Tuesday, June 1, 2010

தமிழ்க்குடும்பங்களைச் சிதைக்கும் நாத்திகம்

தமிழ்நாட்டின் குடும்பங்களைச் சிதைக்கும் நாத்திகம்

அரசியலில் நாத்திகம் பேசுவது மிகவும் மரியாதைக்குரியதாக தமிழ்நாட்டில் கருதப்படுகிறது.வெளியே,மேடையிலும் அரசியல் அரங்கிலும் நாத்திகத்தின் நேரடி வாரிசாக செயல்படும் அரசியல்வாதிகள் இந்த நிஜசம்பவத்தால் வறுமையில் வீழ்ந்த நாத்திகவாதிக்குப் பதில் சொல்லட்டும்:

ராஜபாளையம் நகரில் ஒரு பர்லாங்கு தூரமுள்ள ஒரு பெரிய தெருவில்,ஒருவர் டீக்கடை துவங்கினார்.15 ஆண்டுகளில் டீக்கடை நடத்தியே ஒரு மாடிவீடு கட்டினார்.அதே தெருவில்தான்!
அந்தத் தெருவில் இவ்வ்வளவு பெரிய்யமாளிகையை யாருமே கட்டியதில்லை.
தனது வீட்டின் திறப்புவிழாவுக்கு நாத்திகம் பேசும் தலைவர்களை தலைமை தாங்க வைத்தார்.அதுவும் அஷ்டமியன்று!
அடுத்த சில மாதங்களிலேயே அந்த டீக்கடைக்காரர் அந்த வீட்டையே விற்குமளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தார்.தனது மகள்களுக்கு திருமணம் செய்விக்க கடன் கேட்காத ஆளே இல்லை.இன்று,கோவில் பிரசாதத்தால் உயிர்வாழ்ந்துவருகிறார்.

நாத்திகம் பேசும் நமது தமிழறிஞர்கள்,புரட்சிகள் நிஜவாழ்க்கையில் ஆத்திகத்தை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர்.
திருக்குவளைக்குச் செல்லும்போதெல்லாம் தனது குலதெய்வத்தின் கோவிலுக்குச் செல்லும் கறுப்புக்கண்ணாடித் தாத்தா,கோவிலின் பிரதான வாசலைப் பூட்டிவிட்டு மனதார வேண்டுவது அவரது வழக்கம்.
தனது ஆயுளை நீடிப்பதற்காக மஞ்சள்துண்டை ஜோதிட ஆலோசனைப்படி அணிவது இன்றுவரை தொடர்கிறது.
புரட்சியை தனது அடைமொழியாக வைத்துக்கொண்டு தனிக்கட்சி நடத்தும் தலைவர், ராகு காலத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்.நமது அடிமுட்டாள் தொண்டர்கள் தனது தலைவனின் நாத்திகக் கொள்ளையைக் கண்டு புளங்காகிதமடைவார்.ஆனால்,அது புரட்சியை அடைமொழியாகக் கொண்டவரின் பிறந்த நட்சத்திரம் வலிமையாக இருக்கும் அரசபட்சிநேரம் என்பது அடிமுட்டாள் தொண்டர்களுக்குத் தெரியாது.
சரி போய்த்தொலையட்டும்.அஷ்டமியில் வீட்டில் குடியேறிய அந்த அப்பாவி நாத்திகரை எந்த நாத்திகத்தலைவனாவது அதன் பிறகு வந்து பார்த்தானா? இல்லவே இல்லை.உதவி செய்யவே இல்லை.
நாத்திகம் என்பது முழுமைபெறாத முட்டாள்தத்துவம்.

No comments:

Post a Comment