Saturday, January 1, 2011

சிவபெருமான் பற்றி ரகசியம்








சிவன் அவதாரம் எடுத்ததில்லை;தனது அம்சத்தை அனுப்பி அண்டங்களையும் பேரண்டங்களையும் பரிபாலனம் செய்பவர்.அவர் ஆணும் அல்ல;பெண்ணும் அல்ல;அலியும் அல்ல;சர்வ வியாபி.அணுவுக்கும் அணுவாக இருப்பவர்.அவர் ரூபம்,அரூபாரூபம்.அரூபம் என்ற மூன்று நிலைகளிலும் பக்தனின் பரிபக்குவத்திற்குத் தக்கபடி அருளுகிறார்.ஆனால்,அனைத்து மதங்களிலும் அவர் அருட்பெர்ருஞ்சோதி வடிவில் வணங்கப்படுகின்றார்.அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.அவரைப் பற்றிய அறிவைப்பெற இந்த சாதாரண மூளையால் சாத்தியப்படாது.யோகிகளும் பக்தர்களும் கூட அவரைப் பார்த்ததில்லை.அவரைச் சுற்ரி கோடிக்கணக்கான சிவபூத கணங்கள் அவர் ஏவலுக்காகக் காத்து நிற்கின்றன.அப்பூத கணங்கள் மூலமாகத்தான் பூமியில் வாழும் 84 லட்சம் ஜீவ ராசிகளுக்கும் ஆகாரம் அளிக்கிறார்.அவரது எளிய வடிவமே பைரவர்.வீட்டில் வைத்து வழிபட ஏற்றவர் சொர்ண பைரவர் தான்.

2 comments:

  1. அப்படியா..! சரி..
    நம்மால் அறிய முடியாத அவரைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமென்ன? அவர் சர்வ வியாபியாக இருக்கிறார் என்று யார் கண்டுபிடித்தார்கள்? உங்களுக்கு யார் சொன்னார்கள்? அல்லது நீங்கள் எங்கிருந்து இத்தகவல்களைப் பெற்றீர்கள்?

    குதர்க்கமாக கேட்கிறேன் என தயவு செய்து எண்ண வேண்டாம். வினா என்னுள் எழுகிறது. அதனால் விடை தேடுகிறேன். தருவீர்களா?

    ReplyDelete
  2. தயவு செய்து தவறான கருத்தை வெளிவிட வேண்டற்க. நம் முன்னோர்கள் இறைவனை(சிவனை)கண்டு தெளிந்து பிறகுதான் நமக்கு உரைத்தனர் நம் மதம் அர்த்தமுள்ளது. எதையும் ஆதாரம் இல்லாமல் உரைக்கவில்லை.
    பிட்டுக்கு மண் சுமந்த கதை,மாமனாய் வந்து திருச்சபை வழக்கு உரைத்தது மற்றும் பல திருவிளையாடல்கள் என்ன பொய்யா.எனவே தயவு செய்து தவறான கருத்தை வெளிவிட வேண்டற்க.

    ரிஷி உங்கள் கருத்து மிகவும் சரி

    ReplyDelete