Thursday, July 9, 2015

வராகி வழிபாடு செய்யத் தேவையான தகுதிகள். . .


அஷ்டபைரவர்களில் புதன் பகவானின் பிராண தேவதை உன்மத்த பைரவர்;இவரது துணைசக்தியே வராகி! பன்றி முகத்துடன் கூடிய பெண் சக்தி!

ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை என்பது வாலை என்ற பெண்தெய்வ சக்தியை தரிசிப்பதுதான்! சாதாரண மனிதர்களாகிய நாம் வாலையை தரிசிக்க பல பிறவிகள் தொடர்ந்து ஆன்மீக முயற்சிகள் எடுத்தால் தரிசிக்கலாம்;

வாலை என்பது யார்?

மனிதர்களாகிய நம்மைக் கட்டுப்படுத்துவது நவக்கிரக நாயகர்கள்! 
(சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது பேர்கள்)
இந்த நவக்கிரக நாயகர்களை சூட்சுமமாக இயக்குவது பஞ்சபூதங்கள்:
இந்த பஞ்சபூதங்கள் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்(சிவன் அல்ல;) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன;
இந்த மும்மூர்த்திகளும் மஹாபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறார்கள்;மஹாபைரவரோ ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறார்;உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள் சக்திகள் அனைத்தும்,அனைத்துச் செயல்களும் இங்கிருந்து இயங்குகின்றன;
இதற்கு மேல் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிய நாம் சித்தரானால் மட்டுமே முடியும்;
இவர்களுக்கு மேலே ஐந்து சிவ சக்திகள் இருக்கின்றன;இவர்களுக்கும் மேல் அண்ணாமலையார் இருக்கிறார்;அவரையும் இயக்குவது வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதி சக்தி என்ற ஆதி பரபிரும்ம சக்தி!

இந்த வாலையை தரிசிப்பதே மனிதப் பிறப்பின் நோக்கம்;சித்தராக ஆக விரும்பும் போதுதான் வாலை தரிசனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்;வாலையை தரிசிக்க விரும்புவோர்,முதலில் வராகியைத் தரிசித்து ஆசியும்,வரங்களும் வாங்க வேண்டும்;

வராகியைத் தரிசிக்க தினசரி 20 நிமிடம் வீதம் இரண்டு ஆண்டுகள் வராகி உபாசனை செய்ய வேண்டும்;வராகி உபாசனை செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடக் கூடாது;பிறருக்கு தீங்கு நினைக்கவே கூடாது;இந்த இரண்டு கொள்கைகள் யாருக்கு இயல்பான சுபாவமாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே வராகி உபாசனை கைகூடும்;

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! இணையத்தில் வராகி வழிபாடு பற்றி எழுதுவதே தப்புதான்;ஏன் எனில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நேரடியாக உபதேசிக்க வேண்டிய வழிபாடு வராகி வழிபாடு! அவரவர் பிறந்த ஜாதகப்படி தான் ஒருவருக்கு வராகி உபாசனைக்குரிய தகுதி இருக்கிறதா? என்பதை மதிப்பிட முடியும்;இது வெட்டி பில்ட் அப் அல்ல;யதார்த்தம்.

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை வராகி.வராகியைப் பற்றி தமிழ்நாடு முழுக்க பலருக்குத் தெரிந்திருக்கிறது;பல ஆன்மீக அமைப்புகள் வராகி உபாசனையைச் சொல்லித் தருகின்றன; இருந்த போதிலும் வராகி வழிபாட்டுக்கு நமக்குத் தகுதி உண்டா என்பதை அவரவர் ஜாதகம் பார்த்து உறுதி செய்து கொள்வது அவசியம்.

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;

வராகி உபாசனைக்குத் தான் ஜாதகப்படி தகுதி தேவை;வராகி வழிபாட்டிற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை;

தகுந்த மற்றும் நேர்மையான குருவைத் தேடிக் கண்டுபிடித்து வராகி வழிபாட்டைத் துவக்கவும்;

வாழ்க அறமுடன்,வளர்க அருளுடன்!!

ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஒம் வராஹியே போற்றி! போற்றி!! போற்றி!!!



No comments:

Post a Comment