Friday, January 6, 2012

ஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும் புகழ் பெறுவதற்கு காரணம் என்ன?


வீடுகளுக்கு வாஸ்து உள்ளது போல் கோயில்களுக்கும் வாஸ்து உள்ளது. மூலவரின் அறை இத்தனை சதுரடியில் அமைய வேண்டும். மூலவரின் மண்டபம் இத்தனை அடி அகலத்தில் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் வாசல் அமைய வேண்டும்.

மூல ஸ்தானத்தில் இருந்து இத்தனை பாகை (டிகிரி) வித்தியாசத்தில் பரிவார தேவதைகள் அமைக்கப்பட வேண்டும். நவகிரகங்கள், கருப்பு, முனீஸ்வரர், ஐய்யனார் ஆகியோர் குறிப்பிட்ட திசை, கோணத்தில் அமைக்கப்பட வேண்டும். தென் திசையில் தட்ஷிணா மூர்த்தி வைக்க வேண்டும்.

கோயில் விருட்சங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல் அமைக்கப்படும் கோயில்களில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

ஆனால் இன்றைக்கு சிறிய இடத்தில் கூட பல்வேறு தெய்வங்களின் சிலைகளை வைத்து கோயில்களை உருவாக்கி விடுகின்றனர். மேலும், அதில் ஒரு பகுதியை மண்டபத்திற்கு என ஒதுக்கி, அதிலும் வருமானம் பார்க்கின்றனர். இங்கே ஆகம விதிகள் மதிக்கப்படுவதில்லை. இதனால் பாதிப்புகள் ஏற்படும். மூலவரின் சக்தி/ஆற்றல் சிதைவடையும்.

பக்தர்களும் முழுமையாகப் பலன் பெற முடியாததால், அந்தக் கோயிலுக்கு வருவதை காலப் போக்கில் நிறுத்தி விடுவர். இதனால் அந்தக் கோயில் புகழ்பெறாத நிலை ஏற்படுகிறது.

No comments:

Post a Comment