Wednesday, September 9, 2015

ஏன் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக் கூடாது?



ஏன்னா,சாப்பிடும் நேரம் வந்ததும்,நமது வயிற்றில் இயற்கையான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சுரக்கும்;நாம் சாப்பிடும் உணவை இதுதான் கூழாக்கும்;

சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்போ அல்லது சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகு வரும் 30 நிமிடம் வரையோ தண்ணீர் குடித்தால்(தண்ணீர் மட்டும் அல்ல;கோக் முதலான எந்த ஒரு திரவத்தை குடித்தாலும்) இந்த ஹைட்ரோகுளோரிக் ஆசிட் நீர்த்துப்போய்விடும்;இதனால் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக அதிகநேரம் ஆகும்;

இதையே தொடர்ந்து (வருடக் கணக்கில்) செய்து வந்தால்,ஜீரண மண்டலம் தனது வேலையைச் செய்யமுடியாமல் ஆயுள் குறைந்துவிடும்;(கோக் டின்னர் என்பது மாநகரங்களில் பிரபலமாக இருக்கிறது; இதுதான் பெருமையாம்;கோக் குடித்துக் கொண்டே சாப்பிடுவதுதான் நம்மை நாகரீகமுள்ளவர்களாகக் காட்டுமாம்;

நம்மை நிரந்தர நோயாளியாக்கிட மேல்நாட்டினர் போட்டிருக்கும் திட்டம் என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை)
ஒவ்வொரு முறையும் சாப்பாட்டை வாய்க்குள் வைத்ததும்,மென்று சாப்பிட வேண்டும்;அப்படி மென்றால் தான் உமிழ் நீர் அதனுடன் கலக்கும்;அப்படி கலந்தால் தான் வாயிலேயே உணவு ஜீரணமாகத் தயாராகிவிடும்;

இதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;

சாப்பிடும் போது செல்போனில் பேசக் கூடாது;

சாப்பிடும் போது வேக வேகமாக சோற்றை விழுங்கக் கூடாது;

பசிக்காமல் சாப்பிடக் கூடாது;என்று போதிப்பதன் ஆரோக்கிய ரகசியம் இதுதான்;

ஆனால்,நடைமுறையில் வாயில் அரைக்க வேண்டிய உணவை விழுங்கிவிடுவதால்,வயிறு அரைக்கும் என்று நம்பிவிடுகிறோம்;இதனால் தைராய்டு உருவாகி,அதுவே டான்சில் உருவாக இதுதான் காரணம்;

டான்சில் வந்தால்,அதை நமது நாட்டு மூலிகைகள் மூலமாக குணப்படுத்திவிடலாம்;முற்றிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவது முடியாத காரியம்;

பாட்டி வைத்தியத்தில் இருந்து,இயற்கை உணவுப் பழக்கம் வரை இருக்கும் அனைத்து வைத்திய முறைகளிலும் உணவு எப்படி நமது உடலுக்குள் பயணிக்கிறது என்பதை இப்படித்தான் சொல்கின்றன;அரசியல் மாமேதை சாணக்கியரும் இதையே தனது அர்த்தசாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்;திருமூலர்,அகத்தியர் முதலான சித்தர் பெருமக்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்;திருவள்ளுவரும் திருக்குறளில் இதைப் பாடியுள்ளார்;

நாம் நமது குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பதைப் பெருமையாக நினைப்போம்;நமது வம்சாவழியை நமது பாரம்பரியத்தில் இருந்தே பிரித்துவிடும் பாக்கியம் பெற்றவர்கள்:


No comments:

Post a Comment