Monday, June 28, 2010

என்னை பிரமிக்க வைத்த புத்தகம் ; மறைந்திருக்கும் உண்மைகள்

புத்தக விமரிசனம்:

சுமார் 10 ஆண்டுக்கு முன்பு, மறைந்திருக்கும் உண்மைகள்,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்புக்களை நான் படித்தேன்.கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அற்புதமான புத்தகங்களில் இதுவும் ஒன்று..

இந்த புத்தகத்தை முதன் முதலில் வாசித்து முடித்த அன்று,என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை; அடுத்த ஒரு வாரம் வரை இந்த புத்தகத்தின் கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.ஓஷோவை செக்ஸ் சாமியார் என முத்திரை குத்தி, அவரது எழுத்துக்களை பரவாமல் பார்த்துக்கொண்டனர் சிலர்.அது யாரென அப்போது எனக்குப் புரியவில்லை.
தற்போதுதான் அது புரிந்தது.சோவியத் ரஷ்யாவில் கடவுள் இல்லை என்பதை தனது லட்சியமாகக் கொண்ட கம்யூனிசம் ஆட்சிசெய்தது.அவர்கள்,மனித சக்திக்கு மிஞ்சிய சக்தி இந்த பூமியில் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பலவிதமான ஆராய்ச்சிகளை,பல வருடங்கள் செய்தனர்.அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், மனித சக்தியே மனதின் சக்தி என்ற முடிவுக்கு வந்தனர்.

மனதின் சக்தியோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம்,அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பதை தமது பகுத்தறிவினால் அறிந்தபின்னர்,திகைத்துப்போயினர்.

தனது காலத்திற்குப்பின்னரும்,பல நூற்றாண்டுக்குப்பின்னர் பிறக்க இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் கோவில்கள்,மசூதிகளை உருவாக்கியிருந்தனர் என்பதை உணர்ந்தனர்.இந்த உண்மைகளை இந்தியாவில் பரவாமல் இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் பார்த்த்க்கொண்டனர்.

ஜோதிடம் எப்பேர்ப்பட்ட அறிவியல்,இந்துக்கோயில்களில் ஈரத்தில் 60 ஆண்டுகள் வரை பூசாரிகளாக இருப்பவர்கள் எந்த ஒரு சிறு உடல் நலக்கேட்டிற்கும் ஆளாமலிருக்கும் ரகசியம்,இந்து தர்மத்தின் தொன்மையும்,அதனுள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள் இவற்றின் ஆதாரபூர்வமான விளக்கங்கள் கண்டு பிரமித்தேன்.
உதாரணமாக,விமானம் கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆகிறது என நாம் பீற்றிக்கொள்ளுகிறோம்.ஆனால்,மத்திய தரைகடல் பகுதியில் ஒரு விமானதளம் 'கண்டுபிடிக்கப்பட்டது'.அந்தவிமான தளத்தின் வயது 20,000 ஆண்டுகள்.

இந்து தர்மத்தின் பெருமைகளை அறிய விரும்புவோர்கள், நமது முன்னோர்களின் பெருமைகளை உணர விரும்புவோர்கள், சுயச்சார்புடன் வாழ விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம் மறைந்திருக்கும் உண்மைகள்.இணைய தளம் முலம் வாங்கிடhttp://www.kannadhasanpathippagam.com/tamil_products.aspx

No comments:

Post a Comment