Sunday, February 19, 2012

சிவராத்திரி அதிசயம்;ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில்!!!



நாளை 20.2.12 திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நள்ளிரவு சுமார் 1 மணி வரையிலும்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர்(சிவகாசி ரோட்டில்)சாலையில் அமைந்திருக்கிறது முதலியார்பட்டித்தெரு(தெற்குப்பட்டி என்பது பேச்சுவழக்கில் இருக்கும் பெயர்) இந்த தெருவின் நடுநாயகமாக நெசவாளர்களின் வீடுகளுக்கு நடுவே அமைந்திருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் திருக்கோவில்.


இந்தகோவிலுக்குள் ஒரு பாட்டி தனது கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் அதிசயத் திருவிழா நடைபெறும்;பல ஆண்டுகளாக இந்த அதிசயம் நடைபெற்றுவருகிறது.இரவு சுமார் 11 மணியளவில் துவங்கும் இந்த அதிசயம் சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் நடைபெற உள்ளது.ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் அனைவரையும் வருக,வருக!!! என அன்புடன் அழைக்கிறோம்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓரளவே தங்கும் வசதிகள் இருக்கின்றன.12 கி.மீ.தூரத்தில் இருக்கும் ராஜபாளையத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் விதமாக எல்லா விதமான தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
$$$ படத்தில் இருப்பது தைமாத பவுர்ணமி பூஜையின் நிறைவாக இருக்கும் அருள் அன்னை பத்திரகாளி!!!


என்னை ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறச்செய்த எனது அன்னை பத்திரகாளிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!











1 comment:

  1. Nandri unaku Solla varathai illai Srivilliputtur Pathrakalliyae!

    Nandrikal pala ungalukum.....

    Annai in unmai visvasi

    E.Erullappan - Kalli adimai...
    MP. Vairamuthu

    ReplyDelete