியுள்ள தவறான மனிதர்களின் நமக்கெதிரான சதிச்செயல்கள் தானாகவே செயலிழந்துபோகும்;அவர்களின் முழு நயவஞ்சகத்திறனை நமக்கெதிராகப் பயன்படுத்தினாலும்,நம்மை அவர்களால் எதுவும் செய்ய முடியாது;2,00,000 தடவைக்கு மேல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டால்,பிறரின் எண்ணங்கள் நமக்குத் தெரியவரும்;


 5,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்க நமக்கு குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும்.அப்படிப்பட்ட சாதனையை நாம் செய்துவிட்டால்,நாம் விரும்பும் சித்தர் நமக்குக் காட்சியளிப்பார்;நம்மோடு கலந்துரையாடுவார்; 10,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டால்,சித்தராகும் தகுதி நமக்கு வந்துவிடும்.அப்படி நாம் 10,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்க ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 7 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.சரி,நாம் மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்தால் போதுமா?

நம்மைப் போலவே,நமது தமிழ்நாட்டில் ஏராளமான நேர்மையான ஆத்மாக்கள் வாழ்ந்துவருகின்றனர்.யாருக்கும்,எப்போதும்,நேரடியாகவோ,  மறைமுகமாகவோ சிறிதும் தீமை தராமல் தான் உண்டு;தனது வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழ் சகோதர சகோதரிகளுக்கு சரியான ஆன்மீக வழிகாட்டுதல் செய்ய மிகவும் குறைவான குருநாதர்களே இருக்கிறார்கள்.



உலகமயமாக்கலும்,செல்போனும்,கேபிள் டிவியும் வந்தப்பின்னர்,ஒரு குடும்பம்,ஒரு இளம்பெண்,ஒரு இளைஞன்,ஒரு நல்ல நட்பு நிம்மதியாகவும்,ஒற்றுமையாகவும் வாழ முடியாத அளவுக்கு கெட்ட விஷயங்கள் எங்கும் சுலபமாகக் கிடைக்கின்றன.அவர்கள் அனைவரையும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டியது நமது பொறுப்பு.நீங்கள்  3 விதங்களில் இதற்கு உதவி செய்யலாம்.இந்த சிவத் தொண்டினால்,உங்களுக்கு ஏராளமான சிவகடாட்சம் கண்டிப்பாக கிடைக்கும்.
1.நீங்கள் 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பலாம்;1000 நோட்டீஸ் அச்சடிக்க ரூ.500/-க்குள் தான் ஆகும்.
2.பிரதோஷ நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயங்களில் இந்த நோட்டீஸை விநியோகிக்கலாம்;
3.இணையத்தின் மூலமாக ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது என்பதை பரப்பலாம்.
இதைச் செய்தாலே சிவபெருமானின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது சத்தியம்.


ஓம்சிவசிவஓம்






4 comments:

  1. ஜயா வண்க்கம் இந்த www.picscrazy.com முகவரிக்கு சென்று பார்த்தேன் இதன் முகப்பே ஆபாச இனைய தளமாக உள்ளது? இதில் பதிவேற்றுவதால் எப்படி புண்ணியம் சேரும்.

    சிவன் வானில் தோன்றும் காட்சி
    தமிழ்நாட்டின் கோவில்கள் அதிகம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த வீடியோ வீடியோ தரம் தெளிவாக இல்லாவிட்டாலும் யூ ட்யூப்பில் பரபரப்பாக பார்க்கப்படும்
    வீடியோவாக இது உள்ளது சிவனின் கண்கள் உலகத்தை பார்ப்பது போல் அமைந்துள்ளது
    இந்த வீடியோ.
    http://www.youtube.com/watch?v=KwaUdAUz2V0&feature=player_embedded

    ReplyDelete
  2. nega panna postil mega chiranda post ethuvaga than erukum

    ReplyDelete
  3. பிக்ஸ் கிரேஸி என்பது இலவசமாக புகைப்படங்களை யார் வேண்டுமானாலும்,எவ்வளவு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் அப்லோடு செய்ய உருவாக்கப்பட்ட தளம் ஆகும்.அதை மேல்நாட்டு மக்களும்,கீழ்நாட்டுமக்களும் தங்களின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாக = அதாவது வக்கிர புகைப்படங்களை அப்லோடு செய்யும் தளமாகவே ஆக்கிவிட்டார்கள்.நாம் நமது ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை அப்லோடு செய்வதன் மூலமாக அதை ஓரளவுக்காவது ஆன்மீக போட்டோக்களின் தளமாக மாற்றுவோம்;அதன்மூலமாக காமப்படங்களுக்கு மயங்காதவராக நம்மை மாற்றுவோம்.இப்படிச் செய்வதன்மூலமாக நமது ஓம்சிவசிவஓம் தமிழ்தெரிந்த நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்குச் செல்லும்.அப்படி செல்ல வேண்டிய எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட வேண்டும்.அதற்காகத்தான் இந்த வேண்டுகோள்.விடாமல் www.picscrazy.com இல் நமது ஓம்சிவசிவஓம் நோட்டீஸை அப்லோடு செய்யுங்கள்.வக்கிரமான புகைப்படங்களுக்கு மத்தியில் அதை நீக்கும் மந்திர ஜப விளக்க நோட்டீஸ்களும் இருக்கட்டும்.

    ReplyDelete
  4. I am a member of 'Indusladies Forum". I have started a new thread called "om siva siva om". There I requested people to chant this mantiram and to refer the site "aanmiga kadal" for further detail. Till now 30 people have viewd this thread.

    Thx

    shashikala

    ReplyDelete