Tuesday, June 1, 2010

திறமையான ஜோதிடரால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

திறமையான ஜோதிடரால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஒரு திறமையான ஜோதிடர்,அசைவம் ஒரு போதும் சாப்பிடமாட்டார்.ஏதாவது ஒரு இஷ்டதெய்வத்தை வழிபட்டுக்கொண்டே இருப்பார்.அந்த தெய்வத்தால்,அவரது வாக்குப் பலிதமாகும்.
ஒரு தம்பதியர் தமது ஜாதகத்தைக் கொடுத்தால்,அந்த தம்பதியரை எக்காரணம் கொண்டும் பிரிக்க மாட்டார்.அந்த தம்பதியரின் அனைத்து வாழ்க்கை ரகசியங்களையும் தெரிந்தவராக இருந்தாலும்,அதை ஒருபோதும் எவரிடமும் எப்போதும் சொல்லமாட்டார்.

ஒரு அரசாங்கத்தின் உளவுத்துறைத் தலைவர் எப்படி அந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறாரோ,அதேபோல்,ஒரு ஜோதிடர் தனது வாடிக்கையாளர் அனைவரையும் பாதுகாத்து,நல்வழிப்படுத்தி,முன்னேறவைக்கிறார்.

நீங்கள் உங்கள் ஜாதகத்தை ஒரு அனுபவமிக்க ஜோதிடரிடம் தந்தாலே ,அவர் முன்னால் நீங்கள் நிர்வாணமாக நிற்பதற்குச் சமம்.ஆம்!

உங்களது அபிலாஷைகள்,ஆசைகள்,நோக்கங்கள் என்ன?
உங்களது கடந்த காலத்தோல்விகள் என்ன? ஏன் தோற்றீர்கள்?

எதற்காக வந்திருக்கிறீர்கள்?அதை செயல்படுத்திட நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? என்பதை துல்லியமாக வழிகாட்டுபவரே திறமையான ஜோதிடர்!
(உங்களது அந்தரங்க வாழ்க்கையில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளுவீர்கள்? என்பதைக்கூட ஒரு திறமையான ஜோதிடரால் சொல்லிவிடமுடியும்)

திறமையான ஜோதிடர் இன்று மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு குடுக்கறதைக்குடுங்க எனக் கெஞ்சுவார்.அல்லது அவர் கேட்கும் தட்சிணையை உங்களால் தர முடியாது.அல்லது அவர் இந்தியாவை விட்டு உலகம் முழுவதும் உலா வந்துகொண்டே இருப்பார்.
ஒரு உதவியைக் கேட்டு உங்கள் ஆஸ்தான ஜோதிடர் உங்களிடம் வந்தால்,நீங்கள் மறுக்காமல் அவருக்கு உடனே உதவி செய்யவேண்டும்.அது, நீங்கள் உங்களது குருவுக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும்.

2 comments: