Wednesday, September 23, 2015

யோகம் நிறைந்த குழந்தைகள் பிறக்க


பகவத் கீதை,திருக்குறள்,விஷ்ணு சகஸ்ரநாம சாஸ்திரம்,லலிதா சகஸ்ரநாம சாஸ்திரம்,திருமந்திரம்,காளிதாசனின் உத்திரகாலாமிருதம்,ஜோதிட ராமாயாணம்,சீவகசிந்தாமணி,மணிமேகலை,குண்டலகேசி போன்ற நமது மரபுச்செல்வங்களை கற்க வேண்டிய வயது 50,60,70 அல்ல;

300 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மகனை படிக்க குருகுலத்திற்கு அனுப்புவர்;5 வயது முதல் 15 வயதுவரை குருகுலத்தில் தங்கி கல்வி பயில வேண்டும்;பாடத்திட்டம் 16 மொழிகள்(இந்தியாவின் பிரதான மொழிகள்),வில் வித்தை,ஜோதிடம்,சித்த மருத்துவம்,மூலிகைகளை இனம் காணுதல்,மந்திர ஜபம்,மந்திர பிரயோகம்,போர்க்கலையான தனுர்வேதம்,பிராணயாமம்,யோகக் கலையான பிராணயாமமும் 1008 யோகாசனங்களும்,சரக்கலை என்ற சுவாசக் கலை,கண்ணாடி தியானம்,கோவிலைக் கட்டும் ஆகமங்கள் போன்றவையே பாடத்திட்டங்களாக இருந்தன;ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி சமயத்தில் ஒரு பட்சகாலம் (15 நாட்கள்) மட்டுமே ஆண்டு விடுமுறையாக குருகுலத்தில் இருந்து வீட்டுக்கு வரலாம்;

15 வயது நிறைவடையும் போது அந்த இளைஞன் எப்படி இருப்பான் தெரியுமா? 

அரு.ராமனாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி என்ற வரலாற்று நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது;அதில் உள்ள கதாநாயகன் போலவே ஆளுமைத்திறன் உள்ளவனாக ஒவ்வொரு இந்துவும் உருவாகியிருப்பான்;

அல்லது 

சாண்டில்யன் எழுதிய விலைராணி என்ற நாவலை வாசித்துப் பாருங்கள்;யவனராணி என்ற நாவல் 3 பாகங்களாக வெளிவந்திருக்கின்றன;இவைகளில் இருக்கும் அரசனைப் போலவே ஒவ்வொரு இந்துவையும் குருகுலம் உருவாக்கியுள்ளனர்;

இவைகளை முதன்முதலில் அழித்தது இஸ்லாமியப் படையெடுப்பு; பாடலிபுத்ரத்தில் மட்டும் தான் பல்கலைக்கழகம் இருந்தது என்று எண்ண வேண்டாம்;இதோ நம்ம காஞ்சிபுரத்திலும்,இன்றைய சங்கரன் கோவிலிக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே இருக்கும் கழுகுமலையிலும் பல்கலைக்கழகங்கள் 12,000 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளன;


சுமாராக 1400 தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் மேலே உள்ள குருகுலக் கல்வியைப் பயின்றுள்ளனர்;அவைகள் இன்னும் நமது எலும்பு மஜ்ஜையில் புதைந்திருக்கிறது;ஏழாம் அறிவு திரைப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் போதி தர்மன் என்ற கதாபாத்திரம் பொய் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை; நாம் ஒவ்வொருவருமே போதி தர்மனின்,ராஜராஜ சோழனின்,சாணக்கியனின்,அவ்வையாரின்,ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின்,கிருஷ்ண பகவானின்,தர்மரின்,பீமரின்,அர்ஜீனரின்,சகாதேவனின் வாரிசுகளே!


இந்த எலும்பு மஜ்ஜையில் இருக்கும் முன்னோர்களின் திறமையை அழிக்கும் வேலையைத் தான் ஃபுளூரைடு கலந்த பற்பசைகள் செய்துவருகின்றன;நம்மை நமது அறிவை மழுங்கடிக்கும் வேலையை மேற்கு நாடுகள் செய்துவருகின்றன;அவைகளின் தற்போதைய வடிவமே பிட்காயின்,பியூச்சர் டிரேடிங்,கமாடிட்டி டிரேடிங்,ஆன்லைன்  ஷேர்மார்கெட்,செல்போன் தொழில் நுட்பம்,இணையத் தொழில் நுட்பம்,ஜீன்ஸ் தொடர்ந்து அணிவதன் மூலமாக ஆண்மையும் அழியும்;பெண்மையும் அழியும்;மினரல் ஹெ2ஓ நம்முடைய உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மழுங்கடிக்கும்;பாலியல்தளங்கள் நமது இளம் குழந்தைகளை ஆண்மையற்றவர்களாக,பெண்மையற்றவர்களாக மாற்றுகின்றன;மேலும்,தாம்பத்திய திருப்தியை கானல் நீராக்கி,காமப் பிசாசுகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன;


இந்துக்கள் அதிகம் வாழ்ந்து வரும் நகரின் மின்சாரத்துறை தலைமை அதிகாரியாக வேற்று மதத்தைச் சேர்ந்தவர் இருந்தால்,வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி வாக்கிலும் மற்றும் இந்துக்களின் முக்கியத் திருவிழாக் காலங்களில் திருவிழா நேரத்திலும் மின் வெட்டை அமல்படுத்திவருகின்றனர்;இதன் பின்னணியில் இருப்பது அவர்களின் மதக் கண்ணோட்டமே!


இயற்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்;`18 வயது முதல் 40 வயது வரையிலும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரையிலாவது (காலை 30 நிமிடம்;இரவு 30 நிமிடம்) ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்து வரவேண்டும்;அப்படி செய்தால் மட்டும் சில ஆண்டுகளில் நாம் ஜபிக்கும் மந்திரஜபம் சில லட்சங்களை எட்டும்;அப்படி சில லட்சங்களை எட்டியப் பின்னர் திருமணம் செய்து,குழந்தைக்கு முயற்சி செய்தால் நிச்சயமாக ஆரோக்கியமும்,யோகமும் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்;


எனது தேசத்தின் சகோதர,சகோதரிகளே! எனது தமிழ்ச் சொந்தங்களே! நமது பண்பாட்டை நாம் தான் பாதுகாக்க வேண்டும்;நமது வாரிசுகளை சகல கலா வல்லவர்களாக நாம் தான் ஆன்மீகப் பயிற்சி,தேசபக்திப் பயிற்சி,ஜோதிடப் பயிற்சி,மனோதத்துவப் பயிற்சி,ஆழ்மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சி,இயற்கை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி என்று 15 வயது முதல் 25 வயது வரை ஒவ்வொரு ஆண்டு விடுமுறை சமயத்திலும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;இது நமது கடமை;

இதற்குத் தேவையான பொருளாதார தன்னிறைவை எட்டிட எமது ஜோதிட,ஆன்மீக ஆலொசனைகளைப் பின்பற்றினால் போதும்,சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;

No comments:

Post a Comment