Monday, June 14, 2010

ஜோதிட கேள்வி பதில்

1.ஏன் அரச மரத்தின் கிளையை திருமணத்தின்போது நட்டி வைக்க வேண்டும்?

அரச மரமானது முழுச்சுபக்கிரகமான குரு என்னும் வியாழனுக்குரியது.வியாழனுடைய பார்வை படுவது சுபத்தைத் தரும் என்பதாலேயே அரசமரக்கிளையை நட்டி வைக்கின்றனர்.
மேலும் குருபார்வை,குருபலம் இல்லாத முகூர்த்தத்திற்கு ‘தோஷப்பரிகாரமும்’ ஆவதால் அக்காலப்பெரியவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள்.

2.முருகக் கடவுளின் அருள் கிடைக்கச் செய்யும் மந்திரம் எது?

ஓம் ஹம்ஸஹ ஓம் தஸ்மை
ஷண்முகாயநமோ ஹஸ்து

என்ற இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்துவந்தால்,முருகக் கடவுளின் அருள் கிடைக்கும்.

3.யார் குள்ள நரியாகப் பிறப்பார்?

மனைவி ஆசையுடன் உறவிற்கு நெருங்கி வரும்போது, அவள் ஆசையை பூர்த்தி செய்யாதவன்,
கணவனின் ஆசையை பூர்த்தி செய்யாத மனைவி,
(நான் கேள்விப்பட்டவரையில் எனக்கு தெரிந்த ஒருவனது முதலிரவில் முதலில் கணவன் தொட்டவுடனே அவன் மனைவி கேட்டாள்:உங்களுக்கு ‘அது’ இல்லாமல் இருக்க முடியாதா?)

ஒரு குழந்தையைக் கருவிலேயே கொன்றாலும்(எல்லா டிவி,சினிமா நடிகைகளும் இதில் அடக்கம்)
மறு ஜன்மத்தில் குள்ள நரியாகப் பிறப்பார்கள் என சாஸ்திரம் சொல்லுகிறது.

4.எனது எதிரிகள் செய்த தீச்செயலால் என்னால் இரவவல் சரியாகத்தூங்க முடியவில்லை.என்ன செய்யலாம்?

மருத்தோன்றிப்பூவை தலையணை ஓரத்தில் வைத்துத் தூங்குங்கள்.

5.எனக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளது.என்ன மருந்து சாப்பிடுவது?

அதிமதுரப் பொடி 2 கிராம் தேனில் காலை மாலை சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

6.நான் ஒரு முருக பக்தன்.தேள்க்கடி மற்றும் விஷக்கடி பார்வை(மந்திரப்பிரயோகம்) பார்க்க ஒரு மந்திரம் கூறுங்கள்.

ஓம் நீல கண்டாய வித்மஹே
சித்ரபட்சாய தீமஹி
தன்னோஹ் மயூர ப்ரஜோதயாத்
சர்வ விஷம் நசி மசி சுவாஹா.

7.ஒருவன் மரணத்திற்குப்பிறகு எந்த கதியைப் பெறுவார் என்பதை எதைக் கொண்டு தீர்மானிப்பது.

இறந்தவரின் மரணமானது உச்சகோள் தசாவில் வந்தால் தெய்வகதியிலும்,ஆட்சிக்கோள் தசாவில் வந்தால் மனித கதியிலும், பகைக் கோள் தசாவில் வந்தால் மிருக கதியிலும், நீசக்கோள் தசாவில் வந்தால் நரக கதியிலும்(தவழ்வன,பறப்பன,நீர்வாழ்வன) உயிரானது அனுபவித்துப்பிறவியெடுக்கும்.

ஆனால்,ஜீவசமாதி அனுபவம் பெற்றவர்களுக்கு எந்தவித கதியுமில்லை;பிறப்புமில்லை;

தெய்வகதியென்பது பல்லாண்டுகள் ஆலயத்தில் வைத்து வழிபடக் கூடிய நல்வினைக் கதியைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment