Tuesday, June 8, 2010

உயர்ந்த அந்தஸ்தோடு வாழ


தைமாதம் வரும் பூசம் நட்சத்திரம் நாளன்றும்,ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள்,மகான்கள்,துறவிகளின் ஜீவ சமாதிகள்,சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி,திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை,அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் (முற்காலக் கணக்கின்படி ஒரு நாழிகை) ஜபித்துவரவேண்டும்.
இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும்.அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத்துவங்குவோம்.

அதற்குமுன்பாக,இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர்/சிவாச்சாரியார்/சைவச்சித்தாந்த மாணவர்/உங்கள் ஆஸ்தான ஜோதிடர்/உங்களது ஆஸ்தான துறவி/உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு,குரு உபதேசம்
பெற்றிருத்தல் அவசியம்.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

No comments:

Post a Comment