Friday, September 18, 2015

தொப்பையை உருவாக்கும் தவறான உணவுப்பழக்கம்


நம்மில் பெரும்பாலானவர்கள்,சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்துகிறோம்;அல்லது சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துகிறோம்;இரண்டுமே நமது சீரணமண்டலத்தின் இயக்கத்தை ஸ்தம்பிக்க வைப்பவை;இதனால் தான் குண்டாகிறோம் அல்லது கர்ப்பிணிப்பெண்களுக்கு இணையான அளவில் தொப்பையை வளர்க்கிறோம்;

சாப்பிட்டு முடித்ததும்,வாயைக் கொப்பளிக்கக் கூடாது;அதை அப்படியே விழுங்குவது அவசியம்;அப்படி விழுங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகபட்சம் 15 மி.லி.தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்;

அதே போல,காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலும் தொப்பையை உருவாக்கிவிடும்;

எப்போது தண்ணீர் அருந்தலாம்?

சாப்பிடும் நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாக அல்லது சாப்பிட்டு முடித்த 30 நிமிடம் பின்பாக மட்டும் தண்ணீர் அருந்தலாம்;
சரி! முழு ஆயுள் பெற நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதுதான்;

ஒருலிட்டர் முடியாவிடில் கொஞ்சம்,ஒரு தம்ளர் அளவுக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்;

ஏன் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்?

நமது உடலில் 70% தண்ணீர் இருக்க வேண்டும்;அலைச்சல்,கடும் வேலை,தொடர் பயணம் இவைகளால் தண்ணீரை நமது உடலில் இருந்து இழக்கிறோம்;அதை ஈடுகட்டிட ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும்;மினரல் வாட்டர் தொடர்ந்து அருந்துவதால்,நமது உடலானது நோய் எதிர்ப்புத் திறனை படிப்படியாக இழக்கிறது என்பதை பாட்டி மருத்துவமும் தெரிவித்தது;நவீன மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment