Monday, June 14, 2010

ஆன்மீகக் கடல் வலைப்பூவின் புதிய வாசகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

பல ஆன்மீகக் கடல் வாசகர்கள் புதியவர்களாக இருக்கிறார்கள்.எதையாவது கூகுள் தமிழ் மொழியில் தேடுகிறார்கள்.அந்த வேர்ச்சொல் இருக்கும் தமிழ் இணையதளங்கள்,வலைப்பூக்கள்,வர்த்தக தளங்களை கூகுள் எடுத்துத் தருகிறது.அப்படித் தரும் வலைப்பூக்களில் முதல் பக்கத்தில் நமது ஆன்மீகக் கடல் வந்துவிடுகிறது.
பெயர் வித்தியாசமாகவும்,கவர்ச்சியாகவும் இருப்பதால் நமது ஆன்மீகக் கடலுக்கு புதிய வாசகர்கள் உலகெங்கிலுமிருந்து வந்துவிடுகிறார்கள்.மிக்க மகிழ்ச்சி!அனைவரையும் வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன்.

புதிதாக வருபவர்கள்,நமது ஆன்மீகக் கடலின் ஆரம்பகட்ட கட்டுரைகளைப் படிப்பதில்லை; என்றே தெரிகிறது.ஏனெனில்,அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் நமது ஆன்மீகக் கடலில் 2008 ஆம் ஆண்டு பதிவுகளில் இருக்கிறது.
தவிர,அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டுரைகள் வெளியிட்டால்,ஏற்கனவே பதிப்பித்த பதிவுகளையே மீண்டும் வெளியிட வேண்டியிருக்கிறது.
இதனால்,நமது நிரந்தர வாசகர்கள் கோபித்துக்கொண்டுவிடுவார்களோ ? என நான் அஞ்சுகிறேன்.
புதிய வாசகர்களே! தாங்கள் அனைவரும் இந்த வலைப்பூவின் அனைத்து பதிவுகளை பொறுமையாக வாசித்துவிட்டு கேள்விகள்,சந்தேகங்களைக் கேட்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment