Friday, June 11, 2010

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,

நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.
திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,
வீரனை தைரியத்தாலும்,
குருவை பணிவான அன்பினாலும்,
மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்

    பி.எஸ்.பி அய்யாவின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?

    ஞான சிந்தாமணி இதழில் தொடர்ந்து அவருடைய கட்டுரைகளை படித்துள்ளேன்.

    விஜய்

    ReplyDelete