Thursday, July 30, 2015

அதென்ன நோய்க்கும் பாரு;பேய்க்கும் பாரு?




1980 க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த பழமொழி நன்கு தெரிந்திருக்கும்;மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு;
நோய் இருந்தால் வைத்தியம் பார்க்க வேண்டும்;
பேய் இருந்தால்(முன்னோர்கள் தற்கொலை செய்திருந்தால்) அதற்கு உரிய பரிகாரம் அல்லது பூஜை செய்தே ஆக வேண்டும்;
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் 3 ஆம் இடம் அல்லது 5 ஆம் இடம் அல்லது 9 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலே அவருக்கு( பெண்ணாக இருந்தாலும்) பித்ரு தோஷம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்;
அதென்ன பித்ரு தோஷம்?
ஒருவர் இயற்கையான முறையில் இறந்தால் அவருக்கு மறுஜென்மம் உண்டு;அதே சமயம் ஒருவர் விபத்தில் அல்லது போரில்,கலவரத்தில்,குடும்பச் சண்டையில் இறந்தால் அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தால் அவருக்கு மறுபிறப்பு கிடையாது;
ஒரு வம்சாவழியில் இப்படி செயற்கையான முறையில் இறந்தவர்கள் எண்ணிக்கை தலைமுறைக்கு ஒருவர் வீதம் ஐந்து பேர்களுக்கு மேல் வந்தால் அது பித்ரு தோஷமாக உருவாகும்;ஒருவரது பிறந்த ஜாதகத்தில் திர்கோணங்களில் ராகு அல்லது கேது வந்து நிற்கும் போதுதான் பிறப்பார்;18 வயது முதல் திருமணம் ஆகும் முன்பு இந்த பித்ரு தோஷத்தை பரிகார பூஜை மூலம் நீக்க வேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் அவருக்கு வாழ்க்கையில் அவர் எதிர்பார்த்த முன்னேற்றம் இராது;அதாவது திருமணம் தாமதமாகும்;அல்லது அரசுப்பணி தாமதமாக கிடைக்கும்;அல்லது குழந்தை பிறக்காது;அல்லது சொந்தமாக வீடு வாங்க முடியாது;அல்லது கோடிக்கணக்கில் முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்கள் இருக்கும்;ஆனால் அதை அனுபவிக்க முடியாது;
இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்வார்கள்;அப்படி உதவி பெற்றவர்கள்,இவருக்கு துரோகம் செய்வார்கள்;இவர்களுக்கு ‘நாம எல்லோருக்கும் உதவி செய்கிறோம்;ஆனால்,நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?’என்ற ஆதங்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்;
ஒருவரது ஆயுள் 71 வருடங்கள்,9 மாதங்கள்,10 நாள்,2 மணி நேரம்,11 நிமிடங்கள்,32 விநாடி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;ஆனால்,அவர் தனது 32 ஆம் வயதில் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கொல்லப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்;எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் அந்த ஆத்மா 32வது வயதில் இருந்து 71 வயது வரை இருக்கும்;பசிக்கும்;சாப்பிட முடியாது;தாகம் எடுக்கும் தண்ணீர் அருந்த முடியாது;இது எப்பேர்ப்பட்ட கொடுமை!
இப்படி பேய்பிடிக்கும் போது,அந்த மனிதன் ஒரே நேரத்தில் 40 அல்லது 50 இட்லிகளைச் சாப்பிடுவார்;அசாத்தியமான அளவிற்கு உணவு.பானங்களை உட்கொள்ளுவர்;இதெல்லாம் காலம் காலமாக நடைபெற்றுவரும் உண்மையாக இருக்கும் போது கணினியுகமாக இருந்தால் என்ன? இணையப் பரவல் ஆனால் என்ன? பேய் பிடிக்கத் தானே செய்யும்?நீங்கள் பேயை நம்பாமல் இருப்பதற்காக பேய் உங்களைப் பிடிக்காமல் இருக்குமா?
மனிதனுக்கு இறந்தப் பின்னரும் வாழ்க்கை உண்டு;ஆவி உலக ஆராய்ச்சியாளர்களுடன் பழகிப்பாருங்கள்;அல்லது ஆவிகள் உலகம் மாத இதழை மாதம் தோறும் வாங்கிப் படித்துப் பாருங்கள்;ஆவி உலக அனுபவங்கள் பற்றி ஏராளமான புத்தகங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன;அதையும் படித்துப் பாருங்கள்;பேய்கள்,பிசாசுகள் இருப்பது உண்மையே!
கோச்சாரப்படி ஒரு ராசியை ராகு கடக்கும் போது அந்த ராசிக்காரர்களுக்கு பேய்பிடிக்கும்;(இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன;அதை விவரித்தால் இது முழுமையான ஜோதிடக் கட்டுரையாக மாறிவிடும்) ஒரு ராசியை ராகு கடப்பதற்கு 18 மாதங்கள் ஆகின்றன;இந்த 18 மாதங்களில் அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ராகுவின் காரகத்துவங்களில் 300 இல் ஒன்று மட்டுமே நிகழும்;தற்போது,ராகு பகவான் கன்னிராசியைக் கடந்து கொண்டிருக்கிறார்;8.1.2016 வெள்ளிக்கிழமையன்று சிம்மராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்;இந்த நாளில் இருந்து 18 மாதங்களுக்கு சிம்மராசியை ராகு கடக்கிறார்;8.1.16 முதல் 18 மாதங்களில் சிம்மராசியினர் ஒழுக்கமாக இருந்து அவமானப்படும் சூழ்நிலை உருவாகலாம்;அல்லது பேய் பிடிக்கலாம்;அல்லது விஷப் பொருட்களால் உடல் நலம் குன்றலாம்;அல்லது இங்கிலீஷ் மருந்தை மாற்றிச் சாப்பிட்டுவிட்டு சில காலங்கள் மருத்துவசிகிச்சையில் இருக்கும் நிலை உருவாகலாம்;அல்லது முறையற்ற உறவில் சிக்கலாம்;அல்லது ஏற்கனவே ஆரம்பித்திருந்த முறையற்ற உறவு அனைவருக்கும் தெரிந்து அவமானப்படலாம்;
பேய்களை கண்ணால் பார்த்து,போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்:கூகுள் இமேஜில் தேடிப்பாருங்கள்;
ஒரு சிறுகதையுடன் இந்தப் பதிவினை நிறைவு செய்யலாம்;அருந்ததி என்றொரு திரைப்படம் வந்தது இல்லையா? அதில் வில்லனை அகோரிகள் அழைத்துச் சென்று அவனுக்கு மாந்திரீகத்தைச் சொல்லிக் கொடுக்கின்றனர்;அவனது மாந்திரீகம் அவனது மணிக்கட்டு நரம்புகளில் சேமிப்பாகிறது என்பது போல காட்டியுள்ளனர்;இது உண்மையே!அவன் இறந்தால்,கொடூரமான பிசாசாக மாறுவான் என்பதால் அவனை உயிரோடு அதே சமயம் அவன் மந்திரம் ஜபிக்காமல் சமாதி கட்டுவதாக காட்டியுள்ளனர்;இப்படிப் பட்ட சம்பவங்கள் இந்தியா,இலங்கை,பர்மா,பங்களாதேஷ்,சிங்கபூர்,மலேஷியாவில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுள்ளன;இவைகளை ஆதாரத்துடன் தகவல் சேகரித்தால் ஆயிரம் திரைப்படங்கள் அருந்ததியைப் போல எடுக்கமுடியும்;

No comments:

Post a Comment