Tuesday, June 1, 2010

சதுரகிரியில் இருக்கும் அபூர்வ மூலிகைகள்

சதுரகிரியில் இருக்கும் சில அபூர்வ மூலிகைகள்

கல்தாமரை என்ற மூலிகைச் செடியினம் சதுரகிரியில் இருக்கின்றது.இதன் வேர் தரைக்குக் கீழே சுமார் 4 அடிவரை போகும்.அதன்பிறகே பக்கவாட்டுக்கு பரவும்.அப்படி பக்கவாட்டில் பரவுமிடத்தில் ஒரு பூசணிக்காயளவுக்கு ஒரு கிழங்கு இருக்கும்.

அந்தக்கிழங்கை ஒரு நல்ல திதியன்று அறுத்துஎடுத்து,தண்ணீரில் கழுவி,வெட்டவெளியில் மதிய நேரத்தில் அதன்மீது நின்றால்,வானில் நட்சத்திரங்களைக் காணமுடியும்.சித்தர்கள் இப்படி கண்டே ஜோதிட நூல்களை எழுதினர்.
கி.பி.2101 ஜீன் 1 ஆம் தேதி மதியம் 1.30க்கு என்ன நடக்கும்? என்பதைக்கூட தெளிவாகவும்,துல்லியமாகவும் பாடல்களாக எழுதியுள்ளனர்.
சஞ்ஜீவ காரணி என்ற மூலிகையானது வெட்டுப்பட்ட மனித உறுப்பினை ஒட்ட வைத்துக் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது.
மதி மயக்கி என்ற மூலிகையை நாம் நுகர்ந்தாலே,நமது அனைத்துக் கடந்தகாலமும் நமக்கு மறந்துவிடும்.அப்படியே சதுரகிரி மலைக்காடுகளில் சுற்றிவிட வேண்டியதுதான்.

No comments:

Post a Comment