Monday, June 14, 2010

திருமணம் உடனே நடைபெறவும்,குடும்பச்சண்டை நிற்கவும் ஒரு பரிகாரம்

நீண்டகாலமாக திருமணமாகாதப் பெண்களுக்கு

பலவிதமான தோஷங்களுடன் தான் நாம் இந்த கொடூரமான கலியுகத்தில் பிறக்கிறோம்.ஆனால்,அது நமக்குத் தெரிவதில்லை;ஏனெனில்,முற்பிறவி/முற்பிறப்புக்களில் நாம் சில சிறந்த புண்ணியகாரியம் செய்திருப்போம்.அந்த புண்ணியம் நம்மை இந்தப்பிறவியில் நல்லெண்ணத்துடன் பிறக்க வைத்திருக்கும்.
உதாரணமாக,ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரமாக இருந்தால்,அவர் எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவார்.(அந்த வக்ர செவ்வாயை குரு பார்த்தால் இந்த பொறாமைகுணம் ஓரளவு மட்டுமே இருக்கும்)
புதன் வக்கிரமாக இருந்தால்,சிந்தனையே வக்கிரமாக இருக்கும்.மனதில் ஒருவனுக்கு ஒருத்தி,ஒழுங்கான நிர்வாகம்,சிறந்த ஆளுமைத்திறன் இராது.ஆனால்,இவர்கள் அப்படி டீசன் டாக இருப்பதுபோல நடிப்பார்கள்.

லக்னாதிபதியே வக்ரமாக இருந்தால்,இவர்கள் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பவே மாட்டார்கள்.

பல கன்னிப்பெண்களுக்கு 27,29,31,40 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.அதற்கு அந்தக் கன்னிப்பெண்கள் அஷ்டமிதிதி வரும் நாளில் தனது வயதின் எண்ணிக்கையில் துர்கையம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றிவழிபட்டுவரவேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி திருமணம் ஆகும்வரை ஏற்றிவழிபட்டுவந்தால்,நிச்சயமாக விரைவாக திருமணம் நடைபெறும்.

திருமணமான பெண்கள் இதேபோல்,அகல் விளக்கில் தீபம் ஏற்றிவழிபட்டுவந்தால்,மாமியார் மருமகள் சண்டை,கணவன் மனைவி யுத்தம்,நாத்தனார் மதினி வாக்குவாதம் நின்றுவிடும்.

No comments:

Post a Comment