Thursday, September 10, 2015

மாந்திரீகக் கோளாறுகளை நீக்கும் வாத்தியாரய்யா!


நம்மில் பெரும்பாலானவர்கள் சக உறவினர்கள்,நண்பர்கள்,தொழில் எதிரிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் இருந்து மீள்வது எப்படி?
நாமும் பதிலடியாக மாந்திரீகத்தை ஆயுதமாக எடுத்தால்,அது நமது அடுத்த 16 தலைமுறைகளைப் பாதிக்கும்;அப்புறம் பழிவாங்கவே தலைமுறைகள் உருவாகும்;இது முறையல்ல;


இதில் இருந்து மீள சுலபமான வழி இருக்கிறது;முதலில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;அப்படி நிறுத்தாவிட்டால் இந்த வழிபாடும் பலன் தராது;


தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு 6 பவுர்ணமிகளுக்கு சிங்கம்புணரி வாத்தியாரய்யா கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வதுதான் அந்த வழிபாடு;

ஸ்தம்பனம்,பில்லி,ஏவல்,பிசாசு என்று எப்பேர்ப்பட்ட மாந்திரீக பாதிப்பாக இருந்தாலும் அதில் இருந்து மீள வாத்தியாரய்யா கோவிலுக்கு வரவேண்டும்;பவுர்ணமி அன்று இரவு 8 மணிக்கு வந்து இரவு அந்தக் கோவிலில் தங்க வேண்டும்;மறுநாள் காலை 6 மணிக்குப் பிறகு அங்கிருந்து செல்ல வேண்டும்;

வாத்தியாரய்யா என்ற முத்துவடுகநாதர் கடந்த நூற்றாண்டுகளில் அன்னை அரசாலை(வராகி)யின் உபாசகராக வாழ்ந்தார்;அன்னையின் அருள் கிட்டிட வாத்தியாரய்யாவின் கருணைப் பார்வை விழும்படி மனதார வழிபட்டால் போதும்;

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பேருந்துகள் இந்த ஊருக்குச் செல்கின்றன;மதுரை டூ திருச்சி சாலை மார்க்கத்தில் பொன்னமராவதியில் இருந்தும் செல்லலாம்;


ஓம் வராகி சிவசக்தி ஒம்

No comments:

Post a Comment