Thursday, July 23, 2015

பேய்கள் பற்றிய பல உண்மைகள் - பயப்படாமல் படிங்க..



* பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை
வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே
தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர்
நிற புகைகளை பனிமூட்டங்களை
பரப்புகின்றன.
* பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது
ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு
பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்
கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை
காண்கிறது என்று அர்த்தம்.
* பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை
ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது
கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது
ஆவிகளின் தோற்றம் மட்டும் தான்
பயங்கரமானதாக இருக்கும்.
* பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல
விரும்பாதவர்கள் தான் கூடுமானவரை
பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.
* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள்
எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில
நேரங்களில் அவை கனவுகளின் மூலம்
வெளிப்படுத்த முயற்சி செய்யும்.
* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன
உடல்களை சுற்றியோ அல்லது
சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே
கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத்
தலங்களை அண்டியே சுற்றிய படி
இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த
கட்டடங்களை அண்டியும் இருக்கும்.
* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள்
(feelings) உண்டு. ஆனால் உணர (sense)
முடியாது.
* பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு
நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு
காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை
வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.
* பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை
செய்ய முடியாது. ஆனால் ஒருவன்
தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு
தூண்டி விடும் சக்தி உண்டு.
* பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை
கால்களால் தொட முடியும். கைகளாலோ
அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல.
எனவே தான் உங்களால் அவைகளின் காலடி
ஓசையை கேட்க முடியும்.
* பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித
உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல்
தொடர்பு கொள்ள முடியும்.
* பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள்
மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில்
அருகில் இருக்க முடியும்.
* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின்
உடலை அடக்கம் செய்யும்
வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு
இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம்
உண்டு.
* பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக்
காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood
Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும்.
மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின்
கண்களுக்கு தெரிவது அபூர்வம்.
* குழந்தைகளாக இறந்து போயிருந்தால்
பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என
அழைக்கப்படுவார்கள்.
* பேய்களால் சும்மா இருக்க முடியாது.
எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க
வேண்டும் என்பதற்காக மற்றவர்களை
தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.
* பேய்கள் எப்போதுமே தாங்கள்
இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை.
எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை
என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.
* பேய்கள் பல்வேறு விதங்களில்
மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன..
கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக
எழுதுவது, சத்தம், புகை, போன்ற
பல்வேறுவகையான தந்திரங்களை
பயன்படுத்துகின்றன.
*பேயோ,ஆவியோ உங்கள் அருகில் இருக்கும்
போது,அறையின் வெப்பநிலை சூடாக இருந்த
போதிலும், உங்களுக்கு குளிர்வது போல
இருக்கும்.
* பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம்.
சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது
பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க
வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம்
வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.
* பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது
என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட
கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ்
பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள்
வராது என்று நினைப்பவர்களும் உண்டு.
ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் வேகத்தையும், அதன்
இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில்
கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.
* அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள்,
நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி
திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த
விஷயமாம்.
* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக்
கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல்,
நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு
உருவம், காற்றுத் தூசிகள், காற்று
போன்றவைகள் மூலம் தங்களை
வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும்
எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை.
ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம்,
பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில்
காண்பிக்க படுபவை கூடுமானவரை
கற்பனையே.
* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை
வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு
ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே
பின்தொடர்ந்து செல்லும்.
* பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள்,
ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும்.
பேய்களுக்கு நிறை அதிகம்.
* பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர
காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல்,
சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல்,
கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை
ஏற்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை
என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை
பேய்களை பற்றி மூட நம்பிக்கையை
வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஆவி
எப்படி இருக்கும் என்பதை தெரிந்து
கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள்
பொழுதுபோக்காக படித்து தெரிந்து
கொள்ளுங்களேன்.
என்ன.. பேயாவது ..பிசாசாவது என்று
நினைத்த உங்களுக்கு, லேசாக குளிர்வது
போல இருகிறதா??? நா வறண்டு போன மாதிரி
இருக்கிறதா??
அப்படி தான் இருக்கும்.. இதையேல்லாம்
படிக்கும்போது அவ்வபோது கொஞ்சம் திரும்பி
திரும்பி பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால்
உங்கள் பின்னால் வேறு ஒரு உருவமும் நின்று
இந்த பதிவை படித்து கொண்டு இருக்கலாம்...
நன்றி !!! எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment