Monday, December 5, 2011

குடும்பஸ்தர்களுக்கு ஆன்மீகக்குறிப்புகள்



இந்தியாவின் ஆன்மா இந்து தர்மமாக இருக்கிறது.இந்து தர்மத்தின் உயிர் மூன்று இடங்களில் நிறைந்திருக்கிறது.பசு,பெண்,கோயில் இந்த மூன்றும் உயர்ந்த மரியாதையோடு இருக்கிறதோ இல்லையோ,அவமதிப்பாகாமல் இருந்தாலே இந்தியாவின் சுய கவுரவம் பத்திரமாக இருக்கும்.

இந்துக்குடும்பம் ஒன்றில் கணவன்,மனைவி,குழந்தை என்று இருக்கும்.இந்த குடும்ப அமைப்பு நான்கு அல்லது ஐந்து எண்ணிக்கைகளில் இருக்கும்.குடும்பத்தோடு தினமும் ஒரு வேளையாவது நாம் சாப்பிடுகிறோமா?

அப்படியே சாப்பிட்டாலும்,சாப்பிடும்போது குடும்ப உறுப்பினர்களை திட்டாமல் இருக்கிறோமா?(திட்டுவது மாபெரும் தவறு)
பன்னாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்,இந்தியர்களுக்கு தொண்டைப்புற்று நோய்களை உருவாக்கி வருகின்றன.எனவே,இந்தியாவின் தயாரிப்புகளை பயன்படுத்தத் துவங்குவோம்.இதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து வெளியிட்டவர் கொல்லப்பட்டார்.இவரது இணையதளத்திலிருந்து ஆதாரங்களை மொழிபெயர்த்து விரைவில் தருகிறேன்.

வாரம் அல்லது மாதம் ஒருமுறை குடும்பத்தோடு நமது ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகிறோமா?அப்படிப்  போவது அவசியம் ஆகும்.நமது குழந்தையை ஏழு வயது வரையிலும் கோயிலுக்கு அடிக்கடி கூட்டிக்கொண்டு எப்படி வழிபடுவது? என்பதை சொல்லிக்கொடுக்காவிட்டால்,பக்தி என்பது வளராது;பக்தி உருவாகாவிட்டால்,பெற்றோர்களாகிய நம்மை மதிக்கும் மனோபாவமும் சிறிதுகூட வராது.
குடும்ப ரகசியம் என்பதே குடும்ப உறுப்பினர்களின் தவறுகள் தான்;எக்காரணம் கொண்டும் அவற்றை குடும்ப உறுப்பினர்களைத் தவிர,வேறு எவருக்கும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.இதுதான் ஒரு குடும்பத்தின் மரியாதையை உருவாக்குகிறது.அதே சமயம்,அந்தத் தவறுகளை அடிக்கடி சுட்டிக் காட்டுவதன் மூலமாக,குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து  விடுகிறது.இதன் விளைவுதான் இன்று தனித்து வாழும் பெண்கள் என்ற சமுதாயப்பிரிவே இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் உருவாகிவிட்டது.
ஒரு லட்சம்பேர்கள் வாழும் ஒரு ஊரில் சுமார் 100 பேர்கள் ஒழுக்கம் கெட்டுப்போயிருப்பார்கள்.இந்த 100 பேர்களுமே எப்படியெல்லாம் வாழக்கூடாது? என்பதற்கான முன்மாதிரிகள்;


ஆனால்,குடும்ப உறுப்பினர்களின் தவறுகளால்,அவ்வாறு தவறு செய்தவர்களைப் புறக்கணித்து,வீட்டை விட்டு விரட்டுவதன் மூலமாக பல குடும்பங்கள் சிதைகின்றன.இந்த கருத்தின் அடிப்படையில் ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம்.இந்த புறக்கணிக்கப்பட்டவர்களின் மனது ஒரு கட்டத்தில் பிளாட்டினத்தை விட,இறுகிப்போனதால்தான் சமுதாயம் ஒழுக்கமிழந்து விபச்சார சமுதாயமாகிவிட்டது.இதனால்,ஒரு லட்சம் பேர்கள் வாழும் ஊரில் 100 பேர்கள்தான் ஒழுக்கமாக வாழ்ந்துவருகின்றனர்.


எப்படி வேண்டுமானாலும் வாழலாம்;நீ யோக்கியமா ? என்னைக் கேட்க நீயாரு? என்ற வாசகங்களுக்குள் மிகப்பெரிய தனிமையும்,சோகங்களும்,ஆற்றாமையும் ஒளிந்திருக்கின்றன.யாரும் யாருடைய பிரச்னைகளையும் தீர்ப்பதில்லை;தீர்க்க நேரமிருப்பதில்லை;

கலியுகம்தான் காரணம் என்பதை விடவும்,காங்கிரஸ் தான் காரணம் என பல ஆதாரங்களோடு சொல்லலாம்.தனியார் மயம்,தாராளமயம்,உலகமயம் போன்ற முகமூடிகளுக்குள்ளே அமெரிக்க மயமே ஒளிந்துகொண்டு குடும்ப அமைப்பை சின்னாபின்னமாக்கி வருகிறது.இதை சரியாகப் புரிந்தவர்கள் 120 கோடி இந்தியர்களில் அரை கோடிபேர்கள் கூட இல்லை என்பதே சயனைடு சோகம்!!!


5 வயது வரையிலும் நமது குழந்தையை செல்லமாகவும்,6 வயது முதல் 18 வயது வரை தேவைப்படும்போதெல்லாம் கண்டிப்போடும்,நாலு சாத்து சாத்தியும் வளர்ப்போம்;போட்டி நிறைந்த இந்த காலத்தில் நமது குழந்தை என்ன படிக்கிறது? யாருடன் சேருகிறது? அதன் சுபாவம் எவ்வாறெல்லாம் மாறிவருகிறது? என்பதை எப்பாடு பட்டாவது நாம் கண்காணித்துத்தான் ஆக வேண்டும்.இல்லாவிட்டால்,ஓடி ஓடி சம்பாதிப்பதன் அர்த்தம் உருக்குலைந்துவிடும்.

காமவெறி அல்லது பணவெறியில் விழுந்தவர்கள் தானாக திருந்தினால்தான் உண்டு.யாராலும் இவர்களை சீர்திருத்துவது கடினம்.

காமமும்,பணவெறியுமே இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிவருகிறது.இந்த காம அரசியலும்,பணம் மற்றும் பணம் சார்ந்த அரசியலுமே இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிராகவே செயல்படுகிறது.

இன்றைய இந்தியாவின் அரசியல்கட்சிகளின் நகரத்தலைவர்/செயலாளர் முதல் மாநில அரசின் மந்திரிகள்,மத்திய அரசின் மந்திரிகள் வரை இவர்களுக்கு என்று தனிப்பட்ட சொத்துப்பிரச்னைகள்,குடும்பப்பிரச்னைகள்  நிறைய உண்டு;இந்தப் பிரச்னைகளில் தான் தோற்றுப்போகாமல் இருக்கவே அரசியலுக்கு வந்திருப்பர்.எனது கடந்த 15 வருட அனுபவம் மற்றும் ஆய்வின்படி,இதைத் தான் உணர முடிந்தது.

இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேச நலனுடன் பதவி ஏற்கிறார்கள்.அப்படி பதவிக்கு வந்தாலும்,இவர்களை வழிநடத்தும் அதிகாரிகள் தேசநலன் சார்ந்த மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை பதவியாளர்களுக்குக் காட்டுவதே இல்லை;எந்த திட்டத்தை கொண்டு வந்தால்,தனக்கு லாபம் என்றே செயல்படுகின்றனர்.நேர்மையான பதவியாளர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்த நிலையை அடியோடு மாற்றிடவே,ஒரு அதிசயம் அடுத்து வரக்கூடிய சில ஆண்டுகளில் நிகழப்போகிறது.ஆமாம்,தேசபக்தி நிறைந்த ஒரு மாவீரன் இந்தியாவின் தலைமை பீடத்தைக் கைப்பற்றப்போகிறான்.அவன் வட இந்தியாவில் பிறந்து,தென் இந்தியாவைச் சேர்ந்த துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.(ஆதாரம் 2007,2008,2009 ஆம் ஆண்டு குமுதம் ஜோதிடம் வார இதழ்கள்)21.12.2011 முதல் சனிபகவான் தனது உச்ச ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார்.2012 பிற்பகுதியில் அவர் உச்சமடைகிறார்.நீதி தேவதை என போற்றப்படும் சனிபகவானின் செயல்பாடுகளால், இந்திய அரசியலில் ஒன்றிய அரசியல் முதல் தேசிய அரசியல் வரையிலும் நேர்மையாளர்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது.

அதே சமயம்,கடந்த 30 ஆண்டுகளில் அநீதியை தனது சுபாவமாக மாற்றியவர்கள் அனைவரும் மீளமுடியாத கஷ்டத்துக்கு ஆளாகப்போகிறார்கள்.இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல;அரசு ஊழியர்கள்,அரசியலில் தலையெழுத்தை மாற்றும் மறைமுக நிறுவனங்கள்,கொள்கை வடிவமைப்பாளர்கள்,இந்தியாவின் எதிரிகள் என அனைவருமே மீளமுடியாத சிக்கலுக்கு உள்ளாகப்போகிறார்கள்.யாராலும் தடுக்க முடியாது;யாராலும் மீளவும் முடியாது.எனவே,நீதி நேர்மையை தனது சுவாசமாகக் கொண்டவர்களுக்கு இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிடும் வாய்ப்பு வரப் போகிறது.


நாம் அமெரிக்கா போவதை பெருமையாக நினைக்கிறோம்.ஆனால்,வெகு விரைவில் இந்தியாவுக்கு வருவதை  ஐரோப்பாவும்,அமெரிக்காவும்,ஆப்ரிக்காவும் பெருமையாக நினைக்கும் காலம் வந்துவிட்டது.

எனவே,இந்து தர்மத்தை நமது குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது முதன்மையான முக்கியமான கடமையாகும்.
நமது முன்னோர்களாகிய சித்தர்கள் நமது நேர்மைக்கு துணையாக இருப்பார்கள்.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம் 

3 comments:

  1. when will the saint come to rule
    india? please post more details

    ReplyDelete
  2. அருமையான நல்ல தகவல் . நன்றி

    ReplyDelete